Saturday, June 30, 2018

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள்

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள்



சிக்கன்


கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.

கீரை 


கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ்  (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக   (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை


முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான்


காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை,  இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு


அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து,  ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு


உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய்


எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

பீட்ரூட்

பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.




இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது


சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

பிராமணனைப்போல் நீயும் இந்துதானே..

பிராமணனைப்போல்
நீயும்
இந்துதானே..


அவன்
உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோ
அப்போது சொல்,
நானும் ஒரு இந்து என்று,

உன் வீட்டுக்குவந்து நீ சமைத்த உணவை
எப்போது
உளப்பூர்வமாக உண்ணுகிறானோ
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று,

உன் உரிமைக்காக
உன் போராட்டத்தில் எப்போது அவன் கைகோர்க்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

கோவிலின் கருவறைக்குள்,
நீயும் அவனும் எப்போது
ஒன்றாக நின்று
அர்ச்சனை செய்கிறாயோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

அவனை
தமிழில் மந்திரம் சொல்லவைக்க
தெம்பும் திரானியும்
உனக்கு எப்போது வருகிறதோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.

நீ பூசாரியாக இருக்கும் கோவிலுக்கு,
அவன் எப்போது குடும்பத்தோடு வந்து
நீ கொடுக்கும் திருநீரை
அவனின் நெற்றியில்
பூசிக்கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

எப்போது அவனும்
உன்னோடு சேர்ந்து
சிலைகளை உடைக்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

அவன் எந்த மாநிலத்துக்குப்போனாலும்..
இந்து பிராமணன்தான்.

நீ
எந்தமாநிலத்துக்குப்போனாலும் தமிழன்தான்.

உன்னை தமிழனாகமட்டும் பார்க்காமல்,
பிறமாநிலத்தவனும்
பிராமணனைப்பார்ப்பதுபோல்..
உன்னையும்
இந்துவாக பார்த்தால்
நடத்தினால்..
அப்போது சொல் நானும் ஒரு இந்து என்று.

மாநில கோர்ட்டுகளிலேயே மல்லுக்கட்டுகிறாயே
உன்னாலும் சுப்ரீம் கோர்ட்
நீதிபதியாக முடியும்
என்றால்..
உன்னை வரவிடுவார்களென்றால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

உன்னால் உன் மகனால்..
இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய முடிந்தால்..
உன்னையெல்லாம் நுழைய
விட்டால்..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

உன்னால்..
அவர்களால்
நியமிக்கப்படும்
ஜனாதிபதியாகத்தான்முடியும்.
ஆனால்,
ஒரு
ஜனாதிபதியையே நியமிக்கும்,
பிரதமராக
உன்னால் வர
முடியும் என்றால்..
அப்போது சொல் நானும்
ஒரு இந்து என்று.

இரண்டுபேரும்
இந்துக்கள்தானே..
உன்வீட்டுக்கல்யாணத்தை,
அவன் நடத்திவைப்பதைப்போல..
சாஸ்த்திர சம்பிரதாயங்களை
நீயும் கற்றபின்...
அவன் வீட்டு கல்யாணத்தை நீ..
நடத்திவைக்க
அவன் அனுமதித்தால்..
அப்போது
சொல்
நானும் ஒரு இந்து என்று.

இயல் இசை நாடக சபையில்,
உன்னையும் மனிதனாக மதித்து,
உன்னையும் தலைவனாக ஏற்றுக்கொண்டால்.
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

மத்திய அரசு வங்கிகளில்..
தமிழ்நாட்டில்
விண்ணப்பங்களை
தமிழிலேயே அச்சடித்தால்..
அப்போது சொல்
நானும் இந்து என்று.

காவிரி நீரை எப்போது
சமமாக தருகிறானோ..
நதிநீர் பங்கீட்டுப்போராட்டத்தில்..
உன்னோடு பிராமணனும் எப்போது
கலந்து கொள்கிறானோ..
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

விவசாயிகளின் போராட்டத்தில் எப்போது அவன் கலந்துகொள்கிறானோ
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

நீட் தேர்வுக்கு எதிரான
போராட்டத்தில் எப்போது
அவனும் கலந்து கொள்கிறானோ அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

நீதான்
நான்தமிழன்
நான்தமிழன் என்கிறாய்.
அவன் எப்போதாவது சொல்கிறானா.
அவனும்
தன்னை தமிழன் என்று
எப்போது ஒப்புக்கொள்கிறானோ
அப்போது சொல்
நானும் இந்து என்று.

நாரதகான சபையில்
முறையாக சங்கீதம் கற்றும்
உன்னை பாட
அனுமதித்தால்..
அவர்கள் பார்வையாளராக
அமர்ந்தால் அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று,

உன்னால்..
சங்கரமடத்தில் சங்கராச்சாரியாரோடு
சரிக்குசமமாக
சம்மணமிட்டு
அமரமுடிந்தால்..
அப்போதுசொல்
நானும் ஒரு இந்து என்று.

இந்து அறநிலைய கோவில்களில்
காசுவாங்காமல்..
உன்னை கருவறைக்குள் விட்டால்,
அப்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

அடித்தட்டு மக்களின்
வரிப்பணத்தில்
மருத்துவம் படித்துவிட்டு,
ஊசி போட..
அமெரிக்காவுக்கு ஓடுபவனை,
தடுத்துநிருத்தியபின்
சொல்
நானும் ஒரு இந்து என்று.

ஒவ்வொரு அலுவலகத்திலும்
அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து,
மற்றவர்களை மட்டம்
தட்டுகிறார்களே..
அதை அவர்கள் நிறுத்தியபின் சொல்
நானும் ஒரு இந்து என்று.

பயணங்களில்..
நீ கீழ்தட்டுவர்க்கம்
என்று தெரிந்தவுடன்
பதரியடித்தபடி எழுந்து வேரு இடம் தேடுகிறானே
அந்த பதட்டத்தை அவன் குறைத்துக்கொள்ளும்போது சொல்
நானும் ஒரு இந்து என்று.

நீ
முருகனை கும்பிடு
முத்துமாரியம்மனை
கும்பிடு
அதுவல்லபிரச்சினை.

இந்து என்று சொல்லிச்சொல்லி.
உன்னை வீதியில்
இறக்கிவிட்டு
அவன்மட்டும் வீட்டுக்குள் இருந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறானே.
அதுதான் வேதனையை
தூண்டுகிறது.


முகநூலில் முன்னனுப்பப்பட்டதூ...

Friday, June 29, 2018

குழந்தைகளுக்கு டயாபரை பயன்படுத்தினால்????


குழந்தைகளுக்கு  டயாபரை 
பயன்படுத்தினால்????


குழந்தை பிறப்பதற்கு முன்பே, மிருதுவான பழைய பருத்தித் துணிகளைத் தேடி எடுத்து, துவைத்துக் காய வைத்து, கத்தரித்து, டஜன் கணக்கில் லங்கோடுதைத்துத் தயாராக வைத்திருப்பார்கள் அந்தக் காலத்து அம்மாக்கள். இன்று லங்கோடு என்றால் எத்தனை பேருக்குத் தெரிகிறது? 

குழந்தை பிறப்பதற்கு முன்பே, பாக்கெட், பாக்கெட்டாக டயாபரை வாங்கி அடுக்கும் கலாசாரம், பெருநகரங்களில் மட்டுமின்றிபட்டித் தொட்டிகளில் கூட வந்துவிட்டது.

போதாக்குறைக்கு தொலைக்காட்சி விளம்பரங்களும், ‘ஒரு தடவை குழந்தைக்கு டயாபர் மாட்டிவிட்டால் ஆறுமணி நேரம் தாக்குப்பிடிக்கும். அம்மாக்கள் நிம்மதியாக இருக்கலாம்’ என சோம்பலை விதைக்கின்றன. குழந்தைகளுக்கு டயாபர் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா? 

நிபுணர்களிடம் பேசினோம்...


‘‘குழந்தை சிறுநீர் கழித்தால் நிறம் மாறி காட்டிக்கொடுக்கும் டயாபர் கூட வந்துவிட்டது. குழந்தையின் சிறுநீர் அல்லது மலம் பட்டவுடன் அலாரம் அடித்து பெற்றோர்களை உஷார் படுத்தும் டயாபர்கள் வெளிநாடுகளில் வந்துவிட்டன. 

டிஸ்போசபிள் டயாபரில் மூன்று அடுக்குகள் உள்ளன. உள் அடுக்கு பாலிப்ரோப்பிலைன் என்னும் மென்மையான பொருளால் ஆனது. இதுதான் சிறுநீர் போன்ற திரவப் பொருட்களை உள்ளிழுத்து நடு அடுக்குக்கு கடத்துகிறது. மேலும் குழந்தையின் தோலோடு நேரடியாக ஒட்டி இருக்கும் பகுதி என்பதால் பெட்ரோலியம் ஜெல்லி, கற்றாழை சாறு, வைட்டமின் இ போன்ற பொருட்கள் சிறிய அளவில் கலக்கப்படும். இதனால் குழந்தைக்கு உராய்வு ஏற்படுவது குறையும்.

நடு அடுக்கு மரக்கூழ் மற்றும் சூப்பர்அப்சார்ப்டு பாலிமர்களால் ஆனது. அப்சார்ப்டு பாலிமர் திரவ நிலையில் உள்ள கழிவுகளை உள்ளிழுத்துக் கொண்டு வெளிப்புறத்தை உலர்வாக வைக்கிறது. வெளி அடுக்கு பாலிஎத்திலின் எனப்படும் பிளாஸ்டிக்கால் ஆனது. இது கழிவுகளை கசிய விடாமல் இருக்கச் செய்கிறது. இது தவிர சில டயாபர்களில் நறுமணத்துக்கு சில பொருட்களை சேர்க்கிறார்கள். பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை கூட அச்சிடுகிறார்கள்.
இயற்கையான பொருட்களால் செய்யப்படுவதால் பக்க விளைவுகளை உருவாக்குதில்லை. 

டயாபரில் இருக்கும் வேதியியல் பொருட்கள் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்து கின்றன என சில ஆய்வுகளில் சொல்லப்பட்டாலும் எவ்வளவு நேரம் அதை குழந்தைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் அவசியம்.

 தேவையான நேரத்தில் மட்டுமே குழந்தைக்கு போட்டு டயாபரை கழட்டிவிட வேண்டும்.
இல்லாவிட்டால் சிறுநீரில் இருக்கும்அமோனியா, யூரியா போன்ற கழிவுப்பொருட்கள் குழந்தையின் தோலை பாதிக்கும். சொறி, கொப்புளம் போன்றவற்றை உருவாக்கும்.

சில சமயம் நாப்கினில் உள்ள வேதியியல் பொருட்களின் ஒவ்வாமையால் கூட சரும பாதிப்பு (சொறி) ஏற்படலாம். இதை ‘டயாபர் ரேஷ்’ என்று அழைப்பார்கள். எந்நேரமும் குழந்தைக்கு டயாபர் அணிவித்து இருப்பதாலும் இந்தப் பிரச்னை ஏற்படும்.

டயாபர் குப்பைகளால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. டயாபரின் நடுஅடுக்கில் உள்ள சோடியம் பாலிஅக்ரிலேட் வேதிப்பொருள் தான் திரவத்தை உறிஞ்சும் செயலை செய்கிறது. 

இது கான்டாக்ட்டெர்மடைடிஸ் என்னும் தோல் நோயைஉருவாக்கக்  கூடியது.
டயாபரை உருவாக்கும் தொழிற் சாலைகளில் சோடியம் பாலிஅக்ரிலேட் வேதிப்பொருள் தொழிலாளர்களுக்கு சுவாச நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டது. டயாபரின் வெண்மை நிறத்துக்கு குளோரின் ப்ளீச்சிங் பொருளாக சேர்க்கப்படுகிறது. நடு அடுக்கு மெத்தென்று குஷன் போல இருப்பதற்காக மரக்கூழ் சேர்க்கப்படுகிறது.

குளோரினும் மரக்கூழும் சேர்ந்து டையாக்ஸின் என்னும் வேதிப்பொருளை உருவாக்கும். டையாக்ஸின் நரம்பு மண்டலத்தையும் நாளமில்லா சுரப்பிகளையும் பாதிப்படைய செய்யும் தன்மையுடையது. அதிக அளவில் டையாக்ஸினில் புழங்கினால் கேன்சர் கூட வரும். அதனால் டயாபர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன.

  1. கேன்சரை வரவழைக்க கூடிய டையாக்சின் வகையை டயாபரில் பயன்படுத்தக் கூடாது.
  2. எந்த அளவு டையாக்சின் உள்ளது என்பதை உறையில் குறிப்பிட வேண்டும்.
  3. குளோரின் அல்லாத, வேதிப்பொருட்கள் அதிகம் இல்லாத டயாபர்களை அதிகம் பிரபலப்படுத்த வேண்டும்.
  4. குழந்தைகள் எளிதில் பிரிக்காதவாறு உறையை அமைக்க வேண்டும்.
  5. அப்புறப்படுத்தும் முறையின் விளக்கத்தையும் உறையில் அச்சிட வேண்டும்.

முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் அதில் உள்ள பிளாஸ்டிக், டையாக்சின், குளோரின் எல்லாம் கழிவுகளுடன் சேர்ந்து பல நோய்களை பரப்பும். ஆனால், இந்த விஷயங்களை டயாபர் தயாரிக்கும் எல்லா நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றனவா என்பது விவாதத்துக்குரிய விஷயமாகும்.

டயாபரை பயன்படுத்தும் முறையை தாய்மார்களுக்கு சொல்லிக் கொடுத்தல் அவசியமாகும். குழந்தைக்கு ‘டயாபர் ரேஷ்’ வராமல் தடுக்கவும் தெரிய வேண்டும். 

சிலர் அடிக்கடி குழந்தைகளுக்கு டயாபரை மாற்ற மாட்டார்கள். குழந்தையின் தோலானது மென்மையான கெரட்டின் செல்களால்  ஆனது.

அடிக்கடி மாற்றாமல் வைத்திருப்பதால் உராய்வு ஏற்பட்டு புண்கள் உருவாகும். சிறுநீர், மலம் இவையெல்லாம் நெடுநேரம் குழந்தையின் தோலோடு ஒட்டி இருப்பதால் அதில் உள்ள அமோனியா, யூரியா போன்ற கழிவுப்பொருட்கள் தோல் சார்ந்த நோய்களை ஏற்படுத்தும். தோல் சிவந்து தடித்து விடும். அப்படியேவிட்டால் கொப்புளமாக மாறிவிடும்...’’ என பாதகமான விளைவுகளை சொல்லும் பிரியா ராமநாதன் தவிர்க்கும் வழிகளையும் சொல்கிறார்.

‘‘டயாபரை தொடர்ந்துகுழந்தைக்கு போடக்கூடாது. துணியால் செய்யப்பட்ட டயாபர்களை பயன்படுத்தலாம். டயாபர் ஈரமானால் உடனே மாற்றி விட வேண்டும். சோம்பல் கூடாது. பயன்படுத்திய டயாபரை திரும்பவும் பயன்படுத்தக் கூடாது. டயாபருக்கு பதில் முடிந்த அளவு மெல்லிய துணிகளை பயன்படுத்துவது இன்னும் நல்லது. 2-3 மணி நேரத்துக்கு ஒரு முறை டயாபரை மாற்றுவது அவசியம்.

குழந்தையின் தோலில் விரிசல் அல்லது சிவப்பாக புண்கள் எதுவும் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். டயாபர் அணிவிப்பதற்கு முன் அந்தப் பகுதியில் ரேஷ் க்ரீம் தடவி விடுவது குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும். மலம் போகும் பகுதியில் அடிக்கடி சோப் போட்டு கழுவுவதை தவிர்ப்பது நல்லது. 

அது டிடெர்ஜென்ட் அலர்ஜியை ஏற்படுத்தும். சுத்தம் செய்ய வேண்டிய பகுதியை சுத்தமான துணியால் ஒற்றி எடுத்தால் போதும்.

ஐஸ்லேண்ட் நாட்டில் இருந்து வரும்ஸ்பிரிங் வாட்டர் இப்போது மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. 

‘டயாபர் ரேஷ்’ உள்ள இடத்தில் இதை ஸ்பிரே செய்தால் புண்கள் ஆறும். குழந்தை அழுதால் டயாபரில் ஏதாவது பிரச்னை உள்ளதா என்பதை சோதிப்பது அவசியம். 

குழந்தைகளுக்கு முறையாக டாய்லெட் போகும் பழக்கத்தை எட்டு மாதத்தில் இருந்தே ஆரம்பித்து விட வேண்டும். அவசரத் தேவைக்காக மட்டுமே டயாபரை பயன்படுத்த வேண்டும்...’’

டாக்டர் விக்ரம்.கே.வெங்கடேஷ், பச்சிளம் குழந்தைகள் நிபுணர் ‘‘டயாபரை வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 பயணம் செய்யும் போது அல்லது ஒரு விழாவுக்கு செல்லும் போது அணிவித்துவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக கழற்றி விட வேண்டும். குழந்தையை இலகுவாக வைப்பதுஅவசியமாகும். 

அதிக நேரம் டயாபர் போடும் போது ஒருவித எரிச்சல் உருவாகும். சரியான முறையில் டயாபரை அணிவிக்கும் விதம் தாய்க்கு தெரிந்து இருக்க வேண்டும்.

குழந்தையின் தோலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும். இதனால் டயாபரை அதிக நேரம் அணியும் போது சிறுநீரில் அல்லது மலத்தில் உள்ள வேதியியல் பொருட்கள் குழந்தையின் உடலை பாதித்து, தோல் பிரச்னைகளை உருவாக்கும். 

இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு டயாபரை பயன்படுத்தாமல்இருப்பதே நல்லது. நம் நாட்டில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்கவோ அல்லது டயாபரை மாற்றி சுத்தப்படுத்தவோ, குழந்தைகளுக்கான போதுமான கழிப்பிடங்கள் இல்லை.

வெளிநாடுகளில் இதற்கெல்லாம் தனி இடங்கள் உள்ளன. இவற்றை அதிக அளவில் பொது இடங்களில் அமைப்பதன் மூலம் டயாபர் பயன்படுத்தும் பழக்கத்தை மக்களிடையே வெகுவாக குறைத்து விடலாம். தரமான டயாபர் களை வாங்கிப் பயன்படுத்துவதும் அவசியம். டிஸ்போசபிள் டயாபர்களை விட துணி டயாபர்கள் சிறந்தவை.’’

குழந்தைகளுக்கு முறையாக டாய்லெட் போகும் பழக்கத்தை எட்டு மாதத்தில் இருந்தே ஆரம்பித்து விட வேண்டும். அவசரத் தேவைக்காக மட்டுமே டயாபரை பயன்படுத்த வேண்டும்...

............,............

குழந்தைகளின் உணவும் தேர்வு மதிப்பெண்களும் என்னும் பதிவைக்கான...



இதெல்லாம் சாப்பிட்டா ஒரே மாசத்துல உயரமாகலாம்.. என்ற பதிவைக்கான....

https://kavimalaravan.blogspot.com/2018/06/blog-post_26.html?m=0

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பகுதி - 1 மற்றும் பகுதி -2 என்ற பதிவை கீழ்கண்ட இணைவில் காணலாம்..

Part -1

Part-2

Part-9

https://kavimalaravan.blogspot.com/2018/06/09.html?m=0

குழந்தை பாக்கியம் கிடைக்கச்செய்யும் வாழைப்பூ
பற்றி அறிய கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
https://kavimalaravan.blogspot.com/2018/06/blog-post_9.html?m=0

மேலும் தொடர்ந்து சர்கரை நோய் பற்றி பகுதி 22 வரை உள்ளது.


வாழ்க வையகம் வாழ்க மகிழ்வுடன்.


இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்.

.........
மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூவுடன் இணையுங்கள்.

Thursday, June 28, 2018

குழந்தைகளின் உணவும் தேர்வு மதிப்பெண்களும் !

குழந்தைகளின் உணவும் தேர்வு மதிப்பெண்களும் !


 1 கப் வெண்டைக்காய் தினமும் கொடுங்கள்!

1.தேர்வுக்கான உணவு குறித்து கூறும், மைண்ட் ப்ரெஷ் டிரெயினிங் மனவளப் பயிற்சியாளர் கீர்த்தன்யா: தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு, தாம் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசை, கனவு இருக்கும். ஆனால், 'படித்தது மறந்து விடுகிறதே... எப்போதும் ஒருவித சோர்வு இருப்பதால், எப்படி நம்மால் படிப்பில் கவனம் செலுத்த முடியும்' என்ற வருத்தமும் வாட்டும்.

2.உடல் மற்றும் மூளை செயல்திறனை அதிகரிக்க செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. சிறுசிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால், முழு வெற்றி சாத்தியம்.

3.நம் மூளையைப் போலவே தோற்றமளிக்கும் வால்நட், சுறுசுறுப்பைத் துாண்டுகிறது. தினமும், 20 கிராம் நட்ஸ் கலவையாகச் சாப்பிட்டு வந்தால், ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதத்தில் கிடைக்கும். அதையும், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், அடுத்த உணவு வேளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பும் சாப்பிடலாம்.


 4.நீண்ட நேரம் அமர்ந்து படிக்க உடலும், மூளையும் களைத்துப் போகாமல் ஒத்துழைக்க சுண்டல், வேர்க்கடலை, முளைகட்டிய பயறு சாப்பிடலாம். மதிய உணவில் கண்டிப்பாக கீரை, காய், தயிர், சாதம், தலா 1 கப் போதுமானது.
தேர்வு எழுதும் வரை, தினமும் வேண்டுதல் போல, ஒரு கப் வெண்டைக்காய் சேர்த்துக் கொடுங்கள்.


5.கணிதப் பாடத்தில் மட்டும் அல்ல, எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற வெண்டை உதவும்.
மூன்று வேளை வயிறு முழுக்க சாப்பிடுவதை விட, குறுகிய இடைவெளியில் சிறு சிறு அளவில் சாப்பிடுவது நல்லது. வீட்டை தவிர வெளியில் தயார் செய்யப்படும் உணவுப் பண்டங்களுக்கு தேர்வு முடியும் வரை, 'குட்பை' சொல்லி விடுங்கள். ஆசைப்பட்டு கேட்டாலும் வாங்கி தராதீர்கள்.



6.காபி மற்றும் டீ கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். இனிப்பு, உப்பு, காரம் மற்றும் அதிக ருசியான உணவுகள் கொடுப்பதும் அளவோடு இருக்கட்டும். அதிக மசாலாப் பொருட்கள் சேராத உணவையும், அதிக காரமில்லாத உணவையும் கொடுக்க வேண்டும்.


7.இரவு துாங்கும் முன், பால் அல்லது லேசான சுடு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொடுக்கலாம்; தேர்வு பற்றி பதற்றம், மன அழுத்தம் குறையும். தினமும், 6 அல்லது 7 மணி நேரம் வரை துாக்கத்தைக் கட்டாயமாக்குங்கள்.

8.நிறைய நீர்ச்சத்து காய்கறிகளை உணவில் சேருங்கள்.தேர்வு என்பது பயத்தை உண்டாக்கும் விஷயமல்ல. நாம் படித்ததை சரியாகப் படித்து இருக்கிறோமா என்பதை சரி பார்க்கும் தருணமே. இதில் உடல் ஆரோக்கியம், உங்கள் குழந்தையை உற்சாகப்படுத்தி, அதிக மதிப்பெண்களைக் குவிக்க வைக்கும்!

வாழ்க வையகம் வாழ்க மகிழ்வுடன்.
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்.

..........


சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பகுதி - 1 மற்றும் பகுதி -2 என்ற பதிவை கீழ்கண்ட இணைவில் காணலாம்..

Part -1

Part-2

Part-9

https://kavimalaravan.blogspot.com/2018/06/09.html?m=0

குழந்தை பாக்கியம் கிடைக்கச்செய்யும் வாழைப்பூ
பற்றி அறிய கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
https://kavimalaravan.blogspot.com/2018/06/blog-post_9.html?m=0

மேலும் தொடர்ந்து சர்கரை நோய் பற்றி பகுதி 22 வரை உள்ளது.

மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூவுடன் இணையுங்கள்.




Wednesday, June 27, 2018

நாம் கொடுக்கும் பணத்திற்குரிய ரத்த டெஸ்டுகள் செய்கிறார்களா?

நாம் கொடுக்கும் பணத்திற்குரிய ரத்த டெஸ்டுகள் செய்கிறார்களா?

,

பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்.


Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

ம் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று அறிய மாஸ்டர் ஹெல்த் செக்கப்புகள் இன்றியமையாதவை. நாற்பது வயதிற்கு மேல் அனைவரும், வருடம் ஒரு முறை முழு மாஸ்டர் ஹெல்த் செக்கப், மற்றும் வயிறு ஸ்கேன், எக்கோ, டிரட்மில் ஸ்கேன்கள் செய்வது நல்லது என நினைக்கும் மருத்துவர்களில் ஒருவன் நான்.

அமெரிக்காவில் ஒருவர் இன்சுரன்ஸ் இல்லாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் எடுக்க நினைத்தால், பாதி சொத்தை விற்று தான் பில் செட்டில் செய்ய வேண்டும். ஐரோப்பா, அரபு நாடுகள், ஆசிய நாடுகள் எல்லாவற்றிலும் ரத்த டெஸ்டுகளின் விலை மிக அதிகம். உலகிலேயே மிகவும் விலை கம்மியாக மாஸ்டர் ஹெல்த் செக்கப்புகள் இந்திய துணைக் கண்டத்தில் மட்டுமே சாத்தியம். அதற்கு நாம் மார் தட்டிக் கொள்ளலாம்.

இந்தப் பெருமை ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது ஒரு மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கு நீங்கள் ஒரு மருத்துவமனைக்கோ, அல்லது ஒரு சிறந்த லேபிற்கோ செல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் கட்டும் பணத்திற்கு முழு அளவிற்கான டெஸ்டுகள் கிடைக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பது தான் என் பதில்.

முதலில் ஒரு பேசிக் மாஸ்டர் ஹெல்த் செக்கப்பில் என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்
1. CBC எனும் ஹீமோகுளோபின் மற்றும் ரத்த செல்கள்  எண்ணிக்கை 
2. சுகர் டெஸ்ட்- வெறும் வயிற்றில் and/or சாப்பிட்ட பின்பும் 
3. கொலஸ்டிரால் டெஸ்டுகள் 
4. லிவர் டெஸ்டுகள்
5. கிட்னி டெஸ்டுகள் 
6. தைராய்டு டெஸ்டுகள் 
7. யூரின் டெஸ்ட்
8. Electrolytes 
9. calcium 

90% லேபுகள் மற்றும் மருத்துவமனைகள் (கார்பரேட் உட்பட) மேலே உள்ளதை மட்டும் செய்கிறார்கள். கொஞ்சம் பேர் மட்டும் கணைய டெஸ்டுகள், மூன்று மாத சர்க்கரை அளவான HbA1c போன்ற சில முக்கயமான, தேவையான எக்ஸ்ட்ரா டெஸ்டுகளையும் செய்கிறார்கள்

மேலே சொன்ன டெஸ்டுகளுக்கு ரூ. 2000 முதல் Rs. 5000 வரை இடத்திற்கு தகுந்தாற்போல் வாங்குகிறார்கள். ஆம்னி பஸ் போலத்தான். விலைக்கட்டுப்பாடு என்பதே கிடையாது

கேட்டால், நாங்கள் ISO தரச்சான்றிதழ் வாங்கிருக்கோம் என்று சிலர் சொல்வார்கள். சில லேப்கள், எப்போதோ ISO வாங்கி இரண்டு வருடங்கள் கழித்த பின் புதுப்பிக்காமலையே, 'நாங்கள் ISO லேபாக்கும்' என்று சொன்ன காமெடியெல்லாம் இங்கு நடந்திருக்கிறது

லேபில் பல பிரிவுகள் உள்ளன. Biochemistry, Pathology, Hematology, Histopathology, Microbiology என பத்துக்கும் மேல் பிரிவுகள்-உப பிரிவுகள் உள்ளன. ஏதாவது ஒரு பிரிவு/உப-பிரிவிற்கு மட்டும் ISO வாங்கி விட்டு,  ISO சிம்பலை பொதுவாக ரிப்போர்ட் தாளில் அச்சடிக்கும் பழக்கமும் இந்தியாவில் உண்டு

எந்த டாக்டரும் தவறான ரிசல்டை தொடர்ந்து தரும் லேபிற்கு பேஷண்டை அனுப்ப மாட்டார். குவாலிடி இல்லாமல் ரிசல்ட் தந்தால் எங்களுக்கு சில ரிப்போர்ட்களை  பார்த்தவுடனே தெரிந்து விடும். பின்னர் அந்த லேபிற்கு பேஷன்டை அனுப்ப மாட்டோம். இல்லாவிட்டால் எங்களுக்கு பேஷன்ட் வருவதும் குறைந்து விடும். ISO இருக்கிறதோ இல்லையோ, இந்தியாவில் முக்கால்வாசி லேப்கள் தரத்தில் சிறந்து விளங்குகின்றன என்பது என் அனுபவம். ISO பெற, அதை வழங்கும் நிறுவனம் சொல்லும் விதிகள் மிக மிக அதிகம். அவர்கள் சொல்லும் டாகுமேண்டேஷனுக்கு மட்டுமே எக்ஸ்ட்ராவாக பத்து பேரை வேலைக்கு வைக்க வேண்டும். அதனாலேயே பல நல்ல குவாலிடி லேப்கள் ISO பெறுவதில்லை. அதனால் ISO இல்லாத பல லேப்களும் நல்ல தரமானவை தான் என்பதை அறிக.

லேப்களிலும், மருத்துவமனைகளில் இருக்கும் லேப் ஊழியர்களின் சம்பளம் மிகவும் கம்மி. ரூ. 4000 மாத சம்பளத்திற்கு நானே இரு டெக்னீஷியன்களை வைத்து இரண்டாண்டுகளுக்கு முன் லேப் நடத்தியிருக்கிறேன். பத்தாயிரத்திரத்திற்கும் பதினைந்தாயிரத்திற்கும் வேலை பார்க்கும் டிப்ளமோ, கிராஜுவேட், போஸ்ட் கிராஜுவேட் இருக்கிறார்கள். பாவம்இவ்வளவு கம்மியான சம்பளத்திற்கு ஆட்கள் இருந்தும், ஏன் பணம் அதிகம் வாங்குகிறார்கள்?

சில டெஸ்டுகள் செய்ய தேவைப்படும் கெமிக்கல்களை கம்மியான அளவில் வாங்கினால் அதன் விலை அதிகம். அதன் ஆயுளும் குறைவு. பல்க்காக வாங்கினால் விலை குறைவு. அதனால் அதிகம் பேஷன்ட் வரும் லேப்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் டெஸ்ட் எடுக்க தேவைப்படும் கெமிக்கல்களின் விலை சல்லிசாக கிடைக்கும். அப்போதும் அவர்கள்  டெஸ்டுகளின் விலையை குறைப்பதில்லை
  
ஒரு நன்றாக ஓடும் லேப்/ மருத்துவமனையின் மேலே சொன்ன மாஸ்டர் ஹெல்த் செக்கப்பிற்கான என் பார்வையில் ஏற்படும் செலவைப் பார்ப்போம்.

1. CBC Rs. 60
2. யூரின் ரொட்டின் Rs. 50
3. சுகர் டெஸ்ட் Rs. 10-20
4. Lipid profile-Rs. 200
5. Liver function test- Rs. 250
6. Kidney function Test- Rs.150
7. Thyroid profile-Rs. 125
8 Electrolytes - Rs. 60
9. Calcium- 100 என மொத்தமே ஆயிரம் ரூபாய் கூட ஆகாது. லாபம் வைத்தாலும் 1200 மேல் தர ஒன்றும் இல்லை.

நீங்கள் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப் போகும் இடத்தில், கீழ்கண்ட சில டெஸ்டுகளும் எனக்கு வேண்டும், இதற்கு எவ்வளவு ஆகும் எனக் கேளுங்கள்.

1. Hscrp எனும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் காயம் 
2. Homocysteine
3. Apo A, Apo B
4. Lipoprotein A எனும் இதய டெஸ்டுகள் 
5. Microalbuminuria, Urine Albumin/ Creatinine ratio எனும் கிட்னி பிரச்சினையை பல ஆண்டுகளுக்கு முன்பே அறிய வைக்கும் டெஸ்டுகள் 
6. Testosterone எனும் இரு பாலருக்கான முக்கிய ஹார்மோன் டெஸ்ட்  
7. Insulin எனும் முக்கிய மெட்டபாலிக் டெஸ்ட்  
8. Vitamin D &
9. Vitamin B12 எனும் முக்கிய வைட்டமின்கள்.

அவர்களின் முதல் கேள்வி, "இதெல்லாம் எதுக்கு? தேவையே இல்ல" என்பார்கள். அடுத்த பதில் (மேலதிகாரியிடம் கால் மணி நேரம் பேசிய பின்), "இங்கேயே செய்யலாம், ரூ.15000 முதல் 30000 ஆகும் சார்" என்பார்கள். மூன்றாவது பதில் "வேற லேப்ல கொடுத்து எடுக்குறோம் ரூ.5000-10000 ஆகும் சார்" என்பார்கள்.

வழக்கமாக எடுக்கும் மாஸ்டர் செக்கப்புகள் நார்மலாக இருப்பினும், நான் மேலே சொன்ன 9 ஸ்பெஷல் டெஸ்டுகள் அப்நார்மலாக இருக்கும் ஆயிரக்கணக்கான பேஷண்டுகளை நானே கிளினிக்கில் பாத்திருக்கிறேன். பிரச்சினையை அறிந்தால் தானே அதை சரி செய்து நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்?

தமிழ்நாடு முழுதும் நான் மேலே சொன்ன அனைத்து டெஸ்டுகளையும் செய்ய 1800 ரூபாயில் சில லேப்கள் செய்கின்றன. வீட்டிலேயே ரத்தம் எடுக்கும் வசதியும் உண்டு

1. Orbitoasia Lab- Essentials Package
2. Arthi Scans- Beginner's Package
3. Thyrocare Labs- Aarogyam 1.4 package

ஸ்கேன்கள் மட்டும் அவர்கள் செண்டரிலோ அல்லது விலை குறைவான உங்கள் அருகில் இருக்கும் செண்டரிலோ எடுக்க வேண்டியது தான்.

அவர்களுக்கு மட்டும் எப்படி இது சாத்தியம்

ஏதாவது ஃபிராடு வேலையோ? இல்லை. அவர்கள் நிறைய சாம்பிளை ஒரே இடத்திற்கு கொண்டு வந்து செய்வதால் விலை குறைகிறது, உலகத்தரத்தில் செய்கிறார்கள், அவர்களுக்கு  விலையை குறைத்து அதிக பேஷன்டுகளை கவரும் பிசினஸ் சென்ஸும், கொஞ்சம் மனசாட்சியும், இருக்கிறது. அவ்வளவு தான்.

எப்படி சூப்பர் மார்கெட்டுகள் வந்த பின்னர், மளிகை கடைகள்  அடி வாங்கியதோ, அதே போல் சில நல்ல லேப்களின் வருகையால் அதிகம் பணம் வசூலிக்கும் லேப்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அடி விழப் போவது சீக்கிரமே நடக்கப்போகிறது. மக்கள் விழித்தெழாவிட்டால் அவர்கள் பர்ஸ் கரைவது உறுதி. இனிமேல் இந்த டெஸ்டுகள் செய்யுங்கள். மற்ற லேப்களுக்கு வருமானம் குறைந்து, போட்டிக்கு செல்போன் கம்பெனி போல லேப் டெஸ்ட் விலையைக் குறைப்பார்கள். கார்ப்பரேட் முதலாளிகள், மருத்துவத்தில் கொஞ்சமாவது லாபம் கம்மியாக பார்த்து  மக்களுக்கு கொஞ்சம் சேவை மனப்பான்மையுடன் இருந்தாலே போதும்

மாதம் முந்நூறு ரூபாய்க்கு செல்போனில், இந்தியா முழுக்க எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், நெட்டில் தினமும் ஒரு படம் பார்க்கலாம். ஐயாயிரம் ரூபாய்க்கு மலேசியாவே போகலாம். கொடுக்கும் பணத்திற்கு கரெக்டான சேவை என்பது நமது உரிமை.

கார்ப்பரேட் லேப்களும், பெரிய மருத்துவமனைகளும் இதை ஃபாலோ செய்தால் தொடர்ந்து தொழிலில் இருக்கலாம். இல்லாவிட்டால் ஓட்ட வேண்டியது தான் என்பது எனது சொந்த தாழ்மையான கருத்து.

Note: இதைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது? முதல் தகுதி, நான் ஒரு மருத்துவன். இரண்டாவது நான் ஒரு பயோகெமிஸ்ட்ரி டாக்டர். அதாவது லேபில் இருந்து ரிப்போர்ட்டுகளுக்கு கையெழுத்து போடும் டாக்டர்மூன்றாவது நான் ஒரு இந்திய குடிமகன் - கொடுக்கும் காசுக்கு எல்லோருக்கும் விலைக்கு நிகரான தரமான பொருள் வேண்டும் என நினைப்பவன்.

கொடுக்கும் காசுக்கு எல்லோருக்கும் விலைக்கு நிகரான தரமான பொருள் வேண்டும் என நினைக்கும் ஒருவரிடமிருந்து

இவ்விடம் பதிவிடுவது


சிங்காரவேல் என்கிற கவிமலரவன்