🍀 தீன்தயாள் உபாத்யாய - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் வரம்பை, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நீட்டிக்க, மத்திய நகர்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகம்! சஹரி சம்ரிதி உத்சவ்′ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
🍀 அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதற்கான 'Parmanu Tech" என்னும் மாநாடு, புதுடெல்லியில் நடைபெற்றது.
🍀 உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் என்றழைக்கப்படும், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தினை பிரபலபடுத்துவதற்காக, புதுடெல்லியில், PM-JAY என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.
🍀 இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில், முதலாவது நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
🍀 வளைகுடா நாடான, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபுதாபியில் உள்ள நீதிமன்றங்களில், ஹிந்தி, ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.!
🍀 சிறுபான்மையினர் நல ஆணைய அமைச்சகத்தின் புதிய செயலாளராக, ஸ்ரீ சைலேஷ் (Sri Sailesh) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு (UK) இடையேயான உறவை மேம்படுத்துவதில், தன்னுடைய பங்கை செலுத்தியதற்காக, எஸ்பிஐ வங்கியின் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பிராந்திய தலைமையக வங்கிக்கு 'இலண்டன் நகரத்தின் சுதந்திரம்" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
🍀 அருணாசலப் பிரதேசத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
🍀 மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி 'இந்திய அளவுத்" திட்டத்தை, மும்பையில் தொடங்கி வைத்தார்.
🍀 ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக, ராஜீவ் காந்தி எதிர்கால வாழ்க்கைக்கான தளத்தை, ராஜஸ்தான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment