இந்த தளத்தில் பல்வேறு விதமான தமிழ் சார்ந்த தகவல்கள் மற்றும் தமிழ் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் கவிதைகள் பாடல்கள், விவாதத்திற்குறிய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் தற்போது உடல் ஆரோக்கியத்தை முன் வைத்து அலோபதி மருந்துகள் அல்லாத மாற்று மருத்துவம் குறித்த தகவல்களும், இயற்கை மருத்துவம் குறித்த தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளது. இந்தத் தளம் எப்போதும் உங்களை வரவேற்கும் - இப்படிக்கு த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
Monday, September 30, 2019
Friday, September 20, 2019
நீங்கள் எத்தனை முறை தோற்றாலும் வெட்கப்படாதீர்கள்
நீங்கள் எத்தனை முறை தோற்றாலும் வெட்கப்படாதீர்கள்
காமத்துப்பால்|ஏன் இந்த பாலின வன்கொடுமைகள்
காமத்துப்பால்|ஏன் இந்த பாலின வன்கொடுமைகள்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 20 வினாக்கள் தவறு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் 20 வினாக்கள் தவறு
Monday, September 9, 2019
##TNPSC_தமிழோவியம் என்னும் நூலை எழுதியவர் யார்? | பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்!!
தமிழோவியம் என்னும் நூலை எழுதியவர் யார்? |
பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்!!
💥தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் எவை? - சிங்கப்பு+ர், இலங்கை, மலேசியா
💥எத்தனை எத்தனை, விட்டு விட்டு - இலக்கணக் குறிப்பு தருக. - அடுக்குத் தொடர்
💥காலமும் - இலக்கணக் குறிப்பு தருக. - முற்றும்மை
💥தமிழோவியம் என்னும் நு}லை எழுதியவர் யார்? - ஈரோடு தமிழன்பன்
💥இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்று குறிப்பிடும் நு}ல் எது? - பிங்கல நிகண்டு
💥'முத்திக்கனி" - இலக்கணக் குறிப்பு எழுதுக. - உருவகம்
💥 'நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க" என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்? - சுத்தானந்த பாரதியார்
💥'மூன்றினம்" என்ற சொல்லின் பொருள் யாது? - துறை, தாழிசை, விருத்தம்
💥சிந்து என்ற சொல்லின் பொருள் யாது? - ஒரு வகை இசைப்பாடல்
💥'தௌ;ளமுது" - இலக்கணக் குறிப்பு எழுதுக. - பண்புத் தொகை
💥'நா" - இலக்கணக் குறிப்பு எழுதுக. - ஓரெழுத்து ஒருமொழி
💥இலக்கணக் குறிப்பு எழுதுக. 'செவிகள் உணவான" - நான்காம் வேற்றுமைத் தொகை
💥'சிந்தாமணி" - இலக்கணக் குறிப்பு தருக - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
💥'தூது" என்ற நு}ல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்
##TNPSC_" மோனோலிசா " ஓவியத்தை வரைந்தவர் யார்? | பொது அறிவு வினா விடைகள்
" மோனோலிசா " ஓவியத்தை வரைந்தவர் யார்? |
பொது அறிவு வினா விடைகள்
⭐ புதிய கற்கால மனிதன் எந்த நதிக்கரையில் பயிரிட்டான்? - சிந்து
⭐ தேம்பாவணி எம்மதத்துடன் தொடர்புடையது? - கிறித்தவம்
⭐ இந்தியாவில் ------- யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது? - தெற்கு திசை
⭐ 'இந்திய நெப்போலியன்" என்று அழைக்கப்பட்டவர்? - சமுத்திரகுப்தர்
⭐ ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்? - நுகர்வோர்
⭐ இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு - 1917
⭐ அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிய ஆண்டு? - 1940
⭐ சிப்பாய்க் கலகம் ஏற்பட்ட ஆண்டு எது? - 1857
⭐ பாரசீகர்கள் இந்தியாவிற்குக் கொண்டு வந்தது? - பார்ஸி மதம்
⭐ முதல் பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு எது? - 1526
⭐ 1940 ல் வெளியிடப்பட்ட யாருடைய அறிக்கை, ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்படுகிறது? - லின்லித்தோ
⭐ விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்? - சமுத்திர குப்தர்
⭐ இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு? - 1556
⭐ இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்? - கேரளா
⭐ இந்தியாவின் மிக உயரமான சிகரம்? - காட்வின் ஆஸ்டின்
⭐ கை விளக்கு ஏந்திய காரிகையார் என்று அழைக்கப்பட்டவர்? - பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
⭐ 'மோனோலிசா" ஓவியத்தை வரைந்தவர; யார;? - லியோனார்டோ டாவின்சி
#TNPSC பொது அறிவு - இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்? | பொது அறிவு வினா விடைகள்
பொது அறிவு - இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்?
பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ் மொழி முதன் முதலில் ---------- என்ற வரிவடிவத்தில் எழுதப்பட்டது. - தமிழ் பிராமி
2. இந்திய தொல்லியல் துறை ----------- கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும். - மத்திய அரசின்
3. இந்தியாவில் உள்ள தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பதற்கு, இந்திய கருவு+லம் மற்றும் புதையல் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? - 1878
4. இந்தியாவில் உள்ள தொல்லியல் பொருட்களைப் பாதுகாப்பதற்கு பழங்கால பொருட்கள் மற்றும் கலைக் கருவு+லங்கள் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? - 1972
5. ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் அடங்கிய தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பியு+ட்டிங்கேரியன் அட்டவணை
6. இயற்கை வரலாறு என்ற நு}லை எழுதியவர் யார்? - பிளினி
7. முசிறிஸ் என வழங்கப்பட்ட துறைமுகம் எது? - முசிறி துறைமுகம்
8. அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய வரிவடித்திற்கு ---------- என்று பெயர். - அசோகன் பிராமி
9. சிலப்பதிகாரத்தின் பாட்டுடைத் தலைவியான கண்ணகிக்கு கோயில் எழுப்பியவர் யார்? - சேரன் செங்குட்டுவன்
10. சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? - வேளிர்கள்
11. யவனர்கள், முசிறி துறைமுகத்திற்கு வந்து மிளகை ஏற்றிச் சென்றதை, அகநானுற்றின் எத்தனையாவது பாடல் எடுத்துரைக்கிறது? - அகநானு}று 149
12. மேலை நாடுகளோடும், கீழை நாடுகளோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த பழங்காலத் துறைமுகம்? - பட்டணம் (எர்ணாகுளம் மாவட்டம்)
13. எந்த நு}லில் தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது? - பெரிப்ளஸ்
14. 'பெரும் பத்தன் கல்" என்ற அரிய கல் கண்டெடுக்கப்பட்ட இடம்? - தாய்லாந்து
15. செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகத்தின் பெயர் என்ன? - பெர்னிகே
##TNPSC தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர் யார்? | பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்
தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர் யார்? |
பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள்!!
🦋 முடியரசனுக்கு கவியரசு பட்டம் யாரால் வழங்கப்பட்டது? - குன்றக்குடி அடிகளார்
🦋 1966 ஆம் ஆண்டு முடியரசனின் எந்த காவியத்திற்கு தமிழக அரசு பரிசு வழங்கியது? - பு+ங்கொடி
🦋 முடியரசனின் காலம்? - 07.10.1920 முதல் 03.12.1998
🦋 முடியரசனின் பெற்றோர்? - சுப்பராயலு - சீதாலட்சுமி
🦋 தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறியவர்? - தேவநேயப் பாவணார்
🦋 தேவநேயப் பாவணார் பெற்றோர்? - ஞானமுத்து - பரிபு+ரணம்
🦋 தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர்? - தேவநேயப் பாவணார்
🦋 தேவநேயப் பாவணார், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக எந்த ஆண்டு பணியமர்த்தபட்டார்? - 1974
🦋 தேவநேயப் பாவணார் பெயரில் மாவட்ட மைய நு}லகம் எங்கு செயல்பட்டு வருகிறது? - சென்னை, அண்ணாசாலை
🦋 உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே
உருகும் அடியர் இதய நெகிழ உணர்வில் எழுநல் உதயமே - இப்பாடல் வரிகளின் ஆசிரியர் ? - குமரகுருபரர்
🦋 சகலகலாவல்லி மாலை என்ற நு}லின் ஆசிரியர்? - குமரகுருபரர்
🦋 பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்? - இரண்டு
🦋 திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடம் நிறுவியவர்? - குமரகுருபரர்
🦋 குமரகுருபரரின் காலம்? - பதினேழாம் நு}ற்றாண்டு
🦋 பிள்ளைத்தமிழ் எத்தனை பாடல்களை உடையது? - 100
கில்ஜி வம்சத்தின் சிறந்த மன்னன் யார்? | பொது அறிவு வினா விடைகள்
கில்ஜி வம்சத்தின் சிறந்த மன்னன் யார்? | பொது அறிவு வினா விடைகள்
1. மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு பொருளோ அல்லது கருவியோ எவ்வாறு அழைக்கப்படுகிறது? - செய்பொருள்
2. எது மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது? - அறிவாற்றல்
3. மனிதனின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய்ந்து கொள்ளும் இயல்பு எது? - தொல்மானுடவியல்
4. ஆஸ்ட்ரோலாபித்திஸைன் என்பதன் பொருள் என்ன? - தெற்கத்திய மனிதக் குரங்கு
5. உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் எது? - என்னிகால்டி நன்னா அருங்காட்சியம் (மெசபடோமியாவில் உள்ளது)
6. எக்காலத்தில் கருவிகள் செய்வதற்கு கற்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டது? - கற்காலம்
7. மனிதர்களின் மூதாதையர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? - ஹோமினின்
8. எகிப்து, இஸ்ரேல் - பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ------ வடிவத்தில் உள்ளது. - பிறை நிலப்பகுதி
9. இந்தியாவில் முதல் பழங்கற்காலக் கருவியை பல்லாவரத்தில் கண்டுபிடித்தவர் யார்? - சர் இராபர்ட் புரூஸ் பு+ட்
10. -------- பாறைகள் எரிமலைப்பாறைகள் அல்லது தீப்பாறைகள் ஆகும். - பசால்ட்
11. அதிரம்பாக்கத்தின் கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது? - 1.5 மில்லியன் ஆண்டுகள்
12. புவி சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன் தோன்றியது? - 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது
13. வேளாண்மையில் --------- கருவிகள் பயன்படுத்தப்பட்டன. - இரும்பு
14. முக்கோணவியலைக் கண்டுபிடித்தவர்? - ஹிப்பார்க்ஸ்
15. கில்ஜி வம்சத்தின் சிறந்த மன்னன் யார்? - அலாவுதீன் கில்ஜி
Wednesday, September 4, 2019
உயிர்காக்கும் மருந்து
உயிர்காக்கும் மருந்து
மனிதன் உயிர் வாழ்வதற்காக தன் வாழ்க்கையில் இரண்டுவிதமான போராட்டங்களை சந்திக்கின்றான். ஒன்று தொழில், வருமானம் போன்ற உணவின் தேடலுக்கான போராட்டம்.
இரண்டாவது தன் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் நோய்கள், விபத்துகள் போன்ற அசம்பாவிதங்களை எதிர்கொள்வதற்கான போராட்டம்.
இரண்டாவதாக ஏற்படும் போராட்டமான அவசரநிலைகளில் தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் தவறாக முதல் உதவி வழங்கப்படுவதாலும் பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அல்லது இறக்க நேரிடுகின்றன.
வாகன விபத்துகள், சண்டைகள், தவறி விழுதல், இருதய உபாதைகள், இரசாயன கலவைகளின் உபயோகம், மின்சாரம், நெருப்பு, இயற்கை சீற்றங்கள் போன்ற காரணங்களால் எதிர்பாராத விதமாக திடீரென ஒருவரோ அல்லது பலரோ ஆபத்தான நிலைக்கு ஆளாகின்றார்கள்.
அவர்கள் நமது உறவினர்களாகவோ, நண்பர்களாவோ அல்லது அறியாத ஒருவராகவோ இருக்கலாம். அவர்களுக்கு தகுந்த முதலுதவி அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
பொதுவாக முதலுதவி பயிற்சிகள் Red Cross, St.John Ambulance, போன்ற பல நிறுவகனங்களாள் எல்லா நாடுகளிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால் எல்லோராலும் இதுபோன்ற முதலுதவியை கற்றுக்கொள்வது சாத்திமில்லை.
ஆனால் இப்போது நீங்கள் கற்றுக்கொள்ளப் போகும் முதலுதவிக்கு எந்தக் கல்வித் தகுதியும் தேவையில்லை. தனித்திறமையும் தேவையில்லை.
மூன்று வயது சிறுவர் முதல், முதியவர்கள் வரை எவரும் இலகுவாக சிகிச்சை அளிக்கலாம். அது எப்படி என கட்டுரையின் முடிவில் பார்க்கலாம்.
நமது கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களும், நிலம், நீர், நெருப்பு, மரம், வெளி மண்டலம் ஆகிய ஐந்து இயற்கை மூலப்பொருள்களுடன் தொடர்புகொண்டுள்ளது.
கண்களால் காணக்கூடிய அதிர்ச்சிகள், காதால் கேட்கக்கூடிய அதிர்ச்சிகள், தோல், மூக்கு, நாக்கு, ஆகியவற்றால் உணரக்கூடிய அதிர்ச்சிகள் யாவும் மனிதனை எந்த சந்தர்ப்பத்திலும் நிதானத்தை இழக்கச் செய்கின்றன.
பஞ்சபூத தன்மைகளில் ஒன்றாகிய மரம் என்பதை நமது உடல் உறுப்புகளான கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் தொடர்பு படுத்தி ஒரு உவமையாகக் சீன மருத்துவம் குறிப்பிடுகிறது.
காரணம் மரத்தின் உறுதித் தன்மையைப் பற்றி நாம் நன்கு அறிவோம். ஒரு மரம் உறுதியாக இருக்க வேண்டுமென்றால் அதன் வேர்ப்பகுதி பூமியில் ஊடுருவி நன்றாகப் பதிந்து இருக்க வேண்டும். அப்போதுதான் புயல், மழை, சூறாவளிக் காற்றுப் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்க்கொண்டு மண்ணில் சரியாமல் உறுதியுடன் நிற்கும்.
அதுபோல யாருக்கெல்லாம் கல்லீரலும், பித்தப்பையும் உறுதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கின்றதோ அவர்களை எந்த இக்கட்டான சூழ்நிலையும் பாதிக்காது.
ஒரு அதிர்ச்சியோ, பயமோ, கவலையோ அவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது.
மன உறுதியுடன் இருப்பார்கள்.
உதாரணமாக ஒரு
வாகன விபத்து, தீக்காயம் திகில் போன்ற நிலைகளில் மனம் பதட்டமடைதல் இயற்கையே. அந்தமாதிரி சூழ்நிலைகளில் என்ன செய்வதென்று தெரியாமல் நமது மனம் குழப்பமடைந்து இருக்கும்.
அப்போது மன உறுதி உடையவர்கள் சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பி, சூழ்நிலைக்கு தக்கவாறு என்ன செய்யவேண்டும் என முடிவெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் மன பலவீனம் உடையவர்களால் அவ்வாறு சிந்திக்க முடியாது. அதனால் தான் சீன அக்குபங்சர் மருத்துவம் மரத்துக்கும் மனதுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது.
மரத்துக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பை பார்த்தோம். மேலும் இக்கட்டான சூழ்நிலைகளில் மனம் எவ்வாறு பாதிப்படைகிறது என்பதையும் பார்த்தோம்.
அவ்வாறு இக்கட்டான சூழ்நிலைகளில் ஏற்படும் இழப்புகளையும், ஆபத்தான நிலைகளையும் கையாண்டு சரிசெய்ய பஞ்சபூதங்களில் ஒன்றான மரமே அந்தற்குண்டான மருந்தை வழங்குகிறது.
இயற்கையின் மரம் என்கிற மூலப்பொருள் மூலம் பெறப்படும் மருந்துகள்தான் நமக்கு நிவாரணத்தை அளிக்கிறது.
இம்மருந்துகள் பலதரப்பட்ட நிலைகளில் பக்கவிளைவுகள் இன்றி மென்மையாக, ஆனால் உறுதியாக நிவாரணமளிக்கின்றது.
இம்மருந்தை உபயோகிப்பதும் பாதுகாப்பதும் நம்முடன் எடுத்துச் செல்வதும் மிகவும் எளிமையானது,
எல்லாவித மருத்துவ முறைகளுடனும் இதை உபயோகப்படுத்தலாம்.
இம் மருந்தை பயன்படுத்துபவர்களுக்கு எலும்பு முறிவு, பலத்த வெளிக்காயம், நீண்ட தையல் போடும் தேவை, ICU வில் தான் சேர்க்க வேண்டும் என்கிற நிலைமை போன்ற தருணங்களைத் தவிர மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
இனிமேல் உங்கள் முதலுதவி சிகிச்சைக்கான பெட்டியில் ஸ்பிரிட், தையல் ஊசி, ஆயிண்ட்மென்டுகள், மருந்து பவுடர்கள், காடாதுணி போன்ற எதையும் வைத்திருக்கம் தேவைகள் ஏற்படாது. இந்த மருந்து ஒன்று இருந்தாலே போதுமானது.
உங்கள் பாக்கெட்டில் பணமில்லா விட்டாலும் பரவாயில்லை. அவசியம் இந்த மருந்து இருக்கவேண்டும். எல்லாவித ஆபத்தான நேரங்களிலும் பயன்படும் முக்கிய மருந்தாகும்.
அந்த உயிர்காக்கும் மருந்து எது? அதை எவ்வாறு உபயோகப்படுத்துவது. எந்தெந்த தருணங்களில் அந்த மருந்து வேலைச் செய்யும், மருத்துவம் தெரியாதவர்களும் அதை எவ்வாறு உபயோகிப்பது போன்ற அனைத்து விளக்க முறைகளையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம். நன்றி.
Subscribe to:
Posts (Atom)