Thursday, January 31, 2019

சேலம் - ஓமலூர் பிரதான சாலைக்கு, முன்னாள் முதல்வரின் பெயர் அறிவிப்பு -2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள்

சேலம் - ஓமலூர் பிரதான சாலைக்கு, முன்னாள் முதல்வரின் பெயர் அறிவிப்பு -2019


முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை தனது வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக, அரசுக்கு சொந்தமான ஏற்றுமதி - இறக்குமதி வங்கியானது (EXIM), இந்தியாவில் 6,000 கோடி ரூபாய் மூலதனத்தை அளித்துள்ளது.

🍀 உலகின் மிகப்பெரிய பாலு}ட்டியை கண்டறிந்துள்ளதாக, அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளார்.

🍀 ஸ்வீடனில் நிலவி வந்த நான்கு மாத அரசியல் குழப்பத்துக்குப் பிறகு, அந்த நாட்டின் புதிய பிரதமராக ஸ்டெஃபான் லாஃப்வென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

🍀 பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக, ஆசிப் சயீத்கான் கோசா நியமிக்கப்பட்டார்.

🍀 டி.என்.ஏ தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதா - 2019, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வுNPளுஊ குரூப்-2 தேர்விற்கு முழு நேரமும் பயிற்சி செய்பவரா நீங்கள்?

பொதுத்தமிழ், பொது அறிவு, திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை, கிராம நிர்வாகம் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புதிய பாடத்திட்டத்தின் படி மிக துல்லியமாக தொகுக்கப்பட்ட 10 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு !!

ரூ. 289 மதிப்புள்ள ஏயுழு மற்றும் குரூப் 4
தேர்வுக்கான பயிற்சிப் புத்தகம்

50மூ சலுகை விலையில் ரூ. 145 மட்டுமே
+ ளுர்ஐPPஐNபு ஊர்யுசுபுநு நுஓவுசுயு.

இந்த புத்தகங்களை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
🍀 தொழிற்சாலைகளில் பளுவான பொருட்களை கையாள்பவர்கள் முதல் முதுகெலும்பு பாதிக்கப்பட்டவர்கள் வரை, பலருக்கும் உதவும் வகையில், பேனாசோனிக் அறிமுகப்படுத்திய, ′மாடல் ஒய்′ என்ற எஸ்சோஸ்கெலட்டன், ஒரு புதிய வகை கருவியை உருவாக்கியுள்ளது.

🍀 இந்திய அணு உலைகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, உஸ்பெகிஸ்தானில் இருந்து யுரேனியம் தாதுவை நீண்ட கால அடிப்படையில் இறக்குமதி செய்வது குறித்து, அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

🍀 எண்ணூர் துறைமுகம், மாமல்லபுரம் இடையே, சென்னை வெளிவட்ட சாலை அமைப்பதற்கு, ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம், டெல்லியில் கையெழுத்தானது.

🍀 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் - ஓமலு}ர் பிரதான சாலைக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டியுள்ளார்.

🍀 நாக்பூர் - மும்பை இடையே ஆன ′சமுருதி காரிடார்′ என்ற விரைவு சாலை திட்டத்திற்காக SBI தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 

##பாமரனின் பேச்சு| பாமரனின் சாஅய் புத்தக வெளியீடு

பாமரனின் பேச்சு| பாமரனின் சாஅய் புத்தக வெளியீடு



###TNPSC_CURRENT_AFFAIRS|பாகிஸ்தானில் நீதிபதியான முதல் இந்து பெண்

###TNPSC_CURRENT_AFFAIRS|பாகிஸ்தானில் நீதிபதியான முதல் இந்து பெண்!!!

பாகிஸ்தானில் நீதிபதியான முதல் இந்து பெண்!!!.


🚩 பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் சஹhதாகோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமன் குமாரி.

🚩 இந்து மதத்தை சேர்ந்த இவர் அந்த மாவட்டத்தின் சிவில் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

🚩 இவர் ஐதராபாத்தில் எல்எல்பி படிப்பை முடித்து பின் கராச்சியின் ஜாபிஸ்ட் பல்கலையில், சட்டப்படிப்பில் மாஸ்டர் பட்டம் பெற்றார்.


காம்பார்-ஷாக்தாத்கோட்டை சேர்ந்த சுமன் குமாரி பெண் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அவருடைய சொந்த மாவட்டத்திலேயே பணியாற்ற உள்ளார். பாகிஸ்தானின் ஐதராபாத்தில் எல்.எல்.பி.யை முடித்துள்ளார். பின்னர் தன்னுடைய சட்ட மேற்படிப்பை கராச்சியில் உள்ள சுஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். 

சுமன் குமாரியின் தந்தை  பவன்குமார் பேசுகையில், என்னுடைய மகள் பாகிஸ்தானில் உள்ள ஏழை மக்களுக்கு சட்ட உதவியை வழங்க உதவிகளை செய்வார். அவர், மிகவும் சவாலான தொழிலை தன்னுடைய கையில் எடுத்துள்ளார். அதில் கடினமான உழைப்பு மற்றும் நேர்மையினால் மேலும், மேலும் உயர்வார் என்று கூறினார். சுமன் குமாரின் தந்தை பாகிஸ்தானில் கண் மருத்துவராக  பணியாற்றி வருகிறார். 

அவருடைய மூத்த சகோதரி சாப்ட்வேர் என்ஜினீயராகவும், இளைய சகோதரி பட்டய கணக்காளராகவும் பணியாற்றி வருகிறார்கள். சுமன் குமாரி,  பாடகர் லதா மங்கேஷ்கர் மற்றும் அதீப் அஸ்லாம் ஆகியோரின் தீவிர ரசிகை ஆவார். பாகிஸ்தானில் இந்து மதத்தை சார்ந்த பெண் ஒருவர் நீதிபதியாவது இதுவே முதன்முறையாகும், அவருக்கு பலரது தரப்பில் இருந்து  பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள கம்பார்-ஷதட்கோட் பகுதியை சேர்ந்தவர் சுமன் குமாரி. கராச்சியின் ஸாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்பில் முடித்துள்ள இவர், அந்நாட்டின் நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் முதல் இந்து பெண் நீதிபதியாக பதவியேற்ற உள்ளார்.

வழக்கறிஞருக்கு படிக்க வேண்டும் என முடிவெடுத்தபோது என் சமூகத்தில் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என பயப்பட்டேன். ஆனால் எனக்கு என் குடும்பம் துணை நின்றது. தற்போது நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் சுமன் குமாரி. 

பாகிஸ்தான் மக்கள் தொகையில் 1.85% பேர் இந்துக்கள். கடந்த 2006-ஆம் ஆண்டு பாகிஸ்தான் செனட்டிற்கு இந்துப் பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்துப் பெண் ஒருவர் அந்நாட்டு நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளார்.







###ENGLISH SPEECH_COMPUTATION|ஆங்கில மேடைப்பேச்சு | சும்மா கேட்டுப்பாருங்க

###ENGLISH SPEECH_COMPUTATION|ஆங்கில மேடைப்பேச்சு | சும்மா கேட்டுப்பாருங்க



Wednesday, January 30, 2019

###TNPSC_CURRENT_AFFAIRS-2019| இன்றைய முக்கிய செய்திகள் ஜனவரி 30

###TNPSC_CURRENT_AFFAIRS-2019|
இன்றைய முக்கிய செய்திகள்
ஜனவரி 30

உலகச் செய்திகள்

பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்க உள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள குவம்பர் சஹாதாகோத் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி போதன் என்பவர் சிவில் நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.

ஒலியை விட அதிக வேகமாக அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையை சீனா மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. டி எப் 26 (DF 26) என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது.

அமெரிக்காவில் உள்ள, பென்சில்வேனியா பல்கலையின் உயரிய கர்நாட் விருது, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலச் செய்திகள்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை தொடங்குகிறது. முத்தலாக் தடை மசோதா, குடியுரிமை மசோதா ஆகியவற்றை இந்த தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் கொண்டுள்ளது.

ரயில்களில் பயன்படுத்தப்படும் போர்வை, தலையணை உறை, டவல் உள்ளிட்டவற்றை காதி நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

மராட்டியத்தில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை மந்திரி பங்கஜா முண்டே தொடங்கி வைத்தார். இந்த பரிசு பெட்டகம் ஒன்றின் மதிப்பு ரூ.2000 ஆகும்.

மாவட்டச் செய்திகள்

வேலை நிறுத்தம் செய்து வந்த உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 99 சதவீதம் பேர் இன்று பணிக்கு திரும்பினர்.

அறிவாலயத்தையடுத்து கருணாநிதியின் இரண்டாவது பிரமாண்ட சிலை, அவருடைய குருகுலமான ஈரோட்டில் திறக்கப்பட இருக்கிறது. எட்டரை அடி உயரம், 750 கிலோ எடையில் வெண்கலத்தில் தயாராகியிருக்கும் பிரமாண்ட சிலையை, ஈரோடு முனிசிபல் காலணியில் கட்சிக்குச் சொந்தமான இடத்தில் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

விளையாட்டுச் செய்திகள்


பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் ஈரான் அணியுடன் மோதிய ஜப்பான் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

ஒருநாள் போட்டியில் அதிக சதம் கண்ட ஜோடியில் ரோகித் சர்மா - விராட் கோலி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

###TNPSC_CURRENT_AFFAIRS - 2019|தற்போது, தேசிய சினிமா அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? | முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

###TNPSC_CURRENT_AFFAIRS - 2019|தற்போது, தேசிய சினிமா அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?


முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரூ.3,600 கோடி செலவில், நாட்டில் 13 புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜம்மு-காஷ்மீரில் மட்டும் 2 பல்கலைக்கழகங்களும், மற்ற மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகமும் அமையவுள்ளது.

🍀 கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

🍀 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைமை செயல் அலுவலராக, சிங்கப்பு+ரின் மானு சாஹ்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 தஞ்சாவு+ர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை நெல் ஆய்வு நிலையத்தில், ஆடுதுறை 53 (ஏடிடீ 53) என்ற புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

🍀 இந்திய எல்லைகளை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் இஸ்ரோ பிரத்தியேக செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த உள்ளது.

🍀 தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஓய்வூ தியதாரர்களுக்கான தனி இணையதளத்தை (Www.tnpensiners.tn.gov.in) தொடங்கி வைத்தார்.

🍀 வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரண தொழில் கொள்கை உள்பட, முக்கிய தொழில் திட்டங்களுக்கு, தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

🍀 மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பி.வி. கானேதிவாலாவையும், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, கீழமை நீதிமன்ற நீதிபதி மனோஜித் மோந்தல், வழக்குரைஞர் சந்திபன் கங்குலி ஆகியோரையும் நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

🍀 தமிழகம் மற்றும் குஜராத்தில், கடற்படையின் 3 புதிய விமானப் பிரிவுகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

🍀 மும்பையில் ரூ.140 கோடியே 61 லட்சம் செலவில் உருவான, தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

Tuesday, January 29, 2019

உடலை வலிமையாக்கும் #சிறு_குறிஞ்சான்

உடலை வலிமையாக்கும் சிறு குறிஞ்சான்!


எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளை உடையது சிறு குறிஞ்சான். 

இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களை
யும் உடைய சுற்றுக்கொடி இனம் இது. 

முதிர்ந்த காய்களில் இருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக்கூடிய விதைகளைக் கொண்டது. 

இலை, வேர், மருத்துவக் குணம் உடையது. 

இலை பித்தம் பெருக்கும். தும்மலை உண்டாக்கும். மேலும் வாந்தி உண்டாக்கி நஞ்சை முறிக்கும் குணம் உடையது. 

தமிழ்நாடெங்கும் சிறு காடுகளில் தானாகவே வளர்கின்றது.

மருத்துவக் குணங்கள்:

சிறு குறிஞ்சானைக் கொடி இலையுடன் 50 கிராம் எடுத்து, திரிகடுகு வகைக்கு 10 கிராம் எடுத்து, ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 10 மில்லியளவு 10 நிமிடத்திற்கு ஒரு முறை குடித்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடன் கூடிய காய்ச்சல் குணமாகும்.

சிறு குறிஞ்சான் கொடி இலையுடன் 10 கிராம், களா இலை 20 கிராம் சேர்த்து அரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட தாமதமாக வருகின்ற மாதவிலக்குப் பிரச்சினை, இரத்தப் போக்கு, கற்பாயாசக் கோளாறுகள் குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை ஒரு கைப்பிடி அளவும், தென்னம்பூ இரண்டு கைப்பிடி அளவும் எடுத்துச் சேர்த்து அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து எடுத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் வெந்நீரில் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும்.

சிறு குறிஞ்சான் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து திரிகடுகு சூரணம் 1 சிட்டிகையுடன் கலந்து வெந்நீரில் இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர கபம் வெளியேறி இரைப்பிருமல் (ஆஸ்துமா) மூச்சுத்திணறல் குணமாகும்.

சிறு குறிஞ்சான் வேரை நன்கு நசுக்கியது 40 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு எடுத்து 3 வேளை குடித்து வரக் காய்ச்சல், இருமல், காசம் குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலையைப் பிட்டவியலாய் அவித்து சாறு எடுத்து 200 மில்லியளவு, உள்ளி, சுக்கு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் வகைக்கு 30 கிராம் எடுத்து வெதுப்பிப் பொடி செய்து இரண்டையும் கலந்து, 3 நாள்கள் காலையில் கொடுத்து வர குடல்வாதம் நீங்கும்.

சிறுகுறிஞ்சானின் பட்டையைப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கூட்டி, ஒரு தேக்கரண்டியளவு இரண்டு வேளை சாப்பிட்டு வர, உடம்பிலுள்ள காணாத வியாதிகள் நீங்கும். உடலுக்கு வலிமை உண்டாகும்.

சிறுகுறிஞ்சான் வேரை அல்லது உலர்ந்த இலையைப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வாந்தியாகும்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!



###TNPSC_CURRENT_AFFAIRS-2019| போலியோ மருந்து முகாம் நடத்துவது எப்போது?|

###TNPSC_CURRENT_AFFAIRS-2019|
போலியோ மருந்து முகாம் நடத்துவது எப்போது?|


போலியோ மருந்து முகாம் நடத்துவது எப்போது? 


🚩 நாடு முழுவதும் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரிமற்றும் மார்ச் மாதம் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

🚩 இந்தாண்டு, பிப்ரவரி 3ல், ஒரே தவணையாக, 70 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த, தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்திருந்தது.

🚩 இதற்கிடையில், மத்தியஅரசு அறிவுறுத்தலின்படி, போலியோ சொட்டு மருந்து முகாமை, தமிழக அரசு தள்ளி வைத்துள்ளது.

###TNPSC_GENERAL_TAMIL|வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல் எது? | பொதுத்தமிழ்


Book Back Questions - வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல் எது?
பொதுத்தமிழ்


புதிய பாடப்பகுதி


9ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம்



பொதுத்தமிழ்


1. பாதிரி ஒத்த , செய்கோலம் - இலக்கணக்குறிப்பு தருக. - உவமைத் தொடர், வினைத்தொகை

2. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடுகின்ற நாடுகள் முறையே யாது? - சேர, சோழ நாடு

3. வெறி கமழ் கழனியுள்ள உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள் யாது? - மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

4. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கூற்று - பெரியார் உயிர் எழுத்துகளில் ′ஐ′ என்பதை ′அய்′ எனவும், ′ஒள′ என்பதனை ′அவ்′ எனவும் சீரமைத்தார்.

காரணம் - சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
யுளெ: கூற்று சரி, காரணம் தவறு

5. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது? - பிறப்பு

6. முண்டி மோதும் துணிவே இன்பம் - இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது - துணிவு

7. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது. - பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

8. ′ஞானம்′ என்பதன் பொருள் யாது? - அறிவு

9. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன - இவ்வடிகளில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது? - கொம்பு

10. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை - ஒன்றே உலகம்

11. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நு}ல் எது? - ஒரு சிறு இசை

12. யாமரம் என்பது எந்த நிலத்தில் வளரும்? - பாலை

13. கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி? - பொருள் பின்வருநிலையணி

14. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ) வருக்கை - இருக்கை
ஆ) புள் - தாவரம்
இ) அள்ளல் - சேறு
Ans: இ - அள்ளல் - சேறு

பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது!!! பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது 10% இடஒதுக்கீடு

பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது!!! 

🚩 மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1 முதல் தேதி முதல் உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

🚩 இந்த இட ஒதுக்கீட்டை நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத் அரசு அமல்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும், உயர் கல்வி நிறுவனங்களும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

🚩 பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள டுiமெ-யை கிளிக் செய்யுங்கள்!!!

👉 👉 
👈 👈 


###TNPSC_CURRENT_AFFAIRS|பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு!!!

###TNPSC_CURRENT_AFFAIRS|பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு!!!


பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு!!! 

🚩 பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாறை அங்கு எப்படி சென்றது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

🚩 சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 14 குழுவினர் 33 மணி நேரத்திற்கும் மேலாக சந்திரனின் மேற்பரப்பில் இருந்தனர். சுமார் 43 கிலோ அளவுக்கு நிலவின் பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து உள்ளனர்.

🚩 அந்த பாறை பூமியில் தோன்றிய பழமையான பாறையாகும், சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது. அதற்கு பிக் பெர்த்தா என்று பெயரிட்டு உள்ளனர்.

மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள www.kavimalaravan.blogspot.com 
கிளிக் செய்யுங்கள்!!!

👉 👉வாழ்த்துக்கள்!!👈 👈

###TNPSC_CURRENT_AFFAIRS|இந்த பட்டியலில் உத்திர பிரதேசம் முதலிடம் - 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

###TNPSC_CURRENT_AFFAIRS|இந்த பட்டியலில் உத்திர பிரதேசம் முதலிடம் - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!


🍀 இந்தியாவின் தேசிய அங்கீகார அமைப்பான யோயோயோ NABCB ஆனது, ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் உள்ள OHSMS சான்றிதழ் அளிக்கும் அமைப்புகளுக்கு, அங்கீகாரம் அளிக்கும் திட்டத்திற்கு, சமமான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.

🍀 2019ம் ஆண்டின் குழந்தைப் பாதுகாப்பிற்கான, தேசிய ஆலோசனையின் முதல் பதிப்பு, புது டெல்லியின் இந்தியா வாழ்விட மையத்தில் நடத்தப்பட்டது.

🍀 நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள, உலகின் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் பட்டியலில், இந்தியாவின் ஹம்பி (கர்நாடகா) இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

🍀 ஆக்ரா (உத்திரப்பிரதேசம்) நகருக்கு தண்ணீர் வழங்குவதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி 'Gangaijal Project" என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.

🍀 ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அஜித் மோகன், முகநூல் (Facebook) இந்தியா நிறுவனத்தின் புதிய துணைத் தலைவராகவும், மேலாண் இயக்குநராகவும், அதிகாரப் பூர்வமாக பதவியேற்றுள்ளார்.

🍀 மகாராஷ்டிரா சட்டசபை மற்றும் செயலகத்தை உள்ளடக்கிய பத்திரிக்கையாளர்கள் சங்கமான மந்த்ராலயம் மற்றும் விதிமண்டல் வர்த்தகர் சங்கம் இணைந்து, மூத்த பத்திரிக்கையாளர் தீனு ராந்திவேக்கு (93), வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

🍀 காசநோயால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலை (2019) மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உத்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

🍀 டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டின் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 49 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

🍀 மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்குச் செல்லும்போது, சொந்த உதவியாளரை (ஸ்கிரைப்) அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

🍀 ′கடந்த, 100 ஆண்டுகளில், 2018 மிகவும் வெப்பமான ஆண்டு′ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


##குழந்தைகளுக்கு #சளிப் _பிரச்னை, #வறட்டு_இருமல்

குழந்தைகளுக்கு சளிப் பிரச்னை, வறட்டு இருமல்


பனிக்காலமும் சளிப் பிரச்னையும் இரட்டைக் குழந்தைகளைப் போல! அதிலும் குழந்தைகளுக்கு சளிப் பிரச்னை, வறட்டு இருமல் ஆகியவை படுத்தும்பாடு வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதற்காக அலோபதி மருத்துவரைத் தேடி ஓடுவதும், அவர் கண்ட, கண்ட ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதும் வாடிக்கை.

சில குழந்தைகளுக்கு பனிக் காலத்தில் சளியின் உக்கிரத்தால் தொடர்ச்சியாக ஆவி பிடிப்பதும் வழக்கம். ஆனால் இதையெல்லாம் விட குழந்தைகளின் சளிப் பிரச்னையை இயற்கை முறையிலேயே தீர்த்துவிட முடியும். அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முதலில் ஒரு தூய்மையான பவுல் அல்லது கின்னத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது ஒரு ஸ்பூன் தேனை ஊற்ற வேண்டும். பொதுவாகவே தேனுக்கு பல மருத்துவகுணங்கள் உண்டு. நம் உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மையும் அதற்கு உண்டு. சளி பிடித்த குழந்தைக்கு தொடர்ந்து தேனைக் கொடுக்கும் போது உடலில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். தொண்டை கரகரப்பு, தொண்டை புண்களை குணப்படுத்தும் வல்லமையும் தேனுக்கு உண்டு.

கின்னத்தில் ஊற்றி வைத்திருக்கும் ஒரு ஸ்பூன் தேனோடு கால் சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். இந்த ஏலக்காய் பொடியை மிக்சியில் அரைத்த பின், குழந்தைகளுக்கு கொடுப்பது என்பதால் சலித்து விட்டுத்தான் சேர்க்க வேண்டும். இப்போது தேனையும், ஏலக்காய் பொடியையும் நன்றாகக் கலக்க வேண்டும். இப்போது இந்த கலவையை ஒரு ஸ்பூன் அளவுக்கு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் இதைச் சாப்பிட்ட பத்து நிமிடங்களுக்கு பின்னர் தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.(முஇ@55)

தேன் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் தொண்டையில் தங்காமல் உடனே உடலில் போய் சேர்ந்துவிடும். அப்படி தங்கினால் தான் தேன் தொண்டை கரகரப்பை நீக்கும். ஏலக்காய் சளியைக் கரைத்து வெளியேற்றும். இந்த பத்து நிமிடங்களில் என்ன செய்யலாம் தெரியுமா? நம் எச்சிலை அதிகமாக விழுங்கலாம். அதிலும் ஏராளமான நோய் எதிர்ப்புத்தன்மை இருக்கிறது.

ஏலக்காய்க்கு பசியைத் தூண்டும் தன்மையும் உண்டு. குழந்தைகளுக்கு தினசரி இதை மூன்றுமுறை கூட கொடுக்கலாம். இருமல் அதிகமாக இருந்தால் ஐந்து முறை கூட கொடுக்கலாம்.

Monday, January 28, 2019

###தமிழின் முதல் கிசுகிசு எது தெறியுமா?|##பிரபஞ்சன்

தமிழின் முதல் கிசுகிசு எது தெறியுமா?|பிரபஞ்சன் 




###TNPSC CURRENT_AFFAIRS - 2019 |
நடப்பு நிகழ்வுகள் - மாதிரி வினா விடைகளின் தொகுப்பு !!
###TNPSC CURRENT_AFFAIRS - 2019 


2018 ஜூலை மாத, நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா விடைகளின் தொகுப்பு - 04!!

⭐ எந்த நிறுவனம் தானியங்கி டிரக் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது?

⭐ தேசிய ரயில் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்யநிஸ்தா என்ற திட்டம் எங்கு தொடங்கப்பட்டது ?

⭐ தங்கம் அதிகம் சேமித்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்துள்ளது ?

⭐ பிரதமர் ராஜீவ்காந்தியின் பெயரில் எந்த ஆண்டு முதல் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது?

⭐ இந்தியாவில் எத்தனை பேருக்கு ணு-Pடரள பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது?

⭐ கல்லு}ரியில் மாணவர்கள் வசதிக்காக வாட்டர் ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாநிலம் எது?

⭐ ருக்குரா நடுத்தர நீர்ப்பாசன திட்டம் எம்மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? 

###TNPSC_TAMIL - 2019| பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலின் ஆசிரியர் யார்? பொதுத்தமிழ் வினா விடைகள்

###TNPSC_TAMIL - 2019| பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலின் ஆசிரியர் யார்?
பொதுத்தமிழ் வினா விடைகள்




1. நளவெண்பா நு}லின் ஆசிரியர்? - புகழேந்திப்புலவர்

2. திருவள்ளுவமாலையில் பாடல் பாடியவர் யார்? - கபிலர்

3. இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்? - 4

4. தமிழ்ப்பசி என்ற நு}லின் ஆசிரியர்? - க. சச்சிதானந்தன்

5. குற்றியலுகரம் - பிரித்தெழுதுக. - குறுமை + இயல் + உகரம்

6. புதுக்கவிதைக்கு வித்திட்டவர் யார்? - பாரதியார்

7. ஆறுமுக நாவலரை, 'வசனநடை கைவந்த வல்லாளர்" என்று பாராட்டியவர் யார்? - பரிதிமாற்கலைஞர்

8. 'மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்" என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர்? - குணங்குடி மஸ்தான் சாகிபு

9. பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலின் ஆசிரியர்? - வீரமாமுனிவர்

10. திருக்குறள் எவ்வகை நூல்களுள் ஒன்று? - பதினெண் கீழ்க்கணக்கு நூல்

11. தாயுமானவர் வாழ்ந்த காலம்? - கி.பி.18ம் நூற்றாண்டு

12. இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும் குற்றியலுகரம்? - நெடில் தொடர்க் குற்றியலுகரம்

13. திருக்குறளை எந்த வருடம் ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்? - 1886

14. வீரமாமுனிவரைத் தமிழ் முனிவருள் ஒருவர் எனப் புகழாரம் சு+ட்டியவர்? - ரா.பி.சேதுப்பிள்ளை

15. தாயுமானவர் நினைவு இல்லம் உள்ள இடம் எது? - இலட்சுமிபுரம்

###TNPSC CURRENT_AFFAIRS-2019| நடப்பாண்டின் சிறந்த மனிதருக்கான விருது| CURRENT_AFFAIRS_2019| முக்கிய நடப்பு நிகழ்வுகள்

###TNPSC CURRENT_AFFAIRS-2019|
நடப்பாண்டின் சிறந்த மனிதருக்கான விருது|
CURRENT_AFFAIRS_2019|
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!




🍀 ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் (ஹெச்ஏஎல்) தயாரிக்கப்பட்ட, இலகு ரக போர் ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணையை செலுத்தி, தாக்குதல் நடத்தும் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

🍀 அடுத்த பத்தாண்டுகளில், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், இந்தியா, அமெரிக்காவை விஞ்சி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் ஆய்வுப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

🍀 கேரள பிரவாசி பாரதிய திவாஸ் அமைப்பு, நடப்பாண்டின் சிறந்த மனிதருக்கான விருதுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவர் மு.க. ஸ்டாலினை தேர்வு செய்துள்ளது.

🍀 உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக மூத்த வழக்குரைஞர்கள் சஞ்சய் ஜெயின், கே.எம்.நடராஜ் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.

🍀 'புவி அரசியல் மற்றும் புவியுக்திசார்" மாநாடான 'ரைசினா உரையாடலின்" (Raisina Dialogue) 4-வது பதிப்பு புதுடெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.

🍀 காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவராக, முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் பதவியேற்றுக் கொண்டார்.

🍀 அமெரிக்க நாடாளுமன்ற உளவுத்துறை மேற்பார்வை குழுவின் உறுப்பினர் பதவிக்கு இந்திய அமெரிக்கரும், ஜனநாயக கட்சி எம்.பி.யுமான ராஜா கிருஷ்ணமூர்த்தி (வயது 45) நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் ரூ.10,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

🍀 நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த, பருத்தி விதை முளைக்க தொடங்கியுள்ளது.

🍀 இந்திய ராணுவத்துக்கு இந்தியரே முதல் இந்திய இராணுவ தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா பதவியேற்ற, ஜனவரி 15ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 



###TNPSC_CURRENT_AFFAIRS|உலகின் எடை குறைந்த செயற்கைக் கோள்-2019

###TNPSC_CURRENT_AFFAIRS|உலகின் எடை குறைந்த செயற்கைக் கோள்-2019


உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது இந்தியா!!! 

🚩 உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோள் எனக் கருதப்படும் கலாம் சாட் ஏ2-வை விண்ணில் ஏவியுள்ளது இந்தியா.

🚩 ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஏவு தளத்தில் இருந்து விண்வெளிக்கு செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி44 ராக்கெட்.

🚩 விண்வெளி கல்வி நிறுவனம் ஒன்றின் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக் கோளின் எடை 1.26 கிலோ மட்டுமே.

மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள www.kavimalaravan.blogslpot.com யை கிளிக் செய்யுங்கள்!!!

👉 👉

👈 👈 



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். 

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...


www.kavimalaravan.blogslpot.com யை கிளிக் செய்யுங்கள்!!!

Sunday, January 27, 2019

###ஜோ_மல்லூரி கல்லூரியில் இன்றைய கவிஞர்கள் குறித்து

ஜோ_மல்லூரி கல்லூரியில் இன்றைய கவிஞர்கள் குறித்து



###TNPSC CURRENT AFFAIRS| தேர்தல் அதிகாரிகளை கண்காணிப்பதற்கு புதிய செயலி..!! - 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

###TNPSC CURRENT AFFAIRS|தேர்தல் அதிகாரிகளை கண்காணிப்பதற்கு புதிய செயலி..!! - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!



🍀 உலக வங்கி நிதி உதவியுடன், தமிழகத்தில் நீர், நில மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அமெரிக்க கர்னெல் பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

🍀 பூமியிலிருந்து பார்த்தால் தெரியாத நிலவினுடைய பின் பகுதியின் 360 டிகிரி கோண படத்தை, சீனாவின் சாங் இ-4 விண்கலம் முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.

🍀 முஸ்லிம்களில், ′முத்தலாக்′ எனப்படும், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றால், சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டம், மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

🍀 விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு, அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

🍀 தேர்தல் அதிகாரிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு, புதிய செயலியை, சத்தீஸ்கர் மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

🍀 ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அம்மாநிலத்தின் மக்களுக்கு இலவசமாக டுநுனு விளக்குகளை வழங்குவதற்காக 'ஆமா காரே டுநுனு"  (Ama Ghare LED)  என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

🍀 Beti Bachao Beti padhao (பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் கற்பிப்போம்) என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டமாக திருவண்ணாமலை (தமிழகம்) தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

🍀 சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். 

🍀 கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது, தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு வழங்கப்படவுள்ளது.

முதன் முறையாக பெண் தலைமை தாங்கும் கம்பீர அணிவகுப்பு!!!

முதன் முறையாக பெண் தலைமை தாங்கும் கம்பீர அணிவகுப்பு!!!

முதன் முறையாக பெண் தலைமை தாங்கும் கம்பீர அணிவகுப்பு!!! 
 என்.சி.சி.யில் பயிற்சி பெற்று சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் பாவனா கஸ்தூரி

வரலாற்றையே மெய் சிலிர்க்க வைத்த பெண் அதிகாரி! ஆண்கள்களின் கம்பீர அணிவகுப்புக்கு முன்.. 
நாடு முழுவதும் 70 ஆவது  குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பெருமைகளை பறை சாற்றும் நிகழ்வுடன் டெல்லி செங்கோட்டையில் கம்பவீரமாக கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இந்த நிகழ்வில், கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில் நிகழாத ஒரு சம்பவம் நடந்து உள்ளது. 144 ஆண்கள் அடங்கிய படையினரின் கம்பீர அணிவகுப்பிற்கு முன் தலைமை ஏற்று சென்றவர் இந்திய ஆர்மியின்  பெண் அதிகாரி பாவனா கஸ்தூரி என்பதில் பெருமை கொள்ள செய்கிறது. இவர் ஒருவரால் ஒட்டு மொத்த பெண்களுமே பெருமை  அடைந்துள்ளனர்.

பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு இருந்தாலும், நாட்டின் மிகவும்முக்கியத்துவம் வாய்ந்த, நாட்டையே காப்பாற்றும் இந்திய ஆர்மியில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் அத்தனை ஆண்களின் கம்பீர அணிவகுப்பு என்பது..
சாதாரண விஷயம் அல்ல..பெண்கள் நாட்டின் கண்கள்..! 


🚩 
 இந்திய குடியரசு தினத்தின் ஆண் படையினரின் கம்பீர அணிவகுப்புக்கு வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார்.



இந்திய குடியரசு தினத்தின் ஆண் படையினரின் கம்பீர அணிவகுப்புக்கு வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார்.

🚩குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் பெரியளவில் விழாக்கள் நடத்தப்படும். அந்த விழாவில் நாட்டின் பிரதமர், முப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்துகொண்டு பார்வையிடுவார்கள்.

🚩 2015-ம் ஆண்டு அக்டோபரில் ராணுவப் பயிற்சி முடித்த அவர் குடியரசு தினத்தன்று இந்திய வரலாற்றிலேயே அனைவரும் ஆண்களால் ஆன அணிவகுப்புப் படைக்கு முதல் பெண்ணாக தலைமை தாங்குகிறார்.

நன்றி Aisanet news


💥 இந்த நிகழ்ச்சியில் நடக்கும் ராணுவ அணிவகுப்பிற்கு இதுவரை ஆண் ராணுவ வீரர்கள் மட்டுமே தலைமையேற்று நடத்தினர்.
💥 தற்போது 
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள டுiமெ-யை கிளிக் செய்யுங்கள்!!!

👉 👉
👈 👈 

###ஜேக்டோ-ஜியோ| ###JAKTO-JIO |#TEACHERS_PROTEST |#விடை_வேண்டும்_ஆசிரிய #பெருமக்களே

###ஜேக்டோ-ஜியோ
###JAKTO-JIO
#TEACHERS_PROTEST
#விடை_வேண்டும்_ஆசிரிய #பெருமக்களே


அடுத்த மாதம் மாணவர்களுக்கு இறுதி தேர்வு .நேற்றிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளீர்கள்.

அதாவது மாணவர்களுக்கு கற்பிப்பதை நிறுத்தியுள்ளீர்கள்.
உங்கள் போராட்டத்திற்கு ஆயிரம் நியாயம் இருக்கலாம்.

அதை விட பல்லாயிரம் நியாயம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு இருக்கிறது

இன்று
அரசுப் பள்ளியில் படிக்கும் இலட்சக்கணக்கான மாணவர்களில்
ஆகப் பெரும் பகுதியினர்  வாழ்வின் அடித்தளத்தில் உழன்று கொண்டிருக்கும் பெற்றோரின் பிள்ளைகள்

தங்கள் பிள்ளைகளை அவர்கள் உங்களிடம் அனுப்பியுள்ளனர்

போராடும் ஆசிரியரில் 99 விழுக்காட்டினர், உங்கள் பிள்ளைகளை உங்களை விட பல மடங்கு ஊதியம் குறைவாக பெறும்  

 தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் அனுப்பியுள்ளீர்கள்

அவர்களுக்கு
உங்களை விட ஊதியமும் சலுகைகளும் பலமடங்கு குறைவு என்பதோடு வேலைப் பாதுகாப்பும் குறைவு .

அவர்கள் ஒரு போதும் போராட போவதில்லை. அதற்கான கட்டமைப்பு அவர்களுக்கு இல்லை.
அதனால் நீங்கள்
பெற்றபிள்ளைகள் பாதிக்கப்பட போவதில்லை.

ஒரு வேளை
உங்களைப் போலவே,
அவர்களுக்கும் கட்டமைப்பு இருந்து , அவர்களும் போராட்டத்தில் குதித்தால்
அதாவது
தேர்வு நேரத்தில்
உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிப்பதை நிறுத்திக் கொண்டால் உங்கள் மனம்
எப்படி துடிதுடிக்கும்?

இன்னுமொரு கேள்வியும் பொது சமூகத்திலிருந்து உங்கள் முன்வைக்கப்படுகிறது.
இடைநிலை மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பலரும் கூறுவது,
எங்கள் வகுப்புக்கு வரும் பிள்ளைகள் பலருக்கு
தமிழைக் கூட சரியாக படிக்கத் தெரியவில்லை. சாதாரண கூட்டல் கழித்தல் கூட தெரியவில்லை என்பதே.

இதற்கு ஆரம்ப பள்ளி ஆசியர்கள் பொறுப்பில்லையா?
கடமையை செய்யாத அவர்கள் கூறும் காரணம்,
பிள்ளையை அடிக்கக் கூடாதென்றால் எப்படி பிள்ளை சொல் பேச்சு கேட்டு படிக்கும் என்பதே.

ஒவ்வொரு வகையான பிள்ளையையும் எப்படி படிக்க வைக்க வேண்டும் என்ற பயிற்சி ஆசிரிய பயிற்சியி லேயே கொடுக்கப்படுகிறது.
படிக்காத பிள்ளையின் ஆசிரியர் ,
அதற்கான தகுதியற்றவர் என்று தகுதி நீக்கம் செய்து விட சங்கங்கள் சம்மதிக்குமா?

இன்றைக்கு
அரசுப் பள்ளியில் மாணவர் விகிதம் சரிந்து வருவதற்கு   
ஆசிரியர்கள் காரணமேயில்லையா?

அங்கொன்றும்
இங்கொன்று மாக
சில அர்பணிப்பான
தலைமையாசிரியர்களால்
சிறப்பாக நடத்தப்படும் பள்ளிகளை
மக்கள் கொண்டாடுகிறார்களே.
சீர் கொண்டு கொடுக்கிறார்களே.

அப்படியென்றால்
மற்ற பள்ளிகள்
அப்படி இல்லையென்று தானே பொருள்?

கடமையை செய்வோம் கலங்காமலே
உரிமையை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே என்றல்லவா நீங்கள் கொடி பிடித்திருக்க வேண்டும்?
முதல் பாதியை விட்டு விட்டு இரண்டாம் பாதிக்கு நின்றால் பொதுசமூகம் உங்களை எப்படி பார்க்கும்?

தெய்வத்திற்கு முன்
உங்களை வைத்த சமூகத்திற்கு
நியாய உணர்வோடு நீங்கள் நடக்கிறீர்களா ?

மொழியுணர்வு
சூழலுணர்வு
மாந்தவுணர்வு
எல்லாம் போன தலைமுறை ஆசிரியர்களால் இந்த சமூகத்திற்கு  ஊட்டப்பட்டது.
ஆசிரியர்கள் அப்போது பொருளியல் போதாமையில் இருந்தனர்

இப்போது
உங்களுக்கு
குறைபாடுகள் இருக்கலாம்.
போதாமைகள் இல்லை.
ஆனால்
போன தலைமுறை ஆசிரியர்களிடம் இருந்த உயர்ந்த விழுமியங்கள் உங்கள் எல்லோரிடமும் இருக்கிறதா?

அவரவர் 
அவரவர் நெஞ்சை தொட்டு பதில் சொல்லுங்கள்?

மீண்டும் சொல்கிறேன்.
உங்கள் போராட்டத்தில் நியாயம் இருக்கலாம்.
போராட உங்களுக்கு உரிமையும் இருக்கிறது.
ஆனால்
உங்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட போவது அரசல்ல.
இரத்தமும் சதையும்
உணர்வும் உயிரும் கொண்ட இலட்சக்கணக்கான இளம் ஏழைபிள்ளைகள்.

ஆளும் அரசில் இருப்பவர்கள் அறவாணர்கள் அல்ல. உங்கள் போராட்டத்தை கண்டு பதைபதைத்து போக .

உங்கள் உரிமைகளை விட
எதிர்கால தலைமுறையின் நலமே முகாமையானது.
அதற்கு பாதிக்காத வகையில் உங்கள் போராட்ட வடிவங்களை வடித்துக் கொள்ளுங்கள்.

போற்றுதலுக்குரிய
ஆசிரியப் பணியின் மேன்மையை
பொது சமூகத்தின்
தூற்றுதலுக்குரியதாய் ஆக்கி விடாதீர்கள்.

அவ்வாறு 
ஆகிவிடுவதன் இழப்பு
முழுமையாக உங்களுக்குத்தான்.

நுனி மரத்திலமர்ந்து
அடிமரத்தை வெட்டுவது
அறிவுடைமையாகுமா ஆசிரியப் பெருமக்களே?

*#சிந்திப்பீர்*

Saturday, January 26, 2019

###Fake_Doctors|யார் போலி மருத்துவர்கள்

யார் போலி மருத்துவர்கள் 


“Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drugh may not purport to prevent or cure or make claims to prevent or cure”.

‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக, அவர்கள் உயிர்களும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நமது அரசாங்கம், ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் மொத்தம் 51 என்று மேற்சொன்ன சட்டத்தில் ஷெட்யூல் - Jயில் வலியுறுத்தியுள்ளது. இந்த 51 வியாதிகளையும் ஆங்கில மருத்துவர்கள் எவரும் தங்கள் மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ, குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்று எச்சரிக்கிறது.

இந்த 51 நோய்களும் ஆங்கில மருத்துவத்துக்கு மட்டுமே சொந்தமானவை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள் இந்த ‘லிஸ்ட்’டில் சேரும் வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் நோய்கள் ‘எய்ட்ஸ், சார்ஸ்’ ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும் இதிலே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறாக, ஆங்கில மருத்துவம், தான் கண்டுபிடித்த நோய்கள் ஒவ்வொன்றையும் ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொன்றாக அவற்றைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து அந்த நோய்களை அடக்கம் செய்து கொண்டு வரும் வேளையில் இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதாவது, ஆங்கில மருந்துகளில் எந்த ஒரு மருந்தும் ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள ஆங்கில மருத்துவத்தில் நோய்களைக் குணமாக்காது என்பதை அந்த மருத்துவம் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்டு அதை பகிரங்கமாக அச்சிட்டிருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் .
என்பதற்காகவும், எனவே, ஆங்கில மருத்துவம் பார்க்கும் எந்த ஒரு மருத்துவரும், ஆங்கில மருத்துவத்தில் மருந்து என்பதே கிடையாது என்ற உண்மையான காரணத்தினால் ஷெட்யூல்-Jயில் உள்ள நோய்களுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது என்பதற்காகவும்,

ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது தவறான, ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும் மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும், என்பதை எச்சரிப்பதற்காகவும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில் நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன் ஆங்கில மருந்துகளை ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின்’, பிடியில் ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51 நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.

ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களில் விவரம் வருமாறு.

1. எய்ட்ஸ்

2. நெஞ்சுவலி

3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய்

4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு

5. தலை வழுக்கை

6. கண்பார்வை அற்ற நிலை

7. ஆஸ்துமா

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை

9. கண்புரை

10. தலைமுடி வளர, நரையை அகற்ற

11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.

12. பிறவிக் கோளாறுகள்

13. காது கேளாமை

14. நீரிழிவு நோய்

15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்

16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்

17. மூளைக்காய்ச்சல்.

18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண்

21. மரபணு நோய்கள்

22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23. கழுத்து (தைராய்டு) வீக்கம்

24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்

25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்

26. விரை வீக்கம்

27. பைத்தியம்

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.

32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்

34. இரத்தப் புற்றுநேரய்.

35. வெண் குஷ்டம்

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.

37. மூளை வளர்ச்சிக்குறைவு.

38. மாரடைப்பு நோய்

39. குண்டான உடம்பு மெலிய

40. பக்க வாதம்

41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42. மூல நோய் மற்றும் பவுத்திரம்

43. வாலிப சக்தியை மீட்க

44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. குறைந்த வயதில் தலை நரை

46. ரூமாட்டிக் இருதய நோய்

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்

48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்

49. திக்குவாய்

50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.

ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51 வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம் தங்கள் மருந்துகளால் வைத்தியம் அளித்து வருவது குற்றச்செயல் என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும் ஆங்கில மருத்துவத்தால் பகிரங்கமாகவும், ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக் கொண்டும் ஆங்கில மருந்துக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக் கொண்டும் சட்ட விரோத காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலும் (TMC) ஷெட்யூல் - J பற்றி பொதுமக்களுக்கு விளக்காதது ஏன்? இந்தக் குற்றச் செயல்புரியும் மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடம் தவறாக அடையாளம் காட்டிக் கொண்டிருப்பதேன்? போலி மருத்துவத்தை விஞ்ஞானப் பூர்வமானது என்றும் போலி மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்றும் மக்களிடம் முன்னிலைப்படுத்தக் காரணம் என்ன? குற்றச் செயல்களுக்கு இன்றுவரை துணைபோய்க்கொண்டிருக்கக் காரணம் என்ன?

மேற்கண்ட 51 நோய்களுக்கு மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது என்றிருக்க சட்டத்தை பகிரங்கமாகத் தூக்கியெறிந்து விட்டு மருந்துகளைக் கொடுத்து நோயாளிகளின் உயிர்ச்சக்தியை சாகடித்துக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவம், அம்மருத்துவத்தைச் சார்ந்தவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடையே நடமாடவிடும் இந்தத் துரோகச் செயலை மக்களே! அரசுக்கு தெரிவியுங்கள். மருத்துவச் சங்கத்தில் கேட்பதற்கு ஆளில்லை என்ற ஒரே காரணத்தால் தான் இப்படிப்பட்ட கொடூரச் செயல் நடந்துக் கொண்டிருக்கிறது.

மக்களே! இந்திய மருத்துவச் சங்கத்தை ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப் பார்க்கும் டாக்டர்கள் மட்டுமே அடங்கப்பெற்ற குழுவாகப் பாதுகாத்து வருகின்றனர். அம்மருத்துவம் நோய்களைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ லாயக்கற்றது என்று தீர்மானித்து சட்டமாக்கிய பின்பும் அதைப்பற்றி மக்களிடம் மூச்சுக் கூட விடவில்லை.

ஷெட்யூல்-J-சட்டத்தின்படி இன்றுள்ள டயாபிடிஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், கார்டியாக் (இருதய) ஸ்பெஷலிஸ்ட்டுகள், இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான ஸ்பெஷலிஸ்ட்டுகள், மூளை சம்பந்தப்பட்ட ஸ்பெஷலிஸ்ட்டுகள், தைராய்டு ஸ்பெஷலிஸ்ட்டுகள், சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட்டுகள் பைத்தியக்கார ஸ்பெஷலிஸ்ட்டுகள் போன்ற இவர்கள் அனை வரும், இன்னும் அனைத்து ஸ்பெஷலிஸ்ட்டுகளும் போலிகள் என்ற அடைமொழியுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள். மக்களே இது பற்றிய விளக்கத்தை உங்களிடமும், மறைத்து, அரசாங்கத்திடம் மறைத்தது ஏன் என்பதற்கான விளக்கத்தைக் கேளுங்கள்.

TMC இதைப் பற்றி மக்களுக்குச் சொல்லாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நன்மையா? தங்கள் சங்கத்தில் உள்ள மருத்துவர்களுக்கு செய்யும் நன்மையா? தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்குப் பதிலாக அதன் இடத்தில் அகில இந்திய ஹெல்த் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவங்களும் அடங்கப் பெற்ற சுகாதாரக் கவுன்சிலை அமைக்க வேண்டும். அதில் ஆங்கிலேயர்களின் மருத்துவத்தையும், ஒரு அங்கமாக்கி, அம்மருத்துவத்தின் அடாவடித்தனங்களை ஒரு நிலைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

மக்கள் உடல் நலன், சுகாதாரம் போன்றவைகளுக்காக அரசாங்கம் ஆற்றப்போகும் காரியங்கள் அனைத்துக்கும் அது நன்மையாக முடிவதற்கும், தீமையாக முடிவதற்கும், இந்த தார்மீகப் பொறுப்பேற்கும். உரியநடவடிக்கையிலும் இறங்க வேண்டும் என்ற சட்டப்பூர்வமான அதிகாரத்தையும் வழங்கவேண்டும். அல்லது தங்கள் உடல் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் வெகு விரைவில் இழந்துவிடுவார்கள்.

அடென்லால், கால்ஸிகார்ட், ஃப்ரூஸிமைட், இன்னும் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த என்று இருதய சிறப்பு நிபுணர்கள் கொடுக்கும் அனைத்தும் நச்சுக்கள், உயிரைக் குடிப்பவை. இவையனைத்தும் சிறுநீரகங்களை படிப்படியாகச் சாகடிக்கும் நச்சுக்கள். அது மட்டுமல்ல, இருதய இயக்கத்தையே பாழாக்கும். அத்துடன் உடலின் மீதமுள்ள உறுப்புக்களும் கெடும். இரத்த அழுத்தத்திற்கான இருதய ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்பவர்கள் போலிகள் (Indian Drugs and Cosmetics Act, 1940 Schedule-J) சட்டத்தின்படி எழுதும் மாத்திரைகள் ஒவ்வொன்றும் வயிறு, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் என்று ஒவ்வொரு உறுப்பாக சீரழிப்பவை.

போலிகள் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் யார் எனில், ‘எந்த டாக்டர் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்து என்று நோயாளிகளை நம்பவைத்து ஆங்கில மருந்துகளை எழுதிக் கொடுக்கிறாரோ, அந்த மருத்துவரே ஆவார்’ என்பதாகும். சட்டத்தின்படி எந்த மருத்துவரும் அதிக இரத்த அழுத்தம் உட்பட எந்தவிதமான இருதய நோய்க்கும் குணப்படுத்தும் மருந்துகள் இவை அல்லது கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை என்று நோயாளிகளிடம் கூறுவாரேயானால் அவர் ஏமாற்றி தொழில்புரியும் போலி டாக்டராவார்.

ஆனால் ஆங்கில மருத்துவம், சட்டத்தை துச்சமென மதித்து அகம்பாவத்துடன் போலிகளுக்கு ‘இருதய ஸ்பெஷலிஸ்ட்’ என்று அடைமொழியைக் கொடுத்திருக்கிறது. இவர்கள் தொழில் நடத்தும் முறை எப்படி என்பதை வாசகர்களாகிய நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலம், நம் நாட்டு மக்களின் எதிர்காலம் காக்கப்படவேண்டும் என்ற உணர்வோடு இது எழுதப்படுகிறது. உங்கள் ஒவ்வொருவர் ஊரிலும் மருந்து ஆய்வாளர்கள் இருப்பார்கள். இவர்கள் உங்கள் நலனுக்காக விழித்துக் காத்திருந்து வேலை செய்யக் கடமைப்பட்டவர்கள். நோயாளிகளாகிய நம் ஒவ்வொருவர் உயிரும் இவர்கள் கையிலே இருக்கிறது. இவர்களின் வித்தியாசமான, போக்கால்தான் இன்று ஆங்கில மருத்துவம் போலிகளுக்கு ஸ்பெஷலிஸ்ட் பட்டம் கொடுத்து சட்டத்தை மிஞ்சி நடக்கும் அளவுக்கு உங்களிடையே உலாவ விட்டிருக்கிறது.

மருந்து ஆய்வாளர்கள் கடமை என்னவென்றால் “இருதய நோய்கள் முதலாக எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை; குணப்படுத்தும் மருந்துகள் இவை என்று கூறி, மக்களை ஏமாற்றி, நம்ப வைத்து மருந்துச் சீட்டுகளை எழுதிக் கொடுக்கும் ஆங்கில மருத்து வர்களிடம் அவர்களின் சட்டமீறுதலைப் பற்றிக் கடுமையாக எச்சரிக்கவேண்டும். அவர்கள் எழுதும் மருந்துகள் பற்றி அவற்றின் தன்மைகள் பற்றி, பக்கவிளைவுகள் பற்றி முறையாக நேர்காணல் மூலமாக பரீட்சிக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் அவர்களுக்கு அளித்துள்ள ஸ்பெஷலிஸ்ட் பட்டங்களை உடனடியாக நீக்கச் சொல்ல வேண்டும். தங்கள் விசிட்டிங் கார்டுகளிலிருந்தும், போர்டுகளிலிருந்தும் மறைமுகமாக மக்களை ஏமாற்றும் அந்த போலி அடைமொழிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

“உங்கள் உடல் நலன், சமுதாய நலன் காக்கப்பட Drug Inspectors உடனடியாக மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுக்கிறார்களா?” என்று கவனியுங்கள். இன்றிலிருந்து செயல்படத் தவறும் Drug Inspectorகளைத் தட்டியெழுப்பி கவனிக்கச் சொல்லுங்கள்.

Drug Inspectorகளைக் கண்டுபிடிப்பது மிக எளிதான காரியம். உங்கள் வீட்டு அருகாமையிலுள்ள எந்த ஒரு மருந்துக்கடையிலும் அவர்கள் விலாசத்தை முழுமையாகக் கேட்டு அறிந்து கொள்ளலாம். உங்கள் நன்மைக்காக உங்கள் நலன் காக்கும் நண்பர்கள். அவர்களை நீங்கள் தினமும் விழிப்புணர்வுடன் சந்தித்து விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

வாசகர்களே, இந்தப் பட்டியலில் உள்ள நோய்களுக்கு ஸ்பெஷலிஸ்டுகள் என்று கூறும் ஒவ்வொருவரும் போலிகள். காரணம் சிறப்பு மருத்துவர்கள் என்ற அடைமொழி மறைமுகமாக பாமர மக்களை பெரிய அளவில் ஏமாற்றக் கூடிய தாக உள்ளது. மருத்துவமனைகளில் போர்டுகளில் காணப்படும் இந்த அடைமொழிகளை நீக்க சொல்வதில் சமுதாயமே கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நன்றி : ‘மருந்துகளால் வரும் நோய்கள்’
ஹெல்த் டைம் வெளியீடு