பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்...
உணவு உண்ணுதல் குறித்து இன்று பலவிதமான அபிப்பிராயங்கள் இருக்கின்றது. இதில் மேற்த்திய கலாச்சாரம் தொற்றிய பின்உணவு உண்ணும் முறைகள், பயன்படுத்தும் பொருட்கள் என பல மாறுதல்கள் கலாச்சார சீரழிவிற்கும் காரணமாகின்றன.
இதில் பழந்தமிழர்களின் உணவு உண்ணும் முறைகள் சில...
1. அருந்துதல் – மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.இதில் பழந்தமிழர்களின் உணவு உண்ணும் முறைகள் சில...
2. உண்ணல் – பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் –
வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல்
– நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5. தின்றல் –
தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல்
– சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் – நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் –
முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் – நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் –
பெருவேட்கையுடன்
மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் –
கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல்
– பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.
முதலில் பருப்பு மற்றும் நெய் (செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள்), பிறகு குழம்பு (ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும்), பிறகு ரசம் (இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும்), பிறகு மோர் (வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும்)..
வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பின்வரும் இணைவில் காணலாம்.
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment