Friday, June 12, 2020

எந்த நோய்க்கு என்ன பழம் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்!

எந்த நோய்க்கு என்ன பழம் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்!


உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் தன்மை காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.

இருந்தாலும் எந்த நோய்க்கு எந்த காய்கறி, பழங்களை சாப்பிடலாம் என தெரிந்து சாப்பிட்டால் இன்னும் அதிகமான பலன்களை பெறலாம்.

உடற்பருமன்

அதிகளவில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினால் உடற்பருமன் ஏற்படுகிறது. உடற்பருமனால் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகிறது.

முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக் காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப்ஆகியவற்றினை நம் உணவில் அதிகமாக சேர்த்து கொள்வதன் மூலம் உடற்பருமனை குறைக்கலாம்.

நீரிழிவு நோய்

பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயினால் தான். உண்மையில் மெல்ல கொல்லும் ஆபத்தினை உடையது நீரிழிவு நோய் தான்.

தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகிய காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.

மேலும் சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி போன்ற பழங்களையும் உணவில் சேர்த்து கொள்வதால் நீரிழிவு நோயினை கட்டுபடுத்தலாம்.

குடல் புண்

அதிகளவில் துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட எண்ணெயில் பொரித்த உணவுகளையும் சாப்பிடும் போது அவை சரியாக செரிமானம் ஆகாமல் இருக்கும். இதனால் அஜீரணக் கோளாறு மற்றும் குடல் புண் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

குடல் புண் சரியாவதற்கு மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய்க் கோளாறுகள்

உடற்பருமன் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளால் முறையற்ற மாதவிடாய் பிரச்சனை உண்டாகிறது. இது கருத்தரித்தல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை உணவில் அதிக சேர்த்து கொள்ளலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமா போன்ற மூச்சு தொடர்பான பிரச்சனைகளுக்கு கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

ரத்தசோகை

இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்த சோகை பிரச்சனை உண்டாகிறது. இதனால் மாதவிடாய் பிரச்சனை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.

பூசணி, பீட்ரூட், அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், நெல்லிக்காய், கீரை வகைகள், பேரீச்சம்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை தினசரி உணவில் நாம் சேர்த்து கொள்ளும் போது சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மலச்சிக்கல்

பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா ஆகிய பழங்களில் ஏதேனும் ஒன்றினை தினமும் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

சிறுநீரகக் கல்

சரியாக நீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றினால் சிறுநீரகக் கல் உண்டாகிறது.

இயற்கையாக இந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள் ஆகியவற்றினை நம் உணவில் சேர்த்து கொண்டால் போதுமானதாகும்.

மூலம்

மலச்சிக்கல், அடிக்கடி துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் செரிமான பிரச்சனை போன்றவற்றில் மூலம் ஏற்படுகிறது.

பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிடும் போது மூலம் சரியாகும்.

நரம்பு கோளாறுகள்

கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா போன்ற காய்கறிகள், பழங்களை அதிகமாக சேர்த்து கொண்டால் நரம்பு கோளாறு சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

Wednesday, June 10, 2020

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?


அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட  எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட  வேகமாக உடைந்து  குடலால் உறிஞ்சபடும்.

இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக  மாறி  புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:

மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில்  தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு  வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே  மாரடைப்பு   ஏற்பட  பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள்  மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.✍🏼🌹

Sunday, June 7, 2020

எச்சரிக்கை மணி

எச்சரிக்கை மணி
_---------_-----------_-----------


நாமல்லாம் 1% கூட கொரோனாவோட தீவிரத்தை அறியாம காமெடி பண்ணிகிட்டு இருக்கோம்..

லாக்டவுன்கிறது அரசாங்கம் மக்களை வஞ்சிக்கிர மாதிரி உருவகப் படுத்திகிட்டு ஆட்சியாளர்கள திட்டிகிட்டு இருக்கோம். உண்மையில் கொரோனா வைரஸ் இப்பதான் பரவவே ஆரம்பிச்சுருக்கு.


எல்லாரும் ரெடியா இருந்துக்குங்க...ஒரு தீவிரமான லாக்டவுன் நமக்கு காத்திருக்கு.

நம்ம பாதுகாப்பை நாமதான் உறுதி செஞ்சுக்கனும். அரசாங்கம் அதோட கடைசி கோட்டு எல்லை வரை நம்மள காப்பாத்திருச்சு.

  இனி கட்டுப்படுத்த முடியாது கூட வாழ பழகிக்கிங்கன்னு சொல்லிருச்சு.

தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுமதி கொடுத்த போதே தெரிஞ்சுக்கனும்.

 இனி அரசாங்கமே எல்லாத்தையும் பார்க்கிறது  முடியாதுன்னு கைவிரிச்சத... எல்லாத்துக்கும் அரசாங்கமே பொறுப்பு ஏற்க முடியாது.

நாம சுய கட்டுப்பாடுன்னா கிலோ எவ்வளோன்னு கேட்டா - அதுக்கு அரசாங்கமா பொறுப்பு ?

முடிஞ்ச வரை சிக்கனமாகவும் - பொருள்கள சேமிச்சும் வைச்சுக்குங்க. நேத்து வரை 50 கிலோ மீட்டருக்கு அப்பால கேட்ட கொரொனா சத்தம் இப்ப ஒவ்வொருத்தரு தலைக்கு மேலயும் காத்திருக்கு.  உடனே செத்துட்டா கூட தெரியாம போயிரும். அந்த கொடுமை, வலி , கஸ்டத்த அனுபவிச்சு சாவரது - ஆயிரம் நரகத்துக்கு சமம்.

உலகம் முழுதும் ருத்ரதாண்டவம் ஆடுன கொரோனா இந்தியால பம்முதுனா - அது நம்மோட உடல் வலிமைக்கும் - சீதோஸ்ன நிலமைக்கும் - மருத்துவ முன்னேற்றத்திற்கும் பயப்டுதுன்னு அர்த்தம்.

எந்த ஒரு வைரஸ்ஸூம் இடத்துக்கு ஏத்தாற் போல தன்னை மற்றிக்கொள்ள கொஞ்ச நாள் எடுத்துக்கும். அதான் இப்ப நடந்துகிட்டு இருக்கு . நம்ம நாட்டோட கிளைமேட்டுக்கும் - நம்ம உடல் மரபனு வரிசை அமைப்புக்கும் கொரோனா தன்னை தானே மாற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் இங்குபேட்டர் காலம்னுவேனா இதை எடுத்துக்கலாம்.

ஒரு தடவ பரவ ஆரம்பிச்சா - கட்டுப்படுத்தறதுக்கு  வாய்ப்பு 0%. சாவு 100% .. சமூக வலைதளத்துல எழுதி எந்த பிரியோஜனமும் இல்ல. இங்க காமெடி  வரைல் நியூஸ் தாண்டி யார் மனசிலயும் நிக்க போறதில்ல.

கடைசியா வாழ்ந்துக்குங்க.  மனித இனம்னு ஒன்னு பூமில இருந்துச்சு. ஆயுத குவிப்பு போட்டில யார் பெரியாள்னு நாட்டுக்கு நாடு சகுனி வேலை பாத்து பதட்டுத்துலயே இருந்துச்சு. உலகத்துலயே அசைக்க முடியாத சக்தின்னு இருந்த நாடுகள் கூட , எதுக்கு சாவரம்னே தெரியாம செத்துச்சு ..  இதான் அடுத்த 20 வருசத்துல ஏலியன்ஸ் சமிட் பண்ற அறிக்கையா இருக்கும்.

எச்சரிக்கை

 கொரோனா வைரஸ் மேல் பயம் இருக்கட்டும். நமக்கு வராது என்று அசட்டு தைரியம் வேண்டாம்.  பாதுகாப்பாக இருப்போம். ஆரோக்ய வாழ்வுக்கு ஆச்சாரமாக இருப்போம். நன்றி

டாக்டர் ரேலா என்னும் மனிதர்

டாக்டர் ரேலா



டாக்டர் ரேலா மருத்துவமனை பெயரைக்கேட்டதையடுத்து அவரைப்பற்றி மருத்துவ நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் தந்த தகவலும், இணையத்தில் அவரைப்பற்றி படித்த செய்திகளும் பிரமிப்பைத்தருகின்றன. 

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கிளியனூர் என்ற கிராமத்தில் பிறந்த முஹம்மது ரிளா (Mohamed Rela), சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டமும் M.S பட்டமும் பெற்றுள்ளார். அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து சென்ற டாக்டர் ரேலா , எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு M.S பட்டமும் , FRCS பட்டமும் பெற்றவர். கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணரான அவர் உலகப்புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரியில் 1991 முதல் பேராசிரியராக பணியாற்றிவந்தார். 

1997 ம் ஆண்டு பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்த சாதனைக்காக , 2000ம் ஆண்டு டாக்டர் ரிளாவின் பெயர் கின்னஸ் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றது

அந்த பெண் குழந்தை ஆரோக்யத்துடன் வளர்ந்து தற்போது லண்டன் டிரினிடி கல்லூரியில் படித்துவருகிறார் என்பது நவீன மருத்துவத்துறையின் சாதனைகளின் சான்றாக கருதப்படுகிறது.

  தனது 30 ஆண்டுகால மருத்துவ பயணத்தில் சுமார் 5000 கல்லீரல் மற்றும் கணையம் சம்பந்தப்பட்ட அறுவைசிகிச்சைகள் செய்த சாதனையாளராக திகழ்கிறார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக 600க்கும் மேற்பட்ட scientific publications வெளியிட்டுள்ள உலகின் ஒரே மருத்துவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்

உலகின் தலைசிறந்த 20 குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சை நிபுணர்கள் என்ற பட்டியலில் உலகம் முழுதும் உள்ள மருத்துவர்களால் வாக்களிக்கப்பட்டு இடம்பெடித்த பெருமையும் டாக்டர் முஹம்மது ரிளா அவர்களைச்சேரும். 

தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரி(கிளியனூரி)ல் பிறந்து உலகம் முழுதும் புகழ்பெற்ற மருத்துவ நிபுணராக டாக்டர் முஹம்மது ரிளா சாதனை படைத்துவருவது , மருத்துவ ரீதியாகவும் , நம் மண்ணின் மைந்தர் என்ற வகையிலும் நமக்கெல்லாம் பெருமிதம் தரக்கூடிய ஒரு விஷயமாகும்.


Friday, June 5, 2020

நம்பிக்கை இழக்காதே

நம்பிக்கை இழக்காதே


ஒரு காட்டில் எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும், கட்டெறும்பும் நண்பர்களாக இருந்தன.

ஒரு நாள் இருவரும் இரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். எங்கேயும் உணவு கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. அதில் நிறைய மாம்பழங்கள் பழுத்து தொங்கி கொண்டிருந்தன. 

இரண்டு எறும்புகளும் பசியாக  இருந்ததால் மாமரத்தில் ஏறி ஒரு மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. திடீரென்று ஒரு பெருங்காற்று வீச அந்த மாம்பழம் குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தழிக்க ஆரம்பித்தன.

‘நண்பா இப்படி வந்து தண்ணீல விழுந்துட்டோமே. இப்ப என்ன பண்றது’ என்றது செவ்வெறும்பு.

‘நிச்சயம், எதாவது உதவி கிடைக்கும். அது வரை நீந்திட்டே இருப்போம்’ என்றது கட்டெறும்பு.

நேரமாகிக்கொண்டே இருந்தது. எந்த உதவியும் கிடைக்கவில்லை. இரண்டு எறும்புகளும் நீந்தி நீந்தி சோர்ந்து போயின.

'நண்பா இவ்வளவு நேரம் நீந்தியதில் கை, கால்கலெல்லாம் சக்தியில்லாம போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்த முடியாது. தண்ணீரில மூழ்கி இறக்கத்தான் போறேன்;’ என்றது செவ்வெறும்பு.

‘இல்லை ... இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்ச நேரம் போராடு நிச்சயம்; எதாவது உதவி கிடைக்கும்’ என்றது கட்டெறும்பு.

‘இனி எந்த உதவியும் கிடைக்க போவதில்லை. நான் சாகத்தான் போகிறோம் என்று தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது’ செவ்வெறும்பு.

ஏதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போரடிக்கொண்டே இருந்தது கட்டெறும்பு. அந்த வழியே போன எறும்பு கூட்டம், ‘இந்த குளத்துல வந்து மாட்டிக்கிட்டியா. இந்த குளத்துல விழுந்த யாருமே பிழச்சது இல்ல’ என்று சொல்ல,
  
‘இந்த குளத்துல இருந்து நாம எங்க தப்பிக்க போறோம்’ என்று தன் மேல் இருந்த நம்பிக்கையை இழந்த கட்டெறும்பு, சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது.

மேல் உலகம் சென்ற கட்டெறும்பு கடவுளை பார்த்து கேட்டது.....
‘கடவுளே என் உயிர ஏன் இவ்வளவு சீக்கிரமா எடுத்துக்கிட்டீங்க.?’

'நான் உன்ன சாகடிக்கல நீயா தான் இறந்துட்ட.. என்றார் கடவுள்....

‘என்ன சொல்லுறீங்க..’...

‘நீ குளத்தில் விழுந்த போது அடுத்தவங்க சொன்னாங்க என்பதுக்காக உன் மேல உனக்கு இருந்த நம்பிக்கையை இழந்து போரடுறத விட்டுட்டு தண்ணீல மூழ்கி இறந்துட்ட. ஆனா நீ மட்டும் அன்னைக்கு இன்னும் கொஞ்ச நேரம் போராடிருந்தா நிச்சயம்; எதாவது ஒரு வகையில உதவி செஞ்சு காப்பாத்திருப்பேன்...

♤♤♤கடைசியா ஒண்ணு சொல்லுறேன் கேட்டுக்கோ,...
வாழ்கையில நம்பிக்கை இழந்தவன் எல்லாத்தையும் இழந்துருவான்’ என்றார் கடவுள்.

Thursday, June 4, 2020

சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும் எளிய உணவு முறை:-

சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்தும் எளிய உணவு முறை:-

இளைத்த உடலை தேற்ற நவதானிய சத்து மாவு:

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த சூரணமாகும்.
     
திரிபலா சூரணம் ஒருகிலோ அளவில் பாத்திரத்தில் எடுத்து, அதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி கஷாயம் செய்யவும். தண்ணீர் பாதியாக சுண்டி வரும் சமயத்தில் கசாயத்தை இறக்கி ஆறவிட வேண்டும்.

இத்துடன்.

சுத்தம் செய்த கொள்ளு – 100 கிராம்

கோதுமை – 100 கிராம்

பச்சைப்பயறு – 100 கிராம்

உளுந்து – 100 கிராம்

கொண்டைக் கடலை – 100 கிராம்

எள் – 100 கிராம்

பச்சரிசி – 100 கிராம்

காராமணி – 100 கிராம்

துவரை – 100 கிராம்

இவைகளை ஒன்றுகலந்து ஆறிய திரிபலா கஷாயத்துடன் சேர்த்து, ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெய்யிலில் நன்கு காயவைத்து, அரைத்து, மாவை சலித்துப் பத்திரப்படுத்தவும்.
     
இதில் இரண்டு கிராம் அளவில் தேனுடன் அல்லது 50 கிராம் மாவை தண்ணீர் கரைத்துக் காய்ச்சி கஞ்சியாகவோ அல்லது களியாகவோ செய்து சாப்பிடலாம். இதனால் நீரிவினால் இளைத்த உடல் செழிக்கும்.

ஆவாரம்பூ கஷாயம் :-

தேவையானவை: 

ஆவாரம்பூ - 100 கிராம், 

சுக்கு - ஒரு துண்டு, 

ஏலக்காய் - 20, 

உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம், 

சோம்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: 

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்: 

சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

ஆரைக்கீரைசூப்  :-

தேவையான
பொருட்கள்:

ஆரைக் கீரை – 1 கைப்பிடி

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

சின்ன வெங்காயம் – 5

பூண்டுப்பல் – 3

மிளகு – 5

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

இஞ்சி – 1 சிறு துண்டு

உப்பு – தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும். மலச்சிக்கல் தீரும். அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது. பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.

திரிபாலா மிளகு சூரணம் :-

தேவையானவை

கடுக்காய்             100 கி 
(விதை நீக்கியது)

நெல்லிக்காய்      100 கி 
(விதை நீக்கியது)

தான்றிக்காய்        100 கி 
(விதை நீக்கியது)

மிளகு                     100 கி 

சீரகம்                      100 கி 

அனைத்தைவும் ஒன்றாக சேர்த்து மிசினில் அரைத்து காலை,மாலை உணக்குபின் 1 டீஸ்பூன் சுடான வெண்ணீரில் கலந்து குடித்து வரவும்.

சுகர்(சர்க்கரை வியாதி)
சமநிலைக்கு வரும் வரை. வந்தவுடன் ஆங்கில மருந்தை படிப்படியாக குறைத்து வரவும்.

கோதுமை கஞ்சி :-

தேவையான :
பொருட்கள்:

1 - கோதுமை 100 கிராம்

2 - பார்லி 100 கிராம்

3 -100 கிராம்
 கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்
அதை 10 நிமிடம் கொதிக்க வைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்கவும்.

குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி  பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை :

ஒவ்வொரு நாளும் வெரும்  வயிற்றில் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் சாப்பிடுங்கள் பிரகு அறை மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிட வேண்டாம்
இதை 7நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். 

வெண்டைக்காய் இஞ்சி ஜூஸ்:-

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 1/2 கப் (நறுக்கியது)

இஞ்சி ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்

மிக்ஸியில் வெண்டைக்காய் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டினால் ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்தால், சர்க்கரை நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பாதம் எள்ளு பால் :-

தேவையானவைள்

வெள்ளை எள்ளை 100 கிராம் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்

இரவு 5 பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் அதன் தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்

ஒரு டம்ளர் நன்றாக காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் எள்ளு பவுடரையும் உரித்து வைத்த பாதாம் பருப்பையும் போட்டு 10 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும்...பின்னர் பாதாம் பருப்புடன் சேர்த்து பாலை குடித்து வரவும்...

தினமும் ஒரு வேளை எப்போது வேண்டுமானாலும் குடித்து வரலாம்..

உளுந்து கஞ்சி :-

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு - 1/2 கப் 

அஸ்வகந்தா பொடி - 1 டீஸ்பூன்

பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) 

வெந்தயம் - 1 டீஸ்பூன் 

தண்ணீர் - 5 கப் 

சுக்கு பொடி - 1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

துருவிய தேங்காய் - 1/2 கப் 

பால் - 1/2 லிட்டர் (கொதிக்க வைத்தது) 

செய்முறை :

முதலில் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்பு குக்கரை திறந்து, மத்து கொண்டு லேசாக கடைந்து, பின் சுக்கு பொடி, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொதிக்க வைத்த பாலை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், உளுந்து கஞ்சி ரெடி!. 

மிக்ஸ்ட் லேன்டில் புலாவ்
(Mixed Lentil Pulav) :-

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை - 20 கிராம், 

கருப்பு கொண்டைக்கடலை - 20 கிராம், 

காராமணி - 20 கிராம், 

பாசுமதி அரிசி - 75 கிராம், 

சீரகம் - ¼ டீஸ்பூன், 

சோம்பு - ¼ டீஸ்பூன், 

பெருங்காயம் - 1 சிட்டிகை, 

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், 

கறிவேப்பிலை - சிறிதளவு, 

வெங்காயம் - 30 கிராம், 

தக்காளி - 1, 

உப்பு - தேவையான அளவு, 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

கொத்துமல்லி தழை - சிறிதளவு, 

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் காராமணி, வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலையை 6-7 மணி நேரம் ஊற விடவும். பின்னர் அதை குக்கரில் வேக விடவும். வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும். வேறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசியை அதில் சேர்த்து உப்பு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வேறையாக வடித்து எடுத்து ஆற விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வரும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சில்லி தூள், உப்பு சேர்த்து அதனுடன் இந்த மூன்று பயிர்களை சேர்க்கவும். அத்துடன் ஆற வைத்த அரிசியை சேர்த்துக் கிளறவும். பரிமாறும்போது கொத்துமல்லி தழையை சேர்க்கவும்.

முட்டை பேபி கார்ன் பொரியல்
(Egg Baby corn Porriyal) :

தேவையான பொருட்கள் 

முட்டை - 2,  

பேபி கார்ன் - ½ கப், 

தேங்காய் பால் - 20 மி.லி., 

வெங்காயம் - 1, 

தக்காளி - 1, 

இஞ்சி, பூண்டு விழுது - ½ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

தனியா தூள் - ½ டீஸ்பூன், 

பட்டை - 1, 

கிராம்பு - 1, 

ஏலக்காய் - 2, 

உப்பு, எண்ணெய், கொத்துமல்லி இலை - தேவையான அளவு.

செய்முறை :

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்னர் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வரும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும், இத்துடன் பேபி கார்ன் சேர்க்கவும். பின்பு மசாலா சேர்க்கவும். மஞ்சள் தூள், சில்லி தூள், தனியா தூள். இத்துடன் முட்டை விருப்பப்பட்டால் உடைத்து இதனுடன் கலக்கவும். அல்லது முட்டையை தனியாக பொரியியல் செய்து இதனுடன் கலக்கவும். உப்பு மற்றும் கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறவும்.
பலன்கள்

சிக்கன் மசாலா
(Chicken Masala) :-
தேவையான பொருட்கள் 

நாட்டுக்கோழி - 50 கிராம், 

குடை மிளகாய் - 1, 

தக்காளி - 30 கிராம், 

இஞ்சி, பூண்டு விழுது - ½ டீஸ்பூன், 

சீரகத்தூள் - ¼ டீஸ்பூன், 

கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

வெங்காயம் - 30 கிராம், 

மிளகுத்தூள் - ½ டீஸ்பூன், 

உப்பு, எண்ணெய், கொத்துமல்லி தழை - தேவையான அளவு.

செய்முறை :

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்க்கவும். பொன்நிறமாக வந்தவுடன் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அத்துடன் குடை மிளகாய், தக்காளி சேர்க்கவும். வதங்கிய பின்னர் அதில் சில்லி தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் சிக்கனை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும். ஐந்து நிமிடத்தில் வெந்தவுடன் கொத்துமல்லி தழை தூவவும்.

மட்டர் சோயா பனீர் டிரை
(Dry Mattar Soya Paneer) :

தேவையான பொருட்கள்:

சோயா பன்னீர் - 1 கப், 

சீரகம் - ¼ டீஸ்பூன், 

வெங்காயம் - 1, 

பட்டாணி - ½ டீஸ்பூன், 

இஞ்சி - 1 டீஸ்பூன், 

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், 

சில்லி தூள் - 1 டீஸ்பூன், 

தனியா தூள் - ½ டீஸ்பூன், 

தக்காளி - 1, 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்க்கவும். பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து பொன் நிறம் வரும் வரை வதக்கவும். இஞ்சி, தக்காளி சேர்க்கவும். அதில் சின்னதாக நறுக்கிய பனீர் மற்றும் பட்டாணியை சேர்க்கவும். இதில் மஞ்சள் தூள், சில்லி தூள், தனியா தூள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் விட்டு மூடிவிடவும். 6-7 நிமிடம் வரை வேக விடவும். பின்னர் பரிமாறவும்.

சோயா பீன்ஸ் சுண்டல்:

தேவையானவை:

வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் - 1/2 கப்

துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 2 சிட்டிகை

கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேகவைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

நார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்

தேவையான பொருட்கள் :

முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,

வெங்காயம் - ஒன்று,

பூண்டு - 2 பல்,

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,

மிளகு - காரத்துக்கேற்ப,

கொத்தமல்லி தழை - தேவையான அளவு,

எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

தேங்காய்ப் பால் - ஒரு கப்,

புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

காடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி.

அரைக் கீரை  :

அரைக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். 

பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். அரைக் கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா :-

பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 
2 வெங்காயம், தக்காளி, 
2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

அதிகாலை சூரிய உதயம் :-

சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி, நமது உடலில் படும்படி இருக்க வேண்டும். இது, நமது உடலில் இருக்கும் வைட்டமின் டி சத்தை தூண்ட உதவும். இது, எலும்பின் வலிமைக்கு நல்லது. 

தண்ணீர் :-

நம் உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அதேபோல, தசை திசுக்கள் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனதாகும். எனவே தினமும் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது தசையின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இல்லையென்றால் நீர்வறட்சி ஏற்படும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பால் தசை வலிமை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது தசையின் வலிமைக்கு உதவும்.

வெந்தயம் :-

வெந்தயத்தைப் பயன் படுத்தி ஆரம்ப நிலை சர்க்கரை இருக்கும்போது சர்க்கரை கட்டுக்குள் வரும் ஆனால் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தால் அவ்வளவாகப் பயனளிப்பதில்லை என பலர் சொல்கிறார்கள்.

ஆனால் அனைவருக்கும் எத்தனை வருடங்கள் சர்க்கரை நோய் இருந்தாலும் இன்சுலின் போடுபவர்களுக்கும் வெந்தயம் மிக சிறந்த மருந்தாகப் பயனளிக்கும் 
அதற்கு வெந்தயத்தைப் பயன்படுத்தும் முறை இங்கே கொடுக்கப் படுகிறது 

வெந்தயப் பால் செய்யும் முறை:

உடல் எடைக்கு பாதியளவு கிராம் அளவுக்கு வெந்தயத்தை  எடுத்து ( எழுபது கிலோ எடை இருப்பவர் முப்பத்தி ஐந்து கிராம் வெந்தயம் பயன்படுத்த வேண்டும்)

ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து 
மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு

துணியில் முடிந்து மூன்று நாட்கள் முளை கட்ட வேண்டும் 

நான்காவது நாள் காலையில் எடுத்து மிக்ஸியில் போட்டு இருநூறு மில்லி கொதிக்கும் நீரை விட்டு அரைத்து துணியில் பிழிந்து கிடைக்கும் பால் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இப்படி பிடிக்காதவர்கள் :-

மூன்று நாட்கள் முளை கட்டிய வெந்தயத்தை அப்டியே மென்று தின்று விழுங்கலாம் 
இவ்வாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர படிபடியாக சர்க்கரை நோய் குறையும்.

கீரைகள்:-

தினசரி உணவில் குறைந்தது நூறு கிராம் கீரையாவது மதியம் உணவில் சேர்க்க வேண்டும் எந்தக் கீரை என்றாலும் பயன்படுத்தலாம் முருங்கைக் கீரை வெந்தயக் கீரை வல்லாரைக் கீரை அகத்திக் கீரை மணதக்காளிக் கீரை பொன்னாங்கண்ணி கீரை சிறுகீரை என்று எந்தக் கீரை என்றாலும் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் 

அருகம்புல் :-

ஒரு கைப்பிடி அருகம்புல் 
ஒரு பத்தை தேங்காய் 
ஒரு தேக்கரண்டி சீரகம்
ஆகிய  மூன்று பொருட்களையும் சேர்த்து இருநூறு மில்லி தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து காலை வெறும் வயிற்றில் அல்லது காலை பதினொரு மணி அளவில் குடிக்க வேண்டும். தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் இவ்வாறு குடித்து வர உடல் எடை குறையும்
 இன்சுலின் போட்டுக் கொண்டு இருப்பவர்களின் தேவையற்ற எடை அதிகரிப்பு கட்டுக்குள் வரும்
 உடல் சுறுசுறுப்பு அடையும் 
உடல் சோர்வு குறையும் இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது குறையும் 

குறிப்பு :

காலை வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுபவர்கள் காலை பதினொரு மணி அளவில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்1.

புதினா :-

புதினாவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயே வராது 
எனவே சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினமும் உணவில் புதினாக் கீரையை சேர்த்து வர வேண்டும் 

முருங்கைக்கீரை :-

வாரம் நான்கு நாட்களாவது முருங்கைக் கீரை சூப்பாகவோ உணவாகவோ 
அல்லது நிழலில் காயவைத்து அரைத்த சூரணம் ஒரு தேக்கரண்டி தினமும் சாப்பிட்டு வர மிகப் பெரிய அளவில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

குறிப்பாக சிறுநீரில் சர்க்கரை மற்றும் புரதம் வெளியேறுவது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு கட்டுக்குள் வரும்.

மஞ்சள் பூசணி :-

சர்க்கரை அதிகமான அளவு 400 -- 500 என்று இருக்கும்போது கூட மஞ்சள் பூசணிக்காயை உணவில் தினமும் சேர்த்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்

Tuesday, June 2, 2020

#உயிர்_சக்தியைக்_கூட்டும்_பிராண #முத்திரை

#உயிர்_சக்தியைக்_கூட்டும்_பிராண #முத்திரை


செய்முறை

விரிப்பில் அமர்ந்து சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்கம் படி அமர வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.

அடிப்படைத் தத்துவம்

சுண்டு விரல் - நீர், மோதிர விரல் - நிலம், கட்டை விரல் - நெருப்பு. இந்த மூன்று விரல்களும் ஒன்றாகச் சேரும்போது, நிலம் மற்றும் நீரை, நெருப்பால் சமன் செய்கிறோம். இந்த செயல்பாட்டை உடலில் சிறப்பாக நடத்துவதுதான் பிராண முத்திரையின் வேலை. 

பலன்கள்

இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள. உயிர் சக்தி அதிகரிக்கும்.

இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும் போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து, நாளடைவில் குணமாகும்.
தீவிர முடி கொட்டுதல் பிரச்சனை இருந்தாலும் சரியாகும். கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும். விந்தணுக்களின் வேகம் அதிகரிக்கும்.

கண்ணாடி அணிந்திருப்பவர்கள், தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். கிட்டப்பார்வை, தூரப் பார்வை பிரச்சனைகள் சரியாகும்.

தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்ய முடியவில்லை எனில், 10 நிமிடங்களாகப் பிரித்தும் செய்யலாம். 

இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும்.
பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்சனைகள் சரியாகும். 

#கவனிக்க_வேண்டியவை

கை நடுக்கம் ஏற்பட்டால், செய்வதை நிறுத்தவும். வயதானவர்கள், தூக்கம் வராதவர்கள் இரவு 8 மணிக்கு மேல் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். தூக்கம் கலைந்துவிடும்.

Monday, June 1, 2020

அறுசுவையும், எண்ணங்களும்

அறுசுவையும், எண்ணங்களும்..!


நாவடக்கம்...!


அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல, நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட காரணமாக இருக்கின்றன. 

எனவேதான் ஆன்மிக சாதகர்களுக்கு நாவடக்கம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. 

அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்...

இனிப்பு :- 

மண் நீர் இணைந்தது. நெருப்புத் தன்மை பொருந்தியது. இளக்கமானது. செரிமானக் காலம் மிகுவது. எலும்பு, சதை, குருதி, கொழுப்பு,சாறு, சுக்கிலம் ஆகிய உடல் தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது. உடலைப் பெருக்க வைப்பது. குரக்கு நல்லது.

புளிப்பு :- 

மண் தீ இணைந்தது. பசியைத் தூண்டும். ஜீரணத்தை மிகைப் படுத்தும். உணவின்பால் வேட்கையும் சுவை உணர்வையும் ஏற்படுத்தும். வெப்பத்தை கூட்டும்.

உவர்ப்பு :- 

நீர் தீ இணைந்தது. உப்பு சுவை என்றழைப்பர். உப்பு உடல் உறுப்புகளுக்குள் கசிவையும் இசைவையும் ஏற்படுத்தும். வியர்வையை மிகுதிப்படுத்தி வெளியேற்றும்.

கைப்பு(கசப்பு) :- 

நீர் வளி . இந்த சுவையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதுதான் உடலுக்கு உறுதுணையாகிறது. பூச்சிகளைக் கொல்கிறது. விஷத்தை முறிக்கிறது. குறைந்தால் குருதி தூய்மை கெடுகின்றது.

கார்ப்பு(காரம்) :- 

தீ வளி இணைந்தது. உணவின்பால் நாட்டத்தை உண்டாக்கும். செரிப்பாற்றலை மிகுவிக்கும்.விந்து நீற்றுப் போகும். உடல் ஆற்றல் குறையும். உடலில் நடுக்கம் ஏற்படும். வலிப்பு நோய் ஏற்படக் கூடும்.

துவர்ப்பு :- 

மண் வளி இணைந்தது. செரிமானத்தைக் குறைக்கும். மிகுந்தால் வயிறு பொருமும். மலம் சிக்கும். சிறுநீர் தடைப்படும். ஆண்மை, பெண்மை குறையும். உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும். குறைந்தால் குருதி கெடும். கசியும்.

அறுசுவைகள் இந்த அளவிற்கு நம் உடலில் முக்கியமான கிரியா ஊக்கிகளாக விளங்குகின்றன. 

வள்ளுவப் பெருந்தகை சொல்லும் போது..

''யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'', என்பார். 

நாம் பொதுவாக நாவடக்கம் என்றால் பேசுவதைக் குறித்து பொருள் கொள்வோம். 

ஆனால், நாவடக்கம் என்பதை உணவில் சுவை ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதையோ அல்லது சுவைகளைக் கைவிடுவதையோ கூட பொருளாகக் கொள்ளலாம். 

உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் போது நம் உணர்வுகள் தறிகெட்டு ஓடுகின்றன.

விளைவு தவறான எண்ணங்கள் தவறான செயல்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. 

நம் முன்னோர்கள் பண்டைய காலங்களில் துறவறம் மேற் கொள்ளும் போது உணவு வகைகளில் சுவைகளை கைவிட்டு விடுவார்கள். 

உப்பு இல்லாமல் சாப்பிட்டு என்னை நானே பரிசோதித்துக் கொண்டதுண்டு. தீவிரமான பிரம்மச்சரியம் மேற் கொள்பவர்கள் உணவில் சுவைகளை அறவே நீக்கி விடுவார்கள்.

ஆசைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன.

ஐம்பொறிகள் வாயிலாகவும் ஆசைகள் உருவெடுக்கின்றன.

தீவிரமான பிரம்மச்சரியத்தில் எந்த ஆசைக்கும் இடமில்லை. மற்ற நான்கு விஷயங்களையும் மனிதன் கட்டுப்படுத்தி வைத்து விட முடியும். 

ஆனால், உணவு உண்ணாமல் வாழ்வது என்பது இயலாத காரியம். வேண்டுமானால் உணவைக் குறைத்துக் கொள்ளலாம். 

அப்படி உணவு என்று உண்கிற போது அதை சுவைக்காமல் இருக்க முடியாது. அப்படி சுவைதந்து உண்ணுகிற போது அந்த சுவையில் பற்று வைக்காமல் இருந்து பழக வேண்டும். 

முதலில் மிகவும் கடினமாகத்தான் இருக்கும். உப்பு, காரம் இல்லை என்றால் எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் உண்ண முடியாது. 

ஆனால், பற்றுகளை அறுத்தவர்களுக்கு அது சாத்தியமாகிறது.
அந்த அறுசுவைகள் முறையாக அமையாது போய்விடும் போதும் அந்தச் சுவையைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் உண்ண முடியும். 

நாவை வென்றவர்களுக்கு இது சாத்திய மாகிறது.

ஒரு மனிதனுக்கு ஆசை அடங்கி இருக்கிறதா என்பதை இந்த நாவடக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும். 

எல்லா ஆசைகளையும் அடக்கியவனே துறவி. அவனே ப்ரம்மச்சரியம் கடைபிடிக்க முடியும். 

ஆசையை அவன் எவ்வளவு தூரம் அடக்கியிருக்கிறான் என்பதை சுவை என்ற விஷயத்தில் நாவை அவன் எந்த அளவுக்கு அடக்கியிருக்கிறான் என்பதை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.

முற்காலங்களில் சீடனின் ஆசையை அளந்தெடுப்பதற்கு குருவிற்கு நாவடக்கமே பயன்பட்டுள்ளது. 

ப்ரம்மச்சரிய விரதத்தில் நான்கு நிலைகள் உண்டு. அந்த நான்கு நிலைகளைப் பெற்றிருப்பவன் இயல்பாகவே நாவடக்கம் உடையவனாகவே இருப்பான்...

ஆன்மீக வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

இந்த முட்டாள்தனம் எப்போது முடிவுக்கு வருமோ…!

இந்த முட்டாள்தனம் எப்போது முடிவுக்கு வருமோ…!


எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் முககவசம் அவசியம் இல்லாதது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட!

முகக் கவசங்கள் நம் இயல்பான சுவாசிக்கும் திறனை பாதிluக்கின்றன! 

முக கவசம் போடும் போது நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் நமக்கு கிடைப்பது இல்லை. இதனால், நாளடைவில் நமது உடல் நலன் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஒரு மனிதன் உயிர் வாழ உள்ளிழுக்கும் மூச்சுக் காற்று இன்றியமையாதது!

அப்படி இழுக்கும் மூச்சு காற்று ஆழ்ந்த சுவாசமாக இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

’’ஆழ்ந்து சுவாசிக்காதவன், அற்பாயுசில் போவான்…’’ என்பது  சித்தர்களின் வாக்கு!

ஏனெனில், அப்படி உள்ளிழுக்கும் மூச்சு காற்றில் உள்ள ஆக்சிஜனே நமது ரத்தத்தை தூய்மை செய்யும்! 

நாம் ஆழ்ந்து மூச்சு இழுக்கும் போதுதான், நாம் சாப்பிட்ட உணவில் இருக்கும் சக்தியை நம் உடலில் உள்ள செல்கள் கிரகித்துக் கொள்ளும்! 

சரியாக ஜீரணமும், கழிவு வெளியேற்றமும் நடக்கும்!

சரியான சுவாசம் இல்லாமல் போனால், மனதில் கவலைகளும், பயமும் இயல்பாக மேலெழும். 

அதே சமயம் ஆழ்ந்த சுவாசம் ஒருவனுக்கு அளப்பரிய தன் நம்பிக்கையைத் தரும்! செயல் திறனை மேம்படுத்தும்!

இயற்கையிலேயே நமது மூக்கே ஒரு சிறந்த கவசமாகத்தான் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

நம் மூக்கு துவாரங்களில் உள்ள ஈரமான சவ்வுகள் மூக்கில் நுழையும் கிருமிகளை தடுத்துவிடுவதோடு,அவற்றை வெளியேறும் மூச்சுக் காற்றில் வெளித் தள்ளிவிடும்! 

அதையும் மீறி, தவறான கிருமிகளோ, தூசோ உள்ளே நுழைய முற்பட்டால், அந்த நொடியிலேயே அவற்றை வெளியேற்ற உடனே நம் சுவாச மண்டலம் சுறுசுறுப்புடன் தும்மலை வரவழைத்து அவற்றை பலமாகத் தள்ளி வெளியேற்றுகிறது.

கொரோனா காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலங்களிலும், காற்றில் தேவையற்ற நுண்கிருமிகள் மிதந்து வருவதும், அவற்றை நமது சுவாச மண்டல உறுப்புகள் தூக்கி எறிவதும் காலந்தோறும் நடக்கும் ஒரு இயல்பான செயலேயாகும்!

நோய் வராமல் தடுக்கவென்று அணியும் முகக் கவசங்கள் அணிவதை தினசரி வழக்கமாகத் தொடர்ந்தால், அது நமக்கு நிச்சயமாக எண்ணற்ற நோய்களைத்தான் கொண்டு வந்து சேர்க்கும்.

தனித்து நடக்கும் போதோ, தனிமையாக இருக்கும் போதோ கூட இன்றைக்கு பலர் முகக் கவசம் அணிவதை பார்க்கும் போது அவர்களின் அறியாமையை நினைத்து வருத்தமாக உள்ளது.

நெரிசல் மிகுந்த இடத்திலும், மிக நெருக்கமாக அறிமுகம் இல்லாதவர்களுடன் பேச நேர்கையிலும் மட்டுமே அதை பயன்படுத்திவிட்டு உடனே, கழற்றி வைத்து விட வேண்டும்.

மேலும், தும்மலோ, இருமலோ, கொட்டாவியோ வந்தால், உடனடியாக முகக் கவசத்தை அகற்றி, அவற்றை அனுமதியுங்கள்! இவற்றை ஒரு போதும் அடக்கக் கூடாது.

மக்களை முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்குவதை விட நுரையீரலை பாதிக்கும் மோசமான சுற்றுச் சூழலுக்கு முற்றுபுள்ளி வைக்க அரசு முயன்றால், அது அனைவருக்கும் நன்மை தரும்! 

அதீத புகை கக்கும் வாகனங்கள், ஆலைகள், தண்ணீரையும், காற்றையும் மாசுபடுத்தும் ரசாயன ஆலைகள் ஆகியவற்றுக்கு பச்சைகொடி காட்டிவிட்டு, நம்மை மட்டும் முகக் கவசம் அணியாவிட்டால் தண்டனை, அபராதம், சிறை என்று பயமுறுத்துவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

’’குழந்தைகளுக்கு முகக் கவசம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’’ என்று தற்போது ஜப்பான் மருத்துவர் சங்கம் தெரிவித்து உள்ளது.

’’மாணவர்கள் முகக் கவசம் அணிவது சுவாத்தை கடினமாக்கி, சுவாசக் கோளாறு நோய்களை அவர்களுக்கு உருவாக்கிவிடும். ஆகவே, தவிர்க்க வேண்டும்’’ என்று இலங்கை மருத்துவத் துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

நாம் முகக்கவசம் அணியும் போது, நாம் வெளிவிடும் நச்சுத்தன்மை மிக்க கார்பன் டை ஆக்சைடை மீண்டும் நாமே உள்ளிழுக்கும் அவலம் நேருகிறது. 

இதனால், சிறிது நேரத்திலேயே நாம் அணியும் முகக் கவசமே நச்சுத்தன்மை மிக்கதாக மாறிவிடுகிறது.

அதனால்தான், ஒரு முறை அணிந்த முகக் கவசத்தை துவைத்து வெயிலில் காய வைத்த பிறகே அடுத்த முறை அணிவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவற்றை முறையாக ’டிஸ்போஸ்’ செய்வது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

தொடர்ந்து முகக் கவசம் அணியும் சிலர் தலைவலி வருவதாகவும், சிலர் தோல் சார்ந்த பிரச்சினைகள் வருவதாகவும், மற்றும் சிலர் சோர்வும், உற்சாகமின்மையும் ஏற்படுவதாகவும் என்னிடம் தெரிவித்தனர்.

ஆக, முகக் கவசம் என்பவை வினையை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகும்!

ஒரு உண்மையை அழுத்தமாக சொல்வது என்றால், கொரோனாவை வெல்வதற்கு நமக்கு வலுவான நுரையீரல்தான் மிக, மிக அவசியம்! ஆனால், முகக்கவசம் என்பது கண்டிப்பாக நம் நுரையீரலை வலுவிலக்க வைக்கிறது. 

ஆகவே, நுரையீரலை பலப்படுத்த பிராணாயாமம், யோகா, நாடிசுத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்தாலே போதுமானது. 

அத்துடன் துளசி, தூதுவளை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்தாலே போதும்!

முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியதில் இருந்து அதை ஒரு கலாச்சாரமாகவே மாற்றி நிலை நிறுத்திவிட, வியாபாரிகளும், விவஸ்தை கெட்டவர்களும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். கட்சி சின்னங்கள், கொடிகள், நாட்டின் கொடிகள், நடிகர், நடிகைகள் படங்கள் ஆகியவை பொறித்த முகக் கவசங்கள் தயாராகி வருகின்றன! 

இன்னும் சில நாடுகளில் பேஷனான முகக் கவசங்கள் தாயாரிக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நிலையில் எனக்குத் தெரிந்த வரை 15 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாய் வரைக்குமான முகக் கவசங்கள் சந்தைக்கு வந்து சக்கைபோடு போடுகின்றன!

இதில்தான் இனி எதிர்காலம் என்று திருப்பூரில் மட்டும் 1,500 நிறுவனங்கள் முகக் கவசத் தயாரிப்பில் வேகம் காட்டி வருகின்றன. ரூ 300 கோடி ஆர்டராம்! 

வாழ்த்துகள்!வேறென்ன சொல்வது!

அதே சமயம்,’’எந்த முகக் கவசமும் முழுப் பாதுகாப்பானது இல்லை’’ என்று மருத்துவ உலகமே ஒத்துக் கொள்கிறது. ஆனால், நோய் குறித்த பயமும், பதற்றமும் முகக் கவச கலாச்சாரத்தை அதிகாரம் கொண்டு நிலை நிறுத்த முயல்கிறது. 

எனவே, மேலே கூறியவற்றை பரிசீலித்து, சுயமாகச் சிந்தித்து உங்கள் விருப்பபடி முடிவெடுங்கள்!