Friday, August 31, 2018

ஆங்கிலமும் கற்போம் பகுதி - 6 English slangs / கொச்சைப்பேச்சு/ திட்டுதல் / வசைச்சொல்

ஆங்கிலமும் கற்போம் பகுதி - 6

English slangs / கொச்சைப்பேச்சு/ திட்டுதல் / வசைச்சொல்

1. Airhead - A foolish or dumb person (முட்டாள் மனிதன்)
She is such an airhead she keeps forgetting to get her books.

2. Cheesy - Outdated or overused, sometimes cheap as well (புதிய விசயங்கள் தெரியாதவன்,  மிக மோசமாக நடப்பவன்)
She was tired of hearing cheesy pick-up lines.

3. Cushy - Comfortably easy (எளிதான வேலை)
She had a cushy job as the floor manager.

4. Ditch - Abandon something or leave (ஒரு செயலை திடீரென கைவிடுதல்)
She has a reputation for ditching plans at the last minute.

5. Flicks - Movies or films (திரைப்படங்கள்)
She went to the flicks with her best friends.

6. Freebie  - Something that you get for free (இலவசமாக கிடைப்பது)
The company was giving freebies to promote the product.

7. Grand - A thousand (ஓராயிரம்)
He made 20 grand at his old job.

8. Heave - Vomit (வாந்தி எடுத்தல்)
"Uh-oh I need to heave!" She said before disappearing into the toilet.

9. Icky - Unpleasant or annoying (எரிச்சல் ஊட்டுகின்ற)
She wrinkled her nose at the icky mess in the kitchen.

10. Umpteen - Incalculable, innumerable (பல தடவை)
"I've told you umpteen times to clean this room." His mother scolded.

வீட்டில் அழகுப் பூந்தோட்டம், உடல் ஆரோக்கியத் திண்டாட்டம்

வீட்டில் அழகுப் பூந்தோட்டம், உடல் ஆரோக்கியத் திண்டாட்டம்


“பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். இனி இதை வீட்டுத் தோட்டத்தில் வளர்க முயல்வோம்.


1. துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

🥑🥑
2. தூதுவளை

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.


3. சோற்றுக்கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.


4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

5. பொன்னாங்கண்ணி

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.

6. நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.


7. நிலவேம்பு

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.

9. ஓமவள்ளி

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

🥑🥑

10. அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

11. ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.


13. நொச்சி

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.

14. தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.

 இயற்கை வாழ்வியல்


Thursday, August 30, 2018

ஆங்கிலமும் கற்போம் பகுதி - 5 / விடைபெறுவதர்கான கலைச்சொற்கள் / Good bye Vocabulary

ஆங்கிலமும் கற்போம் பகுதி - 5

விடைபெறுவதர்கான கலைச்சொற்கள் / Good bye Vocabulary


1. To see (somebody) off: to accompany somebody to the point of departure for a trip and say goodbye upon departure (ஒருவரை வழியனுப்புதல்)

2. To be sorely missed: to really miss someone (ஒரு செல்வதால் அவரை நினைத்து ஏங்குதல்)
'Sorely' is used to emphasize that a feeling such as disappointment or need is very strong.

3. A send-off: a demonstration of affection when saying goodbye to someone - sometimes a party (பிரிவு உபசாரம் செய்தல்)

4. To go for good: to leave permanently (நிரந்தரமாக ஒரு இடத்திலிருந்து செல்லுதல்)

5. To stay in touch: keep in contact (தொடர்பில் இருங்கள்)

6. To lose touch (with somebody): to no longer communicate with someone (ஒரு இடத்தை விட்டு சென்றபின் தொடர்பு அற்று இருத்தல்)

Ways to say goodbye:

1. So long: a greeting used when leaving or departing from a person or place. (கிளம்பும்போது சொல்லும் வாக்கியம்)

2. Farewell: used to express good wishes on parting. (பிரிவுவிடை)

3. See you later: said when parting from someone. (பிறகு பார்க்கலாம்)

4. Take care: said to someone while bidding good bye. (உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்)

5. See you later, alligator:  (அப்புறமாக பார்க்கலாம்)
The expression is "See you later, Alligator," to which you should answer, "After a while, Crocodile!" It's a fun way of saying goodbye.

6. Adios (ஆச்சரிய  வார்த்தை)

7. Later! (பிறகு)

8. Have a good one.   (நல்லவையாக அமையட்டும்)

9. All right then.  (அப்புறம் வேறு என்ன)

10. Peace! / Peace out. (அமைதி நிலவட்டும்)

11. Ciao! (ஒரு ஆச்சரிய வார்த்தை)

Wednesday, August 29, 2018

தாய் தந்தையை விட சிறந்தவர் யார்?

தாய் தந்தையை விட சிறந்தவர் யார்?




வலையா சிறகா...

வலையா சிறகா...




வகுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்


வகுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்!!



இந்த காலத்து பசங்க பாவங்க

இந்த காலத்து பசங்க பாவங்க




அலைப்பேசி

அலைப்பேசி. ..


அலைப்பேசி அலையவைக்கிறதா?

அலைப்பேசி அலையவைக்கிறதா?



சபரி மாலா பட்டி மன்றம்

சபரி மாலா பட்டி மன்றம்



தேசிய விளையாட்டு தினம் - 29.08.2018


தேசிய விளையாட்டு தினம் - 29.08.2018

தயான் சந்த்


டெல்லி: தயான் சந்த் (29, ஆகஸ்ட், 1905 - 3, டிசம்பர், 1973) இன்று தயான் சந்த் பிறந்த நாள். இதை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம்.. அந்த அளவுக்கு தயான் சந்த் செய்த சாதனை என்ன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியில், உலகில் ஒரு காலத்தில் இந்தியா கொடிகட்டி பறந்தது. அதற்கு துவக்கத்தை கொடுத்தவர் தயான் சந்த்.



1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பங்கேற்றது. அப்போது, கப்பல் மூலம் சென்ற அணிக்கு வாழ்த்து கூறி வழியனுப்பியர்கள், 5 பேர். அதே அணி, நாடு திரும்பியபோது, மும்பை துறைமுகத்தில் நிற்பதற்கு கூட இடமில்லை. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்ற இந்திய அணியின் சூப்பர் ஹீரோவாக இருந்தவர் தயான் சந்த். அந்த ஒலிம்பிக்கில், 5 ஆட்டங்களில், 14 கோல்களை அடித்தார் தயான் சந்த். இந்தியா தங்கம் வென்றவுடன், ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் வந்த செய்தியின் தலைப்பு இது ஹாக்கியே இல்லை. ஏதோ மாயஜாலம் நடந்தது. அதை நடத்திய மந்திரவாதி தயான் சந்த்' இந்த ஒன்றே போதும், தயான் சந்தின் பெருமையை கூறுவதற்கு, இந்தியாவுக்கு, 1928, 1932, 1936 என தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்தவர் தயான் சந்த். 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்த அவருடைய உண்மையான பெயர் தயான் சிங். இரவில் அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டார். அப்போதெல்லாம், தற்போதுள்ள அளவுக்கு மின்விளக்கு வசதிகள் கொண்ட மைதானம் கிடையாது. நிலவின் வெளிச்சத்தில் பயிற்சி மேற்கொண்டதால், அதை குறிக்கும் வகையில், சந்த் (நிலவை இந்தியில் சந்த் என்றழைப்பர்) தயானுடன் சந்த் சேர்ந்தது. அதுவே அவருடைய பெயராகவும் மாறியது. ஹாக்கி போட்டிகளில், 200க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார். ராணுவம் மற்றும் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், பயிற்சியாளராக தனது சேவையை தொடர்ந்தார். அவரிடம் பந்து சென்றுவிட்டால், அது கண்டிப்பாக கோலாகிவிடும் என்று, மற்ற வீரர்கள் நம்பிக்கையுடன் திரும்பி விடுவார்கள். மைதானத்தில் தயான் சந்தின் வேகத்தை குறிக்கும் வகையில், ஆஸ்திரியாவின் வியன்னாவில் அவருடைய சிலையை வைத்துள்ளனர். அதில் நான்கு கைகளில் நான்கு ஹாக்கி மட்டையுடன் தயான் சந்த் இருப்பார். பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள தயான் சந்த் நினைவாக, 2012 முதல், அவருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம். விளையாட்டு துறையில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்படுகிறது. இன்று நடக்கும் விழாவில், கேல்ரத்னா, தயான்சந்த், அர்ஜூனா விருதுகளை ஜனாதிபதி வழங்க உள்ளார்.

சொறிசிரங்கு, கரப்பான், தவளைச்சொறி, தோல்நோய்.(scabies, eczema, phrynoderma)

சொறிசிரங்கு, கரப்பான், தவளைச்சொறி, தோல்நோய்.(scabies,eczema,phrynoderma)

ஸ்திரீகள் சம்பந்தத்தாலுண்டான மேகம் கிரந்தி இவைகளால் 6 வித குட்டமும், மண்ணுளியன் முதலிய சர்ப்பக்கடி, எலி, பூச்சி கடிகளுண்டாவது 9 வித குட்டமும், ஜீவ வதை, மாதா, பிதாக்கள் மன நோக்காட்டாலும், தெய்வ உருக்களை அழித்தலாலும், பெரியோரை பங்கப்படுத்தி மனம் குன்றச் செய்வதாலும் 4வித குட்டமும் ஆக19 குட்டங்களின் காரணமென்றறிக.

தோலைப் பற்றிய 18வகை சொரிப்படைகளைக் கூறுவது கிரந்தி என்று அறிக.  

கருங்கிரந்திகுணம்: தேகத்தில் எரிவு தினவு கண்டு கறுப்பாய் தடித்ததில் அடிக்கடி செம்முளை போல் தோன்றி நீர்கட்டி வெடித்து வற்றி கறுமையான அசருண்டாகி உதிரும் தழும்பு கருப்பாயிருக்கும் சிலவேளை ரணமாய் இருக்கும்                      

 செங்கிரந்திக்குணம்: தேகத்தில் செம்மை நிறமாய் வட்டவட்டமாய் தடித்துப் படர்ந்து இவற்றின் மத்தியில் வெண்மையாய் சுற்று ஓரங்களில் முளைமுளையாய்ச் சீழ்கட்டி வற்றிச் சிவந்து சருகுபோல் உதிர்ந்து தழும்பு சிவப்பாய் இருக்கும்         

அரிகிரந்திகுனம்: தேகத்தில் சிறுசிரங்குபோல் தோன்றி படர்ந்து மாறாத்தினவு அரிப்பு காணும்.                                              

ஆலங்காய்கிரந்திகுணம்:
தேகாதியந்தமும் கழற்காய்போல் தோன்றி ஒவ்வொன்றாய் வெடித்துப் புண்ணாகும்.                                          

கள்ளிப்பூகிரந்திகுணம்:
கள்ளிப்பூபோல் தடித்து அரித்து இரணமாகும்.   

பேய்ச்சொறியின் குணம்:
அடிக்கடி தேகத்தில் தினவு கண்டு காசுபோல் தடித்துச் சிவந்து மறையும். 

நம் உடலில் உள்தோல்(enterdermis) வெளிதோல்(epidermis) களில் வீக்கம்,எரிச்சல்,வலி உண்டு பண்ணுவதற்கு டெர்மட்டிட்டிஸ்(dermatitis) என்று பெயர்.                                                         
படர்தாமரை(eczema);பலவகை உண்டு.                                                                                                        அழுகின்றஎக்ஸிமா (weeping eczema):
சொறிந்த இடங்களிலிருந்து நீர் வடியும் .                                      
குடியேறும் எக்ஸிமா (migrating eczema):
ஓர் இடத்தில் குணமாகி மற்றோரிடத்தில் தோன்றும்.                                                          
  
எரிஸிப்பிலஸ்(erysipelas):
தோலுக்கு அடியில் உள்ள நிணநீர்க்குழாய் பாதிக்கப்படுவதால் உடலில் எந்த இடத்திலும் தோன்றும்.  தோன்றிய இடத்தில் நமைச்சல்,எரிச்சல்,வலி மூன்றும் இருக்கும்.தோன்றும் முன் குளிர், காய்ச்சல், தோலில் தடிப்பு விறைப்பு. தோல் சிவத்தல்,வீக்கம், கொப்புளம் காணும்

எரீத்தமா(erythema):
தோல் சிவந்து காணும். அளவுக்கு மிஞ்சிய மது,அஜீரணம் போன்றவற்றால் உண்டாகும். 

இக்தியோசிஸ் (ichthyosis ): தடிக்கச்செய்து பாம்பு,மீன் போன்றவற்றிற்கு இருப்பது போல் செதில்களை தோற்றுவிப்பது.  

  
இம்பெட்டிகோ(Impetigo):
முகம்,கழுத்து,கைகள் இவற்றில் கொப்புளங்களாக வெடித்து பொருக்குகளாக உதிரும். போஷாக்குக் குறைவினால் தோன்றும்.  

 எச்சில்தழும்பு(Ringworm/tinea):
வட்டமாக தோல் மஞ்சள் நிறமாய் தோன்றி,நமைச்சல் உண்டாக்கி சொறிந்தால் உதிரும்.  

ஸைக்கோஸிஸ் (sycosis/Barber's rash )
முகவாய்க்கட்டையில் தோன்றும். நமைச்சல், எரிச்சல், வீக்கம்,வலி எல்லாம் கலந்திருக்கும். 

ஷிங்கிள்ஸ் (Shingles/herpes zoster):
பெருங்குடலில் உள்ள நச்சுநீர்கள் நரம்பு மண்டலத்தை தாக்குவதால் உண்டாகும்.4 நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். இறங்கும் போது வயிறு,முகம், நெஞ்சு,கைகளில் மொச்சை அல்லது பட்டானியளவு கொப்புளங்கள் 10-20 தோன்றும். கொப்புளங்களைச்சுற்றி வீக்கம்,எரிச்சல் காணும். தாமாகவே உடைந்து சீழ் வடியும்.



இரத்தத் தட்டுக்கள் 
 குறித்த  பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.



அக்கு பிரஷரில் தூக்கமின்மைக்கு தீர்வு 

என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.





இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

அக்கு பிரஷரில் தூக்கமின்மைக்கு தீர்வு

அக்கு பிரஷரில் தூக்கமின்மைக்கு
தீர்வு



Tuesday, August 28, 2018

இரா கிருபாகரன் பேசும் ஆங்கிலம்/ RA KIRUBAKARAN Chenni Information Technology

இரா கிருபாகரன் பேசும் ஆங்கிலம்/
RA KIRUBAKARAN Chenni Information Technology
 



இரத்தத் தட்டுக்கள்

இரத்தத் தட்டுக்கள்



குறைந்த இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் அதிகரிப்பதற்கான 10 வழிகள், இதோ!

பப்பாளி 

பப்பாளிப் பழம் மற்றும் அதன் இலைகள் சில நாட்களிலேயே உங்கள் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை, பப்பாளி இலையின் சாறால் அதிகரித்துள்ளதை 2009-இல் மலேசியாவில் உள்ள ஏசியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கண்டறிந்தது. 

பழுத்த பப்பாளியை உண்ணுங்கள் அல்லது சிறிது எலுமிச்சை சேர்க்கப்பட்ட ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் தினமும் 2-3 முறை குடியுங்கள். பப்பாளி இலையின் காம்பை நீக்கி, அவைகளை ஒரு உரலில் போட்டு அரைத்து, ஜூஸை எடுங்கள். 2 டீஸ்பூன் அளவிலான இந்த கசப்பு சாற்றை தினமும் 2 முறை குடியுங்கள்.

கோதுமை புல் 

இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோதுமை புல் பயனை அளிக்கிறது என இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் யூனிவெர்சல் ஃபார்மஸி அண்ட் லைப் சயின்சஸ் 2011-ல் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. 

சொல்லப்போனால், ஹீமோகுளோபின், சிவப்பு இரத்த அணுக்கள், மொத்த வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் தனிப்பட்ட வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிக்க இது உதவுகிறது. மனித இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் மூலக்கூறுவை போலவே கோதுமை புல்லில் குளோரோஃபில் மூலக்கூறு அதிகமாக உள்ளதால், இது சாத்தியமாகிறது. அதற்கு தினமும் ½ கப் கோதுமை புல் சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சேர்த்து குடிக்கவும்.

பூசணிக்காய்

இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவிடும் மற்றொரு உணவு தான் பூசணிக்காய். வைட்டமின் ஏ வளமையாக உள்ளது அது சரியான இரத்தத் தட்டுக்களின் வளர்ச்சிக்கு உதவிடும். மேலும் அணுக்களில் உற்பத்தியாகும் புரதத்தை சீராக்கும். இரத்தத் தட்டுக்களின் அளவை உயர்த்த இது மிகவும் முக்கியமாகும்.

நற்பதமான ½ டம்ளர் பூசணிக்காய் ஜூசுடன், டீஸ்பூன் தேனை கலந்து, தினமும் 2-3 முறை குடிக்கவும். பூசணிக்காயை சூப், அவியல் மற்றும் வாட்டிய உணவுகளிலும் சேர்த்திடலாம்.

கீரை

கீரையில் வைட்டமின் கே வளமையாக உள்ளது. இது குறைந்த இரத்தத் தட்டுக்கள் கோளாறுக்கு சிக்கிச்சையளிக்க உதவிடும். சீரான முறையில் இரத்த உறைதல் ஏற்பட வைட்டமின் கே தேவையானதாகும். இதனால் அளவுக்கு அதிகமாக ஏற்படும் இரத்த கசிவு இடர்பாடு குறையும்.

நற்பதமான 4-5 கீரை இலைகளை 2 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அதனை ஆற வைத்து, அதனுடன் 1/2 டம்ளர் தக்காளி சாற்றை கலக்கவும். இதனை தினமும் 3 முறை குடிக்கவும். இந்த பச்சை காய்கறியை சாலட், ஸ்மூத்தி மற்றும் சூப் ஆகியவைகளுடனும் சேர்த்துக் கொள்ளலாம்.

வைட்டமின் சி

இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அஸ்கார்பிக் அமிலம் என அழைக்கப்படும் வைட்டமின் சி உட்கொள்ளும் அளவை அதிகரிக்க வேண்டும். வைட்டமின் சி உங்கள் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும் என 1990-ல் ஜாப்பனீஸ் ஜர்னல் ஆஃப் ஹீமடாலாஜி வெளியிட்டுள்ள ஆய்வில் கூறியுள்ளது.

சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்டான இதனை அதிகமாக எடுத்துக் கொண்டால், இயக்க உறுப்புகளில் இருந்து இரத்தத் தட்டுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும். உங்கள் வயது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்து, உங்கள் உடலுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 400-2000 மி.கி. ஆலவிலான வைட்டமின் சி தேவைப்படும். எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, மஞ்சள் முலாம்பழம், கிவி, கீரை, குடை மிளகாய் மற்றும் பச்சைப் பூக்கோசு போன்ற வைட்டமின் சி வளமையாக உள்ள உணவுகளை உண்ணுங்கள். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு, தினமும் வைட்டமின் சி மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய்கள்

உங்கள் இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புகழ்பெற்ற ஆயுர்வேத சிகிச்சையான நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும்.

காலையில் வெறும் வயிற்றில் 3-4 நெல்லிக்காய்களை உண்ணுங்கள். இல்லையென்றால், நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் தேனை தலா 2 டீஸ்பூன் கலந்து தினமும் 2-3 முறை குடியுங்கள். நெல்லிக்காயை கொண்டு வீட்டில் செய்யப்பட்ட ஜாம் அல்லது ஊறுகாயையும் உண்ணலாம்.

நல்லெண்ணெய்

குறைந்த வெப்பநிலையில் தயார் செய்யப்பட்ட இந்த எண்ணெய் உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இயற்கையான வழியில் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் தன்மைகளை நல்லெண்ணெய் கொண்டுள்ளது. இயக்க உறுப்பு பாதிப்புகள் மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

உயர் தரமுள்ள நல்லெண்ணெய்யை 1-2 டீஸ்பூன் அளவு தினமும் குடியுங்கள். நிணநீர்முடிச்சு பகுதிகளில் நல்லெண்ணெய்யை வெளிப்புறமாகவும் பல முறை தடவலாம். இதுவும் உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கும். கூடுதலாக, குறைந்த வெப்பநிலையில் தயார் செய்யப்பட்ட இந்த எண்ணெய்யை சமயலுக்கும் பயன்படுத்துங்கள்

பீட்ரூட்

இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பீட்ரூட் உண்ணுவது மற்றொரு புகழ்பெற்ற உணவு முறையாக கருதப்படுகிறது. இயற்கையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் குருதி தேங்கு நிலை தன்மைகள் இதில் அதிகமாக உள்ளதால், உங்கள் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை கொஞ்ச நாட்களிலேயே வேகமாக அதிகரித்து விடும்.

நற்பதமான 1 டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸை தினமும் 3 தடவை குடியுங்கள். மற்றொரு முறை - 3 டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸை 1 டம்ளர் கேரட் ஜூசுடன் கலந்து தினமும் இரண்டு முறை குடிக்கவும்.

தண்ணீர்

இரத்த அணுக்கள் தண்ணீர் மற்றும் புரதத்தால் ஆனது. அதனால் தினமும் அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்த இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை என வரும் போது, குளிர்ந்த நீர் குடிப்பதை தவிர்க்கவும். அதற்கு காரணம் இது உங்கள் செரிமானப் பாதையை பாதிக்கும். அதனால் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சாது.

மாறாக வடிகட்டிய மற்றும் தூய்மைப்படுத்தப்பட்ட குளிர்ந்த தண்ணீரை குடியுங்கள். இதனால் உங்கள் உடலில் இரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாக உதவும். இதனால் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையும் மேம்படும். தினமும் 8-10 டம்ளர் குளிர்ந்த தண்ணீரை குடியுங்கள்.




மிகப்பெரிய சுயராஜ்ய உறுப்பா இந்த மூளை?

என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.

50 நோய்களுக்கு 50 பொருட்களை கொண்டு தீர்வு என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.





இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்




Monday, August 27, 2018

மிகப்பெரிய சுயராஜ்ய உறுப்பா இந்த மூளை?

மிகப்பெரிய சுயராஜ்ய உறுப்பா  இந்த மூளை?



ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும்  அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗

1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். 

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும். 

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். 

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். 

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். 

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். 

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். 

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். 

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார். 

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். 

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார். 

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். 

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். 

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். 

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. 

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். 

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும். 

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். 

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா? 

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? 

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. 

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? 

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். 

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!

மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து, கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!

ஆரோக்யம் அனுபவியுங்கள்.......!.


மன அழுத்தத்திற்கு அக்கு பிரஷர் புள்ளி என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.



50 நோய்களுக்கு 50 பொருட்களை கொண்டு தீர்வு என்னும் பதிவைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.





இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்


Sunday, August 26, 2018

ஆங்கிலமும் கற்போம் பகுதி - 4 Words related to delicious சுவை/ருசி/ சுவைநலம் சார்ந்த ஆங்கில வார்தைகள்

ஆங்கிலமும் கற்போம் பகுதி - 4

Words related to delicious

சுவை/ருசி/ சுவைநலம் சார்ந்த ஆங்கில வார்தைகள்



1. Scrumptious: (சாக்லேட், கேக் போன்றவை மிக சுவையாக இருப்பது)
The cake is scrumptious. I want to eat another piece!

2. Delectable: (மனநிறைவான உணவு)
The restaurant serves delectable food. Everything is good.

3. Appetizing: (சாப்பிடும் ஆர்வத்தைத் தூண்டுகின்ற)
Your dessert looks appetizing. I should have ordered the same.

4. Tasty: (சுவையான)
This is very tasty ice-cream! You should have some.

5. Flavorful (மிகுந்த மணமுள்ள)
Her food is always very flavorful. She cooks with strong spices.

6. Mouth-watering (எச்சில் ஊற வைக்கின்ற)
Your sundae is mouth watering. It looks so delicious!

7. Delish: (மிகுந்த சுவையான)
My banana split is delish. It's a great treat for a summer day.

8. Yummy:  (மிகுந்த சுவையான)
The ice cream store makes yummy homemade ice cream.

Thanks to Miss. Nivetha MA

மன அழுத்தத்திற்கு அக்கு பிரஷர் புள்ளி

மன அழுத்தத்திற்கு அக்கு பிரஷர் புள்ளி



ஆபத்தானத மோமோ விளையாட்டு?

ஆபத்தானத மோமோ விளையாட்டு?




📲 இணையத்தில் எவ்வளவு நல்ல விசயங்கள் இருக்கின்றனவோ அதற்கு எந்தவகையிலும் குறைவில்லாமல் தீய விசயங்களும் இருக்கின்றன.

👉🏾 அப்படிப்பட்ட தீய விசயங்களில் ஒன்று இளைஞர்களை சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டிடும் விளையாட்டுக்கள் (Death Games).
சில மாதங்களுக்கு முன்பாக புளுவேல் (BlueWhale) விளையாட்டு வந்தது ,தற்போது அதனைப்போலவே மோமோ (MoMo Challenge) என்கிற விளையாட்டு வந்திருக்கின்றது.

இவை இரண்டுமே விளையாடுவோரை தற்கொலைக்கு தூண்டக்கூடிய விளையாட்டுக்கள்.


⭕ மோமோ விளையாட்டு என்றால் என்ன ?


👉🏾 தற்போது பிரபலமடைந்து கொண்டிருக்கும் ஆன்லைன் கேம் , இதன் நோக்கம் தற்கொலைக்கு தூண்டுவது தான்.

அர்ஜென்டினாவில் 12 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணம் மோமோ விளையாட்டுதான் என போலீசார் தெரிவித்தது . மேலும் பாதுகாப்பு ஏஜென்சிகளும்  , போலீசாரும் மோமோ விளையாட்டினை விளையாட தங்களது பிள்ளைகளை அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தியது .

தற்கொலைக்கு தூண்டும் மோமோ விளையாட்டு..

மோமோ விளையாட்டினால் இந்தியாவில் இதுவரை பாதிப்புகள் இல்லையென்றாலும் நமது பிள்ளைகளுக்கு அது குறித்து தெரிவித்து பாதுக்காப்பாக இருக்க செய்வது நல்லது . ஆரம்பகாலங்களில் facebook group களின் மூலமாக ஆரம்பித்த மோமோ விளையாட்டு தற்போது whatsapp வாயிலாகவும் வர ஆரம்பித்துள்ளது .

நாம் ஒருமுறை மோமோ வை தொடர்பு கொண்டுவிட்டால் அந்த எண்ணில் இருந்து தொடர்ச்சியாக நமக்கு மெசேஜ்கள் வர ஆரம்பிக்கும் . நம்முடன் நட்புடன் பேச ஆரம்பிக்கும் மோமோ பிறகு எப்படி புளுவேள் விளையாட்டில் தொடர்ச்சியாக நமக்கு சிறு சிறு task (போட்டி ) வழங்கப்படுமோ அதனை போன்றே இதனை செய் அதனை செய் என போட்டிகளை கொடுக்க ஆரம்பிக்கும். போகப்போக நம்மை அதனுடைய கட்டுப்பாட்டில் கொண்டுபோகும் அளவிற்கு ஒவ்வொரு விளையாட்டும் மனநிலையை பாதிக்க கூடியதாக இருக்கும்.

 ஆனால் இரண்டினுடைய நோக்கமும் இறுதியில் தற்கொலையை தூண்டுவதுதான் .

💢 மோமோ விளையாட்டு எப்படி செயல்படுகிறது ?

உங்களது WhatsApp எண்ணிற்கு புது எண்ணிலிருந்து மெசேஜ் வரும் . தன்னை மோமோ என அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த எண் தன்னை அப்படியே நமது மொபைலில் பதிந்துகொள்ளுமாறு சொல்லும் . மேலும் நம்மோடு அன்பாக பேசி நம்மை பற்றிய சாதாரண தகவல்கள் முதல் அந்தரங்க  தகவல்கள் வரை அனைத்தையுமே பெற முயலும் இந்த மோமோ .

*l⛔ 813 , 52 , 57 என்று தொடங்கும் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம்?

 மோமோ வின் பெயரில் தற்போது மூன்று எண்கள் இருக்கின்றன . ஜப்பானில் இருந்து வரும் எண்ணானது 813 என தொடங்குகிறது , கொலம்பியா எண் 52 என தொடங்குகின்றது , மெக்சிகோ எண் 57 என தொடங்குகின்றது .

👽 மோமோ வின் WhatsApp Profile போட்டோ

ஒரு அன்பான நண்பரை போல பேசிடும் இந்த மோமோ ஆரம்பத்தில் சாதாரண விசயங்களை செய்யச்சொல்லி அன்பு கட்டளையிடும் . சிறுவர்கள் எளிமையானதுதானே என ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பிப்பார்கள் .

பிறகு தான் மோமோ அசாதரணமான வேலைகளை செய்யச்சொல்லும் . நாம் சிலவற்றை செய்யாமல் மறுக்கும்போது நமது வீட்டில் இருப்பவர்களுக்கு தொந்தரவு கொடுப்பேன் எனவும் பயமுறுத்துவேன் எனவும் மிரட்ட ஆரம்பிக்கிறது .

 இறுதியாக நமக்கு கொடுக்கப்படும் task தற்கொலை செய்துகொள்வது தான் .

👺 விளையாடா விட்டால் மோமோ நம்மை மிரட்டுவது எப்படி ?

மோமோ ஒரு ஆன்லைன் விளையாட்டு தானே எப்படி நாம் இதனைச்செய்ய வேண்டும் அதனை செய்யவேண்டும் என வற்புறுத்துகிறது ? செய்யாமல் போனால் என்னாகும் என கேட்கலாம் .

மிகச்சரியான கேள்வி , இங்குதான் மோமோவின் செயல்பாட்டினை நாம் புரிந்துகொள்ளவேண்டும் . மோமோ இரண்டுவழிகளில் நம்மிடமிருந்து தகவல்களை திருடுகின்றது.

ஒன்று நேரடியாக நம்மிடம் சில விசயங்களை செய்யச்சொல்லி பெறும் . உதாரணத்திற்கு அரைகுறை ஆடையோடு போட்டோ  அனுப்பச்சொல்வது  போன்றது .

இரண்டாவதாக , மோமோ நமக்கு அனுப்பிடும் போட்டோவினை டவுன்லோடு செய்திடும்போது அதோடு சேர்த்து அனுப்பப்படும் malware நமது மொபைலில் தரவிறக்கப்பட்டு நம் அனுமதியில்லாமல் இன்ஸ்டால் செய்யப்படும் .

 பிறகு நமது மொபைலில் இருக்கும் தகவல்கள் (photo , video ) என அனைத்தையுமே திருடுகின்றது . மேலும் நமது camera போன்றவற்றை தானாக இயக்கிடும் அளவிற்கு செல்கின்றது .

மோமோ விற்கு பயப்படவேண்டுமா ?

மோமோ விளையாட்டினை சோதிக்க எண்ணி விளையாடியவர்கள், மோமோ நமது மொபைலில் இருக்க கூடிய தகவல்களை திருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர் .

 ஒருமுறை முகத்தினை மூடிக்கொண்டு மெசேஜ் அனுப்பியபோது மோமோவிடமிருந்து வந்த மெசேஜ் “ஏன் முகத்தினை மூடிக்கொண்டு பேசுகிறாய் ? ” . இதன் மூலமாக நம்முடைய அனுமதியில்லாமலே கேமெராவை மோமோ இயக்குவது தெரியவந்துள்ளது .

மோமோ மட்டுமல்ல சாதாரணமாக இணையத்தில் பல ஆப்கள் நம்முடைய தகவல்களை திருடும் வண்ணமும் நம்மை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கான வகையிலுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தை கண்டுமே நாம் பயப்பட்டு தான் ஆகவேண்டும்.

மோமோ பயமுறுத்துவதைப்போல குடும்ப உறுப்பினர்களை ஏதாவது செய்துவிடுவேன் என்று மிரட்டி அதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டதாக செய்தியில்லை .

நாம் பகிர்ந்த அல்லது நமது மொபைலில் இருந்து திருடிய அந்தரங்க தகவல்களை யாருக்கேனும் அனுப்பிவிடுவேன் அல்லது இணையத்தில் கசியவிட்டுவிடுவேன் என மிரட்டலாம் அதனை மோமோவினால் செய்யவும் முடியும்.

பெற்றோர்களும் சிறுவர்களும் எப்படி மோமோவிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது ?

தற்போது சிறுவர்களுக்கு மொபைல் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம் , விளைவு விளையாட்டு என்கிற பெயரில் வருகின்ற அனைத்தையுமே விளையாட தொடங்குகிறார்கள் .

ஆகையால் உங்களது பிள்ளை எவ்வாறு மொபைலை பயன்படுத்துகிறார் , என்னென்ன விளையாட்டுகளை விளையாடுகிறார் என்பதனை குறிப்பிட்ட இடைவெளியில் கண்காணியுங்கள் .

 யாரென்று தெரியாதவர்களிடம் பேசாமல் இருப்பதே பாதுகாப்பானது..

 குழந்தைகளுக்கு ஆப்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துங்கள் .

உங்களது குழந்தையின் நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் இருப்பின் உடனடியாக அதனை கவனித்து அவர்களிடம் பேசிடுங்கள் .

இளைஞர்கள் புதிய எண்களில் இருந்து வருகின்ற image களை தரவிறக்கம் செய்வதோ அல்லது chat செய்வதோ கூடாது .

இணையதளம் எவ்வளவு நல்லதோ அதனைபோலவே பாதுகாப்பற்ற ஆபத்தான விசயங்களையும் கொண்டிருக்கிறது . நாம் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தாலே போதுமானது .
 என்றும் சமூக பணியில்..

பதிவுநாள்: 13.08.2018



Saturday, August 25, 2018

ஆங்கிலமும் கற்போம் பகுதி - 3 / Room / Place related words அறை /இடம் இடம் சார்ந்த ஆங்கில வார்தைகள்

ஆங்கிலமும் கற்போம் பகுதி - 3

Room / Place related words அறை /இடம் இடம் சார்ந்த ஆங்கில வார்தைகள்



1. Shed - A separated building from the house usually for storing garden tools. (வீட்டிலிருந்து ஒதுங்கி தனியாக இருக்கும் அறை, தோட்ட கருவிகள் போன்றவை வைக்க)

2. Loft - A room or space directly under the roof of a house or other building, used for accommodation or storage. (வீட்டு அறையில் மேலே அமைக்கப்படும் அடுக்கு)

3. Attic - A space or room inside or partly inside the roof of a building. (கூம்பு வடிவ மர கூரையில் அமைக்கப்படும் சிறு அறை)

4. Cellar - A room below ground level in a house, often used for storing wine or coal. (தரைதளத்திற்கு கீழே இருக்கும் அறை)

5. Basement - Room below ground level, with windows, used for living and working. (தரைத்தளத்திற்கு கீழே இருக்கம்அறை. ஜன்னல்களுடன் கூடிய அறை)

6. Landing - The Flat area at the top of a staircase. (ஏணிப்படி ஏறி கடைசிப்படிக்கு அடுத்து வரும் சமதள பகுதி)

7. Porch - Covered area before the entrance door. (வாசல் கதவிற்கு முன்பு இருக்கும் பகுதி)

8. Pantry or larder - A room or large cupboard for storing food.  (உணவுப் பொருட்களை சேமித்து வைக்க பயன்படும் அறை)

9. Terrace or patio - A Paved area between the house and garden for sitting and eating, etc. (வீட்டிற்கும் வீட்டு தோட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி)

10. The study - A room for reading, writing, studying in. (படிக்கும் அறை)

11. Balcony - An area with a wall or bars around it that are joined to the outside wall of a building on an upper level. (அறைக்கு வெளியே காற்றோட்டமாக இருக்கும் பகுதி)


Thanks to : Mrs.Nevithitha MA

வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன் ??

வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன் ??


சுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்குஅடையாளமே வாசலில் வாழை மரம் கட்டுவது தான். 

இதை எதற்கோ அழகுக்காக கட்டுவதாகவும், மணமக்கள் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். 

இது ஆன்மிக காரணம். அறிவியல் காரணமும் இதற்கு உண்டு. 

தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனைப் பரவச் செய்கின்றன.

சுபநிகழ்வுக்கு ஏராளமான விருந்தினர்கள் வருவார்கள்.

அவர்கள் விடும் மூச்சுக் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் கலக்கும். அத்துடன் கூடி நிற்பவர்களின் உடல் உஷ்ணம், வியர்வை நாற்றமும் சேர்ந்து கொள்ளும். 

அங்கு கட்டப்பட்டிருக்கும் மாவிலைத் தோரணங்களும், வாழை மரங்களும் காற்றில் பரவி யிருக்கும் கிருமிகளை அழிப்பதோடு, உஷ்ணத்தையும் உறிஞ்சும். 

வாழை மரத்திற்கு எத்தனையோ மருத்துவகுணங்கள் உண்டு. 

வாழைப்பட்டைக்கு விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு. 

பாம்பு கடிக்கு அந்தக்காலத்தில் வாழைத்தண்டு சாறை மருந்தாகக் கொடுப்பர். 

பற்கள் ஒன்றோடொன்று கிட்டிக் கொண்டு சிலர், திறக்க முடியாமல் சிரமப்படுவர். 

இதற்கு வாழைத்தண்டு சாற்றைக் கொடுத்து குணப்படுத்துவர். 

வாழைப்பூ, காய், பழம், நார், பட்டை, தண்டு என்று அனைத்து பாகங்களும் உணவாக பயன்படுகின்றன.

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் வளரும்.

இலையில் இருக்கும் சத்துக்கள், சூடான உணவோடு கலந்து உடம்புக்குள் செல்வதால், தோலில் திரை( சுருக்கம்) ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!