Saturday, February 9, 2019

###TNPSC_CURRENT_AFFAIRS SBI வங்கிக்கு ஒரு கோடி அபராதம்..!! ? 👇👇 இன்றைய முக்கிய செய்திகள் பிப்ரவரி 09

###TNPSC_CURRENT_AFFAIRS
SBI வங்கிக்கு ஒரு கோடி அபராதம்..

👇👇
இன்றைய முக்கிய செய்திகள்
பிப்ரவரி 09


உலகச் செய்திகள்

ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் பதவிக்கு அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுகிறார். 
மாநிலச் செய்திகள்
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் 20 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.

திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் நாளை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை பிற்பகல் 2.30 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைகிறார்.

தமிழகத்தில் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள், யு+னியன் பிரதேசங்களை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யு+னியன் பிரதேசங்கள் கட்டிய வீடுகளின் எண்ணிக்கை மாத அடிப்படையில் கணக்கிடப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 38 இடங்களிலும், மண்டல அளவில் 5 இடங்களிலும் கேமரா பொருத்தப்பட உள்ளது. 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்கப்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கி விதிகளை மீறியதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ.1 கோடியை அபராதமாக ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. 

மாவட்டச் செய்திகள்

கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலை கட்டுமானப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மின்உற்பத்திக்கான உபகரணங்கள் ரஷ்யாவில் இருந்து வந்து சேர்ந்துள்ளன.

புதுக்கோட்டை, இலுப்பூர் அருகே ஆலத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். ஆலத்தூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரிடமிருந்து தலைவர் பொறுப்பை முறைப்படி கே.எஸ்.அழகிரி பெற்றுக்கொண்டார். 

விளையாட்டுச் செய்திகள் 

இந்திய பெண்கள் அணிக்கு எதிரான 2வது 20ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் நியூஸிலாந்து பெண்கள் அணி வெற்றி அடைந்தது.

உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லு}சியாவில் இன்று நடக்கிறது.

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-பெங்கள+ரு அணிகள் இன்று மோத உள்ளன.

தென் மண்டல எறிபந்து போட்டி, சென்னையில் இன்று தொடங்க உள்ளன.

No comments:

Post a Comment