Wednesday, May 23, 2018

சர்க்கரை நோய் - இனிப்பு - தொடர் -7

சர்க்கரை நோய் - இனிப்பு - தொடர்  -7



சர்க்கரை நோயை எவராலும் குணப்படுத்தவே முடியாது, *"மருந்துகளை நம்பித்தான் வாழ்ந்தாக வேண்டும்"* என்ற அலோபதியின் பொய்வாக்கு முறியடிக்கப்பட்டு வருகிறது. "எனக்கு சர்க்கரை நோய் இருந்தது இப்போது நலமடைந்து விட்டேன்" எனக்கூறும் மக்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டுள்ளது

 இதைப் படிக்கும் போதே உங்களுக்குள் நிம்மதியும் அமைதியும் பிறக்கிறது அல்லவா. இவ்வாறு சர்க்கரையிலிருந்து விடுதலை அடைந்த மக்களை காணும் போதும் அவர்களுடன் உரையாடும் போது எனக்குள்ளும் நிம்மதியும் அமைதியும் பரவுகிறது. ஒரு சாத்தானின் சாபம் முறியடிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

துன்பத்தில் உழலும் ஒருவரிடம், "இந்தத் துன்பம் நிரந்தரமல்ல. இதிலிருந்து நீங்கள் விடுபட முடியும்" என்று கூறுவது அன்பின் வெளிப்பாடு. அன்புதான் உலகின் ஒளி. அன்புதான் படைப்பின் மூலம்,இயற்கையின் பேராற்றல் உயிர்களை படைப்பதும், காப்பதும் மரணத்தின் வழியாக வேறு வடிவங்களுக்கு அவ்வுயிர்களை மாற்றுவதும் அன்பின் வெளிப்பாடுகளே, அன்புதான் கடவுள், அன்பு, எந்தவித எதிர்பார்ப்புமற்றது, நல்லவர், கெட்டவர், ஏழை, செல்வந்தர் போன்ற பாகுபாடுகள் அன்புக்கு இல்லை. இதைச் செய்தால் இப்படியான பலன்கள் கிடைக்கும் எனக் கணக்குப் பார்த்து ஒரு செயலைச் செய்வது அன்புக்கு முரணானது. எதிராளி தவறு செய்தாலும், அவருக்கு நன்மை செய்வது அன்பு.

நன்மைகளை மட்டுமே விரும்பி வாழ்வை வாழ்வது அன்பின் வழி கணக்குகளால் வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்வது தீமையின் வழி. மக்களுக்கு நல்ல உடல் நலமும், மன நலமும் வேண்டும் என விரும்புவது அன்பின் வெளிப்பாடு. மக்களின் நோய்கள் தீர்ந்து விடாமல் இருக்க வேண்டும், அவர்கள் கூட்டம் கூட்டமாக எங்களை தேடி வந்து கொண்டே இருக்க வேண்டும் :நாங்கள் அவர்கள் நோய்களை தீர்க்கவும் மாட்டோம் :அவர்களது செல்வங்களை விட்டு வைக்க மாட்டோம் "எனக் கணக்கு போட்டுக்கொண்டே இருப்பது தீவினையின் வெளிப்பாடு.

இந்தத் தீவினைதான் பல நோய்களை" குணப்படுத்தவே முடியாது என ஓலமிடுகிறது "" இனிப்பு ஆவணப்படம் குறித்த என் கட்டுரைகளுக்கு அலோபதி மருத்துவர்கள் ஆற்றிய எதிர்வினைகளை கண்ட போது, மிகவும் அபாயகரமான வழியில் மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள், என்பது புரிந்தது. எனது கடமை என்ன என்பதும் தெளிவாகவே புரிந்தது.

சர்க்கரையிலிருந்து விடுதலை அடைந்த மக்களை வெளியுலகிற்குக் கொண்டு வர வேண்டும். அவர்களை பொதுவெளியில் அவர்களை நிறுத்த வேண்டும், நோயினால் துன்பப்படும் அனைவருக்கும் நம்பிக்கையும் உற்சாகமும் பொங்கி பெருக வழி செய்ய வேண்டும்.என்பதே என் கடமை என உணர்ந்தேன். இதற்கான செயல் வடிவமாக "இனிப்பு - சந்திப்பு எனும் நிகழ்வை அமைத்தோம்,

நவம்பர் 24, 2013  ம்நாள்  சென்னை மெரீனா கடற்கரையில் இனிப்பு சந்திப்பு நிகழ்ந்தது. மரபு மருத்துவ முறைகள் வழியாக சர்க்கரை நோயிலிருந்து விடுபட்ட மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பல்வேறு,  மரபு மருத்துவர்களும் பங்கேற்றனர்,ஏறத்தாழ ஆயிரம் பேர் மெரினாவில் கூடினோம். பெரும் பேரணியாக சென்றோம்." சர்க்கரை நோயிலிருந்து விடுதலை அடைய முடியும்"என்பதை விளக்கும் பாதகைகள் தாங்கிய பேரணி அது.

வெளிப்படையாக எந்த ஒளிமறைவும் இல்லாமல், எந்த விதமான இரகசிய செயல்பாடும் இல்லாமல் உண்மையின் ஒளியை மட்டுமே நம்பி நடந்த நிகழ்வு அது. சர்க்கரையிலிருந்து விடுதலை அடைந்த மக்கள், ஊடகங்களில் நேர்காணல் அளித்தனர்.

நிகழ்வின் இறுதியில், மக்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்த அலோபதி மருந்துகளை எல்லாம் குப்பைத் தொட்டியில் வீசினர்.சிலர், ஏற்கனவே அலோபதியை விட்டொழித்தவர்கள. அவர்கள் எல்லாரும் கடைக்கு போய் மருந்துகளை வாங்கி வந்து குப்பையில் வீசினர். இது அவர்களது விடுதலைக்கு அவர்கள் செலுத்த்திய நன்றி கடன். எந்த தீவினை தம்மை முடக்கி போட்டிருந்ததோ, அந்த தீவினையை குப்பையில் வீசுவதை அவர்கள் தம் கடமையாக நினைத்தார்கள்.

இது வெளிப்படையான நிகழ்வு தானே, இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் எல்லாரும் பொதுமக்கள் தானே, இதன் பின்னராவது "சர்க்கரையை மரபு மருத்துவ முறைகள் குணப்படுத்தும்" என அலோபதிகாரர்களை ஒப்புக் கொள்ளச் சொல்லுங்களேன் பார்ப்போம்.

அவர்கள் ஏற்க மாட்டார்கள், ஏனெனில், அவர்களுக்கு உண்மையின் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. உண்மையைக் கண்டு கோபமும் கொள்கிறார்கள். அவர்களை மாற்றுவது நம் வேலை அல்ல, அவர்கள் அப்படியே இருக்கட்டும். நாம் நம் கடமையைச் செய்வோம்.

சர்க்கரை நோயிலிருந்து விடுதலை பெறுவது பெரிய சாதனை அல்ல, அது மிக எளிதானது தான். இதை எளிமையாகவே செய்து முடிக்க வேண்டுமெனில். உங்கள் மனங்களில் பூட்டப்பட்டுள்ள சில கடிவாளங்களை கழட்டி எறிய வேண்டும். திறந்த மனதுடன் சில உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியவை எல்லாம், உடலையும், உயிரையும் புரிந்து கொள்வது தான். அலோபதி முறை உடலைப்பற்றி என்னவெல்லாம் சொல்லித் தந்துள்ளதோ அவற்றை எல்லாம் நிராகரிக்க வேண்டும். ஆம் இது மிகவும் அவசியமானது. அலோபதி முறை, மனிதர்களை தனது சோதனைச் சாலைக் கணக்கீடுகளுக்குள் அடக்கி ஆளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மனிதர்களின் உடலில் எவ்வளவு இரத்தம் ஓட வேண்டும் என்பதில் துவங்கி, சிறுநீர் கழிக்கும் போது அது எகிறி அடிக்கும் தூரத்தை கூட அலோபதி ஒரு "கணக்கில்" வைத்துளளது. இந்த கணக்குகள் எவருக்கெல்லாம் மாறுகின்றனவோ அவர்கள் எல்லாரும் அலோபதியை பொறுதத்தவரை நோயாளிகள், இது மாபெரும் அபத்தம், பல இலட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மனித இனத்தை வெறும் இருநூறு ஆண்டுகால "அறிவியல்" கட்டி ஆள நினைப்பது கொடுமை. அலோபதி மருத்துவர்களின் நோய் கண்டறியும் முறையை காணும் போது, ஏதோ மனித இனத்தையே உற்பத்தி செய்த குழுவினர் போல "நடந்து கொள்வதாகத் தான் தோன்றுகிறது.

" இனிப்பு "ஆவணப்படத்துக்காக நான் சந்தித்த பலர் அனுபவத்தை பகிர்ந்து கொள்வது உண்டு, உங்களில் சிலருக்கும் இது நேர்ந்திருக்கலாம், உடலில் வலி ஏற்பட்டுள்ளது, தலை சுற்றல் வருகிறது போன்ற காரணங்களால், அலோபதி மருத்துவர்களை சந்திக்கும் போது, சர்க்கரைக்கான பரிசோதனைகளை பரிந்துரைக்கிறார்கள், பரிசோதனை முடிவில் அவர்களுக்கு சர்க்கரை அளவு 700 அல்லது அதற்கும் அதிகமாக இருப்பதாக தெரிகிறது, உடனே அந்த மருத்துவர்கள் கேட்கும் கேள்வி, நீங்கள் எப்படி இவ்வளவு தூரம் வந்தீர்கள்? "என்பது தான், அவர்களை பொறுதத்தவரை, இந்த அளவுக்கு சர்க்கரை உடலில் இருந்தால், அந்த மனிதரால் தனியாக இயங்கவே இயலாது, சில மருத்துவர்கள் கொஞ்சமும் மனிதத் தன்மையே இல்லாமல், நீங்கள் எப்படி உயிரோடு இருக்கிறீர்கள்? என்றும் கேட்பது உண்டு.

உண்மையிலயே இந்தக்  கேள்விகளை எல்லாம் நாம் கேட்க வேண்டும். அந்த மருத்துவர்கள் பதில் சொல்ல வேண்டும். "இவ்வளவு அதிகமாக சர்க்கரை இருந்தும் நான் எப்படி இயங்குகிறேன்?" நான் எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறேன்? உங்கள் அறிவை கொண்டு பதில் சொல்லுங்கள் டாக்டர் "என நாம் கேட்க வேண்டும், ஏனென்றால் சர்க்கரை அளவு கூடிவிட்டால், உயிரிழக்க நேரிடும் என அவர்கள் தானே நமக்குச் சொல்கிறார்கள். இப்படி கேட்டாலும் அவர்கள் வசதியான பதில் ஒன்றை வைத்திருக்கிறார்கள், இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தாலும், உங்களை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும்",என்பது தான் அது.

ஒருவரது உடலில் எவ்வளவு சர்க்கரை அல்லது குளுக்கோஸ் இருக்க வேண்டும் என அலோபதி ஒரு கணக்கு வைத்துள்ளது. அந்த கணக்கு தவறினால், அது ஆபத்து என அலறுகிறது, அந்த அறையின் ஒசை பூமியெங்கும் இப்போது எதிரொலிக்கிறது. குறிப்பாக பொருளாதார வளம் மிக்க சமூகங்களில் அந்த ஓசையின் அளவு மிகையாகவே கேட்கிறது. மக்களை சிந்திக்க விடாமல், உண்மையின் குரல் அவர்களுக்கு கேட்டு விடாமல் அலோபதி தனது அலறலை அதிகரித்து கொண்டே இருக்கிறது, ஒரு பிசாசின் அலறலாக, ஓநாய்கள் ஊளையாக மக்களது மரணத்தை அறிவிக்கிறது அது.


நிச்சயமாக அது ஒரு தேவ அழைப்பு அல்ல, ஏனெனில், அலோபதியின் சர்க்கரை குறித்த பரப்புரைகள் எல்லாமே மக்களது மரணத்தை பற்றியவையாகத்தான் உள்ளனவே அன்றி, நிம்மதியாக வாழ்வதைப் பற்றியவையாக இல்லை.

பரிசோதனையில் வெளிப்படும் சர்க்கரை அளவை பற்றி எந்த மனிதரும் கேள்வி எழுப்பிடாத வகையில் அலோபதி மருத்துவர்கள் செயலாற்றிக் கொண்டுள்ளார்கள். ஆனால் நாம் கேட்டே ஆக வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன.

மனிதர்களின் உடலில் உணவுக்கு முன்னும் உணவுக்கு பின்னும் இந்த அளவுக்குத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கான அடிப்படைகள் யாவை?

உங்களது பரிசோதனை அறிக்கையில் சராசரி அளவு எனக் குறிப்பிடுகிறார்களே, அது என்ன சராசரி? இந்த சராசரிகளை முடிவு செய்வதற்காக எத்தனை மனிதர்களகளை ஆய்வு செய்தீர்கள்?.

புவியில் ஏறத்தாழ 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்த 700 கோடி மக்களுக்கும் இவைதான் சராசரி அளவுகளா? அப்படியானால் குறைந்தபட்சம் ஏழு கோடி மக்களிடமாவது ஆய்வு செய்திருக்க வேண்டுமல்லவா? அதாவது ஒரே ஒரு சதவீதம் மக்களிடமாவது ஆய்வு செய்து, சராசரிகளை முடிவு செய்திருக்க வேண்டும் அல்லவா?
அவ்வாறு செய்யப்பட்டுள்ளதா?

அப்படியான எந்த ஆய்வும் செய்யபடவும்  இல்லை, செய்வதற்கான வாய்ப்புகளும்  இல்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில் மருத்துவ ஆய்வு அறிக்கைகளை வெளியிடும் ஒவ்வொரு மருத்துவ ஆய்வாளரும் சாதரணமாக சில நூறு பேர்களிடம் தான் ஆய்வு செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறான ஆய்வுகளும் குறிப்பிட்ட சில நாடுகளில் நடக்கின்றன. அந்த முடிவுகளை எல்லா நாடுகளுக்கும் எப்படி  பொருத்திக் கொள்ள முடியும்? அமேரிக்காவில் ஆயிரம் பேர்களிடம் செய்யப்படும் ஆய்வின் முடிவுகளை வைத்து தமிழ் நாட்டில் சிகிச்சை அளிக்க முடியுமா?.

இந்த இருநாடுகளிலும் புவி அமைப்பும், தட்ப வெப்பமும், மக்கள உடல் அமைப்பும், பணிமுறைகளும், வாழ்க்கை முறைகளும், உணவுகளும், மன நிலைகளும், முற்றிலும் மாறுபட்டவை. இந்த காணிகளுக்கும் மனித உடல் இயக்கத்துக்கும் தொடர்பே இல்லை என அலோபதி கருதுகிறதா? உணவு மாறுபட்டால் மட்டுமே போதும், உடலின் ஒட்டு மொத்த இயக்கமும் மாறுபடுகிறது.

ஆனால் முற்றிலும் வேறுபட்ட சூழல் கொண்ட நாட்டு மக்களின் உடலை ஆய்வு செய்து, அந்த முடிவுகளின்படிதான் உலகின் எல்லா மனிதர்களும் இருக்க வேண்டும் என தீர்ப்பு கூறுவதற்கு பெயர் அறிவியலா?

ஒரு பனிக்கரடியை இந்தியாவின் விலங்குகள் சரணாலயத்தில் வளர்க்க வேண்டுமானல்கூட, அந்த கரடிக்கு ஏதுவான குளிர்நிலையை உருவாக்கி, அதற்கென தனியாக உணவு வழங்க வேண்டியுள்ளது. சத்ய மங்கலம் வனப்பகுதியில் வாழும் கரடியின் உணவையே அந்த பணிக்கரடிக்கும் வழங்கினால், அது இறந்தே போகும்.

வெளிநாட்டு நாய்களை உங்கள் வீட்டில் வளர்பதாக இருந்தால், அதற்கென தனிபராமரிப்புக்களைதானே செய்கிறீர்கள், உள்ளூர் நாயும் வெளிநாட்டு நாயும் வேறு வேறு என்பது போல, மனிதர்களும் புவிச்சூழலுக்கு தக்கவாறு வேறு வேறாகத்தான் படைக்கப்பட்டுள்ளார்கள்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 


இந்த கட்டுரையின் தொடர்ச்சிக்கு இணைந்திருங்கள் Kavimalaravan.blogspot.com

நன்றி

(இனிப்பு என்ற நூலின் பதிவு ஆசிரியர் செந்தமிழன்)



No comments:

Post a Comment