Tuesday, April 30, 2019

நினைவு கூறத்தக்க கவிதைகளை பதிவு செய்யும் கவிஞர் யார்?? - 2019 11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்?

நினைவு கூறத்தக்க கவிதைகளை பதிவு செய்யும் கவிஞர் யார்?? - 2019

11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள் 


1. எழுத்து மொழியினால் உருவாக்கப்படும் கவிதையானது, மனித உடம்பில் --------------- போல் செயல்படுகிறது.- ஆடைப்போல்

2. பேச்சு மொழியினை கவிதைகளில் பயன்படுத்துவதில் எத்தனை வகையினர் உண்டு? - 3 வகை

3. யாருடைய கவிதைகளில் எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகி விடுவதில்லை? - வால்ட் விட்மன்

4. யாருடைய கவிதைகளில் பேச்சு என்பது மூடிய நிலையில் செயல்படுகிறது? - கவிஞர் மல்லார்மே

5. நினைவு கூறத்தக்க கவிதைகளை பதிவு செய்யும் கவிஞர் யார்? - கவிஞர் மல்லார்மே
..!
6. 'எந்தவித முன்கூட்டியதிட்டமோ ஒழுங்கமைதியோ இன்றி ஒன்றைச் சுட்டுவது போலக் காட்டி உடனே எதையும் சுட்டாமல் முடிந்து போகின்றது" - இம்மாதிரியான கவிதைகளை படைப்பதில் வல்லவர் யார்? - பாப்லோ நெரூடா

7. இராசேந்திரன் என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்? - இந்திரன்

8. சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிப்பெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் யார்? - இந்திரன்

9. இந்திரன் அவர்கள் சாகித்திய அகாடெமி விருது எந்த ஆண்டு பெற்றார்? - 2011

10. 'பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்" என்ற நூலின் ஆசிரியர் யார்? - ஒரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸ்

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்



அமைப்பு பெயர்: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
வேலை இடம்: கல்பாக்கம் தமிழ்நாடு
பணியிடங்கள்  : JRF
கல்வித்தகுதி : B.E./B.Tech, B.Sc, M.Sc, M.Tech
வயது வரம்பு :  21 to 45  வயதுக்குள் இருக்க வேண்டும். [வயது வரம்பில் தளர்வு உண்டு ]
சம்பளம் : Rs. 31,000
தேர்வுமுறை : நேர்முகத்தேர்வு 
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் :20.05.2019
அதிகார்வப்பூர்வ அறிவிப்பு &விண்ணப்பபடிவம்: 
IGCAR Official Website Career PageClick Here
IGCAR Official Notification PDFClick Here
IGCAR Online Application FormClick Here

POLICE/SI MATHS சாராசரிக் கணக்குகள்

POLICE/SI MATHS சாராசரிக் கணக்குகள்





1. ஒரு நூலகத்திற்கு சராசரியாக ஞாயிற்றுக் கிழமைகளில் 510 பேரும், மற்ற நாட்களில் சராசரியாக 240 பேரும் வருகை புரிகின்றனர். ஞாயிற்றுக் கிழமையில் தொடங்கி 30 நாட்களை உடைய ஒரு மாதத்தின் சராசரி வாசகர்கள் எத்தனை பேர்?

விடை : 285

தீர்வு : மொத்த ஞாயிற்றுக் கிழமைகள் (1, 8, 15, 22, 29) =, 5 நாட்கள்

மற்ற நாட்கள் (30 - 5) = 25 நாட்கள்

மொத்த நாட்கள் = 5 + 25 = 30

ஞாயிற்றுக் கிழமை வாசகர்களின் எண்ணிக்கை = 5 * 510 = 2550

மற்ற நாட்கள் வாசகர்களின் எண்ணிக்கை = 25 * 240 = 6000

மொத்த வாசகர்களின் எண்ணிக்கை = 2550 + 6000 = 8550

சராசரி வாசகர்களின் எண்ணிக்கை ஸ்ரீ மொத்த வாசகர்கள் / மொத்த நாட்கள்

= 8550 / 30 = 285

2. நகரம் A- யிலிருந்து B-க்கு 80 கி.மீ / மணி வேகத்திலும், நகரம் B- யிலிருந்து A-க்கு 120 கி.மீ / மணி வேகத்திலும் ஒரு வாகனம் பயணித்தது எனில் அதன் சராசரி வேகம் காண்க.

விடை : 96 கிமீ / மணி

தீர்வு : ஒரு வாகனம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஓ வேகத்தில் சென்றடைந்தது, லு வேகத்தில் புறப்பட்ட இடத்தை வந்தடையுமாயின் சராசரி வேகம் =(2ஓலு) / (ஓ + லு)

சராசரி வேகம் ஸ்ரீ (2ஓலு) / (ஓ + லு) ஸ்ரீ (2 ழூ 80 ழூ 120) / (80+120)

ஸ்ரீ (2 ழூ 80 ழூ 120) / 200 ஸ்ரீ 96
3. 10 எண்களின் சராசரி 18. ஒவ்வொரு எண்ணுடனும் 5 ஐக் கூட்டினால் கிடைக்கும் எண்களின் சராசரி என்ன?

விடை : 23

தீர்வு : 10 எண்களின் மொத்த மதிப்பு ஸ்ரீ சராசரி ழூ எண்ணிக்கை

ஸ்ரீ 18 ழூ 10

ஸ்ரீ 180

அதிகரித்த மதிப்பு ஸ்ரீ 5 ழூ 10 ஸ்ரீ 50

10 எண்களின் புதிய மதிப்பு ஸ்ரீ 180 + 50 ஸ்ரீ 230

10 எண்களின் புதிய சராசரி ஸ்ரீ 230 ஃ 10 ஸ்ரீ 23


இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB

Saturday, April 27, 2019

BE|B.TECH|பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்

BE|B.TECH|பாரத் 
ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்



நிறுவனத்தின் பெயர்: பாரத் 
ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்

வேலை வகை: மத்திய அரசு வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

வேலை இடம்: ஹைதராபாத், தெலுங்கானா

பணியிடங்கள்  : 
SI NoName of PostNo of Vacancies
Bhind**Bah**Karhal**Total
1.Engineer (FTA-Civil)2226
2.Engineer (FTA-Electrical)1113
3.Supervisor (FTA-Civil)3339
4.Supervisor (FTA-Electrical)3339
Total99927

கல்வித்தகுதி : Diploma, B.E/B.Tech

வயது வரம்பு :  35 வயதுக்குள் இருக்க வேண்டும். [வயது வரம்பில் தளர்வு உண்டு ]

சம்பளம் : 
SI NoName of PostPay scale
1.Engineer (FTA-Civil)Rs.66,000/-
2.Engineer (FTA-Electrical)Rs.66,000/-
3.Supervisor (FTA-Civil)Rs.36,850/-
4.Supervisor (FTA-Electrical)Rs.36,850/-

தேர்வுமுறை :
In case of receipt of more number of eligible applications, the number of candidates to be called for interview will be restricted to 1:10 to the number of vacancies, based on qualifying marks in the relevant qualification of Degree for Engineers (Civil & Electrical) and Diploma for Supervisors (Civil & Electrical). In case the number of eligible applications is less than 1:10 to the number of vacancies, all eligible candidates will be called for the interview.

விண்ணப்பக்கட்டணம் : 
  • Unreserved, OBC and EWS - Rs.200/-
  • ST/SC/Ex-s/PWD க்கு -கிடையாது 
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் : 14.05.2019

அதிகார்வப்பூர்வ அறிவிப்பு &விண்ணப்பபடிவம்: 
BHEL Official Notification Click Here
BHEL Online Application FormClick Here

காபி குடிப்பது நல்லதா,..? கெட்டதா

காபி குடிப்பது நல்லதா,..? கெட்டதா??


1 000 ஆண்டுக்கு முன்பு நீங்கள் காட்டில்
நடந்து கொண்டிருக்கிறீர்கள். 

எதிரெ ஒரு
சிங்கம். 

உடல் அபாய எச்சரிக்கை மணியை
அடிக்கிறது. 

உடனே அட்ரினலின்,
கார்ட்டிசோல் எனும் இரு ஸ்ட்ரெஸ்
ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. 

இந்த
ஹார்மோன்கள் உடலை யுத்தம் அல்லது ஓட்டம்
எனும் இரு நிலைகளுக்கு தயார்
படுத்துகின்றன. 

ஓடுகையில் இதயத்துக்கு
நிறைய ரத்தம் வேண்டும். 

அதனால் உங்கள்
இதயம் அதிவேகத்தில் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. 

பிளட் பிரஷர் அதிகரிக்கிறது.
கொஞ்ச, நஞ்சம் இருந்த தூக்கமும்
விடைபெறுகிறது. 

உடலுக்கு
புத்துணர்ச்சி கிடைக்கிறது. 

சிங்கம்
உங்களை துரத்துகிறது. 

நீங்கள் தாவி ஓடி
மரத்தின் மேல் ஏறி தப்புகிறீர்கள். 

சிங்கம்
ஏமாற்றத்துடன் அகன்று விடுகிறது.

மரத்தின் மேல் இருந்து இறங்குகிறீர்கள்.

அட்ரினலின், கார்ட்டிசோல் அளவுகள்
குறைகின்றன. 

இதயதுடிப்பு நார்மல்
ஆகிறது. 

ரத்த அழுத்தம் குறைகிறது.

*கிபி 2019* காலையில் எழுந்து ஒரு கப்
காப்பியை குடிக்கிறீர்கள். 

உடனே அது
உங்கள் உடலில் அட்ரினலின், கார்ட்டிசோல்
எனும் இரு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை
யும் சுரக்க வைக்கிறது. 

ஆதிமனிதன்
சிங்கத்தை கண்டு பயப்பட்டபோது அவன்
உடலில் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தும்
இப்போதும் நிகழ்கின்றன. 

உடல் மிகபெரும்
ஓட்டம் அல்லது போருக்கு தயார் ஆகையில்..
நீங்கள் இது இரண்டையும் செய்யாமல்
நியூஸ்ப்பேப்பர் படிக்கிறீர்கள். 

உங்கள்  இதயம்
அதிவேகத்தில் ரத்ததை பம்ப் செய்கிறது.

ஆனால் அதுக்கு எந்த பலனும் இல்லை.

நீங்கள் அடுத்து மெதுவாக குளிக்க
செல்கிறீர்கள்.

ஆக ஒரு சிங்கத்தை கண்டால் உருவாகும்
மன அழுத்தம்.. ஒரு காபியை குடிப்பதால்
உருவாகிறது.

அத்துடன் நிற்கிறதா? இல்லை. 

அடுத்து 10
மணிக்கு இன்னொரு காபி. உடல் மீண்டும்
சிங்கத்தை கண்ட அதிர்ச்சியில் போருக்கு
தயார் ஆகிறது. 

ஆனால் இப்பவும்
சிங்கத்தை காணோம். 

நீங்கள் ஆபிஸில்
பைலை பார்த்தபடி காபி 
குடிக்கிறீர்கள்
.

இப்படி ஒரு நாளுக்கு நாலைந்து தடவை
உடலுக்கு சிங்கத்தை தரிசனம் செய்யும்
அளவு அதிர்ச்சியை உடலுக்கு
கொடுத்தால் என்ன ஆகும்?

அதிகரிக்கும் மன அழுத்தம், டிப்ரஷன்,
பிளட்பிரஷர், விரைவில் வயது ஆவது, உடல்
உறுப்புகள் தளர்வது, மாரடைப்பு என
அனைத்தும் மன அழுத்தத்தால் வரும். 

முடி கொட்டும், நரைக்கும். 

இளவயதில் முதுமை
அடைவோம்.

போதாகுறைக்கு பெப்சி,கோக்கில் கூட இப்போது கபின் சேர்க்கபடுகிறது. 

காபி சுவை உள்ள மிட்டாய்கள், ஐஸ்க்ரீம் கூட
வருகின்றன. 

நம் உடலுக்கு பலத்த மன
அழுத்தத்தை இவை அனைத்தும்
உருவாக்கும்.

காபி என்பது புத்துணர்வு அளிக்கும்
பானமல்ல. 
அதிர்ச்சி அளிக்கும் பானம்.

தினம் 4 காப்பி குடிப்பது ஒரு அடிக்ஷன்.
அதை விட்டு தொலைப்பது தான் தப்ப ஒரே
வழி.

பூனைக்காலி விதை


பூனைக்காலி விதை


பூனைக்காலி விதையை ஆண், பெண் இருவருமே சாப்பிடலாம். 

 பூனைக்காலி விதையை பாலில் போட்டு வேகவைத்து அதன் தோலை நீக்கி நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளவும்.

 இந்தப் பொடியை தினசரி இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர மூளையை  பலப்படுத்துவது, முதுகெலும்பு வலியை குணப்படுத்துவது,உடலைத் தேற்றுவது, பக்கவாதத்தை குணப்படுத்துவது, மட்டுமின்றி ஆண்களுக்கு உண்டாகும் நரம்புத் தளர்ச்சியையும் சரி செய்யும். 

சித்திர மூல வேர்ப்பட்டை – 50 கிராம்

பூனைக்காலி விதை – 50 கிராம்

முருங்கை விதை – 50 கிராம்

அக்ரகாரம் – 50 கிராம்

மஞ்சள் – 50 கிராம்

 இவற்றை தூள் செய்து வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட நடுக்கு வாதம் மற்றும் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில்

கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில்.


ஒரு பெண்மணி கேட்டார்.!

மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ? என்று?

அதற்குப் பதிலளித்தார் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவுமுள்ள ஒரு அதிகாரி:

முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன.
இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல்.
இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை. 

இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன். 
கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.

இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன.
கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும். 

இவற்றை உணவாக கொள்ள வண்டுகள் , நண்டுகள் 
பாம்புகள், பாப்பிராண்டிகள், 
உடும்புகள், ஓணான்கள்,
கோழிகள், குருவிகள் 
அலுங்குகள், ஆமைகள் 
இப்படி பல உயிர்களும்
இவற்றை உணவாக கொள்ள 
பாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.

மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும்,
கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும்,
மூலிகைகளும் கிடைத்தன. (ஏன் இன்று பணமழை பொழியும் கண்வலிப்பூக்கள் காய்கள் வேலியில்தான் ஆங்காங்கு படர்ந்திருக்கும்)
இங்கே பலருக்கும் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில் 
ஓனானைக்கண்டால் ஓட ஓட விரட்டு
பாப்பிராண்டி கண்டால் பாவம்ன்னு விடு என்று ஓனான் வேட்டைக்குப் போன அனுபவம் கண்டிப்பாக இருக்கும். 

இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓனான்கள், தவளைகள்  பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன.

பாம்புகள், ஆந்தைகள்  எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. 

பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. 

"மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின."

ஆனால் 
இன்று .....???

விவசாய நிலங்கள் ப்ளாட்டுகள் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகள் ஆன போது இட்டேரிகள் மறைந்தன.
கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் வேலியை அழித்து காக்கா குருவி கூட கூடு கட்டாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன.

இதனால் எண்ணற்ற ஜீவராசிகள் வாழ இடமின்றி போனது.

அதில் முக்கியமானது குள்ளநரிகள். 
இவை மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும். 

இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன.

விளைவு ??
மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டன.

" நாம் விதைத்தது நாம் அறுவடை செய்கிறோம்."

கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும்.

மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள்.

இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.

POLICE|SI : முந்தைய ஆண்டு வினாத்தாள் - 2018

POLICE|SI : முந்தைய ஆண்டு வினாத்தாள் - 2018



1. புவிஈர்ப்பு மாறிலி பு-ன் SI அலகு என்ன? - Nm^2kg-2

2. ரூபி லேசரிலிருந்து வெளிப்படும் ஒளியின் நிறம் என்ன? - சிகப்பு

3. ஒளிப்போட்டான் பெற்றிருப்பது என்ன? - ஓய்வு நிறை மற்றும் ஆற்றல் சுழி

4. ஒரு குழிலென்சின் குவியத்தூரம் 4 மீ எனில் லென்சின் திறன்? - -(0.25) னு

5. ஒரு கலோரி என்பது எத்தனை ஜூல்? - 4.186 ஜூல்

6. சூரிய ஒளி புவியினை வந்தடையும் நேரம் எவ்வளவு? - 8 நிமிடம் 20 வினாடி

7. ஹெக்சா டெசிமல் எண் தொகுப்பில் அடிப்படை எண் என்ன? - 16

8. ஒரு டெஸ்லா என்பது எதனைக் குறிக்கிறது? - வெபர் மீட்டர்-2

9. ஒரு வானியல் அலகின் மதிப்பு என்ன? - 1.496 * 1011 M

10. ஒரு கிராம் நிறையுள்ள பொருளானது முழுவதுமாக ஆற்றலாக மாற்றப்படுகிறது எனில் அதன் மதிப்பு? - 9*  1016 ஜூல்

###TNPSC|POLICE|தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் எது? 11-ஆம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்

தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் எது?
11-ஆம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள்


1. நீலகேசி என்பது ------- எவ்வகை காப்பியங்களுள் ஒன்று? - ஐஞ்சிறுங்காப்பியம்

2. நீலகேசி என்னும் வாத நு}ல் எந்த நூலுக்கு எதிராக எழுதப்பட்டது? - குண்டலகேசி

3. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நு}ல் எது? - நீலகேசி

4. சமண நெறியை நிலைநாட்டும் நீலகேசி எவ்வகை பாக்களால் ஆனது? - விருத்தப்பா

5. நீலகேசி நூலில் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு? - 11, 894


6. நீலகேசிநூலின் உரையாசிரியர; யார;? - சமய திவாகர வாமன முனிவர்

7. வாத நூலான நீலகேசியின் ஆசிரியர் யார்? - பெயர் தெரியவில்லை

8. பழந்தமிழரின் வாழ்வியல் கருவு+லமாகக் கருதப்படும் எட்டுத்தொகை நு}ல் எது? - புறநானனூறு

9. ஒரு வேந்தன் எதிர் சென்று அவனது தன்மையை கூறிப் புகழ்வது ------------- துறையாகும். - இயன்மொழித் துறை

10. செஞ்ஞாயிறு இலக்கணக் குறிப்பு தருக? - பண்புத்தொகை

Wednesday, April 24, 2019

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு ||மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக்


BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு ||மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக்

பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ணி: Engineer Trainee


காலியிடங்கள்: 100



வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.



தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000


பணி: Executive Trainee (HR/Finance)
காலியிடங்கள்: 45



வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தகுதி: மனித மேலாண்மை, நிதியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
மேலும் Executive Trainee(HR) பணிக்கு Human Resource Management, Personnel Management, Industrial Relations, Social Work, Business Administration துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Executive Trainee (Finance) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் CA, CWA,CMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.05.2019 - 26.05.2019

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. மற்ற அனைத்து பிரிவினம் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2019

##TN_POLICE|மனித மூளை உற்பத்தி செய்யும் சக்தியின் அளவு என்ன?

##TN_POLICE|மனித மூளை உற்பத்தி செய்யும் சக்தியின் அளவு என்ன



11-ம் வகுப்பு பொதுத்தமிழ் வினா விடைகள் 

1. புத்திசாலித்தனம் என்பது என்ன? - நியு+ரான்களின் வலைப்பின்னல்

2. நம் மூளையின் பல செயல்பாடுகளைச் ------------ மூலம் செய்யலாம். - சிலிக்கன் சில்லுகள்

3. சராசரி மனித மூளையின் எடை என்ன? - 1349 கிராம்

4. மைக்ரோ வாட் என்பது ஒரு வாட் சக்தியில் பத்துலட்சத்தில் எவ்வளவு? - ஒரு பாகம்

5. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு தேவைப்படும் குருதியின் அளவு எவ்வளவு? - 800 மில்லி 

6. மனித மூளை உற்பத்தி செய்யும் சக்தியின் அளவு எவ்வளவு? - 10 வாட்

7. நம் மூளையின் செல்கள் நாள்தோறும் -------------- இறந்து போகின்றன. - ஆயிரக்கணக்கில் 

8. மனிதனின் பேச்சுத் திறமை மூளையின் ---------- பகுதிச் சுளையில் இருக்கிறது. - இடது முன்பகுதி

9. மூளையின் ஒருபகுதி ப்ரோக்காஸ் ஏரியா என்று அழைக்கப்படக் காரணமாய் இருந்தவர். - பியர் பால் ப்ரோக்கோ 

10. நோம் சோம்ஸ்கி கண்டறிந்தது --------------- - நாம் பிறக்கும் போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம்.

சீத்தாப்பழத்தின் மருத்துவ பலன்கள்

சீத்தாப்பழத்தின் மருத்துவ பலன்கள் 



சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.


 முகப் பருக்கள் குணமடையும் :

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

 மேனி பளபளப்பாகும்:

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும் .


 எலும்பு பலமடையும் :

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.


 நினைவாற்றல் அதிகரிக்கும் :

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

  தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.


Tuesday, April 23, 2019

தங்கம் வென்ற தமிழச்சி - ஆசிய தடகளத்தில் கோமதி மாரிமுத்து அபாரம் #AAC2019

தங்கம் வென்ற தமிழச்சி - ஆசிய தடகளத்தில் கோமதி மாரிமுத்து அபாரம் #AAC2019


தோஹா ஆசிய தடகளப் போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
தங்கம் வெள்ற தமிழச்சி கோமதி
இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். ஏற்கெனவே, தேசிய சாதனைக்குச் சொந்தக்காரரான இவர், 2.02.70 நிமிடங்களில் இலக்கை எட்டி சாதனை படைத்தார்.  இத்தனைக்கும், கோமதிக்கு நல்ல ஸ்டார்ட்டிங் கிடைக்கவில்லை. இதனால், சீன வீராங்கனை வங் சுன் யு முன்னிலை பெற்றார். ஒரு கட்டத்தில், கடைசி இரண்டாவது வீராங்கனையாகவும் பின்தங்கினார். ஆனால், கடைசி 150 மீட்டர் தூரத்துக்குள் வேகமெடுத்தவர்,  எல்லை கோட்டருகே வைத்து  சீன வீராங்கனை வங் சுன் யுவை  பின்னுக்குத் தள்ளி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்தத் தொடரில், இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இது. 
திருச்சியைச் சேர்ந்த கோமதி, சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தடகளத்தில், குறிப்பாக 800 மீட்டர் ஓட்டத்தில் அபார திறன் உடையவராக இருந்தார்.  20 வயது முதல் தடகளத்தில் பங்கேற்றுவரும்  இவரின்  10 வருட கால உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.  பெங்களூருவில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் கோமதி பணிபுரிந்துவருகிறார்.
தடகள வீராங்கனை
வெற்றிகுறித்து அவர்,  'எல்லைக் கோட்டை எட்டியதும், என்னையே நான் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் 'என்றார். 
ஆசிய தடகளப் போட்டியில், 2 நாள்களில் இந்தியா 1 தங்கம் 2 வெள்ளி 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.


நன்றி: விகடன் 

உலகில் தலைசிறந்த கல்வியில் #பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

உலகில் தலைசிறந்த கல்வியில் #பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?


👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...

😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...

👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...

👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...

👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...

👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...

✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...

👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...

👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...

👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...

👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...

👏மதிக்கத்தக்க மனநிலை.

👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...

👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...

👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...

👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...

👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...

👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...

👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது...
நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...

👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...

இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...

பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...

குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...

முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...

முதலில் நாம் மாற வேண்டும்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...

மாற்றம் ஒன்றே மாறாதது...

நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.

பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.
x

Monday, April 22, 2019

SI தேர்விற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள்!!! | தேர்விற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள்

SI தேர்விற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள்!!!
| தேர்விற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள்!!!


தமிழ்நாடு


✍ உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தரவரிசை

✍ போர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில், சீனாவின் முதல் பெரிய பணக்காரர், ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஜூ ஜியாயின் முதலிடம் பிடித்துள்ளார். உலக அளவில், இவர் 20ம் இடத்தில் உள்ளார்.

விருதுகள்

✍ தினமணி பத்திரிக்கை வழங்கும் முதலாவது, மகாகவி பாரதியார் விருது 2018 சீனி. விஸ்வநாதன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

✍ முதலாவது 'உலக மண் தின விருது" (றுழசடன ளுழடை னுயல யுறயசன) வங்காளதேசத்தைச் சேர்ந்த, 'பிராக்டிகல் ஆக்சன்" (Pசயஉவiஉயட யுஉவழைn) என்னும் அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

✍ 'கிலிங்கா உலக மண் பரிசு 2018" (புடiமெய றுழசடன ளுழடை Pசணைந 2018) அமெரிக்கவாழ் இந்தியர், ரத்தன் லாலுக்கு (சுயவவயn டுயட) வழங்கப்பட்டுள்ளது.


காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
மாநாடுகள்

✍ முதல் இந்தியா - ஆசியான் இன்னோடெக் உச்சி மாநாடு, புதுடெல்லியில் நடைபெற்றது.

கலை ஃ கலாச்சாரம்

✍ 'இராணுவ இலக்கிய திருவிழா 2018" (ஆடைவையசல டுவைநசயவரசந குநளவiஎயட (ஆடுகு) 2018), சண்டிகரில் நடைபெற்றது.

அறிவியல் தொழில்நுட்பம்

✍ ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-5 ஏவுகணையின் 7வது சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

முக்கிய தினம் ஃ வாரங்கள்

✍ ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ஆம் தேதி, சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

✍ ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ம் தேதி, சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 


தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்? | பொதுத்தமிழ் வினா விடைகள்

தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்?

பொதுத்தமிழ் வினா விடைகள் 


1. கம்பரை திருவெண்ணெய் நல்லு}ர் -------- என்பவர் ஆதரித்து வந்தார். - சடையப்ப வள்ளல்

2. வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் --------- பரிசளிக்கப் பெற்றவர். - தங்கத்தோட

3. வரத நஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை --------- தலைமையில் அரங்கேற்றினார். - உமாமகேஸ்வரி

4. நாமக்கல் கவிஞருக்கு நடுவண் அரசு --------- விருதளித்து சிறப்பின் 

5. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் - புறநானூறு 


காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளின் எண்ணிக்கை? - 65

7. புறநானூற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடலை --------- பாடியுள்ளார். - பெருந்தேவனார்.

8. சங்க நூல்கள் பழந்தமிழ் இலக்கணமாகிய -----------------, ----------- இலக்கியங்களாய்த் திகழ்கின்றன. - பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்

9. புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர் ----------- அவர்கள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். - ஜி.யூ.போப்

10. அகநானு}ற்றுக்கு வழங்கும் வேறு பெயர்கள் - நெடுந்தொகை

###TN_POLICE|SI தேர்வுக்குரிய முக்கிய வினா விடைகள்

TN_POLICE|SI தேர்வுக்குரிய முக்கிய வினா விடைகள்..!

..!

1. சங்கராச்சரியர் பிறந்த இடம் - காலடி

2. சங்கராச்சரியர் பரப்பிய கொள்கை - அத்வைதம்

3. குருநானக் நிறுவிய மதம் - சீக்கிய மதம்

4. பக்தி இயக்கம் எப்போது தோன்றியது? - இடைக்காலம்

5. துளசிதாசர் எழுதிய நு}ல் - இராமசரிதமனாஸ்

6. சூஃபி இயக்கம் ஆரம்பமான இடம் - பாரசீகம்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
7. லிங்காயத்துகள் என்றழைக்கப்படுபவர்கள் எம்மதத்தினர் ஆவார்? - வீரசைவம்

8. இராமானுஜர் எந்த மதத்தினை சார்ந்தவர் - வைணவம்

9. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் - நாதமுனி

10. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்கள்? - 63

11. பாபர் எப்போது இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார் - கி.பி. 1526

12. இந்திய மண்ணில் முதன்முதல் எப்போது பீரங்கி பயன்படுத்தப்பட்டது? - முதலாம் பானிப்பட் போர்

13. முதலாம் பானிப்பட் போர் எப்போது நடைபெற்றது? - கி.பி. 1526

14. முதலாம் பானிப்பட் போரில் பாபர் யாரை வென்றார்? - இப்ராஹிம் லோடி

15. இந்தியாவில் முகலாயப் பேரரசை தோற்றுவிக்க காரணமான போர் - முதலாம் பானிப்பட் போர்

கதை கேக்க வாங்க|மரிய புஷ்பத்தின் சைக்கிள்|நரன்|பாவா

கதை கேக்க வாங்க|மரிய புஷ்பத்தின் சைக்கிள்|நரன்|பாவா





Friday, April 19, 2019

"சில எளிமையான சித்த மருத்துவக் குறிப்புகள்

"சில எளிமையான சித்த மருத்துவக் குறிப்புகள்



"சில எளிமையான சித்த மருத்துவக் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

 நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பு பொடியை சிறிதளவு தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தர காய்ச்சல் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காலை மாலை வேளைகளில் சிறிதளவு வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து வென்னீரில் கலந்து சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி கை, கால் நடுக்கம் குணமாகும்.

ஆடாதொடை பொடி, நிலவேம்பு பொடி, விஷ்ணுகரந்தை பொடி, இவைகளுடன் கிருந்தை நாயகம் இலை, குப்பைமேனி இலை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து காலை மாலை குடித்துவர எப்பேர்பட்ட காய்ச்சலும் 3 நாட்களில் சரியாகி விடும். மேலும் உடல்வலியும் தீரும்.

சர்பகந்தா பொடியை சிறிதளவு காலை, மாலை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் நீங்கி, இரவில் தூக்கம் நன்றாக வரும். மன சோர்வு நீங்கும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி எலும்பிச்சை சாற்றில் ஊற வைத்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. பீட்ரூட்டை சாப்பிடும் போது நைட்ரேட்டுகள் நமது உடலில் உள்ள பார்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றப்பட்டு இரத்த நாளங்களை விரிவடய செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேன்படுத்தும். மேலும் ஆண்மை சக்தியை அதிகரித்து பாலுறவில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

 அதிமதுரம், விதை நீக்கிய கடுக்காய் தோல், திப்பிலி, மிளகு இவற்றை வறுத்து பொடித்து, தினசரி காலை மாலை நெய்யுடன் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கி கண் ஒளி பெரும்


நன்றி

எம்.சரவணக்குமார்@எஸ்.கே

.

Tuesday, April 16, 2019

வேர்கடலை கொழுப்பு அல்ல...! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை

வேர்கடலை கொழுப்பு அல்ல...! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை…!!




நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் 
கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் (osteoporosis)  வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்:

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்


தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் *நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. 

இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.

பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி. 
நார்சத்து- 9 மி.கி. 
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி. 
புரதம்- 25 மி.கி. 
ட்ரிப்டோபான்- 0.24 கி. 
திரியோனின் – 0.85 கி 
ஐசோலூசின் – 0.85 மி.கி. 
லூசின் – 1.625 மி.கி. 
லைசின் – 0.901 கி 
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி 
கிளைசின்- 1.512 கி 
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி 
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி. 
காப்பர் – 11.44 மி.கி. 
இரும்புச்சத்து – 4.58 மி.கி. 
மெக்னீசியம் – 168.00 மி.கி. 
மேங்கனீஸ் – 1.934 மி.கி. 
பாஸ்பரஸ் – 376.00 மி.கி. 
பொட்டாசியம் – 705.00 மி.கி. 
சோடியம் – 18.00 மி.கி. 
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி. 
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். 
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.


பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.