####TNPSC_CURRENT_AFFAIRS|தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் புதிய வங்கி....!!!
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டு பதிவானதா என்பதை சரிபார்க்க, ஒப்புகை சீட்டு இயந்திரம், வரும் லோக்சபா தேர்தலில் முழுமையாக பயன்படுத்தப்படும், என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
🍀 படுக்கையில் கிருமிகளை சுத்தம் செய்யும், 220 கிராம் எடை கொண்ட ரோபோவை, ஹூஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
🍀 NCC (National Cadet Corps) யின் நிர்வாக இயக்குநராக, (Director General Of NCC) இராஜிவ் சோப்ரா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளது.
🍀 தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை (DIPP)-யின் செயலாளரான, ரமேஷ் அபிஷேக், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளராக, கூடுதல் பொறுப்பை பெற்றுள்ளார்.
🍀 தமிழ்நாட்டில் செயல்படும் பல்லவன் - பாண்டியன் கிராம வங்கிகள் இணைக்கப்பட்டு, 'தமிழ்நாடு கிராம வங்கி" என்ற பெயரில் புதிய வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
🍀 ஆஸ்திரேலியா நாட்டின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான, விக்டோரியா விருது 2019 (2019 Victorian Prize for Literature), பெஹ்ருஸ் பூசானி (Behrouz Boochan) என்ற ஈரானிய அகதி பெற்றுள்ளார்.
🍀 பல்வேறு நாடுகளின் பெயர்களை கூறும் 2 வயது சிறுமி காவ்யஸ்ரீக்கு, மெடல்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு, உலக சாதனை விருது வழங்கி கவுரவித்துள்ளது.
🍀 கரூர் மாவட்டம், மண்மங்கலத்தைச் சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவி ரக்ஷணாவுக்கு, சமூக முன்னேற்றம் காணும் பெண் குழந்தைக்கான விருதை, தமிழக அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
🍀 இதய அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் செங்கோட்டுவேலுக்கு, சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது வழங்கி, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி கவுரவித்தார்.
🍀 விவசாயிகளுக்கு உதவும் உழவன் செயலி மூலம் வேளாண் கருவிகளை குறைந்த வாடகையில் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment