சிறுதானியங்களால் ஏற்படும் மாபெரும் உடல்நல மாற்றங்கள்
சிறுதானியங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண் கிருமிகளின் வளர்ச்சியி TVனை தடுக்கிறது.
பெருங்குடலின் செயல்பாட்டை சீராக்குகிறது. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகின்றன.
உடல் சுறுசுறுப்பிற்கு காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன. சிறுதானியங்களில் அதிகளவு காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது.
சிறுதானியங்கள் ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதயநோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கின்றன. சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின்பி3) ரத்ததத்தில் அதிகளவு கொழுப்பு சேர்வதை குறைக்கிறது.
அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோர்க்கு இரண்டாம் வகை அதாவது இனிசுலின் சார்ந்த சர்க்கரை நோய் வருவதில்லை.
சிறுதானியங்களை அதிகளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவுகின்றன.
சிறுதானிய பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது.
அதிகளவு நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கின்றன.
உடல்பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும் போது உடல்எடை சீராக குறைகிறது.
பைட்டோகெமிக்கல்ஸ் மற்றும் பைட்டிக் அமிலம் ஆகியவை சிறு தானியங்களில் காணப்படுவதால் சிறு தானியங்களை உட்கொள்வோர்க்கு நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
அதுபோலவே பைட்டேட் புற்றுநோய் வராமல் காக்க உதவுகின்றது....
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
கேள்வரகு/கேப்பை/ஆரியம்/ராகி ன் நன்மைகள் என்ற பதிவை கான கீழ்காணும் இணைப்பை (கிளிக்) சொடுக்கவும்.
https://kavimalaravan.blogspot.com/2018/04/blog-post_9.html?m=0
மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூவுடன் இணையுங்கள்.
No comments:
Post a Comment