'புட்பால் ரத்னா' விருது பெற்ற முதல் இந்திய கால்பந்து வீரர்
அண்மையில் தான் நட்சத்திர கால்பந்து வீரர் சுனில் சேத்ரிக்கு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை பெறும் 6-வது கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றார் அவர். இந்த நிலையில் தற்போது அவருக்கு 'புட்பால் ரத்னா' விருதும் வழங்கப்பட்டு உள்ளது. ஜவார்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் டெல்லி கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஷாஜி பிரபாகரன் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளார். முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த விருதினை பெறும் முதல் இந்திய கால்பந்து வீரர் என்ற பெருமையையும் அவர் அடைந்து உள்ளார்.
உலகிலேயே அதிகம் கோல் அடித்த வீரர்கள் லிஸ்டில் இரண்டாவதாக இருக்கும் சுனில் சேத்ரி, டெல்லியில் இருந்து தான் தனது கால்பந்து பயணத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக அறிமுக படுத்தப்பட்டிருக்கும் இந்த விருதினை பெறும் முதல் இந்திய கால்பந்து வீரர் என்ற பெருமையையும் அவர் அடைந்துள்ளார்.
No comments:
Post a Comment