Wednesday, February 6, 2019

###TNPSC_CURRENT_AFFAIRS | எந்த மாநில அரசு, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது-2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள்

###TNPSC_CURRENT_AFFAIRS | எந்த மாநில அரசு, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது-2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தினத்தில், ஆண் படையினரின் கம்பீர அணிவகுப்புக்கு, வரலாற்றிலேயே முதன் முறையாக பாவனா கஸ்தூரி என்ற பெண் தலைமை தாங்கினார்.

🍀 மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தியாகும் முக்கிய பொருளை காட்சிப்படுத்துவதற்காக 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (One district one product)" என்ற திட்டத்தை உத்திரப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

🍀 மகாராஷ்டிராவானது உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து, யானைக்கால் நோயை விரைவாக ஒழிக்க, நாக்பூரில் 3 வகை மருந்து சிகிச்சையைப் பரிந்துரை செய்துள்ளது.

🍀 சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122-ஆவது பிறந்ததினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில், போஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

🍀 கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தின் பாதாமி மலைகளிலிருந்து, இரண்டு புதிய தாவர இனங்களை, தாவரவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

🍀 மது பாபு ஓய்வூதியத் திட்டத்தின் (Madhu Babu Pension Yojana-MBPY) கீழ், சமூகப் பாதுகாப்பு ஓய்வு+தியத்தில் மாதத்திற்கு 200 ரூபாய் உயர்வை, ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

🍀 ஆண்டுதோறும் வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருது, இந்த ஆண்டு தீயணைப்புத் துறையின் துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார், மாவட்ட அதிகாரி மனோகரன், நிலைய அதிகாரி அரிராமன் முத்து, தீயணைப்பு வாகன ஓட்டுநர் அருணாசலம், தீயணைப்பாளர் ரமேஷ்குமார் ஆகிய 5 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்பட்டன.

🍀 பயங்கரவாதியாக இருந்து, மனம் திருந்தி சரணடைந்த பின், ராணுவத்தில் சேர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உயிர் நீத்த, நசீர் வானிக்கு, ′அசோக் சக்ரா′ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🍀 ஜி.எஸ்.டி, செலுத்துவோருக்காக, அரசால் கொண்டு வரப்படும் புதிய வரிச்சட்டம், வரி சீர்திருத்தச் சட்டம் போன்றவற்றை கடைநிலை பயனாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், றறற.வபௌவி.உழஅ என்ற தமிழ் வலைதளம் துவக்கப்பட்டுள்ளது.

🍀 இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என, பன்னாட்டு நிதியத்தால் கணிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment