###TNPSC_CURRENT_AFFAIRS|1,000 ரூபாய் நாணயத்தில் எந்த கோவிலின் உருவம் இடம்பெற்றுள்ளது? - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 அலுவலர் பதவிக்கு கீழ்நிலையில் உள்ள பணியாளர் பதவிகளான (Personnel Below Officer Rank-PBOR), இராணுவ காவல் துறைப் பிரிவில் மகளிரை இணைப்பது குறித்த முடிவை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
🍀 தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் இசைப்பதற்காக, ′சங்நாதம்′ என்ற பெயரில் புதிய கீதம் உருவாக்கப்பட்டன.
🍀 சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அகதிகளின் மறுவாழ்விற்காக, கத்தார் நாடு 50 மில்லியன் டாலர் (ரூ.355 கோடி) நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
🍀 ′அல்சீமர்′ எனப்படும் தூக்கமின்மை, மன அழுத்தம், ஞாபக மறதி, சிந்தனை இழத்தல் போன்ற நோய்களுக்கு தீர்வு காணும் ஆராய்ச்சிக்காக, அல்சீமர் நோய் உடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட குரங்கில் இருந்து, குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
🍀 கோவை நாணயவியல் சங்கம் சார்பில், புரி ஜகன்நாதர் கோவில் உருவம் பொறிக்கப்பட்ட, 1,000 ரூபாய் சிறப்பு நாணயம், கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
🍀 டெல்லி-வாரணாசி இடையிலான ′ரெயில் 18′ அதிவேக ரெயிலுக்கு, ′வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்′ என பெயரிடப்பட்டுள்ளது.
🍀 பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிக்கப்பட்டது.
🍀 எதிரி நாட்டு இலக்குகளையும், ராணுவ வாகனங்களையும் அழிக்கும் ட்ரோன் விமானங்களை, இஸ்ரேலிடம் இருந்து வாங்குவதற்கு, இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
🍀 யோகாவில் பதினான்கு உலக சாதனைகளை படைத்துள்ள ஒன்பதே வயதான நெல்லையைச் சேர்ந்த, 'பிரிஷாவிற்கு" ஜெருசலேம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
🍀 2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த 50,000 பேரில், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ, 14 பேருக்கு பத்ம பூஷண், 4 பேருக்கு (மொத்தம் 112) பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment