இந்த தளத்தில் பல்வேறு விதமான தமிழ் சார்ந்த தகவல்கள் மற்றும் தமிழ் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் கவிதைகள் பாடல்கள், விவாதத்திற்குறிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் தற்போது உடல் ஆரோக்கியத்தை முன் வைத்து அலோபதி மருந்துகள் அல்லாத மாற்று மருத்துவம் குறித்த தகவல்களும், இயற்கை மருத்துவம் குறித்த தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளது. இந்தத் தளம் எப்போதும் உங்களை வரவேற்கும் - இப்படிக்கு த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
Sunday, September 30, 2018
அறிவியல் வளர்ச்சி குறித்து -2
அறிவியல் வளர்ச்சி குறித்து -2
காந்திய படுகொலை ஏன் எதற்கு எப்படி?
காந்திய படுகொலை ஏன் எதற்கு எப்படி?
காந்தியின் வரலாற்று கதை
காந்தியின் வரலாற்று கதை
காந்தி கொலையும், கோட்சேவும்
காந்தி கொலையும், கோட்சேவும்
காந்தி - ஓர் சிறப்புப் பார்வை
காந்தி - ஓர் சிறப்புப் பார்வை
சாகும்போது காந்தி உச்சரித்த மந்திரம் என்ன தெரியுமா
சாகும்போது காந்தி உச்சரித்த மந்திரம் என்ன தெரியுமா?
தமிழ் இலக்கணம் - 12 "சொல்"
தமிழ் இலக்கணம் - 12
"சொல்"
தமிழ் இலக்கணம் - 12
"சொல்"
மருந்துப் பொருட்களின் தொகை உலோகங்கள்
மருந்துப் பொருட்களின் தொகை
உலோகங்கள்:
1)தங்கம்2)வெள்ளி
3)செம்பு
4)நாகம் (துத்தநாகம்)
5)எஃகு
6)வெண்கலம்
7)தரா
8)பித்தளை
9)இரும்பு
10)வெள்வங்கம்
11)கருவங்கம்
இவற்றில் வெண்கலம், பித்தளை, தரா எனும் மூன்றும் கலப்பு உலோகம், அதாவது இரண்டுக்கு மேற்பட்ட உலோகக் கலவை. மற்றவை தனித்த உலோகங்கள்.
காரசாரம் (உப்புகள்):
நமது சித்த மருத்துவத்தில் 25 வகையான உப்புகள் மருந்தாக பயன்படுகிறது. இதில் 10 வகை இயற்கை இலவணம் (உப்புகள்), மீதமுள்ள 15 வகையானவை செயற்கை இலவணங்கள் (உப்புகள்).
1)வழலை
2)பூநீறு
3)நவசாரம்
4)எவச்சாரம்
5)கெந்தியுப்பு
6)வளையலுப்பு
7)வெங்காரம்
8)ஏகம்பச்சாரம்
9)அமுரியுப்பு
10)பச்சை கற்பூரம்
11)கற்பூரம்
12)சத்திசாரம்
13)வெடியுப்பு
14)மீனம்பர்
15)பொன்னம்பர்
16)சவுட்டுப்பு
17)திலாலவணம்
18)பிடாலவணம்
19)இந்துப்பு
20)சிந்துப்பு
21)கல்லுப்பு
22)காசிச்சாரம்
23)அட்டுப்பு
24)சீனம்
25)கடல்நுரை
Saturday, September 29, 2018
2 மாதம் வெந்தய நீரில் தேன் கலந்து குடித்தால், எந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரையும் என்று தெரியுமா
2 மாதம் வெந்தய நீரில் தேன் கலந்து குடித்தால், எந்த பகுதியில் உள்ள கொழுப்பு கரையும் என்று தெரியுமா?
இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது. குறிப்பாக இரத்த குழாய்களினுள் கொழுப்புக்கள் படித்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, இதய பிரச்சனைகள் மற்றும் மூளை பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இப்படி இரத்த குழாய்களினுள் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, பல்வேறு உணவுகளும், பானங்களும் உதவுகின்றன. மருந்து மாத்திரைகள் கூட சில சமயங்களில் பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆனால் இயற்கை பானங்களும், உணவுகளும் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.
இப்போது நாம் இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் இயற்கை பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வெந்தயம்
இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டாக்கும் கொழுப்புக்களின் தேக்கத்தைக் கரைக்க வெந்தயம் பெரிதும் உதவியாக இருக்கும்.
ஆய்வுகள்
பல்வேறு ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள ஏராளமான நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாகவும் மற்றும் இந்த கரையக்கூடிய நார்ச்சத்து கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டள்ளது.
வெந்தயத்தின் இதர நன்மைகள்
வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து உண்ணும் உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்வதோடு, பித்தநீரின் உற்பத்தியைச் சீர்செய்யும். மேலும் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றச் செய்யும்.
வெந்தய நீர் தயாரிப்பு முறை #1
ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து தினமும் இருமுறை குடிக்க வேண்டும்.
வெந்தய நீர் தயாரிப்பு முறை #2
வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
குறிப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை 1-2 மாதங்கள் தினமும் குடித்து வந்தால், நிச்சயம் இரத்தக் குழாய்கள் சுத்தமாகி, இதயம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கீழே இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மனதில் கொண்டு பின்பற்றினால், இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கலாம்.
டிப்ஸ் #1
எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை உணவுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
டிப்ஸ் #2
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.
டிப்ஸ் #3
பிரகாசமான நிறங்களைக் கொண்ட பழங்களான தர்பூசணி, மாம்பழம், ஆரஞ்சு மற்றும் ப்ளூபெர்ரி போன்றவற்றை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால், கொழுப்புக்கள் படிவதைத் தடுக்கலாம்.
டிப்ஸ் #4
தினமும் காலை மற்றும் மாலையில் 1 கப் க்ரீன் டீ குடித்து வருவதன் மூலம், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்படும். இதனால் உடல் எடையும் குறையும்.
டிப்ஸ் #5
அன்றாட சமையலில் சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி சமைத்து வர, இரத்த குழாய்களில் கொழுப்புக்கள் படிவது தடுக்கப்படும்.
டிப்ஸ் #6
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், கிரான்பெர்ரி ஜூஸ் கிடைக்கும் போது, தவறாமல் வாங்கிப் பருகுங்கள். ஏனெனில் இது கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, கொழுப்புக்கள் இரத்த குழாய்களில் படிவதைத் தடுக்கலாம்.
மூட்டு வலியை காணாமல் போகச் செய்யும் எலுமிச்சை தோல்!
என்னும் பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்
இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்!
முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .
1193 : முஹம்மது கோரி
1206 :குத்புதீன் ஐபக்
1210 :ஆரம்ஷா
1211 : அல்தமிஷ்
1236 : ருக்னுத்தீன் ஷா
1236 : ரஜியா சுல்தானா
1240 : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242 : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246 : நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266 : கியாசுத்தீன் பில்பன்
1286 : ரங்கிஷ்வர்
1287 : மஜ்தன்கேகபாத்
1290 :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)
கில்ஜி வம்சம்
1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292 :அலாவுதீன் கில்ஜி
1316 :ஷஹாபுதீன் உமர் ஷா
1316 : குதுபுத்தீன் முபாரக் ஷா
1320 : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா
( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)
துக்ளக் வம்சம்
1320 :கியாசுத்தீன் துக்ளக்
1325 : முஹம்மது பின் துக்ளக்
1351 :பெரோஸ்ஷா துக்ளக்
1388 : கியாசுத்தீன் துக்ளக்
1389 : அபுபக்கர்ஷா
1389 :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394 :அலெக்சாண்டர் ஷா
1394 : நாஸிருத்தீன் ஷா
1395 : நுஸ்ரத் ஷா
1399 :நாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413 :தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414 :கஜர்கான்
1421 :மெஹசுத் தீன் முபாரக் ஷா
1434 : முஹம்மது ஷா
1445 :அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)
லோதி வம்ச ஆட்சி
1451 : பெஹ்லூல் லோதி
1489 : அலெக்சாண்டர் லோதி
1517 : இப்ராஹிம் லோதி
(லோதி ஆட்சி 75 வருடம்)
முகலாயர் ஆட்சி
1526 : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்
சூரி வமிச ஆட்சி
1539 : ஷேர்ஷா சூரி
1545 :அஸ்லம் ஷா சூரி
1552 :மெஹ்மூத் ஷா சூரி
1553 :இப்றாஹிம் சூரி
1554 :பர்வேஸ் ஷா சூரி
1554 :முபாரக் கான் சூரி 1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)
முகலாயர் ஆட்சி
1555 :ஹிமாயூன்
1556 :ஜலாலுத்தீன் அக்பர்
1605 :ஜஹாங்கீர் சலீம்
1628 :ஷாஜஹான்
1659 : ஒளரங்கசீப்
1707 :ஷாஹே ஆலம்
1712 :பஹதூர் ஷா 1713 :பஹாரோகஷேர் 1719 :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
1754 :ஆலம்கீர் 1759 :ஷாஹேஆலம்
1806 :அக்பர் ஷா
1837 :பஹதூர்ஷா ஜஹபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )
ஆங்கிலேயர் ஆட்சி
1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ;லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884 :லார்டு டப்ரின்
1894 : லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ்கர்னல்
1905: லார்டு
கில்பர்ட்
1910 :லார்டு
சார்லஸ்
1916 :லார்ட் பிடரிக்
1921 : லார்ட் ரக்ஸ்
1926:.லார்ட் எட்வர்ட்
1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
1936 :லார்டு ஐ கே
1943:லார்டு அரக்பேல்
1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)
சுதந்திர இந்தியாவின் ஆட்சி
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966:குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங் 1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. P.V. நரசிம்மராவ்
1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி
1996: A.J. தேவகொளடா
1997: I.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி
வரலாற்றில் நேற்றைய (27.09.2018) இன்று
வரலாற்றில் நேற்றைய (27.09.2018) இன்று
September 27, 2018
செப்டம்பர் 27 (September 27) கிரிகோரியன் ஆண்டின் 270 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 271 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 95 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1066 – இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல் ஆரம்பமானது.
1529 – முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டான்.
1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார்.
1590 – ஏழாம் ஏர்பன் திருத்தந்தை பதவியேற்ற 13 நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர்.
1777 – பென்சில்வேனியாவின் லான்காஸ்டர் நகரம் இந்த ஒரு நாள் மட்டும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக இருந்தது.
1821 – மெக்சிகோ, எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1825 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.
1854 – “எஸ்.எஸ். ஆர்க்டிக்” நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1893 – சிகாகோவில் இடம்பெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்ற மாநாடு முடிவடைந்தது.
1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
1916 – எதியோப்பியாவில் இடம்பெற்ற அரண்மனைப் புரட்சியை அடுத்து இயாசு மன்னர் பதவியை இழந்தான்.
1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.
1937 – கடைசி பாலிப் புலி கொல்லப்பட்டது.
1938 – ஆர்.எம்.எசு. குயின் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் வெள்ளோட்டம் விடப்படட்து.
1939 – இரண்டாம் உலகப் போர்: வார்சா ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகியன முத்தரப்பு உடன்பாட்டில் பேர்லின் நகரில் கையெழுத்திட்டன.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் கெசெல் நகர் மீது கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய தாக்குதல் ஆகும்.
1956 – அமெரிக்க வான்படைக் கப்டன் மில்பேர்ன் ஆப்ட் மக் 3 ஐத் தாண்டிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார். சிறிது நேரத்தின் பின்னர் விமானம் கட்டுக்கடங்காமல் வீழ்ந்து நொறுங்கியதில் அவர் ஆப்ட் கொல்லப்பட்டார்.
1959 – ஜப்பானின், ஹொன்ஷூ நகரில் இடம்பெற்ற புயலில் 5000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1961 – சியேரா லியோன் ஐநாவில் இணைந்தது.
1964 – ஜான் எஃப். கென்னடியை லீ ஹாவி ஒசுவால்ட் என்பவன் வேறு எவரினதும் தூண்டுதல் இன்றிக் கொலை செய்ததாக வாரன் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
1977 – ஒண்டாரியோவில் 300 மீட்டர் உயர தொலைக்காட்சிக் கோபுரம் ஒன்றில் சிறு விமானம் ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். கோபுரம் இடிந்து வீழ்ந்தது.
1983 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் சிறை உடைப்பில் பல தமிழ் அரசியல் கைதிகள் தப்பி ஓடினர்.
1983 – ரிச்சார்ட் ஸ்டோல்மன் க்னூ செயற்றிட்டத்தைப் பகிரங்கமாக அறிவித்தார்.
1994 – மியான்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்க்க மக்களாட்சிக்கான தேசிய அமைப்பை ஓங் சான் சூ கீ உருவாக்கினார்.
1993 – அப்காசியாவில் சுகுமியில் ஜார்ஜியப் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
1996 – ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி அதிபர் புரானுடீன் ரபானியை ஆட்சியிலிருந்து விரட்டினர். முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லா காபூல் நகர மின்சாரக் கம்பத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1997 – செவ்வாய் தளவுளவியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
1998 – கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
1998 – கூகிள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.
2002 – கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
பிறப்புக்கள்
1696 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலிய ஆயர், புனிதர் (இ. 1787)
1896 – கில்பர்ட் ஆஷ்டன், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1981)
1907 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1931)
1925 – ராபர்ட் எட்வர்ட்சு, மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2013)
1933 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009)
1932 – யஷ் சோப்ரா, பாக்கித்தானி-இந்திய இயக்குனர் (இ. 2012)
1932 – ஒலிவர் வில்லியம்சன், பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்ற அமெரிக்கர்
1953 – மாதா அம்ருதானந்தமயி, இந்திய ஆன்மிகவாதி
1972 – கிவ்வினெத் பேல்ட்ரோ, அமெரிக்க நடிகை
1981 – லட்சுமிபதி பாலாஜி, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1981 – பிரண்டன் மெக்கல்லம், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்
1982 – லில் வெய்ன், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்
*இறப்புகள்*
1590 – ஏழாம் அர்பதிருத்தந்தை) (பி. 1521)
1660 – வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1581)
1833 – இராசாராம் மோகன் ராய், இந்திய சீர்திருத்தவாதி (பி. 1772)
1972 – சீர்காழி இரா. அரங்கநாதன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1892)
1996 – முகமது நஜிபுல்லா, ஆப்கானிய அரசுத்தலைவர் (பி. 1947)
2008 – மகேந்திர கபூர், இந்தியப் பாடகர் (பி. 1934)
சிறப்பு நாள்
உலக சுற்றுலா நாள்
Friday, September 28, 2018
கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி" குறித்து சு.ப. வீ
கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி" குறித்து சு.ப. வீ
வீரப்பனின் நேர்மை குறித்து பழ நெடுமாறன்
வீரப்பனின் நேர்மை குறித்து பழ நெடுமாறன்
சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 44484
சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448
சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.
கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்
குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.
குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.
கிருமிகள் உருவாகக் காரணம்
கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.
நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல
இனி அவளை யாரும் ஏமாற்ற முடியாது.
இனி அவளை யாரும் ஏமாற்ற முடியாது.
என் சகோதரியின் மகள் என்னிடம் கதை சொல்லுன்னு கொஞ்சுனா. எனக்கு ஒன்னுமே நியாபகம் வரல. சரின்னு வாரணம் அறுபதாயிரம் கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதற்கு பிறகு நடந்தது.
நான்: ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்
குட்டி: வேற யாருமே இல்லியா?
நான்: இருந்தாங்க அம்மு.. ஆனா இப்போ ராஜா பத்தி தான் சொல்ல போறேன்.
குட்டி: சரி சொல்லு..
நான்: அந்த ராஜாகிட்ட sixty thousand elephant இருந்துச்சாம்.
குட்டி: வால்பாறைல காட்டுனியே அது மாதிரியா?
நான்: ஆமா டா.
குட்டி: அவ்ளோ பெருசா இருக்குமே அதுவா? அதுக்கு கூட சோறு செஞ்சு வச்சு இருந்தாங்களே? (Top slips la wild car ட்ரெக்கிங் போனபோது அங்க கும்கி யானைக்கு பயிற்சி குடுக்குறது சாப்பாடு குடுக்குறது எல்லாம் பார்த்தா)
நான்: அதே தான். சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேட்காத கதை கேளு
குட்டி: சரி சொல்லு
நான்: அவரு 60000 யானையும் ஒரே ship ல ஏதிக்கிட்டு
குட்டி: ship ல யா. ஓடஞ்சு கடல்ல விழுந்து செத்து போய்ராதா
நான்: இல்லை பாப்பு போனாராம்
கூட்டு: லூசு லூசு one elephant eh அவ்ளோ பெருசு இருக்கும். இதுல அவ்ளோ elephants கண்டிப்பா ship ஓடஞ்சு விழுந்து செத்து போயிரும்.
நான்: அம்மு கதை சொல்லவா வேனாவா?
குட்டி: சீ போ.. பொய் புழுகுனி.
அடுத்தது நான் எதிர் பார்க்காதது பாட்டி இந்த லூச எங்க ஸ்கூல்ல சேர்த்துவிடு. இதுக்கு கதை சொல்லவே தெரில. பொய்யா சொல்லுதுன்னு சொல்லுறா.
- எனக்கு சிரிப்பு ஒரு பக்கம் பெருமிதம் ஒரு பக்கம். என் அடுத்த தலைமுறையை கேள்வி கேட்க பழக்கிவிட்டேன். இனி அவளை யாரும் ஏமாற்ற முடியாது.
Thursday, September 27, 2018
தமிழ் இலக்கணம் - 11|"மூவகை மொழிகள்"
தமிழ் இலக்கணம் - 11
"மூவகை மொழிகள்"
ஆங்கிலமும் கற்போம் பகுதி - 11 ஒருமை பன்மை Ways to make words plural
1. Add S: (S சேர்த்தல்)
i) Most of the time, just add S
Scoop s = scoops, cone s = cones.
2. Add ES: (ES சேர்த்தல்)
i) If you hear the sound of /iz/ at the end of the plural word, use ES
Dish es = dishes, Dress es = dresses, Box es = boxes
This happens when a word ends in S, X, SH, or CH
3. Words ending in Y: (Y ல் முடியும் வார்த்தைகள்)
i) If the word ends in a consonant plus Y, change the Y to I and add es:
Cherry - y i es = cherries, puppy - y i es = puppies
ii) If the word in a vowel plus Y (such as ay, ey, oy) just add S
Day s = days, Monkey s = monkeys
4. Words ending in O: (O வில் முடியும் வார்த்தைகள்)
i) If the word ends in a vowel plus O, add S
Pistachio s = pistachios, Stereo s = stereos
ii) If the word ends in a consonant plus O, add S or ES
Hero es = heroes, Piano s = pianos
5. In the most words ending in F or FE, change the F or FE to V and add ES: )(F, FE போன்ற எழுத்துகளில் முடிபவை)
Loaf - f v es = loaves, Knife - fe v es = knives
i) Some words ending in F don't change. Such as the word chefs. For words ending in FF, just add S as in puffs and cliffs.
6. Irregular plurals: (மற்ற விதிவிலக்கானவைகள்)
i) Some words don't follow the regular patterns for making plurals. These are called irregular plurals.
Child - children, tooth - teeth, goose - geese, mouse - mice.
ii) Some words stay the same whether they are singular or plural.
Ice, deer.
Thanks to
MISS. NIVETHA MA
Thanks to
MISS. NIVETHA MA
ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம்
ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம்
ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”.
திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).
“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.
கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை.
சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்). இது இரண்டாவது நன்மை.
மூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப் பார்த்தேன். சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். எங்களிடம் நீங்கள் விலை பேசி வாங்கலாம். நூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம். ஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. எங்களுக்கு வேறு வருமானம் ஒன்றும் இல்லை. 20 ரூபாய் லாபம் இது மூன்றாவது நன்மை.
சரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன். “சார் நான்காவது இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில் நாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும் தெளிக்காமல் விவசாயம் செய்தது. இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது சார்...
அவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று வாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம் சிந்திக்கிறோமா?.....
சிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள காய்கறிகளை பேக் செய்து கொடுத்தார். அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். பிறகு நான் அவரிடம், “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே இல்லையே” என்றேன் ஆவலுடன்.
“இது என்னுடைய மனைவி இவளுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. இவளுடைய மருத்துவத்திற்காக நான் யாரிடமும் கையேந்தியதில்லை. நீங்கள் விலை பேசாமல் கொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவளுடைய மருத்துவ செலவிற்கு உபயோகப்படும். இதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை இறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும். இதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.
புன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய கண்கள் நிறைந்திருந்தது....
நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.
இது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில் வியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். நம்மால் இவர்களுக்கெல்லாம் உதவ முடியுமா???.
கோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க நாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர வியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில் தொண்டு.
மூட்டு வலியை காணாமல் போகச் செய்யும் எலுமிச்சை தோல்!
மூட்டு வலியை காணாமல் போகச் செய்யும் எலுமிச்சை தோல்!!
எலுமிச்சை மிக சக்தி வாய்ந்த பழம், அதிக ஆன்டி ஆக்சிடென்ட் கொண்டது. விட்டமின் சி நிறைந்தது.
ரத்த அழுத்தம் , இன்ஃபெக்ஷன், ஜலதோஷம் என பல வகை பாதிப்புகளுக்கு எலுமிச்சை நிவாரணமாக பயன்படுத்தப்படுகிறது.
இதில் மிக அதிகமாக விட்டமின் சி, மற்றும் ஏ, பி6, பி1, பயோஃப்ளேவினாய்டு, பெக்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம், போன்றவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. முதுமையையும் தள்ளிப் போகச் செய்யும் ஆற்றல் உண்டு.
எலுமிச்சை சாறு போலவே எலுமிச்சை தோலிலும் மிக அதிக சத்துக்கள் உண்டு, காய்ச்சலை குணப்படுத்தும், ஆன்டிசெப்டிக் குணங்கள் கொண்டவை, காயங்களிய விரைவில் அற்றும். 40 வயதிற்குப் பின் வரும் மூட்டு வலியை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த ஆற்றல் கொண்டது,
மூட்டுகளில் இருக்கும் சுருங்கியிருக்கும் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. வலியை குறைத்து, பாதிப்பை குணப்படுத்துகிறது.
அதனை மூட்டு வலிக்கு எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
ஆயின்மென்ட் :
தேவையானவை :
ஆலிவ் எண்ணெய்
எலுமிச்சை -2
யூகலிப்டஸ் இலை
எலுமிச்சை தோலை பொடியா துறுவிக் கொள்ள வேண்டும். ஒரு மூடியுள்ள ஜாரில் எலுமிச்சை தோலை போட்டு அது மூழ்கும் அளவிற்கு ஆலிவ் எண்ணெயை ஊற்றி அதில் யூகலிப்டஸ் இலையையும் நறுக்கிப் போட்டு ஜாடியை இறுக மூடிவிடுங்கள்
அப்படியே 2 வாரங்கள் வைத்திருக்க வேண்டும், பின்னர் அது ஆயின்மென்ட் போல கெட்டியாகியிருக்கும். இதனை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் வலியுள்ள பகுதிகளில் தடவ வேண்டும். இப்படி தினமு செய்தால் வலி மறைந்துவிடும்.
எலுமிச்சை தே நீர் :
எலுமிச்சை தேனீர் மூட்டு வலியை போக்கும், வாயுவை போக்கும், நச்ச்சுக்களையும் வெளியேற்றி விடும். உடல் குறைப்பிற்கும் நல்லது.
தேவையானவை :
நீர்- 2 கப்
எலுமிச்சை- 2
தேன்
தயாரிக்கும் முறை :
நீரில் இரண்டு எலுமிச்சையின் தோலை துருவிக் கொண்டு அதில் சேர்த்து கொதிக்க வையுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து வடிகட்டவும். இந்த தே நீரில் தேவையான அளவு தேனை கலந்து பருகலாம்.
நன்மைகள் :
இது நம் ஜீரண மண்டலத்தை பலம் பெறச் செய்வதோடு, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரைப்பைக்கு புத்துணர்ச்சி அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
எலுமிச்சை தோல் மூட்டு வலிக்கு மட்டுமல்லாமல் இதர நன்மைகளுக்கும் பயன்படுத்தலாம். அவற்றைப் பற்றி காண்போம்.
அழகிற்கு :
எலுமிச்சை தோல் சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சையின் தோலில், நம் சருமத்திற்கு ஏற்ற அனைத்து நன்மைகளும் உண்டு. அதில் உள்ள அமிலமானது நம் சருமத்திலுள்ள கருமையைப் போக்கி நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.
நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளரத் தூண்டுகிறது. எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அத்துடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் பிளச் செய்தாற்போல் மாறிவிடும். சூரியக் கதிர்களால் ஏற்பட்ட கருமையும் மறையும்.
பற்களின் வெண்மைக்கு :
எலுமிச்சைத் தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து, வெண்மையான புன்னகையை பெறலாம்.
மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக|வள்ளலார் காட்டும் வழி..
...
என்னும் பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
Wednesday, September 26, 2018
அண்ணாவின் பேச்சாற்றலுக்கு ஒரு நிகழ்வு
அண்ணாவின் பேச்சாற்றலுக்கு ஒரு நிகழ்வு
போப்பாண்டவரை சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது அறிஞர் அண்ணாவுக்கு. அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்து சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை நிறுத்தினார்.
#போப்பாண்டவர் சொன்னார், அருமையாக பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்! தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.
#என்ன கேட்டாலும் தருவீர்களா என்று கேட்டார் அண்ணா. கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர். போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மைக்கேல் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.
#உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகளிடம் பேசி மைக்கேல் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.
#போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்கு சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காக போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.
#அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா. நாஞ்சிலாரை சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.
#உடைந்து போன ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
#அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தன் அறிஞர் அண்ணா.
#சென்னை கண்ணிமாரா நூலகத்தில் படித்து கொண்டிருந்தார் அண்ணா. நூலகத்தை மூடவேண்டும் வெளியே போக முடியுமா என்று கேட்டார்கள். அண்ணா சொன்னார், நீங்கள் வெளியே பூட்டிவிட்டு செல்லுங்கள். நான் படித்துவிட்டு உள்ளேயே தூங்கிவிடுகிறேன் என்று சொன்னார் அண்ணா.
#காலையில் நூலகம் திறந்த பொழுதும் படித்து கொண்டிருந்தார் அண்ணா. "உறங்கி கிடந்த தமிழர்களின் உணர்வுகளை தட்டியெழுப்ப உறங்காமல் படித்தவர், வார்த்தைகளுக்கு சலங்கை கட்டி நடனமாட விட்டவர்,
#அண்ணாவின் பேரறிவை,
ஆற்றல்மிகு சொல்லழகை,
சொன்னால் முடிந்திடுமோ,
சொல்வதென்றால் இயன்றிடுமோ"
இயற்கை வாழ்வியல்முறை
இயற்கை வாழ்வியல்முறை
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்
முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்
முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுப்பெறும்
முருங்கை மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும்.
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும் உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம்.
ஆண்தன்மை அதிகரிக்க :
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்
விந்து விருத்தியாக :
முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்
காமம் பெருக :
முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும்.
வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்
பாலுறவில் பரவசமடைய:
முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்
உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க:
முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகிவிடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்
வயதானோரும் வாலிப சுகம் அடைய :
முருங்கையின் மிகவும் பூப்போன்ற இளம்பிஞ்சு எடுத்து வந்து, பட்டாணி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, லேசாக உப்பு, மிளகு தூவி, பச்சையாகவே உண்டால் கிழவனுக்கும் காளையைப் போல் காம இச்சை ஏற்படும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக|வள்ளலார் அருளிய காயகல்பம்|மூலிகை_மருத்துவம்a
மனிதவுடலை வாட்டும் அனைத்து நோ
ய்களும் குணமாக|வள்ளலார் அருளிய காயகல்பம்|மூலிகை_மருத்துவம்
காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.
சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.
ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினை
அருளியுள்ளார்.
வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,
தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்
ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).
இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.
இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.
சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.
சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.
99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.
கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.
உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகும்.
வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.
இதற்கு பத்தியம் எதுவுமில்லை.
இந்த காயகற்ப சூரணம் சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது.
காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் விளங்குகிறது.
உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.
இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.
இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.
இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.
அனைத்து நண்பர்களும் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். 😊🙏🙏🙏🙏🙏🙏🙏😊
"மருத்துவக் குணங்கள் CONTENTSதேங்காயில் உள்ள மருத்துவம்"
என்னும் பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
Subscribe to:
Posts (Atom)