Sunday, April 4, 2021

போலி இலவங்க பட்டை உஷார்

!!!எச்சரிக்கை!!!

போலி இலவங்க பட்டை உஷார்.


நம் அன்றாட உணவில்  மணத்திற்காகவும், மருந்தாகவும் இலவங்கபட்டையை பயன்படுத்தி வருகி்ன்றோம். கரம்மசாலா செய்வதற்கு இது தான் பிரதானமானது. பிரியானியிலும், அசைவ சமயலிலும் பட்டை இல்லாமல் சமயல் இல்லை.

நாம் உபயோகப்படுத்தும் இந்த இலவங்க பட்டையில் போலியான விஷப்  பட்டைதான் அதிகம் உபயோகத்தில் உள்ளது. அதைப் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல்.

ஒரிஜினல் பட்டையை ஆங்கிலத்தில் CEYLON
CINNAMON என்று கூறுவார்கள். இதில் நறுமணமும் மருத்துவ குணமும் உள்ளதால் பலங்காலமாக நாம் உணவில் பயன்படுத்தி வருகிறோம்.

இலவங்கப்பட்டை பெரும்பாலும் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டை தான் ஒரிஜினல். ஒரு கிலோ ஒரிஜினல் பட்டையின் தோராயமான இறக்குமதி விலை சுமார் ரூ. 2000/-

போலி  இலவங்கப்பட்டை என்பதை ஆங்கிலத்தில்
CASSIA CINNAMON என்று கூறப்படுகிறது. இது பார்ப்பதற்கு சிலோன் இலவங்கப் பட்டையை போலவே  இருக்கும். இந்த போலி இலவங்கப்பட்டை என்பது சீனா, இந்தோனேஷியா, வியட்னாம், போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனுடைய இறக்குமதி விலை ஒரிஜினல் பட்டை விலையில் பத்தில் ஒரு பங்கு தான் இருக்கும்.

இந்தபட்டையில் COUMARIN
என்கிற கெமிக்கல் உள்ளது. இந்த COUMARIN கெமிக்கலானது RODANT என்று சொல்லப்படும் எலி மற்றும் கரப்பான் பூச்சி விஷம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விஷத்தன்மையை அறிந்து இதன் உபயோகத்தை ஐரோப்பிய நாடுகளில் தடை செய்து விட்டார்கள். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் எலி விஷம் தயாரிப்பதற்காக மட்டும் சிறப்பு அனுமதியின் பேரில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இலவங்கபட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்பைஸ்ஸ் போர்ட் (SPICES BOARD) என்கிற அமைப்பு
நம் நாட்டிலும் இந்த போலி பட்டையின் இறக்குமதியை தடை செய்யக் கோரியதால்  மத்திய அரசும்  தற்போது போலி பட்டையை (CASSIA CINNAMON) RESTICTED ITEM என்று குறிப்பிட்டு இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளார்கள்.

ஆனாலும் நம் நாட்டில் வருடம் ஒன்றிற்கு போலி பட்டையானது பல ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரிஜினலும், போலியும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தெரியும், மேலும் இதன் வாசனையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும்..

ஒரிஜினல் சிலோன் பட்டை மிகவும் மெலிதாக இருக்கும். எளிதில் உடையும். உள்ளே மெல்லிய பல சுருக்களை கொண்டதாக இருக்கும். இதன் மணம் நறுமணமாக (DELICATE FLAVOUR)  இருக்கும். இது லைட் பிரவுன் நிறமாக இருக்கும். இதை பொடி செய்தால் நன்றாக நைஸாக வரும்.

போலி பட்டையானது சற்று தடிமனாக இருக்கும். உள்ளே குழாய் போன்று ஓட்டையாக இருக்கும்.  வெளியில் கரடு முரடாகவும் இருக்கும். இதை எளிதில் உடைக்க முடியாது. இதன் மணம் காட்டமாக இருக்கும். (INTENSE AROMA).

இது டார்க் பிரவுன் நிறத்தில் இருக்கும். இதை பொடி செய்தால் கொர கொரப்பாக (COARSE) வரும். நைஸாக இருக்காது.

இந்த போலி பட்டையினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

போலி பட்டையை உபயோகப்படுத்தினால் முதலில் இது நமது கல்லீ்ரலைத்தான் பாதிக்கும்.  இதன் காரணமாக, தலைவலி, ஜீரணக்கோளாறுகள், மஞ்சள் காமாலை போன்ற பல கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இது குடல் மற்றும் சிறுநீரகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நல்ல இலவங்கப்பட்டை உடலுக்கு ஏராளமான ஆரோக்கியத்தை தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியாகவும், கேன்சர் செல்களை அழிக்கக்கூடியதாவும் செயல்படுகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கக் கூடியதாகவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் செயல்படுகிறது.

எனவே பட்டை வாங்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். மேலும் சர்க்கரை நோயாளிகள் இதை உபயோகிக்கும்  போது நீங்கள் உண்பது உண்மையான பட்டையின் பொடிதானா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மலிவாக கிடைக்கிறது என்பதற்காக விஷத்தை உண்ணாதீர்கள். நன்றி.

Dr. Gouse MD (Acu), Singapore.

காலையில் முருங்கை இலை

 

காலையில் முருங்கை இலை… இவ்ளோ நன்மை இருக்கு; பயன்படுத்துவது எப்படி?

Tamil Health Tips : முருங்கை இலைச் சாற்றில் ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் ஆகியவை உள்ளன, இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

Drumstick Leaf Benifits : மனித உடலில் ஏற்படும் பல வகை நோய்களுக்கு முருங்கை இலை அதிக பயன் தருகிறது.

முருங்கை செடியின் இலை, இது இந்தியாவில் ஏராளமாக வளர்க்கப்படுகிறது. இந்த இலை பொடியாக்கி ஆன்லைன் மற்றும் மளிகை கடைகளில் எளிதாக விற்கப்படுகிறது. கடைகளில் ரெடிமேடாக விற்கப்படும் பொடியில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், முருங்கை இலை பொடியை நீங்களே எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியது சில புதிய முருங்கை இலைகளை சூரியஒளியில் உலர்த்தி அவற்றை ஒரு பொடியாக அரைக்கவும். இதனை தினமும் காலையில், ஒரு பாத்திரத்தில் சிறிது தூள் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சில நிமிடங்கள் வேகவைத்து முருங்கை இலை டீயை குடிக்கலாம்

பண்டைய காலங்களில், முருங்கை இலை பொடி தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தவும், பயன்படுத்தப்பட்டது, இந்த அலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதனால் இது ஒரு பிரபலமான சூப்பர்ஃபுட் என்று பட்டம் பெற்றது. மேலும் இந்த பொடியை தேயிலை அல்லது காபியில் உட்கொள்வதன் மூலமும், உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் நீரிழிவு நோயாளிகளுக்கு எடை குறைப்பு, மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இது பயன்படுகிறது.

  • இது குறித்து சிந்தியா ட்ரெய்னர் எழுதிய கொழுப்பை எப்படி குறைப்பது என்ற புத்தகத்தில், முருங்கை இலை தேநீர் எடை குறைப்புக்கு முக்கிய பயன் தருகிறது. ஏனெனில் அதில் உள்ள நுகர்வு கொழுப்பு சேமிப்புக்கு பதிலாக ஆற்றல் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தியானவை மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளுக்கு மாற்றாக இதனை உண்ணலாம்.
  • முருங்கை இலைச் சாற்றில் ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் ஆகியவை உள்ளன, அவை இரத்த அழுத்தம் உயரத்தும் தமனிகள்  தடிமனாக இருப்பதைத் தடுக்க உதவுகின்றன,.
  • மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற குளோரோஜெனிக் அமிலம் உள்ளது, இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
  • இதில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு காரணமாகும்.

“நன்றி : IE TAMIL