Monday, December 31, 2018

நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான செய்தி

நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான செய்தி


1.இணைந்திருங்கள்.
2.இசைந்திருங்கள்
3.அங்கீகரியங்கள்
4.ஏற்றுக்கொள்ளுங்கள்
5.பாராட்டுங்கள்.
6வாழ்த்துங்கள்
7.நன்றி கூறுங்கள்.

மகிழ்ந்திருங்கள்.
...............................

எனக்குக் கிடைத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥

இன்று ஒரு பெரிய நபரோடு பேசிக் கொண்டிருந்தேன்.அவர் சொன்னார் கேரளாவில் ஒரு இடம் இருக்கிறது. அது ஒரு டீ எஸ்டேட்.

அங்கு செல்போன் வேலை செய்யாது. நாம் அங்கே போய்விட்டால் வெளி உலகை விட்டு முற்றிலும் துண்டிக்க படுவோம். 

இங்கே இருக்கும் டென்ஷன் எல்லாம் குறைக்க அங்கே போய் ஒரு மூன்று நாள் இருக்கலாம் போல இருக்கிறது. வெளி உலக தொடர்பே அற்று நிம்மதியாக இருக்கலாம் என்றார்.

நான் சொன்னேன்  எனக்கு இது சரிப்பட்டு வராது. இதை நான் விரும்புவதும் இல்லை என்றேன்.

அதன்  காரணத்தை சொல்கிறேன்..

நம்மை சுற்றி இருப்பவர்கள் யார்? யார்?.... 
முதலில் மனைவி.
பிறகு பிள்ளகைள் 
அடுத்து உறவுகள்.
பின் நண்பர்கள்.
பின்பு வேலையின் நிமித்தம் தொடர்பில் உள்ளவர்கள்.
அதன் பின் முற்றிலும் தெரியாதவர்கள் அதாவது கடைவீதியில் நடப்பவர்கள் போல அறிமுகம் இல்லாதவர்கள்..

இந்த உறவுகள் அற்புதமானவை.. மனைவி என்ற ஒருத்தியோடு பேசிக் கொண்டே இருங்கள்.
இல்லாவிட்டால் எதாவது சண்டையாவது போடுங்கள். பின்பு சமாதனம் ஆகி உறவாடுங்கள்.

எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும்...
ஒருவேளை அவள் முந்தி மரணமடைந்தால்,  அப்போது தெரியும் பிரிவு என்றால் என்னவென்று...
ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை.  வீணாக்க  வேண்டாம். அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்.

அடுத்து பிள்ளைகள்
பள்ளி படிப்பு முடியும் வரைதான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள். 
அதன் பின் அவர்கள் உலகம் வேறு அதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கவே மாட்டீர்கள். அப்போது நீங்கள் அவர்களோடு தொலைபேசி மூலமாக  பேச கூடநேரம் பார்க்க வேண்டும்.

இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள்.
வெளி நாட்டில் தனது சின்ன குழந்தைகளை  பிரிந்து பணி செய்யும் தகப்பன்மார்களுக்கு இந்த வேதனை புரியும்.
இப்படி இல்லாமல் உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம்.ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம். சும்மா அவர்களை பார்த்துக் கொண்டாவது இருங்கள்.

அடுத்து உறவுகளும், உடன் பணி செய்யும் தோழர்களும்..

இதை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள்    அடுத்த மாநிலத்திலோ   அல்லது வேறு நாட்டிலோ நீங்கள் இருந்தால்
இது புரியும்..

வட நாட்டில் இருந்தால் அங்கு உள்ள சர்மாவும், பாண்டேயும், தூபேயும், நம்மோடு நட்பாக இருப்பார்கள்.ஆனால் தோள் மேல் கைபோட்டு "வாடா மாப்பிளே" என்று கூற முடியாது.ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கும்....

எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே .....
வாழ்கையை ருசியுங்கள்....
அனுபவியுங்கள்.
காலமே ஒரு நாள் நம்மை தனிமை படுத்த போகிறது.
அன்று யாரும் நம்மை வந்து பார்க்க போவது இல்லை.
நாம் நினைத்தால் கூட வெளியே போக முடியாது..

தனிமையே நம்மை கொல்லப் போகிறது.

அதுவரை கடவுள் நமக்கு தந்த சினேகங்களோடு பேசுவோம் ,சண்டையிடுவோம். கொஞ்சி குலாவுவோம். எதாவது செய்வோம்.. 
ஆனால் தனிமை வேண்டாம்..
அது மோசமானது. தற்கொலைக்கு சமமானது.

காலங்கள் திரும்ப கிடைக்காது .

பொன்னான வாழ்க்கையை ரசித்து அனுபவியுங்கள்!

###ஒளவையார் பாடல் இடப்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன? TNPSC 6th TAMIL-பொதுத்தமிழ்

ஒளவையார் பாடல் இடப்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?

6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்

பொதுத்தமிழ்


1. ′வைக்கம் வீரர்′ என்று அழைக்கப்பட்டவர் .................. - பெரியார்

2. பெண்கள் ............., .................. முதலிய விளையாட்டுகளைக் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் எனப் பெரியார் கூறினார். - மற்போர், குத்துச்சண்டை

3. ஒளவையார் பாடலில் ′அவல்′ என்பதன் பொருள் என்ன? - பள்ளம்

4. ஒளவையார் பாடல் இடப்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன? - புறநானூறு

5. மூன்று சுட்டெழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாத சுட்டெழுத்து எது? - உ


6. சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது? - ஏ

7. அழைத்தால் நீதி தேவதை வரும் என்பது நம்பிக்கையா? உண்மையா? - உண்மை

8. முத்துராமலிங்கர் பிறந்த ஊர் எது? - இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன்

9. பு+மிப்பந்து என்ன விலை? - உன் புகழைத் தந்து வாங்கும் விலை

10. பொருத்துக.
அ) ஒளவையார் - 1) தேசியம் காத்த செம்மல்
ஆ) தாராபாரதி - 2) புறநானு}று
இ) முத்துராமலிங்கர் - 3) திண்னையை இடித்துத் தெருவாக்கு

Ans: 2 3 1

11. கடலில் எதுவாக இருத்தல் வேண்டும் என்று தாராபாரதி கூறுகிறார்? - முத்து

12. நடுவண் அரசு முத்துராமலிங்கருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு - 1995

13. நீதி தேவதையால் தண்டிக்கப்பட்டவர்? - ஊர் தலைவர்

14. நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் யார்? - தாராபாரதி

15. சுபாஷ் சந்திரபோஸ் வருகை தந்த ஊர் எது? - மதுரை

###TNPSC CURRENT AFFAIRS-2018 முக்கிய நடப்பு நிகழ்வுகள்-2018

தற்காப்புக் கலையில் 9 கின்னஸ் சாதனை..!!

###TNPSC CURRENT AFFAIRS-2018
முக்கிய நடப்பு நிகழ்வுகள்-2018 !!



🍀 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான, பதிவுகள் மேற்கொள்ளும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

🍀 மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (HEMRC), வெடிபொருள் கண்டறிதல் மீதான, தேசிய அளவிலான முதல் பயிலரங்கமானது (NWED-2018) நடத்தப்பட்டது.

🍀 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் பாகிஸ்தானுக்கு மீண்டும், நேரடி விமான சேவையை தொடங்க உள்ளது.

🍀 இந்தியாவை உருமாற்றுகின்ற பெண் விருதுகளின் மூன்றாவது பதிப்பானது, இந்திய அரசாங்கத்தின் சிந்தனையாளர் நிறுவனமான, நிதி ஆயோக்கினால் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான இந்த விருதின் கருத்துருவானது, 'பெண்கள் மற்றும் தொழில்முனைவு" என்பதாகும்.

🍀 பிரெஞ்சு நைட் ஆப் தி நேஷனல் ஆர்பர் ஆப் மெரிட் என்ற விருதானது, சினிமாத் தயாரிப்பாளர் அசோக் அமிர்த ராஜ்க்கு வழங்கப்பட்டது.

🍀 மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற இளைஞர், தற்காப்புக் கலையில் 9 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார்.

🍀 சி.பி.ஐ. தற்காலிக இயக்குனர் நாகேஸ்வர ராவ், கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 இந்திய ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக, முன்னாள் பொருளாதார விவகார செயலாளர் 'சக்தி காந்த தாஸ்" நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் கவர்னராக இருந்த 'உர்ஜித் பட்டேல்" ராஜினாமா செய்துள்ளதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூஇஎஃப்) வெளியிட்ட, பாலின விகிதாசார பட்டியலில், இந்தியா 108-ஆவது இடத்தை தொடர்ந்து, தக்க வைத்துக் கொண்டது. இதில் ஐஸ்லாந்து தொடர்ந்து 10-ஆவது முறையாக முதலிடத்தில் உள்ளது.

🍀 தகவல் உரிமை சட்ட அமலாக்கத்தில், புதுவை மத்திய பல்கலைக்கழகம் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக, மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.

🍀 கேரள மாநிலத்தில் நடந்த எழுத்தறிவுத் தேர்வில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முதாத் ரேவதி என்ற பெண் தொழிலாளி, 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்துள்ளார்.

🍀 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ஆம் தேதி, சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம் கடைபிடிக்கப்படுகிறதது.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...

Sunday, December 30, 2018

###TNPSC_TAMIL_6th SECOND TERM||6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் பொதுத்தமிழ்

###TNPSC_TAMIL_6th SECOND TERM
உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என நேரு குறிப்பிடுவது எதனை?


6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ்


1. நேரு படித்த பல்கலைக்கழத்தின் பெயர் என்ன? - கேம்பிரிட்ஜ்

2. இந்திராகாந்திக்கு நேரு எங்கிருந்து கடிதம் எழுதினார்? - அல்மோரா சிறை

3. இந்திராகாந்தி படித்த பல்கலைக்கழகம் எது? அஃது எங்குள்ளது? - தாகூரின் விசுவபாரதி கல்லூரி, மேற்கு வங்காளம்

4. நேரு விரும்பிப் படித்த நு}ல்கள் எந்த மொழியில் இருந்தன? - ஆங்கிலம்

5. நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்? - நூல்கள்!


6. உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என நேரு குறிப்பிடுவது எதனை? - ′போரும் அமைதியும்′

7. சாகுந்தலம் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? - காளிதாசர்

8. கடம் என்ற சொல்லின் பொருள் என்ன? - உடம்பு

9. பெரியார் தோற்றுவித்த இயக்கத்தின் பெயர் என்ன? - சுயமரியாதை இயக்கம்

10. கேரளத்தில் நடந்த போரட்டத்தில் பெரியாருக்குக் கிடைத்த சிறப்புப் பட்டம் என்ன? - வைக்கம் வீரர்

11. கல்லெறிந்து துன்புறுத்தக் கூடாதது எது? - பறவைகள்

12. கையில் எடுத்து விளையாடக் கூடாதது எது? - பாம்புகள்

13. எவற்றைத் தம்மிரு கண்ணாகப் பெரியார் கருதுகிறார்? - மரியாதையையும் - சுயமரியாதையையும்

14. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியைக் கடவுளாக வழிப்பட்டவர் ........... - கடுவெளிச் சித்தர்

15. தங்க மாம்பழம் பெற்ற துறவியின் எண்ணிக்கை ............. - நூற்றெட்டு 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலை

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலை



என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு 150 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:- பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் சுருக்கமாக பி.எஸ்.என்.எல். என அழைக்கப்படுகிறது.

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான இதில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி (டெலிகாம் ஆபரேசன் ) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 76 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 11 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-8-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

. ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. முதுநிலை படித்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிாிவினர் ரூ.220-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.110-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது. வருகிற ஜனவரி 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு முறைகள் மார்ச் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsnl.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

BSNL Official Website Career PageClick Here
BSNL Official Notification PDFClick Here
BSNL Online Application Form

###TNPSC CURRENT AFFAIRS-2018| முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 2018


முதல் முறையாக கலப்பு எரிபொருளில் விமானம் இயக்கி சாதனை.


###TNPSC CURRENT AFFAIRS-2018|
முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 2018



🍀 ரூ.1,264 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

🍀 செல்போன் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில், செல்போன் விளையாட்டுகளில் நாள்தோறும் இந்தியர்கள், சராசரியாக ஒரு மணி நேரம் செலவிடுவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

🍀 பிகார் மாநிலம் பாட்னாவில், கங்கை நதியின் குறுக்கே உள்ள மகாத்மா காந்தி சேது பாலத்திற்கு இணையாக, ரூ.2,926 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியது.

🍀 நாட்டில் தற்போது பதவியில் இருக்கும் ஒரே பெண் முதல்வர் என்ற பெருமை திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கிடைத்துள்ளது.

🍀 வருமானத்தில், 10 சதவீத தொகையை, மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியர்கள் செலவிடுவதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


🍀 இந்திய அணி கேப்டன் விராட் கோலியை, இதுவரை 7 முறை அவுட்டாக்கி சாதனை படைத்துள்ளார் நாதன் லயன்.

🍀 கலப்பு எரிபொருளில் விமானப்படை விமானத்தை, முதல் முறையாக இயக்கி, இந்தியா சாதனை படைத்துள்ளது.

🍀 புது டெல்லியில், மத்திய நீர்வள அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்படும் ′நீர் மேலாண்மையில் திறமை மிக்க அலகு′ என்ற சிறப்பு விருதானது, புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்கு வழங்கப்பட்டது.

🍀 தரவு மேலாண்மை மற்றும் தொலை தொடர்பு இணைப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்தியாவானது 'இந்திய தரவு ரிலே சேட்டிலைட் சிஸ்டம்" (ஐனுசுளுளு - ஐனெயைn னுயவய சுநடயல ளுயவநடடவைந ளுலளவநஅ) என்னும், விண்வெளிப் பயணத் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற www.kavimalaravan.blogspot.com
கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB

சூதகத் தடைகர்ப்ப கோளாறுகள்

சூதகத் தடைகர்ப்ப கோளாறுகள் 


குழந்தை பாக்கியமின்மை சரிபடுத்த மருத்துவம் கல்யாண முருங்கை பூ அசோகபட்டை அத்திப்பட்டை மலை வேப்பிளை ஆலம் விதை அரசம் விதை லோத் திர பட்டை ஆடுதீன் டாபாளை வேர் வெள்ளருகு கழற்ச்சிக்காய் சிறு கண் பீளை இவைகளை சம அளவு எடுத்து சூரணம் செய்து 5 கிராம் அளவு தேன் அல்லது பாலில் சாப்பிட்டு வர சூதகத் தடை, மலட்டு தன்மை நீர் கட்டி சரியாகிகரு தரிக்கும் காலை ஒரு வேலை மட்டும் 48 தினம் மருந்து சாப்பிடவும்.

இங்கனம்....
த. சிங்காரவேல் என்கிற கமலரவன்

நன்றி:
மரு.ரமேஷ்சிவன் 9043 199315 கும்மிடிப் பூண்டி

###அல்சர் #குடல்_புண் தீர மருத்துவம்

அல்சர் குடல் புண் தீர மருத்துவம



 அம்மான்பச்சரிசி இலை மனதக்காளி இலை காய்பொன்னாங்கன்னி இலை இந்த மூன்றையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி சூரணம் செய்து எடுக்கவும்.
 காலை இரவு ஒரு ஸ்பூன் வென்னீரில் கலந்து சாப்பிடவும் திரிபலா சூரணம் மாசிக்காய் சூரணம் மாதுளம் பழம் தோல் மாதுளம் பூமங்குஸ்தான் பழஓடு அத்திபழம் உலர்ந்தது இவைகளை வகைக்கு 50 கிராம் எடுத்து சூரணம் செய்து அதில் சங்கு பற்பம் 10 கிராம் பவள பற்பம் 10 கிராம் சிலாசத்து பற்பம் 5 கிராம் கலந்து காலை இரவு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடவும் மது மாமிசம் கார உணவு நீக்கி மருந்து சாப்பிடவும்.



நன்றி:

 மருரமேஷ் சிவன் 904 31993 15 கும்மிடிப்பூண்டி

நமது #தகடூர் #தீர்தமலை ரகசியங்கள் NEWS -7 ன் உளவுப்பார்வை

நமது தகடூர் தீர்தமலை ரகசியங்கள்
NEWS -7 ன் உளவுப்பார்வை



###TNPSC CURRENT AFFAIRS-2018|இந்திய அரசியல் ஒரு பார்வை - 2018


2018 அரசியலில் நடந்த மாற்றங்கள்... மாற்றத்தை தருமா?

###TNPSC CURRENT AFFAIRS-2018|இந்திய அரசியல் ஒரு பார்வை - 2018


ஆர்ப்பாட்டங்கள் இருந்தால்தான் அது அரசியல். நாம் என்னதான் வேலையில் பரபரப்பாக சுழன்று கொண்டிருந்தாலும் அரசியல் பற்றிய செய்திகளையோ, விவாதங்களையோ படிக்கவோ, பார்க்கவோ விரும்புவோம்.

இந்த 2018ல் அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன? வாங்க தெரிந்து கொள்வோம்.

மக்கள் நீதி மய்யம்

பிப்ரவரி 21, 2018ல் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் தம் கட்சிப் பெயர் மற்றும் கொடியை ஏற்றி வைத்தார். இந்தப் பொதுக்கூட்டத்தில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

டி.டி.வி.தினகரன் 

மார்ச் 15ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., டி.டி.வி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

கர்நாடகம்

மே 17, 2018 அன்று கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சு+ழ்நிலையில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை சேர்ந்த எடியு+ரப்பா முதல்வராக பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் எடியு+ரப்பா தனது பதவியை சட்டசபையில் ராஜினாமா செய்தார். இதனால் மே 21, 2018 அன்று குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

பிரதமர் வாஜ்பாய் மறைவு

ஆகஸ்ட் 16ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அப்போது வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

மு.கருணாநிதி

ஆகஸ்ட் 07, 2018-ல் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் காலமானார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்த பேரறிஞர் இவர்.திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆகஸ்ட் 28ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின் அவரின் மகனான மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக பதவியேற்றார்.

18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு

அக்டோபர் 25, 2018 அன்று அ.தி.மு.க-வில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின், தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி எம்.சத்தியநாராயணன் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சரிதான் என உத்தரவு பிறப்பித்தார்.

2018-ல் அரசியலில் நடந்த அதிரடி மாற்றங்களை நாளை பார்க்கலாம்..!!

Saturday, December 29, 2018

###TNPSC CURRENT AFFAIRS - 2018 | 2018... தமிழக மாவட்டங்கள் ஒரு பார்வை..!!

###TNPSC CURRENT AFFAIRS - 2018

2018... தமிழக மாவட்டங்கள் ஒரு பார்வை..!!

தமிழகத்தில் மிகப்பெரிய துயரம் இதுவாகத்தான் இருக்கும்..!!


கரூர்

புதுடெல்லியில், மத்திய நீர்வள அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்படும் 'நீர் மேலாண்மையில் திறம்மிக்க அலகு" என்ற சிறப்பு விருதானது கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்கு வழங்கப்பட்டது.

நாமக்கல்

ஜூன் 21, 2018 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (வயது20) சர்வதேச யோகா போட்டியில் பலமுறை தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இவர், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேஷனல் யோகா பெடரேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பின், தமிழக கிளை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உலக சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாடு செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வண்ணத்துப்பு+ச்சிகள் கணக்கெடுப்பில் 198 வகை வண்ணத்துப்பு+ச்சி இருப்பது அக்டோபர் 16, 2018-ல் பதிவு செய்யப்பட்டது.

திருப்பூர்

ஆகஸ்ட் 15, 2018 அன்று சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் 2018ம் ஆண்டின் சிறந்த மாநகராட்சியாக திருப்பு+ர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.

திண்டுக்கல்

மார்ச் 20, 2018 அன்று பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லு}ரி மாணவர்கள் கொசுக்களை விரட்டும் ஆடை மற்றும் ஆளில்லாமல் இயங்கும் 'ரோபோ கிரேன்" தயாரித்துள்ளனர். மெக்கானிக்கல் துறை சார்பில், விவசாயத்திற்கு பயன்படும் வகையில் ஒருசக்கர, மூன்றுசக்கர நீர்தௌpப்பான்கள், செயின் இல்லாமல் ஓடும் சைக்கிள் தயாரித்துள்ளனர்.

மதுரை

பிப்ரவரி 18, 2018 அன்று உலக சாதனை முயற்சியாக மதுரை அமெரிக்கன் கல்லு}ரியில் 18 நிமிட பாடலுக்கு 699 கலைஞர்கள் பங்கேற்ற ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. கலாகேந்திரா கலை பண்பாட்டு மையம் சார்பில் 'ஹைரேஞ்ச் புக் ஆப் ரிக்கார்டு" முயற்சியாக 6 முதல் 60 வயது வரை உள்ள கலைஞர்கள் பங்கேற்றனர்.

டிசம்பர் 18, 2018 அன்று மதுரை தோப்பு+ரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

மதுரை சர்வதேச விமான நிலையத்தில் வருகையின் போதான மின்னணு நுழைவு இசைவு வசதி (ஏளைய-விசா) அக்டோபர் 18, 2018 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வசதியை பெறும் தமிழ்நாட்டின் நான்காவது மற்றும் ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் 26வது விமான நிலையம் இதுவாகும்.

சிவகங்கை

திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக சிவகங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் அகழாய்வில் பழங்கால அடுப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தேனி

2018ஆம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் 8வது சிறந்த காவல் நிலையமாக தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் டிசம்பர் 21, 2018 அன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

மே 22, 2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முற்றுகை போராட்டத்தின் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சு+ட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது 2018ன் மிகப்பெரிய துயரமாகும்.

நெல்லை

தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் மாணவர் சேர்க்கை இன்றி அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட அரசு தொடக்கப்பள்ளியை வாட்ஸ்அப் குரூப் மூலம் இளைஞர்கள் மீட்டெடுத்த நிகழ்வு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நிகழ்ந்தது.



###TNPSC CURRENT AFFAIRS -2018 இன்றைய முக்கியச் ?செய்திகள் - டிசம்பர் 27

ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்யக்கூடாது : அரசு உத்தரவு..!


###TNPSC CURRENT AFFAIRS -2018
இன்றைய முக்கியச் ?செய்திகள் - டிசம்பர் 27


உலகச் செய்திகள்

இந்தியாவில் உள்ள நேபாள மக்கள், இந்தியில் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய தடை விதித்து நேபாள அரசு நேற்று திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேபாள நாட்டின் நடப்புக் கணக்குப்பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதால், அதை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மாநிலச் செய்திகள்
ஸ்ரீ
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலபு+ஜை நிறைவடைவதையொட்டி, இன்று இரவு நடை மூடப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜகவில் 17 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்களை கட்சித் தலைவர் அமித்ஷா நியமித்துள்ளார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டும், பரப்புரை உத்திகளை செயல்படுத்துவதற்கும் இந்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சனை தொடர்பாக, தமிழக, கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முத்தலாக் எனப்படும் உடனடி விவாகரத்து மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாது நாடாளுமன்றம் வரவேண்டும் என அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு தனி உயர்நீதிமன்றம் அமைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

உடல் பருமன் குறித்து பள்ளிகளில் பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்ய மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.

புயல், வெள்ளம், நிலநடுக்கம், தீவிபத்து போன்ற அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பாக சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ் முதல் தாள் மார்ச் 14-ம் தேதி பிற்பகலிலும், தமிழ் இரண்டாம் தாள் 18-ம் தேதி பிற்பகலிலும், ஆங்கிலம் முதல் தாள் 20-ம் தேதி பிற்பகலிலும், ஆங்கிலம் இரண்டாம் தாள் 22-ம் தேதி பிற்பகலில் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிற பாடங்களான, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் முறையே 23,25,27,29 ஆகிய நாட்களில் முற்பகலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செய்திகள்.
..
சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு வாகனங்கள் வந்து செல்ல தனித்தனி வழிகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17வது சதம் இதுவாகும்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டாஸ் போட்டு தொடக்கி வைத்தார்.

செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான் அணி.


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

#Spoken_English தொலைபேசி உரையாடல்கள்| #Telephone vocabulary and phrases

#Spoken_English

தொலைபேசி உரையாடல்கள்|

#Telephone vocabulary and phrases



1. May I speak to...? (நான் இவரிடம் பேசலாமா...?)
2. I am calling on behalf of...(நான் இந்த நிறுவனத்தின் சார்பாக அழைக்கிறேன்..)
3. How may I help you?  (நான் உங் (களுக்கு எப்படி உதவ?)
4. Where are you calling from? (நீங்கள் எங்கிருந்து அழைக்கிறீர்கள்?)
5. I'd like to speak to... (நான் இவரிடம் பேச விரும்புகிறேன்...)
6. I'm afraid you've got the wrong number. (நீங்கள் தவறான எண்ணிற்கு அழைத்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.)
7. Your voice is cracking. (உங்கள் குரல் சரியாகக் கேட்கவில்லை)
8. I can't hear you too well. (நீங்கள் பேசுவதை நான் சரியாக கேட்க முடியவில்லை)
9. Could you please repeat what you just said? (நீங்கள் தற்போது சொன்னதை திரும்ப சொல்ல முடியுமா?)
10. I'm afraid I can't hear you. (நீங்கள் சொல்வது கேட்காது என நினைக்கிறேன்)
11. Would you like to leave a message? (ஏதாவது செய்தி கொடுக்க விரும்புகிறீர்களா?)

Holding the line:

1. Just a moment, please. (ஒரு நிமிடம், தயவுசெய்து)
2. Please hold on (ஒரு நிமிடம் பொறுங்கள்)
3. Hang on (காத்திருங்கள்)




நன்றி: நிவேதிதா MA ஆங்கிலம் 

#அரசு வேலை அறிவிப்பு:- #எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் - ECIL


#அரசு வேலை அறிவிப்பு:- #எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் - ECIL


✔ எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL), அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 05.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
✔மொத்த காலிப்பணியிடங்கள்:   2100.
✔நிறுவனம்   :   எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL).
✔பணியிட விவரங்கள் : இளநிலை தொழில்நுட்ப அதிகாரி (Junior Technical Officer) – 1470
2. இளநிலை ஆலோசகர் (Junior Consultant) - 630.
✔ ஊதியம் விவரம்  :   .16,042 to 19,188
✔கல்வித்தகுதி  :  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தபட்ட பட்டப் படிப்பு(60%) முடித்திருக்க வேண்டும்.
✔ விண்ணப்பிக்கும் முறை  :  ஆன்லைன்.
✔வயது வரம்பு  :  அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
✔விண்ணப்பிக்க கடைசி தேதி  :  05.01.2019.
✔ ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!
✔ அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!
✔ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

Friday, December 28, 2018

###தர்மபுரி | தகடூர் தென்கரைக்கோட்டை மீட்கப்படுமா???


தர்மபுரி | தகடூர் தென்கரைக்கோட்டை மீட்கப்படுமா???



இன்றைய முக்கியச் செய்திகள்


டிசம்பர் 28


உலகச் செய்திகள்

இந்தியாவின் அதிவேக ரயிலான டிரெய்ன்-18 வரும் ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்க இருக்கிறார். 

மாநிலச் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள் ! 👉 


ஆந்திர மாநிலம் அமராவதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான பணிகளுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பு+மி பு+ஜை செய்து வைத்தார்.

5 மணி நேர கடுமையான விவாதத்திற்குப் பின் முத்தலாக் தடை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிதி ஆயோக்" அமைப்பு, பின் தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தின் விருதுநகர், தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், 20வது இடத்தில் உள்ளது.

தமிழகப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு காலை 10 மணியளவில் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு பொதுத்தேர்வின் போது மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களைத் தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு நேரம் காலை 10 மணியளவில் துவங்கி பிற்பகல் 12.45 மணியளவில் முடிவடையும் என தமிழகப் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ள+ர் வர்த்தகர்கள் புகார் அளித்ததையொட்டி மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 

மாவட்டச் செய்திகள்

வரும் பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டியையொட்டி வெளியயூர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 11,12,13,14 ஆகிய நான்கு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அவர் கூறினார். இதில் சென்னையில் இருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்படும் என்ற அவர், மொத்தமாக 24,708 பேருந்துகள் இயக்கப்படும் என்றார். 
விளையாட்டுச் செய்திகள் 
ஸ்டீவ் ஸ்மித் வங்காள தேச பிரிமீயர் லீக் தொடரில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை வங்காள தேச கிரிக்கெட் போர்டு திரும்பப் பெற்றுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பும்ராவின் வேகப்பந்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 151 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

வெளிநாட்டு மண்ணில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. ராகுல் டிராவிட் கடந்த 2002ஆம் ஆண்டில் வெளிநாட்டு மண்ணில் 1137 ரன்கள் குவித்திருந்தார். தற்போது கோலி 1138 ரன்கள் சேர்த்து டிராவிட் சாதனையை முறியடித்துள்ளார்.

2019ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு - 12ம் வகுப்பு பொது தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு


2019ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு - 12ம் வகுப்பு பொது தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு !!



10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

10ஆம் தேர்வுகள் மார்ச் 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 தேர்வு மார்ச் 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. அவற்றுக்கான கால அட்டவணை :

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை :


தேதிபாடம்நேரம்
மார்ச் 14-ந்தேதி (வியாழக்கிழமை)தமிழ் முதல் தாள்பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை
18-ந்தேதி (திங்கட்கிழமை)தமிழ் இரண்டாம் தாள்பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை
20-ந்தேதி (புதன்கிழமை)ஆங்கிலம் முதல் தாள்பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை
22-ந்தேதி (வெள்ளிக்கிழமை)ஆங்கிலம் இரண்டாம் தாள்பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை
23-ந்தேதி (சனிக்கிழமை) விருப்ப மொழிப்பாடம்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
25-ந்தேதி (திங்கட்கிழமை)கணிதம்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
27-ந்தேதி (புதன்கிழமை)அறிவியல்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
29-ந்தேதி (வெள்ளிக்கிழமை)சமூக அறிவியல்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை :

புதிய பாடத்திட்டத்தின்படி வழக்கமாக தேர்வு எழுதுபவர்களுக்கு காலஅட்டவணை வருமாறு :

(அடைப்புக்குறிக்குள் கடந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தின்படி படித்து தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான காலஅட்டவணை)

தேதிபுதிய பாடம்பழைய பாடம்நேரம்
மார்ச் 06 (புதன்கிழமை)தமிழ்தமிழ்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 08 (வெள்ளிக்கிழமை) ஆங்கிலம்ஆங்கிலம்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 12 (செவ்வாய்க்கிழமை)கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி)கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங் (தொழிற்கல்வி)காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
கணிதம்,மார்ச் 14 (வியாழக்கிழமை)இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜிஇயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினஸ்ட் தேர்வு-1, எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-1, ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜிகாலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 18 (திங்கட்கிழமை)உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிகல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப்உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஜெனரல் மெஷினிஸ்ட் தேர்வு-2, எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-2, மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ் மற்றும் டெக்னிக்ஸ், மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 20 (புதன்கிழமை)வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்வேதியியல், கணக்கு பதிவியல், தொழிற்கல்வி கணக்கு பதிவியல் தேர்வு, புவியியல்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 22 (வெள்ளிக்கிழமை)கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை


12ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை :

தேதிபாடம்நேரம்
மார்ச் 1 (வெள்ளிக்கிழமை)தமிழ்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 5 (செவ்வாய்க்கிழமை)ஆங்கிலம்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 7 (வியாழக்கிழமை)கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி)காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 11 (திங்கட்கிழமை)இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷினிஸ் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜிகாலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 13 (புதன்கிழமை)வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 15 (வெள்ளிக்கிழமை)கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 19 (செவ்வாய்க்கிழமை)உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடுகாலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை


மேலும், 12ம் வகுப்பு பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு பழைய முறைப்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும் (தமிழ், ஆங்கிலம் பாடங்களை தவிர) தேர்வு நடைபெறும்.