###TNPSC_CURRENT_AFFAIRS|கட்டிடக் கலையின் உலகத் தலைநகரம் எது? - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள, காணொலிக் காட்சி வசதிகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, வி.கே.தஹில ராமாணீ தொடங்கி வைத்தார்.
🍀 மத்திய பிரதேச மாநிலத்தில், கோவில் பூசாரிகளுக்கு சம்பள உயர்வு மற்றும் ′பென்ஷன்′ எனப்படும், ஓய்வூதியம் வழங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
🍀 வீடுகளுக்கே சென்று மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும், மார்டி என்ற ரோபோ அமெரிக்காவில் அறிமுகமாகிறது.
🍀 சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள (Haidilao) ஹைடிலாவ் என்ற உணவகத்தில், முழுக்க முழுக்க எந்திர மனிதர்கள் பணியாற்றும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
🍀 நகர்ப்புற சூழலில் 'கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும், நகரம்" குறித்த ஆய்வில், பிரேசிலின் 'ரியோ டி ஜெனீரோ" நகரை, 'கட்டிடக் கலையின் உலகத் தலைநகராக" யுனெஸ்கோ அறிவுத்துள்ளது.
🍀 தொழிலதிபரும் கோத்ரேஜ் குழுமத்தின் தலைவருமான, ஆதி கோத்ரெஜ்க்கு பெருநிறுவன ஆளுமையின் தனிச்சிறப்பை நடைமுறைக்கு மாற்றியதற்காக ICSI-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
🍀 சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சன்சத் ரத்னா விருதை, பாரதீய ஜனதா கட்சித் தலைவரான அனுராக் தாகூருக்கு வழங்கினார்.
🍀 மத்திய இடைக்கால நிதியமைச்சராக, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 இஸ்ரோவானது இளம் மனங்களில் விண்வெளி ஆய்வுக்கான, ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கும், கற்பிப்பதற்கும் இளம் அறிவியலாளர்கள் திட்டத்தை அறிவித்துள்ளது.
🍀 நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோளை, ′பி.எஸ்.எல்.வி., - சி 44′ ராக்கெட் உதவியுடன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ′இஸ்ரோ′ விண்ணில் செலுத்தியுள்ளது.
No comments:
Post a Comment