Friday, January 31, 2020

பொது அறிவு - தக்‌ஷின் கங்கோத்ரி ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது? TNPSC -GROUP 1&2 - 2020 புவியியல் வினா விடைகள்

பொது அறிவு - தக்‌ஷின் கங்கோத்ரி ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது?
TNPSC -GROUP 1&2 - 2020


புவியியல் வினா விடைகள்


1. தமிழ்நாட்டின் முதல் அணு மின்நிலையம் எங்கு அமைந்துள்ளது? - கல்பாக்கம்

2. சந்திரனின் மறுபக்கத்தை முதன்முதலாக புகைப்படம் எடுத்த செயற்கைக்கோள் எது? - லூனா-3

3. ரிக்டர் அளவு கோளின் மதிப்பீட்டு எல்லை எவ்வளவு? - 0-9 ரிக்டர்

4. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அலைகளில் எந்த அலை அதிக அழிவினை ஏற்படுத்துகிறது? - டு - அலைகள்

5. மவுண்ட் கிளிமாஞ்சாரோ எந்த கண்டத்தில் உள்ளது? - ஆப்பிரிக்கா கண்டம்

6. ஒரு தீவுக்கண்டம் என்றழைக்கப்படும் நாடு எது? - ஆஸ்திரேலியா

7. உலகிலேயே மிகவும் வலிமையான சு+றாவளிக் காற்று எங்கு உருவாகிறது? - அட்லாண்டிக் பெருங்கடல்

8. உலகிலேயே மிகவும் நீளமான நதி எது? - நைல் நதி

9. உலகிலேயே மிகவும் ஆழமான கடல் பகுதி ........... - மரியானா அகழி

10. நாடுகள், கண்டங்கள், தலைநகரங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய வரைபடத்தின் பெயர் - அரசியல் வரைபடம்

11. புவியின் நிலநடுக்கத்தினை பதிவு செய்யப் பயன்படும் கருவி - சீஸ்மோகிராப்

12. தக்ஷின் கங்கோத்ரி ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது? - அண்டார்டிக்

13. புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவதை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - எண்டோஜெனிக்

14. 'பனிப்பந்து" என அழைக்கப்படும் கோள் எது? - புளூட்டோ

15. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம் - விசாகப்பட்டினம்



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB

பொது அறிவு வினா விடைகள்!!! | சேரன் செங்குட்டுவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? GROUP 1&2 - 2020| பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!


பொது அறிவு வினா விடைகள்! | சேரன் செங்குட்டுவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
GROUP 1&2 - 2020!


பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!


✍ உலகம் முழுமைக்குமான வாழ்வியல் நெறிகளை ---------- கூறுகிறது . - வள்ளுவம்

✍ அறியாமையை நீக்கி அறிவை வளர்த்து மனிதரின் மனக்கோலை நீக்குவதையே நூலின் மாண்பாகக் கருதுபவர்? - நன்னூலார்

✍ ஒருமுறைக்குப் பலமுறை படித்தாலே முழு அறிவு கிடைக்கும் என்பது எந்த நூலின் கருத்தாகும்? - நன்னூல்

✍ கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் எத்தனை தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது? - மூன்று

✍ இல்லத்தார்க்கு உரியக் கடமைகளில் முதன்மையானது எது? - விருந்தோம்பல்

✍ சேரன் செங்குட்டுவன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? - கி.பி.இரண்டாம் நு}ற்றாண்டு

✍ தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்? - சேரன் செங்குட்டுவன்!!


✍ தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப்பிரதேசம் வரையிலான பகுதி சங்ககாலத்தில் ---------- எனப்பட்டது. - சோழ நாடு

✍ தஞ்சாவூர் நகரைக் கட்டமைத்து சோழ அரசு நிறுவப்பட்ட ஆண்டு? - பொ.ஆ. 859

✍ தமிழ்நாட்டில் சோழ அரச மரபின் கீழ் இருந்த ஆட்சிப்பகுதி சோழநாடு அல்லது ---------- எனப்பட்டது. - சோனாடு

✍ முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ----------- என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது. - மாநகரம்

✍ சோழர் காலத்தில் பிரம்மதேயங்கள் நீங்கலாகப் பல ஊர்களின் தொகுப்பு ------------ எனப்பட்டது. - நாடு

✍ சோழர் காலத்தில் வரியாக வசூலிக்கப்பட்ட நெல் ------ என்ற அலகின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது. - களம்

✍ ஒரு களம் என்பது எத்தனை கிலோ ஆகும்? - 28 கிலோ

✍ சோழர் காலத்தில், கிராம சபைகள் பாசனக்குளங்களைப் பழுதுபார்க்க --------- என்ற வரி வசூலிக்கப்பட்டது. - ஏரி ஆயம்


  அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...


பல விருதுகள்... புகழ்பெற்று விளங்கிய கவிஞர்... யார் இவர்? வரலாற்றில் இன்று

பல விருதுகள்... புகழ்பெற்று விளங்கிய கவிஞர்... யார் இவர்?
வரலாற்றில் இன்று !!


தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே



✍ வரகவி என்ற சிறப்பு பெயர் கொண்ட கன்னடக் கவிஞர் த.ரா.பேந்திரே 1896ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாடு என்ற இடத்தில் பிறந்தார்.

✍ இவருடைய இயற்பெயர் தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே ஆகும். மேலும் இவர் அம்பிகாதனயதத்தா என்ற புனைப்பெயரில் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த பெயரின் அர்த்தம் அம்பிகாவின் மகன் தத்தன் என்பதாகும்.

✍ இவருக்கு கர்நாடக குல திலகம் என்ற பெயரும் உண்டு. இவர் பேச்சு நடையிலேயே கவிதைகளை எழுதினார். இவரது பாடல்களில் நாட்டுப்புற நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கும்.

✍ இவருக்கு 1958ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும், 1968ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1973ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டுள்ளது.

✍ இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற இவர் 1981ஆம் ஆண்டு மறைந்தார்.நாகேஷ்


இன்று இவரின் நினைவு தினம்..! (சர்வர் சுந்தரம் நாகேஷ்)


👉 தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவையிலும், குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்த பெருமைக்குரியவருமான நாகேஷ் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார்.

👉 இவர் 1958ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதித்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் கதா பாத்திரத்தில் தோன்றினார். அது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது.

👉 இவருக்கு 1974ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது.

👉 தமிழ் திரையுலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்த இவர் 2009ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
✈ 1958ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.
★ 1946ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
✈ 1961ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நாசாவின் மெர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

Wednesday, January 29, 2020

பொது அறிவு : கரீபீ ஹட்டா எந்த ஐந்தாண்டுத் திட்டத்துடன் தொடர்புடையது? பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு : கரீபீ ஹட்டா எந்த ஐந்தாண்டுத் திட்டத்துடன் தொடர்புடையது?

பொது அறிவு வினா விடைகள் 


✍ பணவீக்கத்திற்கான காரணம் என்பது? - பண அளிப்பை அதிகப்படுத்துதல் மற்றும் உற்பத்தியைக் குறைத்தல்.

✍ எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்? - 1992 - 1997.

✍ தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை? - 25.

✍ தேசிய வருமானத்தைக் கணக்கிடுவது? - மத்தியப் புள்ளியியல் அமைப்பு.

✍ இந்தியாவில் தனிநபர் வருமானத்தின் மிக மெதுவான வளர்ச்சிக்கு காரணம் என்ன? - அதிக நிதிப் பற்றாக்குறை.

✍ 6-வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ------------. - NREP, RLEGP. ,IRDP.

✍ மறைமுக வேலையின்மை என்பது - ஒரு வேலையை செய்வதற்குத் தேவைப்படும் ஆட்களை விட மிக அதிகமான ஆட்கள் அவ்வேலையில் ரூடவடுபடுதல்.

✍ கரீபீ ஹட்டா என்பதன் பொருள் - பசுமைப் புரட்சி

✍ கரீபீ ஹட்டா எந்த ஐந்தாண்டுத் திட்டத்துடன் தொடர்புடையது? - ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்.

✍ இந்தியாவில் பணமில்லா பொருளாதாரம் கொண்டு வந்தால் --------- - வளர்ச்சி விகிதம் அதிகமாகும்.

✍ கம்பெனி சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? - 1956.

✍ இந்தியா எதன் மூலம் அதிக வெளிநாட்டு செலாவணி பெறுகிறது? - தேயிலை.

✍ இந்திய பொருளாதாரம் என்பது - கலப்புப் பொருளாதாரம்.


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!.


பொது அறிவு வினா விடைகள்.!! | உலகிலேயே அதிக நில நடுக்கம் கொண்ட நாடு எது? Tnpsc-Group1&2 - 2020 பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்.!! | உலகிலேயே அதிக நில நடுக்கம் கொண்ட நாடு எது?
Tnpsc-Group1&2 - 2020

பொது அறிவு வினா விடைகள்!!!


💢 ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அதிக நிலநடுக்கங்களைக் கொண்டுள்ள நாடுகள்? - டோங்கா, பிஜி மற்றும் இந்தோனேசியா

💢 எந்த கருவியால் நிலநடுக்கம் பதிவு செய்யப்படுகிறது? - சீஸ்மோக்ராப்

💢 மனித உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் இயற்கையான நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படும்? - இயற்கை இடர்கள் 

💢 வளிமண்டலத் தாழ்வு (அ) குறைந்த அழுத்தப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - புயல்

💢 மழை பற்றாக்குறை காரணமாக வேளாண் பயிர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலையைக் குறிப்பது -------- வறட்சியாகும். - வேளாண் வறட்சி

💢 புவி அதிர்வு தோன்றும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - புவி அதிர்வு மையம்

💢 நிலநடுக்க மையத்திற்கு நேர் எதிராக புவியின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் இடத்தை எவ்வாறு அழைக்கிறோம்? - வெளிமையம் (நுpi ஊநவெநச)

💢 எந்த அலைகளை மதிப்பீடு செய்ய 'ரிக்டர் அளவை" என்ற முறை பயன்படுத்தப்படுகிறது? - நிலநடுக்க அலைகள்

💢 நில அமைப்பியலாளர்கள் அதிர்வலைகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கின்றனர்? - இரண்டு

💢 பாறைக் கோளத்தை ஊடுருவி பயணிக்கக் கூடிய அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - உட்புற அலைகள் (body waves)

💢 புவியின் மேல்பகுதியிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ பயணிக்கக் கூடிய அலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மேற்புற அலைகள் (Surface waves)

💢 மழைப்பொழிவு பற்றாக்குறையினால் நீண்ட காலமாக நிலவும் வறண்ட வானிலையை எவ்வாறு அழைக்கிறோம்? - வறட்சி

💢 உலகிலேயே அதிக நில நடுக்கம் கொண்ட நாடு எது? - இந்தோனேசியா

💢 'ஹசார்டு" (HAZARD) என்ற சொல் 'ஹாசர்ட்" (HASART) என்ற பழமையான --------- சொல்லிலிருந்து தோன்றியது. - பிரெஞ்சு


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!.

பொது அறிவு : சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறியவர் யார்? TNPSC-GROUP-1&2: 2020 -பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு : சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறியவர் யார்?
TNPSC-GROUP-1&2: 2020|

பொது அறிவு வினா விடைகள்


1. படித்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ................ என அழைக்கப்பட்டனர்? - மிதவாதிகள்

2. ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ................ - 1919

3. திலகர் மராத்திய மொழியில் வெளியிட்ட பத்திரிக்கை? - கேசரி

4. இந்து முஸ்லீம் பிரிவினைக்காக செய்யப்பட்டது ............... - வங்கப்பிரிவினை

5. ............. என்பவரது தலைமையில் முஸ்லீம்லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. - சலிமுல்லாகான்

6. மிதவாதிகளின் தலைவர் ................ - கோபால கிருஷ்ண கோகலே

7. முஸ்லீம்களை திருப்திபடுத்த வெளியிடப்பட்ட சட்டம் ? - மிண்டோ - மார்லி சட்டம்

8. மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒன்றிணைந்த மாநாடு? - லக்னோ

9. தன்னாட்சி இயக்கத்தை சென்னையில் தோற்றுவித்தவர்? - அன்னிபெசண்ட்

10. உத்தரவின்றி எவரையும் கைது செய்யும் சட்டம் ................ - ரௌலட் சட்டம்

11. உலக முஸ்லீம் இனத்தின் சமய தலைவர் .................. - காலிபா

12. கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு .............. - 1919

13. ஆயுதச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? - 1878

14. தன்னாட்சி இயக்கம் நிறுவப்பட்ட ஆண்டு .................... - 1916

15. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறியவர் யார்? - திலகர்

பொது அறிவு வினா விடைகள்| பண்பாடு என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்? TNPSC-GROUP-I&II - 2020!! பொது அறிவு வினா விடைகள்!

பொது அறிவு வினா விடைகள்| பண்பாடு என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?  
TNPSC-GROUP-I&II - 2020

பொது அறிவு வினா விடைகள்!!


✍ அறவியலில் மிக முக்கிய இடத்தைப் பெறுவது எது? - செயலாற்றல்

✍ இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்று வள்ளுவர் கூறுகிறார்? - இல்லறம்

✍ சமுதாயத்தில் வாழ்கின்ற மக்களின் ஒருமித்த நடத்தைகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துவது ---------- ஆகும். - பண்பாடு

✍ பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களின் ------- முறையாகும் - வாழ்க்கை

✍ பண்படு என்பதன் பொருள்? - சீர்படுத்துதல், செம்மைப்படுத்துதல்

✍ பண்பாடு என்ற சொல்லைத் தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்? - டி.கே சிதம்பரநாதனார்

✍ 'உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே" என்று கூறும் நூல்? - தொல்காப்பியம்

✍ நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்வதே சிறந்தது என்பதைப் பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் என்று குறிப்பிடும் நு}ல்? - கலித்தொகை

✍ மனிதரின் புறத்தோற்ற வளர்ச்சியின் செம்மையைக் குறிப்பது எது? - நாகரிகம்

✍ சேர மன்னர்களின் வணிகமுறை, ஆட்சிச்சிறப்பு, போர்த்திறம், கொடைத்திறம் பற்றி விரிவாகக் கூறும் நு}ல்? - பதிற்றுப்பத்து

✍ சோழநாடு, தரைவழி வணிகத்தாலும் கடல் வழி வணிகத்தாலும் வளம் பெற்றிருந்ததனை 'முட்டாச் சிறப்பின் பட்டினம்" என்று குறிப்பிடும் நு}ல்? - பட்டினப்பாலை

✍ பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்றச்செயல்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்பது எந்த நு}லின் மையக் கருத்து? -மணிமேகலை

✍ சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான முசிறியை ரோமர்கள் எவ்வாறு குறிப்பிட்டனர்? - முஸிரிஸ்

✍ ஹிப்பாகிரேட்டஸ் என்ற புகழ் பெற்ற கிரேக்க மருத்துவர், 'இந்திய மருந்து" என்று எதைக் குறிப்பிட்டுள்ளார்? - மிளகு

✍ சோழர்கால கிராம ஆட்சிமுறையைத் தெளிவாக எடுத்துக்காட்டும் கல்வெட்டு? - பராந்தகச் சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு



Monday, January 27, 2020

உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கு நடந்தது? - 2020!! பொது அறிவு வினா விடைகள்

உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கு நடந்தது?  - 2020!!
பொது அறிவு வினா விடைகள்!!!


💢 மக்கள் தொகை (Pழிரடழரள) என்ற சொல், எந்த மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்? - இலத்தீன்

💢 பிறப்பு விகிதத்திற்கும், இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு? - மக்கள் தொகை வளர்ச்சி

💢 பழங்காலத்தில், எந்த மொழியில் னுநஅழள என்றால் மக்கள் என்றும், பசயிhளை என்றால் கணக்கிடுதல் என்றும் பொருளாகும்? - கிரேக்கம்


💢 --------- என்பது மக்களின் எண்ணிக்கை ஓரிடத்தில் அதிகரிப்பு அல்லது குறைவதைக் குறிப்பதாகும். - மக்கள் தொகையில் மாற்றம்

💢 மொத்த மக்கள் தொகையில் ஒரு மொழியை எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையைப் பற்றிக் கணக்கிடுவது? - கல்வியறிவு விகிதம்

💢 உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கு நடந்தது? - பாபிலோன் (கி.மு 3800)

💢 நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு? - டென்மார்க்

💢 இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு? - கி.பி 1872

💢 மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது? - 10 ஆண்டுகள்

💢 புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றிக் குறிப்பிடுவது? - மக்கள் தொகை பரவல்

💢 உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படும் நாள்? - ஜூலை 11

💢 இந்திய அரசின் அதிகாரப் பு+ர்வமான மக்கள் தொகை கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு? - கி.பி 1952

💢 ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் நடைபெறும் இடப்பெயர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - உள்நாட்டு இடப்பெயர்வு

💢 மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எல்லைகளைக் கடந்து இடம் பெயர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பன்னாட்டு இடப்பெயர்வு

💢 எந்த நகரத்தில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்? - டமாஸ்கஸ்

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...


Saturday, January 25, 2020

கனிம எண்ணெய் என்றழைக்கப்படும் பெட்ரோலியம் எதிலிருந்து எடுக்கப்படுகிறது? பொது அறிவு வினா விடைகள்

கனிம எண்ணெய் என்றழைக்கப்படும் பெட்ரோலியம் எதிலிருந்து எடுக்கப்படுகிறது? 

 




பொது அறிவு வினா விடைகள்!!





💐 ரோஸ் மரம், எபானி, மகோகனி, ரப்பர், சின்கோனா, மூங்கில் மற்றும் லயனாஸ் போன்ற முக்கியமான மரங்கள் காணப்படும் காடுகள்? - வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள்
💐 ஓர் ஆண்டுக்கு 70 செ.மீ. முதல் 200 செ.மீ. வரை சராசரி மழை பெறும் காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் (அ) இலையுதிர் காடுகள்
💐 மழை அளவு 25 செ.மீ.க்கு குறைவாக உள்ள பகுதிகளில் வளரும் தாவரங்கள்? - பாலைவனத் தாவரங்கள்
💐 -------- காடுகள், கடல் ஓதங்கள் மூலம் நீரைப்பெறும் கடலோரப்பகுதிகளில் காணப்படுகின்றன. - மாங்குரோவ் காடுகள்
💐 எந்த ஆண்டு வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது? - 1980
💐 வனப்பாதுகாப்புச்சட்டம் திருத்தப்பட்ட ஆண்டு? - 1988
💐 இரும்பு சாராத கனிமங்களுக்கு எடுத்துக்காட்டு? - வெள்ளி, செம்பு, தங்கம்
💐 இந்திய நிலவியல் களஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது? - கொல்கத்தா
💐 இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் எங்கு அமைந்துள்ளது? - ஹைதராபாத்
💐 புவியின் மேற்பரப்பில் இயற்கையாகவே வளரும் தாவரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - இயற்கைத் தாவரம்
💐 தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) கிடைக்கும் இடம்? - நெய்வேலி
💐 கனிம எண்ணெய் என்றழைக்கப்படும் பெட்ரோலியம் எதிலிருந்து எடுக்கப்படுகிறது? - படிவுப் பாறை
💐 இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எந்த ஆண்டில் எங்கு நிறுவப்பட்டது? - 1897, டார்ஜிலிங்
💐 யுரேனியம் மற்றும் தோரியம் கனிமத்திலிருந்து -------- உற்பத்தி செய்யப்படுகிறது. - அணுமின் சக்தி
x

சங்ககாலத்தில் ஒரு நாள் என்பது எத்தனை நாழிகைகளாகக் கணக்கீடு செய்யப்பட்டது? Group-I- 2020!! பொது அறிவு வினா விடைகள்!

சங்ககாலத்தில் ஒரு நாள் என்பது எத்தனை நாழிகைகளாகக் கணக்கீடு செய்யப்பட்டது? Group-I-  2020!!
பொது அறிவு வினா விடைகள்!!!


டீசலை அடிப்படையாகக் கொண்ட அனல்மின் உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது? - முதலிடம்

✍ இந்திய அளவில் அதிகளவு காற்று வழி மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் எது? - தமிழ்நாடு

✍ மாநிலத்தின் செயல்துறை அதிகாரம் யாரிடத்தில் உள்ளது? - ஆளுநர்


✍ வருண படிநிலை அமைப்பு -------------- என்று அழைக்கப்படுகிறது. - சதுர் வருண அமைப்பு

✍ பொருட்பாலின் முதலில் அரசனது இயல்பு கூறும் அரசியலை மிக விரிவாக எத்தனை அதிகாரங்களில் திருவள்ளுவர் கூறியுள்ளார்? - 25

✍ திருவள்ளுவருடைய அரசியல் அமைப்பு ----------------- அடிப்படையில் அமைந்தது எனலாம். - மக்கள் நல அரசு

✍ ஒரு மன்னன் பொருள் வரும் வழிவகைகளைப் பெருக்க வேண்டும் என்பதனை திருவள்ளுவர் -------- என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். - இயற்றல்

✍ அரசுக்குப் பல வழிகளிலே வந்த வருவாயைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டும் என்பதனை வள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்? - ஈட்டல்

✍ சங்ககால தமிழக நிலப்பரப்பு எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டது? - ஐந்து

✍ ஒரு நாள் என்பது சங்ககாலத்தில் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது? - ஆறு

✍ சங்ககாலத்தில் ஒவ்வொரு சிறுபொழுதும் எத்தனை நாழிகைகளாகக் கணக்கீடு செய்யப்பட்டது? - 10

✍ சங்ககாலத்தில் ஒரு நாள் என்பது எத்தனை நாழிகைகளாகக் கணக்கீடு செய்யப்பட்டது? - 60

✍ அறுபது நாழிகை என்பது எத்தனை மணி நேரத்திற்குச் சமம் ஆகும்? - 24 மணி

✍ ஓர் ஆண்டு என்பது எத்தனை பெரும் பொழுதுகளாக பகுக்கப்பட்டிருந்தது? - ஆறு

மருத்துவ உலகை வியக்கச் செய்த அதிசய மருந்தான பெனிசிலினைக் கண்டுபிடித்தவர் யார்? Group-I- 2020!! பொது அறிவு வினா விடைகள்

மருத்துவ உலகை வியக்கச் செய்த அதிசய மருந்தான பெனிசிலினைக் கண்டுபிடித்தவர் யார்? Group-I- 2020!!

பொது அறிவு வினா விடைகள்!!!


💢 உலகில் மிக வேகமாக வளரும் கடல்பாசி எது? - கலிபோர்னியா இராட்சத கெல்ப்

💢 அயோடின் ----------- எனப்படும் பழுப்புப் பாசியிலிருந்து பெறப்படுகிறது. - லேமினேரியா

💢 முதன் முதலில் நீரிலிருந்து வெளிவந்து நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்ற தாவர வகை எது? - பிரையோபைட்டுகள்

💢 வாஸ்குலர் கற்றையைப் பெற்று முதன் முதலில் நிலத்தில் வாழும் திறனைப் பெற்ற பு+வாத்தாவரங்கள்-------- ஆகும். - பெரணிகள் அல்லது டெரிடோபைட்டுகள்

💢 மருத்துவ உலகை வியக்கச் செய்த அதிசய மருந்தான பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்? - அலெக்ஸாண்டர் பிளெம்மிங்

💢 ஒரு தொடக்க நிலையிலுள்ள பருப்பொருளைச் சிறிய பொருளாக உடைக்க முடியாதோ அது தனிமமாகும் இது யாருடைய கூற்று? - லாவாய்சியர்

💢 ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியியல் முறையினால் மேலும் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும் இது யாருடைய கூற்று? - பாயில்

💢 வைரத்தின் முனையைக் கொண்டு வெட்ட முடியாத பொருளைக் கூட உயரிய வாயுவான ------- லேசரைப் பயன்படுத்தி வெட்டமுடியும். - செனான்

💢 SI அலகு முறையில் மின்னோட்டத்திற்கான அலகு -------- ஆகும். - ஆம்பியர்

💢 பன்னாட்டு அலகு முறையில் விசையின் அலகு --------- ஆகும். - நியு+ட்டன்

💢 தொடுவதன்மூலம் ஒரு பொருளின்மீது விசையை செலுத்தி, அதன் இயக்க நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தம் விசையை ---------- என்கிறோம். - தொடுவிசை

💢 வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி எது? - பாராமானி

💢 ஒரு கலனில் உள்ள காற்றை வெளியேற்றும் பம்பை கண்டுபிடித்தவர்? - ஆட்டோவான் குருக்கே

💢 இரண்டு பரப்புகள் ஒன்றன் மீது மற்றொன்று நகரும் போதோ நகர முற்படும் போதோ உருவாகும் விசை----------எனப்படும். - உராய்வு விசை

💢 மின்னூட்டம் பெற்ற ஒரு பொருள் மின்னூட்டம் பெற்ற அல்லது மின்னூட்டமற்ற மற்றொரு பொருளின்மீது செயல்படுத்தும் விசை -------- எனப்படும். - நிலை மின்னியல் விசை

Thursday, January 23, 2020

தொலைநோக்கி என்றவுடன் நினைவுக்கு வருபவர் இவராகத்தான் இருப்பார்..!! நவீன இயற்பியலின் தந்தை.. யார் இவர்

தொலைநோக்கி என்றவுடன் நினைவுக்கு வருபவர் இவராகத்தான் இருப்பார்..!!
நவீன இயற்பியலின் தந்தை.. யார் இவர்?


🌍இயற்பியலாளர்...

🌍கணிதவியலாளர்...

🌍வானியல் அறிஞர்...

🌍தத்துவஞானி என பன்முகத்திறமை கொண்டவர்...

🌍அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கினை ஆற்றியவர்...

🌍தொலைநோக்கியை உருவாக்கியதன் மூலம் வானத்தின் உண்மை பரிமாணத்தை காணவைத்து விஞ்ஞானத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றவர்...

🌍இவர் வானில் கண்ட அதிசயங்களும், இவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களும் ஏராளம்...

🌍தொலைநோக்கியின் தந்தை என அழைக்கப்படுபவர்...

🌍வியாழனின் துணைக்கோள்களைக் கண்டறிந்தவர்...!!

🌍வெள்ளி, நிலவு போல் பல்வேறு விதமான பரிமாணங்களில் தோன்றுவதையும், மறைவதையும் கண்டவர்...

🌍சனிக்கோளை சுற்றியுள்ள வளையத்தை கண்டறிந்தவர்...

🌍நெப்டியூன் கோளை கண்டறிந்தவர்...

🌍சூரியனின் கரும்புள்ளிகளை ஆய்வு செய்தவர்...

🌍'நவீன இயற்பியலின் தந்தை" என அழைக்கப்படுபவரும் இவரே...

🌍'ஒரே நேரத்தில் கனமான பொருள், கனமில்லா பொருள் ஆகியவற்றை விழச்செய்யும்போது கனமான பொருள் முதலில் கீழே விழும், பின்னர்தான் கனமில்லா பொருள் கீழே விழும்" என்பது அரிஸ்டாட்டில் கூற்று...

🌍இக்கருத்தை உடைத்து, இவர் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று வௌ;வேறு நிறைகளையுடைய பொருள்களைக் கீழே விழச்செய்து, பொருள்கள் கீழே விழும் நேரத்திற்கும், அதன் நிறைக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.

🌍இவர் நம் அனைவருக்கும் பரிட்சையமான ஒருவர்தான்...

👇👇



கலீலியோ கலிலிதான் அவர்...!!


கலீலியோ கலிலி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இனிவரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்...!!

Wednesday, January 22, 2020

வானியல் துறையில் முத்திரை பதித்தவர்.. இவரை கண்டு வியக்காதவர் யார்?

வானியல் துறையில் முத்திரை பதித்தவர்.. இவரை கண்டு வியக்காதவர் யார்?


ஆரியபட்டாவின் ஆரியபட்டியம்..!!
ஆரியபட்டியம் :

📘ஆரியபட்டியம் அல்லது ஆரியபட்டியா என்பது இந்திய கணிதவியலாளர், ஆரியபட்டர் எழுதிய இந்திய வானியல் ஆய்வு நூலாகும்.

📘தற்காலத்திற்கு கிடைக்கப்பெற்ற 5ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரே இந்திய கணிதவியல் நூல் இதுவாகும். செங்கிருத நூலான இது நான்கு பகுதிகளும், 121 பாடல்களும் கொண்டுள்ளது.

நூல் அமைப்பு :

1. கிடிகபதம் (13 பாடல்கள்) : அண்டவியலைப் பற்றிக் கூறுகின்றன. மேலும் சைன் (முக்கோணவியல்) பற்றியும் ஒரு பாடல் உள்ளது.

2. கணிதபதம் (33 பாடல்கள்) : அளவையியல், கூட்டல் மற்றும் பெருக்கல் தொடரியல், சூரிய மணிக்காட்டியிலுள்ள கோல்ஃநிழல் முறை, ஒருபடி, இருபடி, ஒருங்கமை மற்றும் தேரப்பெறாத(குட்டக) சமன்பாடுகள் பற்றிக் கூறுகிறது.

3. காலக்ரியப்பதம் (25 பாடல்கள்) : காலத்தின் வௌ;வேறு அளவுகோல்கள், குறிப்பிட்ட நாளில் கோள்களின் இருப்பிட நிலை, இடைச்சேர்வுகள் கொள்ளும் மிகை மாதங்களைக் கணிக்கும் முறைகள், க்ஷய-திதி மற்றும் வாரத்தின் ஏழு கிழமைகளின் பெயர்கள் பற்றி விவரிக்கிறது.

4. கோலபதம் (50 பாடல்கள் ) : விண்வெளிக் கோள்களின் வடிவஃமுக்கோண கணித இயல்புகள், நீள்வட்டப் பாதை, வானநடுவரை, கணு, புவியின் வடிவம், பகல் மற்றும் இரவின் காரணங்கள், கீழ்வானத்தில் தோன்றும் ராசி, நட்சத்திரங்கள் போன்றவைகளை விவரிக்கிறது. மேலும் படைப்பின் மேற்கோள்கள் மேலும் வலுசேர்க்கும் விதமாக உள்ளன.

 கணிதவியல் மற்றும் வானியல் பற்றி கவிதை வடிவில் எழுதப்பட்ட ஆரியபட்டியம் பல நூற்றாண்டுகளாக செல்வாக்குடன் இருந்து வருகிறது.




📘நவீன காலத்து கணிதம், அறிவியல் மற்றும் வணிகவியலின்றி பதின்ம இலக்கம் முறையைப் பற்றி கூறியதே இந்நூலுக்கு பெருமை சேர்ப்பதாகும். வியாழனின் துணைக்கோள்களை கண்டறிந்தவர்...!!

வெள்ளி, நிலவுபோல் பல்வேறு விதமான பரிமாணங்களில் தோன்றுவதையும், மறைவதையும் கண்டவர்...!!

சனிக்கோளை சுற்றியுள்ள வளையத்தை கண்டறிந்தவர்...!!

நெப்டியூன் கோளை கண்டறிந்தவர்..!!

சூரியனின் கரும்புள்ளிகளை ஆய்வு செய்தவர்...!!

பொருட்கள் கீழே விழும் நேரத்திற்கும், அதன் நிறைக்கும் தொடர்பில்லை என்று கூறியவர்...!!

இவர் நம் அனைவருக்கும் பரிட்சையமான ஒருவர்தான்...

இவர் யார்?

யோசித்துக்கொண்டே இருங்கள் நாளை வரை..!!