Thursday, February 28, 2019

###TNPSC|பொதுத்தமிழ்| Genral tamil Book Back Questions: தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் எது? புதிய பாடப்பகுதி 6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் |பொதுத்தமிழ்

###TNPSC|பொதுத்தமிழ்| Genral tamil Book Back Questions: தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் எது?

புதிய பாடப்பகுதி
6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ்


1. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்? - காவிரிக்கரை

2. கலைக்கூடமாகக் காட்சி தருவது ————— - சிற்பக்கூடம்

3. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது? - நு}ல் + ஆடை 

4. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? - எதிரொலிக்க

5. தேசம் உடுத்திய நு}லாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நு}ல் எது? - திருக்குறள்

6. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்? - மதுரை 

7. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்? - உ.வே.சாமிநாதர்

8. பொருத்துக
அ. இலக்கிய மாநாடு - 1) பாரதியார்
ஆ. தமிழ்நாட்டின் சொத்து - 2) சென்னை 
இ. குற்றாலம் - 3) ஜி.யு.போப்
Ans: 2 1 4 3 

9. தம் + உயிர் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ———— - தம்முயிர்

10. இன்புற்று + இருக்க என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ————— - இன்புற்றிருக்க

11. கலைச்சொல் அறிவோம்

📖 நாட்டுப்பற்று - Patriotism

📖 இலக்கியம் - literature

📖 கலைக்கூடம் - Art Gallery 

📖 மெய்யுணர்வு - Knowledge of reality 

ஒரு கதை சொல்லட்டுமா | நமது எதிரி யார்|சுயமுன்னேற்ற கதை

ஒரு கதை சொல்லட்டுமா | நமது எதிரி யார்|சுயமுன்னேற்ற கதை




Wednesday, February 27, 2019

###RO Water vs மண்பானை Which one best pot water/RO Water

###RO Water vs மண்பானை
Which one best pot water/RO Water



###சிறுதானிய பிஸ்கட்

சிறுதானிய பிஸ்கட் ..!!


பிஸ்கட் எவ்வாறு வந்தது? 1500ஆம் நு}ற்றாண்டுகளில் கடல்வழி வணிகம் தான் அதிகம். அவ்வாறு செல்லும்போது தங்களுக்கு தேவையான உணவுகளை சமைக்க உணவுப்பொருட்களோடு, சமையல்காரர்களையும் அழைத்து செல்லவேண்டி இருந்தது. அவ்வாறு கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் இருந்தமையால் சுலபமாக சமைக்கும் மற்றும் நீண்ட நாள் வைத்து உண்ணும் அளவிற்கு ஒரு உணவை கண்டுபிடிக்க முற்பட்டனர் கடல்வழி வணிக மாலுமிகள்.

பதப்படுத்தப்பட்ட தானியங்களின் அறிமுகம் ஒரு நம்பகமான உணவை வழங்கியது. எகிப்திய மாலுமிகள் 'தாவோர் கேக்" என்று அழைக்கப்படும் கம்பு கொண்டு செய்யப்பட்ட தடிமனான ரொட்டியை தயாரித்தனர். இதனை ரோமர்கள் 'பிஸ்கெலூம்" என அழைக்கப்படும் 'பிஸ்கட்" என்று அழைத்தனர். இது கடல்வழி பயணங்களின்போது பசியை போக்கியது.

இவ்வாறு தோன்றிய பிஸ்கட் உலகெங்கிலும் பரவி இன்று தினசரி பயன்படும் ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. பிஸ்கட் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ கம்பு போன்ற சிறுதானியங்களை கொண்டுதான்.

ஆனால், பிஸ்கட் உற்பத்தியை தொழிலாக கொண்ட பல நிறுவனங்கள் இதனை மேம்படுத்துவதற்காக உற்பத்தியில் பல வேதிப்பொருட்களை சேர்த்தனர். இதில் உள்ள வியாபார நோக்கம் என்னவென்றால் குழந்தைகளை கவரும் வகையில் இந்த பாக்கெட்டுகளின் கவர்களுடைய வண்ணம் அமைக்கப்படுகிறது. இப்படி கலப்படமான பிஸ்கட் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமை என்னவென்றால்,

செரிமானக் கோளாறு

நீரிழிவு நோய்

மலச்சிக்கல்

புற்றுநோய்

வளர்சிதை மாற்றம் என பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

இன்றுள்ள சூழ்நிலையில் பிஸ்கட் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. இப்படி இருக்கையில் நாம் இதை உடனே பயன்பாட்டிலிருந்து தவிர்க்க முடியாது.

நமது பாரம்பரிய முறையில் நமது பாரம்பரிய பொருட்களான கம்பு, ராகி, வரகு, சாமை என சிறுதானியங்களை கொண்டு எந்த வேதிப்பொருட்களும் சேர்க்காமல் செய்யப்படும் பிஸ்கட்டை உண்ணும்போது வேதிப்பொருட்களின் பக்கவிளைவும் நம்மை பாதிக்காது.

கம்பு பிஸ்கட்டின் நன்மை :

உடல் சு+டு தணியும்.

அஜீரணக்கோளாறுகள் நீங்கும்.

உடல் புத்துணர்வு பெறும்.

உடல் பலம் பெறும்.

ராகி பிஸ்கட்டின் நன்மை :

எலும்புகள் வலுப்படும்.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கும்.

உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

குடலுக்கு வலிமை அளிக்கும்.

தினை பிஸ்கட்டின் நன்மை :

உடலுக்கு தேவையான புரதச்சத்து, ஊட்டச்சத்து நிறைந்துள்ளன.

இரும்புச்சத்தின் அளவும், கால்சியமும் தானியங்களை விட தினையில் இருமடங்கு உள்ளது.

உடலை வலுவாக்கும்.

சிறுநீரை பெருக்கும்.

இதயத்தை பலப்படுத்தும்.

###TNPSC_CURRENT_AFFAIRS|அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு !! இன்றைய முக்கிய செய்திகள்

###TNPSC_CURRENT_AFFAIRS|அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு !!
இன்றைய முக்கிய செய்திகள்

பிப்ரவரி 26
உலகச் செய்திகள்

ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட் தொடர்பாக அடுத்த மாதம் 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார்.
மாநிலச் செய்திகள்


5வது பருவத்தில் (Semester) நுழையும் மாணவர்கள் முதல் பருவத்தேர்வில் எந்த அரியரும் வைத்திருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய தேர்வு நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது.

தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

ரெயில்வே தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிய ரெயில் திரிஷ்டி டேஷ்போர்டு என்ற புதிய இணையதளத்தை ரெயில்வே மந்திரி பியு+ஸ் கோயல் நேற்று தொடங்கி வைத்தார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பருப்பு வகைகள் விலை திடீரென உயர்ந்துள்ளன. கூடுதல் விலை கிடைப்பதால் இந்திய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமத்தை ஒரு மணி நேரத்தில் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.



மாவட்டச் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி சிறப்பு முகாமில் 13,222 பேர் விண்ணப்பம் செய்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து பெண்கள் எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் கோவை, ஈரோடு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார்.

கால்பந்து லீக் கோப்பை இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்டில் செல்சியை 4-3 என வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அந்த்ரே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார்.



"மண்பானை|நீர்- 7- 8 pH அளவு"|இரத்தத்தில் pH அளவும் எலும்பு,|மூட்டு வலியும்

"மண்பானை|நீர்- 7- 8 pH அளவு"|இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,|மூட்டு வலியும்...!


👇
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .

 இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இதற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .
💡
நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!

ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.

அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது 💡நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும். 
🤭
இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.
🤫
இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.
😩
இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!
💡
இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
 😩
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.
👇👇
இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O.WATER - 5 - 6 pH அளவு 
காபி - 4.5 - 5.5 pH அளவு
👇
😩
மண்பானை நீர் - 7- 8 pH அளவு.
😂
R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. 

தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து 

மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .
👇
இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
😩
கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.

அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். 
பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள். 
இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!

சமுதாய நலனில் 
✍ என்றும் அன்புடன்:         .        மண்பானை

கதை கேட்க வாங்க | பாவா|மண்ணை மீறும் விதைகள்

கதை கேட்க வாங்க | பாவா|மண்ணை மீறும் விதைகள்




கதைகளின் கதை|இசைப்போராளி #பாப்_மார்ஸி

கதைகளின் கதை|இசைப்போராளி பாப் மார்ஸி



Tuesday, February 26, 2019

####TNPSC|GENERAL_TAMIL|Book Back Questions: சிற்பங்கள் என்ற தமிழ்ச் சொல்லின் ஆங்கிலச் சொல் என்ன? புதிய பாடப்பகுதி 6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் பொதுத்தமிழ்

####TNPSC|GENERAL_TAMIL|Book Back Questions: சிற்பங்கள் என்ற தமிழ்ச் சொல்லின் ஆங்கிலச் சொல் என்ன?

புதிய பாடப்பகுதி

6ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்




பொதுத்தமிழ்

1. ஆராயும் அறிவு உடையவர்கள் ...................... சொற்களைப் பேசமாட்டார்? - பயன்தராத

2. விருந்தினர் முகம் எப்போது வாடும்? - நம் முகம் மாறினால்

3. பயன் + இலா என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்? - பயனிலா

4. நிலையான செல்வம் .........................
அ) தங்கம்
ஆ) பணம்
இ) ஊக்கம்
Ans: இ - ஊக்கம்

5. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் .................. - வீரம்

6. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ................... -
 கல் + எடுத்து

7. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .................... -
நான்கு + நிலம்

8. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ............... - நாடென்ற

9. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .................. - கலமேறி

10. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .................. -
கதிர் + சுடர்

11. தமிழ்ச்சொல் அறிவோம்

📖 நல்வரவு - Welcome

📖 சிற்பங்கள் - Sculptures

📖 சில்லுகள் - Chips

📖 ஆயத்த ஆடை - Readymade Dress

📖 ஒப்பனை - Makeup

📖 சிற்றுண்டி - Tiffin

###TNPSC_CURRENT_AFFARIS|எந்த மாநில அரசு பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது? | முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

###TNPSC_CURRENT_AFFARIS|எந்த மாநில அரசு பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது?

முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!


🍀 சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களிடையே, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் நோயின் ஆரம்பகால நிலை பற்றிய அறிதலை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக, 'சுவஸ்த் நாரி - சக்தி ஹமாரி" என்ற பிரச்சாரத்தை இந்திய புற்றுநோய் சமூகம் (Indian Cancer Society) தொடங்கியுள்ளது.

🍀 இந்தியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கிடையே, நீலப்பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பை வழங்குவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

🍀 கேரள மாநில அரசு பிரவசி பங்காதய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

🍀 இந்திய தேர்தல் ஆணையமானது, குடிமக்களுக்கு தங்கள் விவரங்களை சரிபார்க்கவும், விவரங்களை மாற்றவும், புதுப்பிப்பதற்காகவும் மற்றும் திருத்தங்களை மாற்றவும் 'வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம்" ஒன்றை தொடங்கியுள்ளது.

🍀 ஜம்மு - காஷ்மீர் மாநில அரசானது, லடாக் பகுதியின் நிர்வாக  வருவாய் பிரிவை, மாநிலத்தின் மூன்றாவது நிர்வாகப் பிரிவாக அறிவித்துள்ளது.

🍀 ஹங்கேரி நாட்டில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெறும் பெண்களுக்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என, பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார்.

🍀 கோவாவின் பனாஜியில் கோவா பொழுதுபோக்கு சமூக நலக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவா அரசால் ஏஜிஸ் கிரஹhம் பெல் விருதின் 9-வது பதிப்பிற்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

🍀 ′பாப்தா′ எனப்படும், பிரிட்டன் அகாடமி என்ற அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும், சிறந்த திரைப்படத்திற்கான விருதை, ரோமா பெற்றுள்ளது. தி பேவரைட் திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த பிரிட்டன் திரைப்படம் உள்ளிட்ட ஏழு விருதுகளை பெற்றுள்ளது.

🍀 தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பாலாஜி, ராஜாராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🍀 எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் தங்களது அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கான, PETRO TEC - மாநாட்டின் 13வது பதிப்பு உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிரெட்டர் நொய்டாவில் நடைபெற்றன.


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து  செய்யுங்கள். 


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!


###TNPSC|இலண்டன் நகரத்தின் சுதந்திரம் என்ற பட்டம் எந்த வங்கிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது | 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள்

###TNPSC|இலண்டன் நகரத்தின் சுதந்திரம் என்ற பட்டம் எந்த வங்கிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது | 
2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள் 



🍀 தீன்தயாள் உபாத்யாய - தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் வரம்பை, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நீட்டிக்க, மத்திய நகர்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகம்! சஹரி சம்ரிதி உத்சவ்′ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

🍀 அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதற்கான 'Parmanu Tech" என்னும் மாநாடு, புதுடெல்லியில் நடைபெற்றது.

🍀 உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் என்றழைக்கப்படும், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தினை பிரபலபடுத்துவதற்காக, புதுடெல்லியில், PM-JAY என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.

🍀 இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில், முதலாவது நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

🍀 வளைகுடா நாடான, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபுதாபியில் உள்ள நீதிமன்றங்களில், ஹிந்தி, ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.!

🍀 சிறுபான்மையினர் நல ஆணைய அமைச்சகத்தின் புதிய செயலாளராக, ஸ்ரீ சைலேஷ் (Sri Sailesh) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு (UK) இடையேயான உறவை மேம்படுத்துவதில், தன்னுடைய பங்கை செலுத்தியதற்காக, எஸ்பிஐ வங்கியின் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பிராந்திய தலைமையக வங்கிக்கு 'இலண்டன் நகரத்தின் சுதந்திரம்" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

🍀 அருணாசலப் பிரதேசத்தில் ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

🍀 மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி 'இந்திய அளவுத்" திட்டத்தை, மும்பையில் தொடங்கி வைத்தார்.

🍀 ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக, ராஜீவ் காந்தி எதிர்கால வாழ்க்கைக்கான தளத்தை, ராஜஸ்தான் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Monday, February 25, 2019

இஞ்சியின் மருத்துவ தன்மை

இஞ்சியின் மருத்துவ தன்மை


###2 வயது சிறுமிக்கு உலக சாதனை விருது !! 2 வயது சிறுமிக்கு உலக சாதனை விருது!!! _

2 வயது சிறுமிக்கு உலக சாதனை விருது !!


2 வயது சிறுமிக்கு உலக சாதனை விருது!!! 

🚩 இரண்டே வயதில் 40 நாடுகளின் தேசிய கொடிகளை அடையாளம் காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

🚩 விளையாட்டாக நாடுகளின் பெயர்களை சொல்லி கொடுத்த பெற்றோர் குழந்தையை விருது பெறும் அளவிற்கு உயர்த்தியுள்ளனர்.

🚩 40க்கும் மேற்பட்ட நாடுகளின் பெயர்களை கூறும் சிறுமி காவ்யஸ்ரீ, அந்த நாடுகளின் கொடிகளை சரியாக அடையாளம் காட்டுகிறார்.

Book Back Questions - காமராசர் பயன்படுத்திய நூலகம் எது?lll - 2019 9ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் | பொதுத்தமிழ்

Book Back Questions - காமராசர் பயன்படுத்திய நூலகம் எது?lll - 2019



9ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்
பொதுத்தமிழ்


1. காட்சி என்னும் தொழிற்பெயர் ................. எனப் பிரியும். - காண் + சி

2. ′வந்தான்′ என்னும் வினைமுற்று .................. என வினையாலணையும் பெயராய் வரும். - வந்தவன்

3. பொருத்துக.
அ) தொழிற்பெயர் - 1) நன்றி
ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர் - 2) அகழ்வார்
இ) பண்புப்பெயர் - 3) சு+டு
A: 4 3 1 2

4. பகுதி மட்டும் தொழிலைக் குறிப்பது .............. - முதனிலைத் தொழிற்பெயர்

5. வரவு என்னும் தொழிற்பெயரின் விகுதி ............. - உ

6. வட்டம் என்பது ....................... பெயர் ஆகும். - வடிவப்பண்பு

7. வழு ........................ வகைப்படும் . - ஏழு

8. ′என் மாமா வந்தது′ என்பது .................. - திணைவழு

9. இலக்கண முறையில்லாவிடினும் இலக்கணமுடையதாக ஏற்றுக்கொள்வது ................. - வழுவமைதி

10. பசுவைப் பார்த்து, ′என் இலட்சுமி வந்தாள்′ என்பது ............... வழுவமைதி ஆகும். - திணை

11. காமராசர் எங்கு, எப்போது பிறந்தார்? - ஜூலை 15, 1903ம் ஆண்டு விருதுநகரில் பிறந்தார்.

12. காமராசர் பயன்படுத்திய நு}லகம் எது? - மெய்கண்டான் புத்தகச்சாலை

13. காமராசரின் கல்விப்பணியைப் பாராட்டித் தமிழக அரசு செய்த சிறப்பு என்ன? - மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு ′மதுரை காமராசர் பல்கலைக்கழகம்′ எனப் பெயர் சூட்டியது.

14. கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் நாள் எது? - ஜூலை 11

15. பொருத்துக.
அ) காமராசர் பிறந்த ஆண்டு - 1) 1954
ஆ) காமராசர் முதலமைச்சராகப் பதவியேற்ற ஆண்டு - 2) 1903
இ) காமராசர் சட்டமன்ற உறுப்பினரான ஆண்டு - 3) 1975
உ) காமராசர் மறைந்த ஆண்டு - 5) 1963
ANS: 2 1 4 5 3



சாரு நிவேதிதா உரை | ஷாலின் மரிய லாரன்ஸ் - வடசென்னைக்காரி |

சாரு நிவேதிதா உரை | ஷாலின் மரிய லாரன்ஸ் - வடசென்னைக்காரி | 



###தேர்தல் சம்பந்தமா ஒரு சேதி சொல்லட்டுமா? முதல் தேர்தல் சுவாரஸ்யங்கள்

###தேர்தல் சம்பந்தமா

ஒரு சேதி சொல்லட்டுமா? முதல் தேர்தல் சுவாரஸ்யங்கள்


Sunday, February 24, 2019

###TNPSCGoogle, Facebook-க்கு புதிய வரி - 2019 தினசரி நடப்பு நிகழ்வுகள் - பிப்ரவரி 18, 2019

###TNPSCGoogle, Facebook-க்கு புதிய வரி - 2019 
தினசரி நடப்பு நிகழ்வுகள் - பிப்ரவரி 18, 2019 !! 


👉 இந்தியா, மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!! 

👉 சர்தார் படேல் சிலையை வடிவமைத்தவருக்கு விருது!! 

👉 1,000 நடன கலைஞர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!! 

👉 56 பேருக்கு தமிழ் புத்தாண்டு விருது!! 

👉 கூகுள், முகநு}லுக்கு புதிய வரி!! 

👉 'சாரதி சந்தேஷ் வாகினி" என்ற திட்டம்!! 

👉 டென்னிஸ் தரவரிசை டாப் 10ல் செரீனா!! 

👉 புமா நிறுவனத்தின் தூதர் நியமனம்!! 

பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவுக்கு எந்த இடம்?- 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!


பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவுக்கு எந்த இடம்?- 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!


🍀 இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

🍀 சர்வதேச உரிமைக்குழுவான ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் வீடுகளில் பார்க்கும் வேலையின் மதிப்பு, ஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை, விட 43 மடங்கு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

🍀 தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த உள்ளது.

🍀 மாநில அரசின் முதியவர்களுக்கான ஓய்வு+திய திட்டத்தின் கீழ், 60 வயதை தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

🍀 சீனாவில் தடுப்பு காவலில் உள்ள சீன வழக்கறிஞர், யூ வென்செங் (Yu Wensheng), 2019 ஆம் ஆண்டின் 'பிராங்கோ - ஜெர்மன் மனித உரிமைகள்" விருதை (குசயnஉழ - புநசஅயn ர்ரஅயn சுiபாவள யுறயசன) பெற்றுள்ளார்.!

🍀 அதிமுக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையனுக்குத், தந்தை பெரியார் விருதை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

🍀 இந்திய பெண்கள் குத்துச் சண்டை வீராங்கனைகளுக்கான (ஊhநைக ஊழயஉh கழச வாந ஐனெயைn றழஅநn டிழஒநசள), தலைமை பயிற்சியாளராக, 'முகமது அலி கியாமர்" (ஆழாயஅஅநன யுடi ஞயஅயச) நியமிக்கப்பட்டுள்ளார்.

🍀 சர்வதேச முகவாண்மை நிறுவனமான ′பி.டபிள்யூ சி.′ வெளியிட்டுள்ள பட்டியலில், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில், இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

🍀 அகில இந்திய அளவில், ரயில்களை தூய்மையாக வைத்திருப்பதில், தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்துள்ளது.

🍀 வீட்டில் அமர்ந்தபடியே போப் ஆண்டவருடன் சேர்ந்து, பிரார்த்தனையில் ஈடுபட, ′கிளிக் டூ பிரே′ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

🍀 ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள், தேசிய திறனாய்வு தேர்வில், தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 

கதை கேக்க வாங்க|பாவா செல்லதுரை

கதை கேக்க வாங்க|பாவா செல்லதுரை




கவிதை|பூக்களை பறித்துவிடுங்கள்

பூக்களை  பறித்துவிடுங்கள்!

==================***

"பூக்களை  பறிக்காதீர்கள்"

வாசகத்தைப்  படித்தவன்
வேட்கையுடன்
வேரோடு  பிடுங்கினான்  செடியை!
காட்டினான்  நாட்டை
ஆள்வோரின் 
நாணயத்தின்
நிலையை!

பிச்சிப்பூவை  சூடி
மகிழலாம்  பூவை
பிச்சி   சூட
இயலுமா?

வனப் பூ மலர்ந்தால்
என்ன?
வாடி  கீழே
விழுந்தால்  என்ன?
என்னவளின்  கருங்கூந்தலின்
வனப்பு  காணாதபோது!

காற்றானாலும்
நாற்றானாலும்
நிலவானாலும்
நீரானாலும்
பூவானாலும்
பூவையரானாலும்
இடம்  மாறினால்தான்
பலவற்றிற்கும்  அழகு!

பறித்தால்தான்
பயன்தரும்  பூக்கள்
பிறர்  நெஞ்சை
முறித்தால்தான்
பயனடைவர்
கீழ்  மாக்கள்!

இறை மீது
தலைவன் மீது
என் மனம் விரும்பும்
எழிலால் மீது
பிணமான பின்
என் உடல் மீது
பூக்கள்  விழ வேண்டுமெனில்
முதலில்  அவை
பறிக்கப்பட  வேண்டும்!

நறுமணம்  வீசா
பூவினமும்
திருமணம்  ஆகா
பூவையரும்
ஒதுக்கப்படுவதில்
உடன்பாடில்லை
எனக்கு!

பறித்த பூக்களும்
பதறியடித்தே
பதுங்குகின்றதே
கைம்பெண்களை அவை  எவ்வாறு அடையாளம்
கண்டு கொள்கிறது?
இனம்  இனத்தோடு
சேரவில்லையே!

கதிரவனைக் கண்டு
களிப்புறும்  கமலமும்
வெண்ணிலவைப்
பார்த்து  மகிழ்வுறும்
அல்லியும்
மாலையில்  மலரும்
மணமிகு  முல்லையும்
தூரத்தில்  இருப்பின்
கண்டு  மகிழலாம்
கைக்கு  வந்தால்தானே
முகர்ந்து  உணரலாம்!

வனமலர்கள்  பெரும்பாலும்
மனிதர்க்கு பயன்படுவதில்லை
மனமில்லா  மாந்தரைப்போல
வனம் உலாவும்
வானம்பாடியைப்போல!

வாழ்க்கையின்  அழகே
கொடுப்பதில்
பூக்களின்  சிறப்பே
பறிப்பதில்
பூவையர்  பெருமையோ
சிரிப்பதில்
பூமியில்  நல்லென
நினைப்பதில்!!

-பாழலர் சு.சன்முக சுந்தரம்
 புதுவை.

'சாதி மதம் அற்றவர்' என சான்றிதழ் பெறுவது எப்படி? - விவரிக்கிறார் முதல்முறையாக சான்றிதழ் பெற்ற ஸ்நேகா

BBC News தமிழ்
முக்கிய செய்திகள்

'சாதி மதம் அற்றவர்' என சான்றிதழ் பெறுவது எப்படி? - விவரிக்கிறார் முதல்முறையாக சான்றிதழ் பெற்ற ஸ்நேகா


மு. நியாஸ் அகமது
பிபிசி தமிழ்
 14 பிப்ரவரி 2019

இதை பகிர Email இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர வாட்ஸ்அப்
Image copyright FACEBOOK
இந்தியாவில் முதல்முறையாக ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற்றவர் இவர் என பலரும் ஸ்நேகாவை குறிப்பிடுகிறார்கள்.

இந்தியா என்றாலே சாதி மதம்தான் என சர்வதேச அளவில் அடையாளப்படுத்தப்படும் வேளையில் அந்த பிம்பத்தை கட்டுடைத்தவர் இவர் என சமூக ஊடகங்கள் இவரை சிலாகித்து எழுதுகின்றன.

சரி. யார் இந்த ஸ்நேகா? அவரிடமே பேசினோம்.

நான் ஸ்நேகா மும்தாஜ் ஜெனிஃபர் என்று தன் உரையாடலை தொடங்கினார்.

'வேர்களிலிருந்து'
"நான் வழக்கறிஞர் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள். என்னுடைய பெற்றோர் ஆனந்த கிருஷ்ணன், மணிமொழி இருவரும் வழக்கறிஞர்கள். யோசித்து பார்த்தால் ஜாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வாங்கும் முயற்சியை நான் தொடங்கவில்லை. இந்த முயற்சி என் பெற்றோர்களிடமிருந்துதான் தொடங்கியது. அவர்கள்தான் இவ்வாறான சான்றிதழ் பெற பெரும் முயற்சி எடுத்தார்கள். அப்போது அது சாத்தியப்படவில்லை. பல ஆண்டுகளாக நடந்த முயற்சிக்குப் பின் இப்போதுதான் எனக்கு சாத்தியப்பட்டிருக்கிறது" என்கிறார்.

மேலும் அவர், "சான்றிதழாக பெறாவிட்டாலும் என்னையும், இரு தங்கைகளையும் பள்ளியில் சேர்க்கும்போது, எங்கள் சாதி, மதங்களை எங்கேயும் குறிப்பிடவில்லை. என் பெயரை வைத்தும் நான் என்ன சாதி என்று யாராலும் கணிக்க முடியாது." என்கிறார்.

'வாழ்வியல் முறை'
என் பெற்றோர்கள் சாதி, மதங்களை துறப்பதை வெறும் நடவடிக்கையாக பார்க்கவில்லை. அதனை ஒரு வாழ்வியல் முறையாகதான் பார்த்தார்கள் அப்படிதான் வாழ்வும் செய்தார்கள், எங்களையும் அ��

Saturday, February 23, 2019

###TNPSC|CURRENT_AFFAIRS-2019|எந்த நாட்டின் நீர்வாழ் விலங்காக சியாமீஸ் சண்டையிடும் மீன் அறிவிக்கப்பட்டுள்ளது? - 2019| முக்கிய நடப்பு நிகழ்வுகள்

###TNPSC|CURRENT_AFFAIRS-2019|எந்த நாட்டின் நீர்வாழ் விலங்காக சியாமீஸ் சண்டையிடும் மீன் அறிவிக்கப்பட்டுள்ளது? - 2019|


முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!


🍀 வீடமைப்புத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் மற்றும் யு+னியன் பிரதேசங்களுக்கு, விருதுகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

🍀 அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், இந்திராசென் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒரு அதிவேக முப்பரிமாண அச்சு இயந்திரமான, 30 - 120 நிமிடங்களில் அச்சிட்டு தரும், 3டி பிரின்டரை உருவாக்கியுள்ளது.

🍀 சுவிட்சர்லாந்திலுள்ள, ′கிளைம் வொர்க்ஸ்′ நிறுவனம், காற்றிலுள்ள கரியமில வாயுவை மட்டும் தனியே பிரித்தெடுக்கும், தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

🍀 வட மேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள பூச்சு, இரும்பின் மேல் கீறல், விரிசல் ஏற்பட்டால் உடனே மூடிக்கொள்கிறது. இதனால் காற்று, நீர் போன்றவை பட்டு துரு உருவாகாமல் தடுக்க முடியும்.

🍀 எதிரிகளின் ராணுவ டாங்க்குகளை, ஹெலிகாப்டரில் இருந்து ஏவி தாக்கவல்ல, அதிநவீன, ′ஹெலினா′ ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

🍀 டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) ′உலக மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்புகள்′ எனும் நு}ல் வெளியிடப்பட்டது.

🍀 டெல்லி அரசாங்கம் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் நோக்கத்துடன், சுழிய இறப்புப் பெருவழிப்பாதையைத் தொடங்கியுள்ளது.

🍀 சீன புத்தாண்டின் 2019-ஆம் ஆண்டிற்கான சின்னமாக பன்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

🍀 தாய்லாந்து நாட்டின் நீர்வாழ் விலங்காக ′சியாமீஸ் சண்டையிடும் மீன்′ என்ற இனத்தை அறிவிப்பதற்காக, ஒப்புதல் வழங்கப்பட்டது.

🍀 நிர;மலா சீத்தாராமன் தலைமையிலான, பாதுகாப்பு கொள்முதல் குழு மிலன் 2வு - என்ற பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 



Friday, February 22, 2019

அரசியலமைப்பு சட்டப்பிரிவு ###370 என்ன சொல்கிறது| Article 370

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 என்ன சொல்கிறது


ARTICLE_370



சட்டப்பிரிவு 370 எப்படி அமலுக்கு வந்தது?
இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.
1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார்.
அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
அம்மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது.

1951ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீருக்கு என தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.

சட்டப்பிரிவு 370 - இதன் அர்த்தம் என்ன?

இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவானது, மத்திய அரசுக்கும், ஜம்மு காஷ்மீருக்குமான உறவின் ஒரு எல்லைக் கோடாக பார்க்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஷேக் மொஹமத் அப்துல்லாவும், இது தொடர்பாக ஐந்து மாத காலம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.
சட்டப்பிரிவு 370ன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிற, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும்.
இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால், அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடையாது.
சட்டப்பிரிவு 370 இருக்கும் காரணத்தினால் - ஜம்மு காஷ்மீர் மாநிலத்து மக்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளது.

  • இந்திய தேசிய கொடி அல்லாது, அம்மாநிலத்துக்கு என்று தனி கொடி உள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
அம்மாநிலத்தின் 'நிரந்தர குடியாளர்கள்' யார் என்பதை வரையறுப்பது அரசமைப்பின் பிரிவு 35A. இது சட்டப்பிரிவு 370-ன் ஒரு பகுதியாகும். இதன்படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது.

நாட்டில் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 360-ம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.
அதாவது அம்மாநிலத்தில் பொருளாதார அவசர நிலையை அறிவிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் கிடையாது. மற்ற நாடுகளுடன் போர் ஏற்பட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.
அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழல் மற்றும் வன்முறை நிலவினால்கூட, குடியரசுத்தலைவரால் அவசர நிலை அறிவிக்க முடியாது என்று இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்துரை செய்தால் மட்டுமே அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.
அரசமைப்பில் இருந்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது சாத்தியமா?
சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான வழக்கு ஒன்றினை 2015ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அரசமைப்பில் இருந்து அதனை நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று கூறியது.
அப்போது தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல். தத்து கூறுகையில், "இது நீதிமன்றத்தின் வேலையா? சட்டப்பிரிவு 370-ஐ வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது நீக்க வேண்டுமா என்று நீதிமன்றத்தால் நாடாளுமன்றத்திடம் கேட்க முடியுமா? இது நீதிமன்றத்தில் வேலை இல்லை" என்று கூறினார்.

அதே 2015ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது என ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் கூறியது. "இடைக்கால ஏற்பாடு" என்று அரசமைப்பின் சட்டப்பிரிவு 21ல் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது நிரந்தரமானது என்று தெரிவித்திருந்தது.
சட்டப்பிரிவு 370, சரத் 3-ன் படி, இதனை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இது பிரிவு 35A- வை பாதுகாக்கிறது. மற்ற மாநிலங்களை மாதிரி ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணையவில்லை என்று தெரிவித்த நீதிமன்றம், இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, ஓரளவுக்கு அதன் இறையாண்மையை பராமரித்து வந்ததாக கூறியது.
அரசியல் கட்சிகள் சொல்வது என்ன?
2014 மக்களவை தேர்தலின்போது, சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
நீண்ட காலமாக இந்த சட்டப்பிரிவை எதிர்த்து வந்த பாஜக, பின்னர் இது குறித்து ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தது.
சட்டப்பிரிவு 370 என்பது அரசமைப்பை உருவாக்கியவர்களால் செய்யப்பட்ட பிழை என்றே பாஜக கருதுகிறது.

ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை பாஜகவின் நிலைக்கு எதிராக உள்ளன.
"இந்தியாவையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் 370 சட்டப்பிரிவு இணைக்கிறது. 370 தொடர வேண்டும். இல்லையென்றால், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது" என்று 2014ஆம் ஆண்டு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்திருந்தார்.
சட்டப்பிரிவு 370-க்கு எதிராக போராட்டங்கள் நடந்த போது பேசிய மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சரான மெஹபூபா முஃப்தி, "இச்சட்டப்பிரவு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட சத்தியம். இந்த சத்தியம் மதிக்கப்பட வேண்டும்" என்றார்.
இச்சட்டப்பிரிவினால் மட்டுமே, ஜம்மு காஷ்மீர் மாநிலம், இந்தியாவுடன் இணைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி 
dailyhunt

###பத்ம பூசண் விருதின் வரலாறு


###பத்ம பூசண் விருதின் வரலாறு


பத்ம பூசண் விருது இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் மூன்றாவது மிகப் பெரிய விருதாகும்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் வேவை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் புகழ் பெற்ற சாதனைகள் / சேவைகள் புரிந்தோரை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதினை பெறுபவர்களுக்கு பணபலன் ஏதும் வழங்கப்படுவதில்லை. விதி எண் 18 (1)-ன்படி இவ்விருதினைப் பெற்றோர் தங்கள் பெயருக்கு முன்பும், பின்பும் இவ்விருதின் அடைமொழியை பயன்படுத்தக்கூடாது.
2016 வரை 129 தமிழர்கள் உட்பட மொத்தம் 1225 நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால் வழங்கப்படும் பத்மவிபூசண், பத்ம பூசண், பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள் பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை முறைய இந்தியாவின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது உயரிய விருதுகளாகக் கருதப்படுகின்றன.
பத்ம பூசணின் வரலாறு
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களால் இவ்விருது ஜனவரி 2, 1954 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்விருதானது இனம், மதம், பாலினம், பதவி என வேறுபாடின்றி மிகச்சிறந்த தேசிய சேவை செய்த எல்லோரையும் பாராட்டி வழங்கப்படுகிறது.
மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர அரசு ஊழியர்கள் உட்பட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
ஒரு ஆண்டில் பத்ம விருதுகள் மொத்தம் 120 பேருக்கு (அமரர்கள், இந்திய குடியுரிமை இல்லாதோர் தவிர்த்து) மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
அமரர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக கொள்கை வகுக்கப்படவில்லை. பின் 1955 ஜனவரியில் அமர்களுக்கும் இவ்விருது வழங்கலாம் என விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
பத்ம பூசணுக்கான விதிமுறைகள்
இவ்விருதினைப் பெறுபவர்கள் இந்திய குடியரசுத் தலைவரின் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தினைப் பெறுவர்.
விருது வழங்கும் நாளன்று விருதினைப் பெறும் ஒவ்வொருவர் பற்றிய சிறுவிளக்க குறிப்புடன் கூடிய நினைவு சிற்றேடு வெளியிடப்படும்.
இவ்விருதினைப் பெற்றவர்கள் விரும்பினால் அரசு விழாக்களின்போது இவ்விருதினை அணிந்து கொள்ளலாம். இவ்விருதினைப் பெறுபவர் தங்கள் பெயருக்கு முன்னும் பின்னும் இவ்விருதின் அடைமொழியைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் விருதானது திரும்பப் பெறப்படும்.
ஏற்கனவே பத்ம விருது வாங்கியவர், பத்ம விருது வாங்கிய ஐந்து ஆண்டுகள் கழித்தே அடுத்த உயரிய பத்ம விருதுக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். தகுதியுடைய நேரங்களில் பத்ம விருதுகள் தேர்வுக் குழுவினரால் இந்த கால அளவு தளர்வு செய்யப்படலாம்.
இவ்விருதினைப் பெறுவதற்கு எல்லா மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், இந்திய அரசின் அமைச்சகங்கள், பாரத ரத்னா, பத்ம விபூசண் விருது பெற்றவர்கள், சிறப்பு நிறுவனங்கள், அமைச்சர்கள், முதல் அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனிநபர்கள் ஆகியோர்களிடமிருந்து வரும் பரிந்துரைகள் பத்ம விருதுகள் தேர்வு குழுவில் பெறப்படுகின்றன.
இவ்விருதிற்கான பரிந்துரைகள் மே 1 முதல் செப்டம்பர் 15 வரை உள்ள காலகட்டத்தில் பத்ம விருதுகள் தேர்வு குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும்.
பத்ம விருதுகள் தேர்வு குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலானது இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 26, இந்திய குடியரசு தினத்தன்று இவ்விருது அறிவிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இவ்விருது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்விருதானது முதலில் அறிவிக்கப்பட்டு, பின் இந்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அரசாங்க உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் அரசிதழில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.
அவ்வாறு அரசிதழில் வெளியிடப்படவில்லை எனில் அதிகாரப்பூர்வமாக விருதானது அங்கீகரிக்கப்படவில்லை எனக் கருதப்படும்.
இவ்விருதானது திரும்பப் பெற வேண்டும் எனில் குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு அரசிதழில் இருந்து திரும்ப அளிப்பவரின் பெயர் நீக்கப்பட வேண்டும்.
விருதினை திருப்பி அளிப்பவர்கள் தங்கள் பதக்கத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும். மேலும். 1977 ஜூலை முதல் 1980 ஜனவரி வரையிலும் 1992-1995 வரையிலும் இவ்விருது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
விருதுதின் அமைப்பு
1954-ல் இவ்விருது அமைக்கப்பட்டபோது பத்ம விபூசனின் இரண்டாவது நிலை என வகைப்படுத்தப்பட்டது. இவ்விருதிற்கான முதல் வரையறையில் பதக்கமானது 35 மி.மீ விட்டமுடைய வெள்ளிமுலாம் பூசப்பட்ட இருபுறமும் விளிம்புகளுடன் கூடிய வட்ட வடிவமானதாகும்.
பதக்கத்தின் முன்பக்கத்தில் தாமரைப்பூ பதிக்கப்பட்டு பூவின் மேலே பத்ம விபூசண் என தேவ நாகரிக மொழியில் பொறிக்கப்பட்ட வேண்டும். ஒரு மலர் மாலை கீழ்விளிம்பிலும், தாமரை மாலை மேல்விளிம்பிலும் இருக்க வேண்டும். இந்திய அரசு சின்னம் பின்பக்கம் பொறிக்கப்பட்டு அதன் கீழே தேசிய சேவை என தேவ நாகரிக மொழியில் பொறிக்கப்பட்ட வேண்டும்.
பதக்கமானது 32 மிமீ அகலம் உள்ள இளஞ்சிவப்பு வண்ண ரிப்பனில் இணைக்கப்பட வேண்டும். ரிப்பனில் இரு வெள்ளை நிறக் கோடுகள் இளசிவப்பு வண்ணத்தை மூன்று சமபாகங்களாக பிரிக்க வேண்டும் என கூறப்பட்டது.
அடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மற்றும் பத்ம பூசண் எனப் பெயர் மாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
தற்போதைய உள்ள பதக்கம் தாமிரத்தில் 44 மிமீ விட்டம் கொண்ட வட்ட வடிவில், 3.2 மி.மீ தடிமனில் உள்ளது. இதனுள் 30 மிமீ பக்க அளவுள்ள சதுரங்களால் சூழப்பட்ட அமைப்பு உள்ளது.
சதுரத்தின் உட்பரப்பில் 27 மிமீ விட்டம் கொண்ட வட்டம் ஒன்று உள்ளது. அதனுள் மூன்று இதழ்களால் ஆன தாமரை பூ வடிவம் உள்ளது. தேவ நாகரீக மொழியில் பத்ம என்ற வாசகம் மேற்புறமும், விபூசண் என்ற வாசகம் கீழ்புறமும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்திய அரசு சின்னம் பின்பக்கம் பொறிக்கப்பட்டு அதன் கீழே சத்தியமேவ ஜெயதே என தேவ நாகரிக மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும். பதக்கத்தின் முன் மற்றும் பின் பக்கம் உள்ள புடைப்பானது தங்கத்தால் ஆனது.
பதக்கமானது 32 மிமீ அகலம் உள்ள இளஞ்சிவப்பு வண்ண ரிப்பனில் இணைக்கப்பட்டிருக்கும். ரிப்பனில் வெள்ளை நிற பட்டை வடிவக் கோடு இளஞ்சிவப்பு வண்ணத்தை இரு பாகங்களாகப் பிரிக்கிறது. இப்பதக்கமானது கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் மின்டில் தயார் செய்யப்படுகிறது.
முதன் முதலில் இவ்விருது ஹோமி ஜஹாங்கிர் பாபா, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் உள்ளிட்ட 23 நபர்களுக்கு 1954-ல் வழங்கப்பட்டது. உஜ்தாத் விலயாத் கான், ரொமிலா தாபர், ஜானகி உள்ளிட்ட பலர் இவ்விருதினை திருப்பி அளித்துள்ளனர். இது வரை அதிகபட்சமாக இலக்கியம் மற்றும் கல்வி துறைக்காக மொத்தம் 26 பேர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.


2018 AWARDS RECEIVER

001002

003
004


நன்றி
இனிது  இணைய இதழ்