தாய்ப் பால் சுரப்பு
அதிகரிக்க - Part - 2.
முந்தையப் பதிவில் தாய்ப் பால் சுரப்பு அதிகரிக்க சில உணவு முறைகளை குறிப்பிட்டு இருந்தேன். இந்தப் பதிவில் சில மருத்துவ முறைகளைப் பார்ப்போம்.
1. ஏலக்காய் 6 எண்ணிக்கை,
2. திப்பிலி ஒரு ஸ்பூன்,
3. இரண்டு இன்ச் அளவில் 4 துண்டு அதிமதுரம்,
4. தோல் நீக்கிய சுக்கு சிறிய துண்டு ஒன்று,
இவை அனைத்தையும் மிக்ஸியில் பொடி செய்து, அத்துடன் ஆறு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை கலந்து மறுபடியும் மிக்ஸியில் அரைத்து காற்று புகாத ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
தினம் காலையில் இதில் ஒரு ஸ்பூன் பொடியை பசும்பாலில் கலந்து குடிக்க வேண்டுoம்.
அடுத்து அனைத்தையும் விட மிக எளிமையான சீன முறையில் ஒரு சிகிச்சை;-
இடது கை சுண்டு விரல் நகம் ஆரம்பிக்கும் இடத்தில், கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலைக் கொண்டு 30 முறை மென்மையாக ஒரு நொடி இடைவெளியில் விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
குழந்தை பிறந்ததும் தினம் ஒருமுறை என மூன்று நாட்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். பிறகு தேவைப்பட்டால் வாரம் ஒருமுறை அழுத்தம் கொடுக்கலாம்.
குழந்தைக்கு தாய்ப் பால் போதவில்லை என்று தோன்றினால் இந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கலாம்.
இந்த புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது நன்றாக தாய்ப் பால் சுரக்கும். மேலும் இந்த புள்ளி மார்பகத்தில் வலி, மார்பக வீக்கம், மார்பக கட்டி, காம்புகளில் வெடிப்பு மற்றும் வலி போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்தக் கூடியது.
நன்றி : Dr. Gouse. MD (Tcm, Acu)., Singapore.
நன்றி : Dr. Gouse. MD (Tcm, Acu)., Singapore.
மேலும் பல ஆரோக்கிய தகவல்களை அறிய www.kavimalaravan.blogspot.in தொடர்பில் இணையுங்கள்.
இவ்விடம் பதிவிடுவது
தாய்ப் பால் சுரப்பு அதிகரிக்க - Part- 1 என்னும் பதிவை காண கீழ்காணும் இணைவை கிளிக் செய்யவும்.
தாய்ப்பால் கட்டிக் கொண்டால் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்.. என்னும் பதிவை காண கீழ்காணும் இணைவை கிளிக் செய்யவும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்.
No comments:
Post a Comment