Friday, June 22, 2018

09 சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி - 09

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி - 09.



நீங்கள் உடல் வலிக்காக மருத்துவறை சந்திக்கிறீர்கள். அவர் உங்கள் உடல் வலிக்கான மூலம் எது என்று கண்டறிய வேண்டும். அந்த மூலத்தை சரிசெய்து, உங்கள் வலியை போக்க வேண்டும். ஆனால், அவர் என்ன செய்கிறார் என்றால் உங்களை இரத்த பரிசோதனை செய்ய சொல்கிறார்

*இரத்தத்திலோ  சர்க்கரையின் அளவோ சராசரிக்கும் அதிகமாக இருக்கிறது "உங்களுக்கு சர்க்கரை நோய் வந்து விட்டது" என அந்த மருத்துவர் தீர்ப்பு எழுதுகிறார். ஏறத்தாழ உங்கள் வாழ்க்கை விதியையே அவர் மாற்றி எழுதி விடுகிறார். உடல் வலிக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.

 அந்த காரணங்கள் எல்லாவற்றையும் அவர் பார்ப்பது இல்லை, பார்க்கவும் இயலாது. ஆனால், அவர் உங்களை சர்க்கரை நோயாளி என அறிவிக்கிறார். உண்மையிலேயே உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு தேவைக்கும் அதிகமாக உள்ளதா என பார்க்கும் வழிமுறை ஏதும் அலோபதியில் இல்லை.

சராசரி அளவு வேறு, தேவையான அளவு என்பது வேறு. சராசரி அளவு என்பது அலோபதி முறை தானக வரையறுத்து வைத்து கொண்டது. அதைத்தான் இதுவரை விளக்கினேன். தேவையான அளவு, உங்கள் மனநிலைக்கு அதில் முக்கிய பங்கு உண்டு, உங்கள் பணிச்சூழல், உங்கள் உணவமுறை, உங்கள் வாழ்க்கை முறை ஆகியன எல்லாம் இணைந்து உங்கள் உடலுக்கு எவ்வளவு சர்க்கரை தேவையென முடிவு செய்கின்றன.

குளுக்கோஸ் எனும் சுரப்பு, உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை வழங்குகிறது. உங்கள் செயல்பாடுக்கு தேவையான ஆற்றல், உடனடியாக உற்பத்தி ஆக வேண்டும் எனில். அது குளுக்கோஸ் ஆக உற்பத்தி ஆகிறது. 

நீங்கள் எந்த உணவை உட்கொண்டாலும்,உங்கள் உடல் அந்த உணவில் இருந்து குளுக்கோஸை உருவாக்கி கொள்கிறது. இந்த குளுக்கோஸ் அப்படியே ஆற்றல் ஆக செயல்படுவதில்லை. இது உடலின் செரிமான உறுப்புகளால் முறையாக செரிக்கப்படவேண்டும். செரித்த உணவுதான் ஆற்றலாக மாறும். நீங்கள் அமுதமே உண்டாலும் அது செரிமானம் அடைந்து தான் ஆற்றலாகும்.

ஒருவர் மூட்டை தூக்கும் பணி செய்கிறார். அவருக்கு அதிக அளவில் ஆற்றல் தேவை. அவர் என்ன உணவு உட்கொள்கிறாரோ அவ்வுணவில் உள்ள குளுக்கோஸை அவர் உடல் செரித்து ஆற்றலாக மாற்றுகிறது. மூட்டை தூக்க தேவையான ஆற்றல் அவர் உடலுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அவர் உணவுப் பழக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அவரது உடலில் செரிமானம் சரியாக நடக்கும் வரை, அவருக்கு சிக்கல் இல்லை, ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கு செரிமானச் சிக்கல் வருவதாக வைத்துக் கொள்வோம்.ஆனால் அவர் எப்போதும் போல உணவு உட்கொண்டு வருகிறார். இப்போது அவர் உடலில் எந்த சத்துப் பொருளும் செரிமானம் ஆவது இல்லை, குளுக்கோஸூம் செரிக்கவில்லை. இதனால் அவரது உழைப்பிற்கு தேவையான ஆற்றல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. விளைவாக அவர் அடிக்கடி சோர்வடைகிறார், அவரது மூட்டுகளிலும் வலி ஏற்படுகிறது. ஆனாலும் அவர் தமது செரிமானம் குறித்த உணர்வே இல்லாமல், மேலும் மேலும் உணவு உட்கொள்கிறார். செரிமான உறுப்புகள் மேலும் சேதமடைகின்றன, இதனால் அவரது உடலில் சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. அதாவது தேவையான ஆற்றல் ஏதும் கிடைக்காமல் போகிறது. இவரொ தொடர்ந்து வேலை செய்கிறார், உடல் மேலும் உணவு கேட்க துவங்குகிறது.

ஏன் என்றால், 100 கிராம் உணவில் இருந்து தனக்கு தேவையான ஆற்றலை எடுத்துக் கொண்ட அவரது உடல், அவ்வாறு ஆற்றல் எடுக்கும் திறனை இழந்து வருகிறது. அதாவது, ஆற்றல் எடுக்கும் திறன் பாதியாக குறைந்து போனது. இப்போது அவர் 200 கிராம் உணவு உட்கொண்டால் தான், பழைய நிலையில் இயங்கத் தேவையான ஆற்றலை அவரது உடல் எடுக்க இயலும். ஆகவே அவருக்கு உணவு உண்ட பின்னரும் பசி எடுக்கிறது.உடல் தளர்ந்து போகிறது, கை கால்களில் நடுக்கம் ஏற்படுகிறது. உட்கொள்ளும் உணவையும் நீர்மப் பொருட்களையும் உடல் கழிவாக வெளியேற்றித் தள்ளுகிறது. இதனால்  அவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். அவருக்கு வியர்த்துக் கொண்டே இருக்கிறது.*

இந்த நிலையில் அவரது இரத்தத்தையும் சிறுநீரையும் சோதித்தால், அதிகமான அளவில் குளுக்கோஸ் தென்படும். காரணம் அவரது உடல் குளுக்கோஸை செரிக்கவில்லை. செரிக்காமல் அப்படியே வெளியே அனுப்பி கொண்டு இருக்கிறது. உடல் வேண்டுமென்று செய்யவில்லை, உடலால் செரிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.*

இந்த நிலை, மூட்டை தூக்கும் தொழிலாளிகளுக்கு பொதுவாக வருவதில்லை, ஏனெனில் அவர் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவதால் அவர்களுக்கு செரிமானச் சிக்கல் அரிது. உடல் உழைப்பு குறைவாக உள்ளோருக்கு இந்த நிலை வரும். வேறு ஏதேனும் காரணத்தினாலும் செரிமானம் பாதிக்க படும்.

உதாரணமாக, ஏதேனும் ஓர் உள்ளுறுப்பில் புண் இருக்கிறதென வைத்துக் கொள்வோம். அந்த புண் ஆறும் வரைக்கும் உடல் தனது செரிமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி கொள்கிறது.

உடலில் எந்த இடத்தில் சிக்கல் நேர்ந்தாலும், உடல் முதலில் செய்யும் பணி, செரிமானத்தை குறைப்பது தான். இதை மனதில் குறித்து கொள்ளுங்கள். திடிரென உங்களுக்கு பசி குறைகிறது என்றால், உங்கள் உடம்பில் ஏதோ ஓர் உறுப்பில் சிக்கல் அல்லது தொல்லை ஏற்றப்பட்டுள்ளது எனப்பொருள். மனநிலை மாற்றமும் இதற்கான முக்கிய காரணம்தான். முதலில் உடலை பற்றிப் பார்ப்போம்.*

வயிற்றின் உள்ளே புண் வந்து விட்டது, ஆகையால் செரிமானம் குறைந்து போனது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், செரிமானம் சீராகும் வரைக்கும்,எவ்வளவு பசிக்கிறதோ அவ்வளவு மட்டுமே உண்ண வேண்டும். ஒரு வேளை பசியே இல்லை என்றால், உண்ண வேண்டியதில்லை. பசிக்காக உண்ணாமல், நேரத்திற்காக உண்ண வேண்டும் என்ற மூடத்தனத்தையும் அலோபதி தான் பரப்பி வருகிறது.*

இது முற்றிலும் இயற்கைக்கு மாறான நடவடிக்கை. உங்கள் கையில் உள்ள கடிகாரத்திற்கு ஏற்ப உங்கள் உடல் ஆடுவதில்லை. நேரம் காலம் எல்லாம் உங்கள் அறிவுக்கு தானே தவிர, உடலின் இயல்புக்கு அல்ல. இப்போது பாரூங்கள். அலோபதி மருத்துவர்கள் தம்மிடம் வரும் மக்களிடம் "வேளா வேளைக்கு சாப்பிட வேண்டும்" என்று அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.*

அவர்கள் தரும் மாத்திரைகளையே ஆகாரத்துக்கு முன் ஆகாரத்துக்கு பின் என்று தானே பிரிக்கிறார்கள். "எனக்கு பசியே இல்லை" எனக்கூறும் மக்களுக்கு பசிப்பதற்கென மாத்திரைகள் தருகிறார்கள். உண்ட உணவு செரிக்கவில்லை என்றால், அது செரிப்பதற்கும் மாத்திரைகள், அப்படியும் செரிக்காமல் வாந்தி வந்தால், வாந்தி நிற்பதற்கும் மாத்திரைகள். ஆக மனித உடலை மாத்திரைகளாலேயே இயக்கி விட முடியும் என்ற சிந்தனை அவர்களுககு உள்ளது.*

இதன் விளைவாகத்தான், அலோபதி முறையை தொடர்ந்து கடைபிடிக்கும் மக்களுக்கு எந்த நோயும் தீருவதில்லை. காலம் முழுக்க மருந்துகளையும் அறுவை சிகிச்சைகளையும் நம்பி வாழ வேண்டிய நெருக்கடிக்கு ஆளாக வேண்டியுள்ளது*.

இப்போது, ஒருவரது இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது அல்லது சர்க்கரை நோய்க்கான வேறு சுரப்புகள் அதிகமாக இருந்ததால், அதற்கான மூலகாரணத்தை கண்டறிய வேண்டும் அல்லவா.

மரபு வழி மருத்துவ முறைகள் இந்தக் காரணத்தை கண்டறியும் வல்லமை கொண்டவை. நோயாளிகள் கூறும் அறிகுறிகள் கொண்டும், நாடி பிடித்து பார்த்தும் அவரது உடலின் எந்த உறுப்பில் உண்மையான சிக்கல் உள்ளது எனக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பவரே உண்மையான மரபு வழி மருத்துவர்.

இப்போது மரபுவழி மருத்துவர்கள் பலரும் இரத்த பரிசோதனைகளை நம்ப துவங்கி விட்டனர். ஆனால், மரபு மருத்துவ முறைகளின் தத்துவம் உண்மையை நாடக்கூடியது.

தமிழக மரபு மருத்துவங்கள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் முறையில் ஒரு சில பொதுத்தன்மைகளை கொண்டு உள்ளன.*

சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், உணவியல் மருத்துவம் ஆகிய நான்கினையும் எடுத்துக் கொள்வோம். இந்த நான்கு முறைகளிலுமே கட்டுப்பாடு வலியுறுத்தப்படுகிறது, வெறும் கட்டுப்பாடாக இல்லாமல், எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று தெளிவாக கூறுகின்றன.

இரண்டாவதாக, பசியைப் பற்றிய புரிதல் மரபு மருத்துவ முறைகளுக்கு உண்டு, "பசிக்காமல் உண்ணக்கூடாது" என்பதை எல்லா மரபு வழிகளும் ஏற்றுக் கொள்கின்றன. பசியை இயற்கையான வழியில் தூண்டும் மருந்துகள், மூலிகைகள் வழங்கப்படுகின்றன. மரபு வழிகளை பொறுதத்தவரை, பசியை செயற்கையாக தூண்டுதல் என்பது செரிமான ஆற்றலை அதிகரிக்க செய்யும். பணி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அலோபதி உடலின் இயற்கைக்கு மாறான மருந்துகளை வழங்கி, செரிமானத்தை கெடுக்கிறது, குறிப்பாக அம்முறையில் மருந்துகள் கல்லீரலை தாக்கி சீரழித்து செரிமானத்தை மேலும் மேலும் கெடுக்கின்றன.

ஆனால் மரபு மருத்துவ முறைகளில் செரிமானம் இயற்கையாக நடைபெறுவதற்கான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மிளகு, சீரகம், பிரண்டை, இஞ்சி, பூண்டு, பனைவெல்லம் போன்ற உணவு வகைகள் வழியாகவே தூண்டப்படுகிறது. இவை தவிர ஏராளமான உணவுகள் உண்டு, எளிமையாக நீங்கள் புரிந்து கொள்ள சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு உள்ளேன்.

மூன்றாவதாக, அதிகரித்து உள்ள செரிக்காத குளுக்கோஸை வெளியேற்ற தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.*

அதாவது, குளுக்கோஸை ஒழுங்கு படுத்த தேவையான மற்றும் இன்சுலின் சுரப்புக்கு உதவக்கூடிய பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. 

ஆவரம் பூ, வெந்தயம்,
நெல்லிக்காய், ஆகிய மூன்றையும் இத‌ற்கான மிகச் சிறந்த மருந்துகள எனலாம், இவை தவிர நாவல் பழக்கொட்டை, கொடுக்காய் புளி, சிறுகுறிஞ்சான் கீரை உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் செரிக்காத சர்க்கரையை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகின்றன,*இவை அனைத்துமே உணவு வகைதான். ஆனால் இவற்றை மருந்தாக பயன்படுத்தும் போது, செய்முறைகள் இன்றியமையாதவை.

 முறையான மரபு மருத்துவர்கள் இம்முறையை அறிவர்.

நான்காவதாக இயற்கையாக இயங்கத் தேவையான ஓய்வினை மரப மருத்துவம் பரிந்துரைக்கிறது. சிலரு‌க்கு ஓய்வு மிக அவசியமாக தேவைப்படும். சர்க்கரையை விரட்ட தேவையான மூன்று படிநிலைகளையும் முறையாக கடைபிடிக்கவே முடியாத நிலையில் இருப்பவருக்கு ஓய்வு தவிர்க்க இயலாதது.

இந்த நான்கு வழிமுறைகளையும் முறையாக கடைபிடிக்கும் போது, உடலின் இயக்க ஆற்றல் உற்சாகமாக இயங்கி, உடலின் நோய்க்கூறுகளை விரட்டி அடிக்கிறது. நீங்கள் கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில், குளுக்கோஸின் அளவு அதிகரித்தது என்பது, நோயின் மூலகாரணமல்ல அது ஒரு விளைவுதான் என்பதே. நோயின் மூலத்தை கண்டறியாமல் வெறும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் இரசாயன நச்சுகளையே கொடுத்து கொண்டு இருந்ததால் நோயாளியின் கதி என்னாவது.

*உண்மையில் சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல அது ஒரு தற்காலிக நிலைபாடு. உடல் மற்றும் மனச் செயல்பாடுகளில் ஏற்படும் தற்காலிக சீர்கேடு. இந்தச் சீர்கேடு திடிரென உருவாவது இல்லை. உடலின் இயல்பான இயக்கத்தில் நீண்ட காலமாக ஏற்பட்ட தடைகள் அதிகரித்து இந்த நிலை உருவாகிறது. மேலு‌ம், பல அலோபதி மருந்துகளும் இந்த நிலையை உருவாக்கி கொண்டு உள்ளன.*

உதாரணமாக ஒருவர் தொடர்ந்து வலி நிவாரணிகளை உட்கொள்வதாக வைத்துக் கொள்வோம். அவரது கல்லீரல் பாதிக்கப்படும். அந்த மாத்திரைகளின் மேலேயே இது எழுதப் பட்டுள்ளது. அப்படி கல்லீரல் பாதிகப்பட்டால் செரிமானத்தில் சிக்கல் நேரும். முறையான மருத்துவராக இருந்தால் நோயாளியின் கல்லீரல் சிக்கலை சீர் செய்து விடுவார். 

அத்துடன் உடல் நலம் பெற்று விடும், இயற்கையை பற்றிய புரிதலும், நேர்மையான சிந்தனையும் இல்லாத மருத்துவரோ தனது நடவடிக்கைகள் வழியாக பாதிக்கப்பட்டவரது உடலை மேலும் கெடுக்கும் மருந்துகளை கொடுத்தால் கல்லீரலுடன் தொடர்புடைய பல உறுப்புகள் சேதமடைந்து போகும். இச்சீர்கேடுகளின் விளைவுகளில் ஒன்றாக, குளுக்கோஸ் செரிமானம் ஆகாமல் வெளியேற்றப்படும்.

இனிப்பு பணிகளை துவங்கிய பின்னர் நான் கண்ட மக்களுக்கு பல காரணங்களால் சர்க்கரை அளவில் மாறுபாடு உருவாக்கி இருந்தது, நீண்ட காலமாக நுரையீரலில் சேகரமான சளி, பெருங்குடலில் உருவாகி வெளியேற இயலாமல் சுழலும் காற்று, மண்ணீரல் செயல் பாட்டின் குறைபாடு, இரைப்பையில் சேகரமாகியிருந்த செரிக்காத உணவுக்கழிவு, மலச்சிக்கல், சிறுநீரக செயல்பாட்டில் தேக்க நிலை, பாலின உறுப்புகளில் நீண்ட காலத்தொல்லைகள், கருப்பையில் ஏற்பட்ட குறைபாடுகள் அல்லது அதீத செயல்பாடுகள் உள்ளிட்ட பலகாரணங்களால் சர்க்கரை அளவில் மாறுபாடு உருவாகியிருந்தது, அதாவது, குளுக்கோஸ் அல்லது அலோபதி பெயர் வைதுதுள்ள வேறு சுரப்புகளின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டதிற்கான மூலகாரணமாக மேலே குறிப்பிட்ட காரணங்களை என்னால் காண முடிந்தது,. மரபு வழியில், இந்தக் காரணங்களைச் சரி செய்த போது, பதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையிலிருந்தும் விடுதலை அடைந்தார்கள்.

இதுதான் இரகசியம்

மரபு வழிகளில், வெறும் சர்க்கரையின் அளவை கூட்டவும், குறைக்கவும்  மருந்துகள் தரப்படுவதில்லை அல்லது சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. சர்க்கரை அளவின் ஏற்ற இரக்கத்திற்கு காரணம் எதுவோ அது, சீர்செய்யப்படுகிறது, இதனால் தான் அம்முறைகளில் சர்க்கரை தீர்க்கப்படுகிறது. அலோபதியோ இரத்தத்தையும் சிறுநீரையும் பரிசோதித்து. சில அளவீடுகளை பார்த்து அதற்கு தகுந்த மருந்துகளை விற்பனை செய்து விடுகிறது. மூலகாரணத்தை காணும் அறிவுடைமை அம்முறையில் இல்லை.

மேலும் நாளை பார்க்கலாம் இந்த தொடர் - 10

நீங்கள் இதுவரை சர்க்கரை என்ற உடல் நலக்குறைவு காரணமாக எடுத்து வந்த அலோபதி மருந்துகளின் எதிர்விளைவுகளான பல உடல் நல சீர்கேடுககளையும் போக்கி, உங்கள் பழைய வாழ்வை மீட்டு தரும் துணை உணவு தான் நமது ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை வழங்கும்.

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்- பகுதி 8 ஐக்காண 



த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்.


No comments:

Post a Comment