Thursday, May 31, 2018

புற்றுநோய்_CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய் - பகுதி -1

புற்றுநோய்_CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய் - பகுதி -1


உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் #புற்று என்பது நோய் அல்ல #வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.

இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.

கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.


கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள் :


1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:



  1. அப்ரிகாட் 
  2. லிமா பீன்ஸ் 
  3. ஃபாவா பீன்ஸ் ( Fava Beans ) 
  4. கோதுமை புல் ( Wheat Grass)
  5. பாதாம்
  6. ராஸ்பெரிஸ்
  7. ஸ்ட்ராபெர்ரி 
  8. ப்ளாக்க்பெரி 
  9. பிளூபெர்ரி 
  10. பக் வீட் ( Buck Wheat ) 
  11. சோளம்
  12. பார்லி 
  13. குதிரைவாலி
  14. முந்திரி
  15. மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )
  16. முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது. 
இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.

அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளேகரிசலாங்கண்ணி மூலிகை !!!


தீராத நோய் தீர்க்கும் ஞான மூலிகை - கரிசலாங்கண்ணி !!!

சித்தர்களின் செல்ல பிள்ளையான இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார். மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

இந்த கரிசாலை என்னுடைய வாழ்நாளில் எந்த அளவு ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது என்று நான் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

இந்த கரிசாலை மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் இரத்த புற்றுநோய் (AML -  Acute Myeloid Leukemia)
போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் என்று சித்தர் பாடல்களில் மிகவும் தெளிவாக குறிப்புகள் உள்ளது.

இந்த கரிசாலை எனது மருத்துவ ஆய்வில் மிக பெரிய வெற்றி கொடுத்துள்ளதை கீழே விளக்கம் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை,  கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள்.  பல சித்தர்கள் கரிசாலையான அபூர்வ மருந்தை கற்ப மருந்தாக உண்டு பல யுகங்கள் தனது உடம்பினை கற்பமாக மாற்றி வாழ்ந்தார்கள்.

 "கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்" என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

திருவுண்டாம் ஞானத்தெளிவுண்டாம் மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக் கையாந்தகரைத்
தன்னாகத் தின்றாகத் தான்.

விளக்கம் :
இம்மஞ்சள் கரிசாலையை உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் பேற்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசாலையை பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்தது காணப்படும்.

புற்றுநோய்_CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய் - பகுதி -2 காணலாம்


இந்த அற்புதமான மூலிகை சேர்த்து தயார் செய்யப்பட்டது தான் நமது ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை வழங்கும்" சித்த சக்தி பொடி," என்ற துணை உணவு.

அனைவரும் பயன்படுத்தி பயன் பெறுவீர். தொடர்பு கொள்ள
8778832095,
ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை, திருப்பூர், அனுப்பர்பாளையம்.

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது


சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

Wednesday, May 30, 2018

தினம் 3 கப் பாலை உண்ணும் அமெரிக்கர்கள் பலரும் கால்ஷியம் குறைபாடால் அவதிப்படுவது ஏன்?

தினம் 3 கப் பாலை உண்ணும் அமெரிக்கர்கள் பலரும் கால்ஷியம் குறைபாடால் அவதிப்படுவது ஏன்?


தினம் 3 கப் பாலை உண்ணும் அமெரிக்கர்கள் பலரும் கால்ஷியம் குறைபாடால் அவதிப்படுவது ஏன் எனும் புரியாத புதிருக்கு விடை பல வருடம் கழித்து தான் தெரியவந்தது.

நாள் முழுக்க உழைத்து கிடைத்த பணத்தை பாக்கட்டில் வைக்காமல் மூச்சுகுழாயில் வைத்து திணித்தால் என்ன ஆகும்? அதுதான் கால்ஷியத்துக்கும் நிகழ்கிறது.

கால்ஷியம் எலும்புகளுக்கு அவசியம். ஆனால் உணவில் இருக்கும் கால்ஷியத்தை எலும்புகளுக்கு கொண்டு சேர்க்க மேலும் சில மூலபொருட்கள் அவசியம். அதில் ஒன்று மக்னிசியம், இன்னொன்றூ வைட்டமின் டி3, இன்னொன்றூ வைட்டமின் கே2

இவை மூன்றும் உணவில் குறைபாடாக இருந்தால் உங்கள் உணவில் உள்ள கால்ஷியம் எலும்புகளுக்கும், பற்களுக்கும் சென்று சேராமல் இதயகுழாய்க்கும், கிட்னிக்கும் கொன்டுசெல்லபடலாம். 

விளைவு கிட்னியில் கல், மாரடைப்பு!!!! இத்யகுழாயில் கால்ஷியம் தேங்கி இருப்பது மாரடைப்புக்கான மிகமுக்கிய காரணி.

வைட்டமின் டி3யும், கே2வும் எந்த சைவ உணவிலும் கிடையாது. டி3க்கு ஒன்று சூரிய வெயிலில் நிற்கவேண்டும். அல்லது முட்டை, மீன் உண்னவேண்டும். கே2 முட்டை, வெண்ணெய் முதலானவற்றில் கிடைக்கும்.

மக்னிசியம்?


80% மக்கள் மக்னிசிய குறைபாடால் அவதிபடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தண்ணி அடிப்பவர்கள் அனைவருக்கும் மக்னிசிய குறைபாடு இருக்கும் வாய்ப்பு அதிகம். மன அழுத்தம் அதிகமாக, அதிகமாக மக்னிசிய குறைபாடு அதிகரிக்கும்

மாரடைப்பு வந்து உயிர்பிழைத்தால் இதயத்துக்கு உடனடியாக தேவைப்படும் மூலப்பொருள் மக்னிசியம்!!!!!!!! பல மருத்துவமனைகளில் மாரடைப்பு வந்து உயிர்பிழைப்பவர்களுக்கு உடனடியாக 2 சிசி மக்னிசியம் சல்பேட்டை ஊசி மூலம் செலுத்துவார்கள். இதயத்துக்கு அத்தனை முக்கியமான மூலப்பொருள் மக்னிசியம்

ஆய்வு ஒன்றில் மாரடைப்பு வந்தவர்கள் சிலருக்கு மக்னிசியம் செலுத்தபட்டது. சிலருக்கு செலுத்தபடவில்லை. அதன்பின் 4 வாரம் கழித்து மக்னிசியம் உட்கொன்டவர்களில் 19% உயிருடன் இருந்தார்கள். மக்னிசியம் உட்கொள்லாதவர்களில் 7% பேர் மட்டுமே உயிருடன் இருந்தார்கள்..மக்னிசியம் மாரடைப்பு மரணவிகிதத்தை 63% குறைத்தது!!!!!!!

மக்னிசியம் இதயநலனில் ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது?

ஆக்ஸிஜன் அளவை கட்டுபடுத்துவது, நரம்புமண்டலத்தை கடுபடுத்துவது, தசைகளின் இயக்கத்தை முறைப்படுத்துவது, உடலில் க்ளுகோஸ் மெடபாலிசத்தை முறைபடுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படும் என்சைம்கள் அனைத்தும் தயாரிக்க அவசியப்படும் மூலப்பொருள் மக்னிசியம். 

கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட என்சைம்கள் மக்னிசியத்தை அடிப்படையாக கொன்டு தயாரிக்கபடுபவை. தசைகள் அனைத்திலும் முக்கிய, ஜீவாதாரமான இதயத்தின் சுவர்கள் அனைத்தும் செல்லுலர் அளவில் பாதிக்கபடுகின்றன. மக்னிசிய குறைப்பாடு ஏற்பட்டால் அந்த தசைகளுக்கு உடல் கால்ஷியத்தை அனுப்பி வைக்கும். இதயகுழாயின் சுவர்கள் கால்ஷியத்தால் நிரம்பினால் மாரடைப்பும், மரணமும் நிகழும்!!!!!

மக்னிசிய குறைபாடு நிகழ்ந்தால் காயமே இன்றி உடலில் அங்கன்கு ரத்தம் கட்டும், வீக்கம் வரும். ஆவேச நிலையில் சுரக்கும் ஹார்மோனான அட்ரினலின் சுரப்பு பலமடங்கு அதிகரிக்கும்

கொலஸ்டிரால் சுரப்பு கண்டபடிக்கு நிகழும். கொலஸ்டிரால்  ஏறும். இதயகுழாயின் சுவர்கள் தடிமன் ஆகி இறுகும். க்ளுகோஸ் மெடபாலிசம் தடைபட்டு டயபடிஸ் வரும்.

இன்னும் 3751 விதமான பாதிப்புகள் நிகழும். எழுதினால் தனியாக ஒரு நூலே எழுதலாம். இத்தனை முக்கிய மூலபொருளான மக்னிசியம் நமக்கு தினம் எத்தனை மிகி தேவை? அதை எப்படி அடைவது?

தினம் சுமார் 400 மிகி அளவு மக்னிசியம் அவசியம். அதிகம் சேர்ந்தாலும் பிரச்சனை இல்லை. ஆதிமனிதனின் உணவில் கால்ஷியமும், மக்னிசியமும் 1:1 எனும் விகிதத்தில் சேர்ந்தன. இது அவனது எலும்புகளை வலுவாக்கியது. நம் அரசு பரிந்துரைக்கும் விகிதம் 1:2 எனும் விகிதம் தான். ஆக இதுவே குறைவான விகிதமே

மக்னிசியம் போதுமான அளவு (400 மிகி கிடைக்க நாம் உண்னவேண்டியது)


  1. அரைகிலோ பாலகீரை
  2. 80 கிராம் பூசணி விதை
  3. 1 கிலோ கைகுத்தல் அரிசி (வெள்ளை அரிசியில் சுத்தம்..மக்னிசியம் அம்பேல்)
  4. 120 கிராம் டார்க் சாக்லட்
  5. 120 கிராம் பாதாம் பருப்பு
  6. நூறு கிராம் எள் விதை

ஆக தினம் 100 கிராம் கீரை, 50 கிராம் பாதாம், 3 துன்டு டார்க் சாக்லட் உன்டால் போதுமான மக்னிசியம் கிடைக்கும். பால், பழம் முதலானவற்றில் சிறிதளவு மக்னிசியம் உள்ளது. எள் ,பூசணிவிதையும் சேர்த்து வரலாம்.

எதற்கும் வழி இல்லை எனில் கடைசிக்கு மக்னிசியம் சப்ளிமெண்ட் எடுத்து கொள்லலாம். அதிலும் பல சப்ளிமெண்டுகள் பயனற்றவை. மக்னிசியம் கிளைசேட் எனும் வகையை சார்ந்த மக்னிசியமே உடலில் சேரும். மற்ற சப்ளிமெண்டுகளில் உள்ள கட்டணங்களை மக்னிசியம் போனமச்சான் திரும்பிவந்தான் கதையாக உடலில் சேராமல் கழிவில் வெளியேறிவிடும்.


நன்றி



தேன் அற்புதமான பொருள் அதனை பயன்படுத்தக்கூடாத இடங்கள் குறித்து கீழ்கண்ட பதிவில் காணலாம்..




இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது


சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

Tuesday, May 29, 2018

பச்சை மாங்காயை உப்புத்தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…?

பச்சை மாங்காயை உப்புத்தூள் தொட்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…?


பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். 

ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள்

உங்களுக்கு ஒன்று தெரியுமா?

மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இங்கு ஒருவர் மாங்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. 

அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாங்காயை வேண்டாம் என்று தவிர்க்காதீர்கள்.

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். ஆனால் மாங்காயை உட்கொண்டு வருவதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து, இப்பிரச்சனையைத் தடுக்கும்.

மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான பிரச்சனைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே கோடையில் வயிற்று பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், மாங்காய் துண்டுகளை சாப்பிடுங்கள்.

பருவ நிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக்களால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராயின், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

இது நோயெர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுக்களின் அபாயத்தில் இருந்து தடுக்கும். நீங்கள் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். இதனால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாங்காய் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் என்பது தெரியுமா? மேலும் பச்சை மாங்காயை மதிய வேளையில் ஒரு துண்டு சாப்பிட்டால், மதிய வேளையில் வரும் தூக்கத்தைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்கும்.

ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும். பச்சை மாங்காய் இரத்தம் சம்பந்தமான பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். ஏனெனில் மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் மாங்காயை உட்கொண்டு வந்தால், இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் மற்றும் புதிய இரத்த செல்கள் உருவாகும்.

நிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே மாங்காயை உட்கொண்டால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முதுமையும் தள்ளிப் போகும்.

மாங்காயில் உள்ள உட்பொருட்கள், சருமத்துளைகளில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தேங்குவதைத் தடுக்கும்.

அதற்கு பச்சை மாங்காயை துண்டுகளாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ, முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்...
உடனே வாங்கி சாப்பிடுங்க.....


தகவல்
ச.நடனம் 
சுற்றுச்சூழல்  ஒருங்கிணைப்பாளர்
திருவாரூர் அவரிடமிருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது


சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

Monday, May 28, 2018

தோல் புற்றுநோய்க்கு காரணம் சூரியன் அல்ல

தோல் புற்றுநோய்க்கு காரணம் சூரியன் அல்ல!!!!


சொன்னால் நம்பமுடியாமல் தான் இருக்கும். தொடர்ந்து படிக்கவும்.

20ம் நூற்றாண்டில் மக்களை சூரியனிடம் இருந்து காப்பாற்ற லேகிய கம்பனிகள் தோன்றின. இவர்களின் சன்ஸ்க்ரீன் லோஷனை தடவிக்கொண்டு வெயிலில் நடந்தால் ஸ்கின் கான்சர் வராது எனவும் நேரடி வெயில் தோலில் பட்டால் ஸ்கின் கான்சர் வரும் எனவும் சொன்னார்கள். சுமார் 400 கோடி ஆண்டுகளாக உலகத்து உயிர்களை எல்லாம் தோற்றுவித்து, உணவளித்து, காத்துவரும் அன்னதாதாவான சூரியனை கண்டு 20ம் நூற்றான்டில் மக்கள் மிரண்டு போய், அதனால் ஸ்கின் கான்சர் வரும் என பயந்து இந்த லேகியங்களை வாங்கிப்பூசிக்கொண்டும், வெளியே போகாமல் வீட்டுக்குள் உட்காரவும் ஆரம்பித்தார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில் இதுநாள்வரை சூரியவெளிச்சம் உடலில் படுவதுதான் ஸ்கின்காச்னருக்கு காரணம் என ஒரே ஒரு ஆய்வுமே நிருபித்தது கிடையாது என்பதே. அல்ட்ராவயலட் கதிர்களை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். அல்ட்ராவயலட் கதிர்கள் உடலில் பட்டாம் ஸ்கின் கான்சர் வரும், சூரியவெளிச்சத்தில் அல்ட்ராவயலட் கதிர்க்ள் இருக்கு. முடிந்ததா கதை?

ஆனால் நேரடியாக சூரியவெளிச்சத்தையும், ஸ்கின் கான்சரையும் தொடர்புபடுத்தும் ஒற்றை ஆய்வு உள்ளதா என கேட்டால் இல்லை. வேடிக்கையிலும், வேடிக்கையாக பலருக்கும் ஸ்கின் கான்சர் வரும் பகுதிகள் எல்லாமே சூரிய வெளிச்சம் படாத பகுதிகள். சூரியனுக்கு பயந்து வெளியே போகாமல் இருப்பவர்களுக்கு தான் ஸ்கின் கான்சர் பெருமளவில் வருகிறது. சூரியன் அதிக அளவில் எட்டிபார்க்காத பனிநாடுகளில் தான் ஸ்கின்காச்னரும் அதிகம். வருடம் முழுக்க வெயிலாக இருக்கும் நாடுகளில் ஸ்கின் கான்சர் விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம்

ஸ்கின் கான்சர் அதிகரித்த புள்ளிவிவரங்களை பார்த்தால் அவை எல்லாமே இந்த லோஷன், லேகியங்கள் விற்பனையுடன் தொடர்புடையதாகவே உள்ளன. சன்ஸ்க்ரீன் போடுபவர்கள், உடலில் கண்ட க்ரீம்களை தேய்ப்பவர்கள், சூரிய வெளிச்சம் படாமல் இருப்பவர்கள் இவர்களுக்கே ஸ்கின்கான்சர் அதிக அளவில் தாக்குகிறது.

நாள்முழுக்க சூரியவெளிச்சத்தில் உலாவும் எந்த மிருகத்துக்கும் ஸ்கின் கான்சர் கிடையாது. சூரியன் உலகின் அன்னதாதா. வடதுருவம் முதல், தென் துருவம் வரை பயிர்கள், மரஙக்ள், மனிதர்கள், விலங்குகள் அனைத்துக்கும் உயிரளித்து காக்கும் தெய்வம். குழந்தைக்கு தாயின் அணைப்பால் மாரடைப்பு வரும் என்பதும் சூரிய கதிர்கள் நம்மை தழுவுவதால் கான்சர் வரும் என்பதும் இரண்டும் ஒன்றே

பெரிய மருத்துவமனைகளின் கான்சர் விடுதிகளுக்குள் நுழையுங்கள்...அங்கே இருக்கும் கான்சர் நோயாளிகளில் 90% பேருக்கு வைட்டமின் டி அளவுகள் குறைவாக இருக்கும். டயபடிஸ் பிரிவில் நுழையுங்கள். அங்கேயும் 90% பேருக்கு வைட்டமின் டி அளவுகள் குறைவாக இருக்கும். வைட்டமின் டி அளவுகளை மட்டும் சரிசெய்தால் 30% கான்சர் நோயாளிகளுக்கு கான்சரே வராது.

சூரியவெளிச்சத்தின் மகத்துவம் வைட்டமின் டியில் மட்டும் இல்லை. சூரியவெளிச்சமே தனிப்பட்டு வைரஸ், கிருமிகளை விரட்டி அடிக்கும் ஆற்றல் கொண்டது. டிப்ரஷனை போக்கும் சக்தி கொண்டது. சூரியவெளிச்சமே உடலில் சிர்கேடியன் கடிகாரத்தை சரிப்படுத்தி நம் பயாலஜிக்கல் கடிகாரத்தை நெறிப்படுத்தி பகல், இரவு, பசி, தூக்கம் முதலான உணர்வுகளை நமக்கு தூண்டும் சக்தி கொண்டது. நம் மூடை நெறிப்படுத்தி மகிழ்ச்சியை உருவாக்கி, டிப்ரஷன், ஸ்ட்ரெஸ், மன அழுத்தத்தை துரத்தும் ஆற்றல் கொண்ட தந்தை சூரியன்.

வெறும் லேகியத்தை விற்க சூரியன் மேல் கான்சர் பழி சுமத்தியவர்கள் இன்னும் என்னென்ன செய்வார்கள் என்பதை யோசித்தால் ஆயாசமாக வருகிறது

வெளியே செல்லுங்கள். 

"ஆயிரம் கைகள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" என அந்த அருட்தந்தையின் அணைப்பில் மகிழுங்கள்..தினமும் அதிகநேரத்தை வீட்டுக்குள் கழிக்காமல் நம் தந்தையின் அணைப்பில் கழியுங்கள். அவன் அணைப்பு நமக்கு கான்சரை கொடுக்காது. அவன் உலகத்து உயிர்க்கெல்லாம் உணவளிக்கும், நலமளிக்கும் அன்னதாதா. பிராக்டர் அன்ட் காம்பிளை நம்பும் அளவு பலரும் சூரியனை நம்பாமல் இருப்பதுதான் விந்தையிலும் விந்தை.


இத்ததகல்கள் இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமி-ருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

நீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்த இனிப்பு துளசி...என்னும் பதிவை கான கீழ்கானும் இணைப்பை கிளிக் செய்யவும்.





"உடல் சூட்டை தணிக்கும் உணவுகள்" என்னும் பதிவை கான கீழ்கானும் இணைப்பை கிளிக் செய்யவும்.



Sunday, May 27, 2018

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! – எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!

பிஸ்கட் சாப்பிடாதீர்கள்! – எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்!


பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும்  விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில்  பிஸ்கட்தான் உணவாகவே இருக்கிறது. ‘நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள்  நம் கவனத்தை ஈர்க்கின்றன. 

இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா?

“நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம்.

“இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை  எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர்

உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச்  சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு  என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப் படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.

* பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச்சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.

* சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.

* சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

* கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.

* சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

* `லோ இன் கலோரிஸ்’ (Low in Calories) என்று பல பிஸ்கட் பாக்கெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட், குறைந்தபட்சம் 40 கலோரிகள் கொண்டது. எனவே பிஸ்கட்டை லோ கலோரி உணவு எனக் குறிப்பிடுவதே தவறு.

* பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.


“கட்டாயம் பிஸ்கட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப் படுகிறவர்கள் தவிர மற்றவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பிஸ்கட் சாப்பிடலாம். க்ரீம் பிஸ்கட் என்றால் ஒன்றோ, இரண்டோ போதும். இது சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பொருந்தும்’’ என்கிற கற்பகம், வீட்டிலேயே பிஸ்கட் செய்து சாப்பிடுவது தான் சிறந்த தீர்வு. அதையுமே அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார்.

குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது சரியா?
கார்த்திக் சூர்யா, குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர்.

“பிஸ்கட்டின் வேலையே பசியை அடக்குவது தான். ஒரு குழந்தை மூன்று பிஸ்கட் சாப்பிட்டால், பசியே எடுக்காது. பெரும்பாலானவர்கள், குழந்தைக்குப் பாலில் நனைத்த பிஸ்கட்டைக் கொடுப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். க்ரீம் பிஸ்கட்டைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகை பிஸ்கட்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. இவையாவும் செயற்கை ஃப்ளேவர்கள். அதேபோல, க்ரீம் பிஸ்கட்டுகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். பெரியவர்களே வெள்ளைச் சர்க்கரை சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் பட்டு வரும் நேரத்தில், வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதென்பது, பல்வேறு பிரச்னைகளுக்குத் திறவுகோலாக அமையும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது. இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள். இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும். மாலை நேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.”




இத்ததகல்கள் இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமி-ருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்



பூக்களை சூடுவதால் ஏற்படும் நன்மை பகுதி-2
 என்ற பதிவை கீழ்கண்ட இணைவில் காணலாம்..

Saturday, May 26, 2018

உங்களை நெறிப்படுத்த ஒரு கத சொல்லட்டுமா சார்: பகுதி - 6

உங்களை நெறிப்படுத்த ஒரு கத சொல்லட்டுமா சார்: பகுதி - 6


வாழைப்பழம் விலை எவ்வளவுங்க," 
அந்த பெண் கேட்டாள்.

"ஒரு வாழைப்பழம் ஐந்து ரூபாய்ம்மா?" 
என்றார் அக்கிழவர்.

"சரி, ஆறு வாழைப்பழங்கள் ₹25/- க்கு கொடுப்பீங்களா?" என கேட்டாள்.

"சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. காலையிலிருந்து நீதான் போணி செய்கிறே.
கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்," என்றார் அக்கிழவர்.

தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டாள்.

பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள்.

அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர்.

சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
பில் தொகை ₹1200/-, அவள் ₹1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்," என்றாள்.

ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணம் விஷயம்.

 ஆனால் வாழைப்பழம் விற்ற கிழவருக்கு வலி மிகுந்த விஷயம்ر
“இதில் உற்றுநோக்க வேண்டியது”
நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தை காட்டுகிறோம். 

பணக்காரர்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்ا

படித்ததில் மனசு வலித்தது...

நாம் மாறுவோம்..
நல்ல மாற்றத்தினை உருவாக்குவோம்...



இவ்விடம்

த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன் 

சர்க்கரை நோய் - தொடர் - 8 (7 ன் தொடர்ச்சி)

சர்க்கரை நோய் இனிப்பு  - தொடர் - 8  (7 ன் தொடர்ச்சி)


                   

அலோபதி முறையை பாருங்கள், இந்த முறையின் மருத்துவர்கள் படிப்பதெல்லாம் அயல்நாட்டு பாடங்களை தான். இவர்கள் வைத்திருக்கும் பரிசோதனை கருவிகளில் பெரும்பாலானவை வெளிநாட்டு தயாரிப்புக்கள். இவர்களது சோதனை முறைகள் எல்லாமே நமக்கு பொருத்தமே இல்லாதவை. இவற்றை காட்டிலும் கொடுமை என்னவெனில், இவர்கள் எழுதிக்குவிக்கும் மருந்துகளில் பெரும் பகுதி அந்நிய நிறுவனங்கள் தயாரிப்பவை. எல்லா நாடுகளுக்கும் ஒரே மருந்து, எல்லா மக்களுக்கும் ஒரே நோய், எல்லா மக்களுக்கும் ஒரே விதமான பரிசோதனை முறைகள். என்பதே அலோபதியின் அடிப்படை.

"மனிதர்கள்" எல்லாருக்கும் ஒரே விதமான உடற்கூறியல் இருக்கிறது. ஆகவே, எல்லா மனிதர்களும் ஒரே விதமானவர்களே "என்பது இம்முறையின் மந்திரம். உற்கூறுகள் ஒன்று தான், அவை இயங்கும் முறைகளில் தான் வேறுபாடுகள் உள்ளன. ஒரு பிரிட்டன் வாசியை தினமும் நெல்லிக்காய் உண்ணக் சொன்னால், குளிர் காய்ச்சல் வந்து அவதிப்படுபவர். நமது கிராமத்து வாசிகளுக்கு தினமும் ஹாட் டாக் (Hot Dog) எனும் எனும் மேற்கத்திய உணவு மட்டுமே கொடுத்தால், அவர்களால் உடல் உழைப்பில் ஈடுபட முடியாது.ஒரேவிதமான வயிறு தானே ஏன் இந்த வேறுபாடு எழுகிறது என்றால், உடற்கூறு இயங்கும் முறை, நிலத்தின் இயல்புக்கு தக்கவாறு மாறுபடுகிறது என்பது தான் விடை.

ஒரு மலைவாழ் மனிதருக்கு அரிசி சோறு மட்டுமே கொடுத்தால், அவர் மிகவும் சோர்வடைந்து போவார். அவரால் காடுகளில் அலைந்து திரிய முடியாது. மரங்களில் ஏறி மலை இடுக்குகளில் தொங்கி தேன் எடுக்க இயலாது. வன விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள கூட சிரமப்படுவார். அவருக்கு கேழ்வரகு, கம்பு, தினை, சாமை ஆகியவை வேண்டும். இத்தனைக்கும் நாம் வாழும் ஊரில் இருந்து சில கிலோமீட்டர்களில் உள்ள மனிதர்கள் இவர்கள், அதுபோல், மீனவர்களை வெறும் காய்கறிகளை உண்ணக் சொல்லி பாரூங்களேன். அவர்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். இது வெறும் பழக்கம் அல்ல, அவர்கள் செய்யும் பணிகளுக்கு தேவையான உடலின் ஆற்றலுக்கு காய்கறிகள் போதாது, மீன் உணவு தேவை.

ஆக, உணவு எனும் ஒரே ஒரு காரணியைகூட நம்மால் எல்லா இடங்களுக்கும் பொருத்திக் கொள்ள முடியவில்லை. அலோபதியோ பூமியின் எல்லா மனிதர்களையும் ஒரே கணக்கில் அடக்கி "சராசரி" அவளால் எடை போட முயற்சிக்கிறது. மனிதர்கள் உண்ணும் உணவு மாறுபடும் போது,அந்த உணவில் உள்ள உட்கூறுகள் எல்லாமே மாறுபடும் போது, அந்த மனிதர்கள் செய்யும் வேலை வேறு வேறாக இருக்கும் போது, இவர்கள் எல்லாருக்கும் ஒரே அளவில் தான் குளுக்கோஸ் இருக்க வேண்டும் என்பது கற்பனையில் தான் நடக்கும்.

இந்த பட்டியலை பாரூங்கள், மூன்று வகை உணவுப் பயிர்களில் எந்த அளவுக்கு புரத சத்தும், மாவுச்சத்தும் உள்ளது எனக் காணலாம். (100 கிராம் பயிரில் உள்ள அளவுகள்)

உணவுப பயிர்,

  • அரிசி
  • வரகு
  • கோதுமை
புரதச் சத்து,

  • 6. 4 கிராம்
  • 8.511 கிராம்,
  • 11 கிராம்,
மாவுச்சத்து

  • 79 கிராம்
  • 65.67 கிராம்
  • 73.9 கிராம்

இந்த மூன்று பயிர்களையும் மூன்று வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தான் அதிகமாக உட்கொள்கிறார்கள். சர்க்கரைக்கு காரணமாக அலோபதியால் கூறப்படும் மாவுச் சத்தை எடுத்துக் கொள்வோம். அரிசியில்  79 கிராம் உள்ளது வரகில் 65. 67 கிராம் உள்ளது. ஒரு மனிதர் தனது அன்றாட உணவில் அரிசியை அதிகமாக சேர்த்துக் கொள்கிறார். மற்றவர், வரகு அதிகமாக உண்கிறார். 

இவர்கள் இருவரும் உணவு உட்கொண்ட பின்னர் இவர்களது இரத்தத்தைப் பரிசோதித்தால், இயல்பாகவே அரிசி உண்பவர் உடலில் குளுக்கோஸ் அதிகமாகத் தான் இருக்கும். நிச்சயமாக, இருவருக்கும் ஒரே அளவில் குளுக்கோஸ் இருக்க வாய்ப்பில்லை அல்லவா, கோதுமை உண்பவருக்கும்  அரிசி உண்பவருக்குமான குளுக்கோஸ் அளவில் பெரிய வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், இந்த மூவரும் தொடர்ந்து இதேவிதமான உணவுப் பழக்கங்களில் இருப்பவர்களானால், இவர்கள் மூவருக்கும் மூன்று விதமான குளுக்கோஸ் அளவு தான் இருக்கும்.

மேற்கத்திய நாடுகளில் அதிகமாக உண்ணப்படும் ஓட்ஸ் எனும் உணவுப் பயிரில், 12 கிராம் தான் மாவுச்சத்து உள்ளது. இப்போது சிந்தித்து பாருங்கள். உணவில் வெறும் 12 கிராம் மட்டுமே உள்ள மாவுச் சத்துள்ள உணவை உட்கொள்பவருக்கும், 79 கிராம் மாவுச்சத்துள்ள அரிசியை உண்பவருக்கும் ஒரே அளவில் தான் குளுக்கோஸ் இருக்க வேண்டும் என்பது சாத்தியமா? ஆனால், அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறது அலோபதியின் "அறிவியல் "

மேற்கண்ட கணக்குகூட பொத்தாம் பொதுவானதுதான், உணவுப் பயிரில் உள்ள சத்துக்களை மட்டுமே வைத்து உணவின் தன்மையை அளவிடுவதும் அரைகுறையானது தான். அந்த உணவு எவ்வாறு சமைக்கப்படுகிறது, உணவு உண்ணப்படும் அளவு, உண்ணப்படும் நேரம், உண்ணும் போது சாப்பிடுபவரின் மனநிலை, உடல் நிலை, சூழல் உள்ளிட்ட எண்ணற்ற காரணிகள் சேர்ந்து தான் உடலில் சத்தாகவும் கழிவாகவும் மாறுகின்றன.

உதாரணமாக மேல் கண்ட அதே மூன்று உணவுப் பயிர்களும் சமைத்த பின்னர் மாவுச்சத்து அளவில் மாறுபாடு அடைகின்றன.


  1. அரிசி (சோறு) - 23
  2. சமைத்த கம்பு - 41
  3. சமைத்த கோதுமை - 26

இன்னும் துல்லியமாக கணக்கிட வேண்டுமானால் என்ன சமைக்கபட்டது எனத் தெரிய வேண்டும், எப்படி சமைக்கபட்டது எனத் தெரிய வேண்டும்,. அரிசியை பொறுத்தவரையில், ஒவ்வொரு வகை அரிசியும் ஒவ்வொரு தன்மை கொண்டது. எல்லா அரிசியும் ஒரே அளவிலான சத்துப் பொருட்களை கொண்டு இருப்பது இல்லை. சிகப்பரிசியில் வெறும் 42 கிராம் தான் மாவுச்சத்துள்ளது.

சில வகை உணவுப் பயிர்களிலேயே, இவ்வளவு மாறுபாடுகள் இருக்கும் போது, ஆயிரக்கனக்கான சமையல் பொருட்கள் உள்ளனவே, அவற்றில் எல்லாம் எவ்வளவு வேறு பாடுகள் இருக்கும். இயற்கையில் எதுவுமே நகல் எடுக்க படுவதில்லை. ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு விதமாக படைக்கப்படுகிறது. அலோபதியோ, 12 கிராம் மாவுச்சத்து உள்ள ஓட்ஸ் மானியத்தை உண்பவர்களுக்கும், 79 கிராம் மாவுச் சத்து உள்ள அரிசியை உண்பவர்களுக்கும் ஒரே அளவில் தான் சர்க்கரை அளவு இருக்க வேண்டும் என்கிறது.

"இது அலோபதியின் அறியாமை அல்ல அலோபதியின் சூது"

நோயளிகளின் எண்ணிக்கையை பெருக்கி, கொள்ளையடிப்பதற்கான, எளிய வழிமுறைகள் தான் இவ்வாறான '' ஆய்வு அறிக்கைகள்"எல்லாம். நடைமுறையில் சாத்தியம் குறைவான அளவீடுகளை வைத்துக் கொண்டு, சமூககத்தின் பெரும் பகுதி மக்களை நோயாளிகள் என அறிவித்து விடுவது அலோபதியின் சூது. மக்களுக்கு இது தெரியாது, மக்களை பொறுத்தவரை," இரத்த பரிசோதனையிலேயே சர்க்கரை அளவு அதிகம் என தெரிந்து விட்டது "என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருக்கிறார்கள், ஆனால், அந்த அளவு தான் என்ன?, அதன் அடிப்படை என்ன? என எவரும் கேட்பதில்லை.

உண்மையின் ஒளி மட்டுமே இருளில் வழிகாட்டும். உண்மையே ஒளி, உண்மையே கடவுள், உண்மையை அறியாமல், உணராமல் எந்த தீர்வையும் அடைய முடியாது. சர்க்கரை நோய் குறித்த அச்சம், பீதி உங்கள் மனதில் இருளாக படித்திருந்தால், அந்த இருளை நீக்கும் படி அலோபதி மருத்துவர்களிடமே சரணடைந்தால் இருள் நீளுமே தவிர விலகாது. ஏனெனில், அந்த இருளை உருவாக்கி வைத்தவர்களே அவர்கள் தான். நாட்டில் பெரும் பாலான மக்கள் இவ்வாறு தான் *"சர்க்கரை நோயாளிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர்"*

இந்த அலோபதி முறை மருந்து மாத்திரைகளை எடுத்து உடலில் பல நோய்களும் உருவாகாமல் தடுத்து அந்த மாத்திரை மருந்துகளை நிறுத்தி நமக்கு சகவாழ்வு தரும் ஒரு அற்புத துணை உணவு தான் "நமது *சித்த சக்தி பொடி"*
தொடர்பு கொள்வீர்

ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை, அனுப்பர்பாளையம், திருப்பூர்,

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
தொடரும் -
ம. செந்தமிழன் அவர்கள் இனிப்பு நூல் பதிவு.

இனிப்பு தொடர் - பகுதி - 7 ஐ கீழ்காணும் இணைவில் காணலாம்
https://kavimalaravan.blogspot.in/2018/05/7.html?m=0

மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூடன் இணையுங்கள்.


இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவி-டமிருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

Friday, May 25, 2018

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்


ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…


அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?


ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.


நன்மை 1


மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 2


பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.


நன்மை 3


ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.


நன்மை 4


கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

நன்மை 5


வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

நன்மை 6


வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை 7


குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை 8


உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை 9


வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை 10


பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை 11


ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை 12


வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை 13


வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை 14


வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 15


வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை 16


காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை 17


வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை 18


வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை 19


வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை 20


வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

பகிர்வும்

இத்ததகல்கள் இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமி-ருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது



சிங்காரவேல் என்கிற கவிமலரவன்



உணவின் நிறம் உயிருக்கு விஷம் என்ற பதிவை கீழ்கண்ட இணைவில் காணலாம்..

(https://kavimalaravan.blogspot.in/2018/04/blog-post_75.html?m=0)


வைர முத்து VS கண்ணதாசன் குறித்த பதிவு



(https://kavimalaravan.blogspot.in/2018/04/vs.html?m=1)



ஆரோக்கியம் தொடர்பான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்


நன்றி

Thursday, May 24, 2018

நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???


நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும். மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங்கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும்.

திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீது மோதிவிடலாம். அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.

மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் பொது அடிக்கடி SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான். நாம் வாகனம் ஓட்டும் போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.

  • கார் மட்டுமல்ல, இருசக்கர வாகனம் உட்பட அணைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்


மனவியல் நிபுணர் பரிந்துரையில் பதிவிடப்பட்டது.


த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்