Saturday, November 18, 2017

முருங்கை மரம்

முருங்கை கீரை

பழங்காலத்தில், எந்த கிராமத்துக்குச் சென்றாலும் வீட்டில் ஒரு முருங்கை மரம் அவசியம் இருக்கும். ஆனால், இந்த காலத்தில் ‘வாஸ்துபடி முருங்கை வைக்கக்கூடாது. வீட்டின் முன் முருங்கை இருந்தால் அவ்வீட்டு ஆணுக்குத் தீங்கு நடக்கும்’ என்று வதந்தி பரப்பி முருங்கையை வீட்டில் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், நம் முன்னோர் நம்மை விட அறிவியல் அறிவு நிறைந்தவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் பின்பக்கம் ஒரு முருங்கை மரமேனும் இருக்கும். பொதுவாகவே, மரங்கள் பகலில் நமக்குத் தேவையான ஆக்சிஜனையும், இரவில் நமக்குத் தேவை இல்லாத கார்பன் டை ஆக்சைடையும் வெளியேற்றும். இரவில் யாரும் பின்பக்கம் போகாததால், தோட்டமும் மரங்களும் பின்பக்கமே அமைத்திருந்தனர். முன்பக்கம் நட்பு வளர்க்க திண்ணை அமைத்திருந்தனர்.

ஆனால் இன்றோ, திண்ணையும் இல்லை முருங்கையும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை…

நாம் அனைவரும் பள்ளி புத்தகங்களில் படித்திருப்போம், 300க்கும் மேற்பட்ட நோய்களை முருங்கை குணப்படுத்தும் என்று. வேரில் இருந்து பூ வரை உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் நமக்குத் தெரியும். அதன் மருத்துவப் பயன்களைப் பற்றியும், உணவில் சேர்த்துக்கொள்ளும் முறையையும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கலாராணி சரவணன். ‘இருக்கவே இடம் இல்லை, குடிக்கவே தண்ணீர் இல்லை என்று பல காரணம் சொல்லுகிறோம். அடுக்குமாடி குடியிருப்பில் பின் பக்கம் ஒரு 2 X 2 இடம் இல்லாமலா போய்விடும்? முருங்கை மரம் ‘சாகா மரம்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆகவே வெயிலோ, மழையோ, தண்ணீர் பஞ்சமோ, முருங்கை அனைத்தையும் தாங்கும். ஏன் ஒடித்தாலுமே நன்கு தழைக்கும்.

முருங்கையின் சில பயன்களை இங்கு குறிப்பிட்டால் முன்பு போல் பல முருங்கை மரம் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.

முருங்கைக்கு பல பயன்கள் உள்ளன. சுருக்கமாக அற்புதமான அழகும் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கியமும் முருங்கையால் நமக்குக் கிட்டும்.

வேரிலிருந்து ஆரம்பிக்கலாமா?

வேர்: ஆயுர்வேதத்தில் முக்கிய இடம் வகிக்கிறது முருங்கை வேர். வாய் புண்ணுக்கு, முருங்கை வேரை தண்ணீரில் 5 – 7 நிமிடம் கொதிக்க வைத்து அந்த தண்ணீர் வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும்.

2007இல் கொல்கத்தாவில் நடத்திய ஆய்வு ஒன்றில் முருங்கை வேரில் கருப்பைப் புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இதுபோல் பல ஆய்வுகள் வெளிநாடுகளிலும் முன்னரே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சூடானில் 2010இன் ஆய்வுப்படி ரத்தப் புற்றுநோய்க்கும் முருங்கை வேர் நல்ல பயன் அளிப்பதாக கண்டு பிடித்துள்ளனர். இது தவிர, மலேரியா, ரத்தக் கொதிப்பு, வயிற்று உபாதைகள், ஆஸ்துமா, சர்க்கரை நோய், மகப்பேறு சமயத்தில் வெளியேறாத நஞ்சுக்கொடி அகற்றவும் முருங்கை வேர் பயன்படுத்தப்படுவதாக அதே ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் வேரைப் பொடித்து குப்பியில் அடைத்து விற்கவும் செய்கிறார்கள்.

விதை: முருங்கை விதையில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். முருங்கை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில் முஃபா (MUFA) எனப்படும் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் அது உடலுக்கு, குறிப்பாக ஈரலுக்கு மிக நல்லது. மேலும், இதில் ஒமேகா 3 அமிலம் அதிகம் இருக்கிறது. ஆகவே, செல் உடையும் நோய்கள் (cell degeneration) வராமல் தடுக்கும். அப்படி தடுப்பதால் நம் உடலில் பல வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது.

குடிநீரில் தொற்றுக்கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்த முருங்கை விதை பயன்படுவதாக இந்தியாவில் 2012இன் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

முருங்கை இலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறுவது தவறு. ஆகவே வலுவான எலும்புக்கு அனைவருக்கும் தேவை. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் தேவை. இவை இரண்டும் முருங்கை இலையில் அதிகம் உண்டு. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைச் சரி செய்யும். பூ மற்றும் இலையில் நோய் எதிர்ப்புசக்தி (antibiotic effect) உள்ளது.

இக்கீரையைப் பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும்போது ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்த பொரியலை தினமும் ஒருவேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும். உடலுக்கு அழகும், பலமும் கொடுக்கும். முருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

முருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி, கை கால் அசதியும் யாவும் நீங்கும்.

ஆண்களுக்கு முருங்கைக் கீரையை நெய்யில் பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்மை பிரச்னை பெருமளவு குறையும்.

தாது விருத்தியும் உண்டாகும். இதை உணவுடன் 40 நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கை இன்பமாகும். தினமும் உணவில் சேர்த்து வந்தால் ரத்த சோகையைத் தடுக்கலாம். இக்கீரை ரத்த விருத்திக்கு மிகவும் பயன்படுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும். இக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத பெண்களுக்கு வயிற்றுநோயும் அடி வயிற்று வலியும் நீங்கும். எள்ளும் முருங்கைக் கீரையையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த வாயுவால் ஏற்படும் மார்பு வலி நீங்கும்.

Monday, November 6, 2017

பாதாம் மரம்!

பாதாம் மரம்!


வீட்டுக்கு முன் பாதாம் மரம் வைத்து விட்டால் 2 வருடங்களுக்குள் வளர்ந்து காய்தரும்.


வாதுமை, பாதாம் பருப்பு அல்லது கொட்டை பெறப்படும் மரம் ஆகும். பாதாம் பருப்பை வாதுமை எனவும் கூறுவர். வாதுமை கொட்டைகளை வலாங்கொட்டை எனவும் கூறுவர். இக் கொட்டைகள் சுவைமிக்கவை. பாதாம் மரங்கள் மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவை, இங்கேயே இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசியாவின் வெப்ப மண்டல நாடுகளில் வளர்கின்றன.

ஒரு மரத்துல இருந்து 10 கிலோ அளவுக்கு பருப்பு கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.


ü  இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவ
ü  லையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும்.
ü  அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.
ü  பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.'நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ü  நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை
ü  சேதப்படுத்திவிடும்.மேலும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில்
பாதாமில் உள்ள சத்துக்கள்:
ü  பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது.
ü  பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் ,கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் தேவை.
ü  ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும்.
ü  கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.
ü  பாதாம்பால்
ü  பாதாம் விதைகளிருந்து தயாரிக்கப்படும் பால்  உடலுக்கு மிகவும் ஏற்ற உணவாகும்.இவ் இயற்கைப் பாலை அருந்துபவர்களுக்கு உடல் மேலும் ஆரோக்கியத்தைப் பெறுகிறது.

பாதாமின் பயன்கள்:
ü  பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை
ü  உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
ü  பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம்
ü  மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து
ü  எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.
ü  பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.

ü  ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டிஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன.

எளிதில் காயமல் வளரக்கூடியது.
வேம்பு, புன்னை, புங்கன் போன்று காற்று புயல் போன்ற காலங்களில் விழாமல்  தாங்கி நிற்கக்கூடிய மரம்...

இனி இந்த மரத்தையும் நடுவோம்


த.சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

Saturday, November 4, 2017

இனி விளாமரம் நடுவோம்

விளாமரம்



வேறு பெயர்கள் :கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி போன்றவை.

 அரியவகை மரங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது, இதன் பழங்கள் பலராலும் விரும்மி உண்ணப்பட்டாலும் யாரும் நட்டுவளர்க்க முன்வராத காரணத்தினாலேயே அரியவகை மரமாக மாறிவிட்டது, விளாமரங்களை வணிகரீதில் வளர்த்தால் நல்ல லாபம்பெரலாம் அத்தகைய விளாமரம் பற்றி தெரிந்துகொள்வோமா.......    

    பெரோனியா எலிபன்டம் குடும்பத்தைச் சார்ந்த விளா மரம் தென்கிழக்காசியா மற்றும் ஜாவா பகுதியைத் தாயகமாகக் கொண்டது ஆகும். விளா மரத்தின் வேர் இலை, காய், கனி போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. விளாவானது கடிபகை, பித்தம், விளவு, வெள்ளி எனப் பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. இந்தியாவில் விளாவில் இலை, காய், பழம், பழ ஒடு, பட்டை மற்றும் பிசின் போன்றவை பல்வேறு மருத்துவ தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

      இப்பழங்களில் 70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 170 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன. இப்பழத்தை உப்புடன் சேர்த்து சாப்பிடலாம். ஜெல்லி தயாரிப்பதற்கும் இப்பழங்கள் பயன்படுகின்றன.

பயன் தரும் பாகங்கள் :– கொழுந்து, இலை, காய், பட்டை, ஓடு மற்றும் பிசின். ஆகியவை.

வளரியல்பு :– விளாமரம் தாயகம் இந்தியா பின் பாக்கீஸ்தான், இலங்கை,தாய்வான், மாயின்மருக்குப்பரவிற்று. இது எங்கும் வளரும். மர வகுப்பைச் சார்ந்தது. இது காடுகளில் அதிகம் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கு மேல் வளராது. ஆழமான மண்வகையில் நன்கு வளரும். மேலும் வீடுகளிலும், கோயில்களிலும், தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறதுமூன்று வகைகளில் இது பெரிய மர வகுப்பைச் சார்ந்து பெரு விளா மரம். இந்த   கருமைநிறமாக  இருப்பதால் கருவிளாம் என்று சொல்லப்படுகிறது. விளாமரம் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலைகள்.   இலைகள் 5-7 வரை இருக்கும், இது 25-35 மில்லி இருக்கும். தனி இலை 10 மில்லி 20 மில்லி அகலம் இருக்கும். இதன் இலைகள் நல்ல மணத்தைக் கொண்டது. இலை நீள் வட்ட வடிவமாக இருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்று உருண்டையாக இருக்கும். இதன் விட்டம் 5-9 செ.மீ. இருக்கும். பழத்தின் ஓடு கெட்டியாக இருக்கும். உள் சதைமரக்கலரில் இருக்கும். விதைகள் வெள்ளையாக இருக்கும். காயாக இருக்கும் போது அதன் சதை துவர்ப்பாக இருக்கும். பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த சுவையாக இருக்கும். இது முள்ளுள்ள உறுதியான பெரிய மரம். விளாமரம் வளர்ந்த 5 வது வருடத்தில் காய் காய்க்கும்இதை எந்த பூச்சியும் தாக்காது. விளா ஓடு கைவினைப் பொருள்கள் செய்யப் பயன் படுத்துகிறார்கள். விளா விதைகளின் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.
      விதைகளின் மூலம் இம்மரங்கள் பொதுவாக இனவிருத்தி செய்யப்படுகின்றன. மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல் மூலமும் இம்மரங்கள் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஆழமான மண் வகைகள் உள்ள பகுதிகளில் இவை நன்றாக வளரும். ஓரளவு மண்ணின் உப்புத் தன்மையையும் தாங்கி வளரும். இது வெப்ப மற்றும் மித வெப்ப பிரதேசங்களில் பயிரிட ஏற்றது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்திற்கு மேல் இம்மரங்கள் நன்கு வளராது.

     நாற்றுக்களை மழைக்காலங்களில் நட வேண்டும். மரங்களின் கிளைகள் நன்கு இடைவெளி விட்டு வளருமாறு தேவையில்லாத கிளைகளை வெட்டி விட வேண்டும். நட்ட பின், ஐந்தாவது ஆண்டில் இம்மரங்கள் காய்க்க ஆரம்பிக்கும். பொதுவாக இம்மரங்களுக்கு உரம் ஏதும் இட வேண்டிய தேவையில்லை. குறிப்பிட்டு கூறுமளவுக்கு இம்மரத்தில் எந்தவிதமான பூச்சிகிளோ, நோய்களோ தாக்குவதில்லை.



      மருத்துவப் பயன்கள் :– விளா சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வது இதன் பொது குணமாகும். பழம் கோழையகற்றிப் பசியுண்டாக்கும். பழ ஓடு தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும். பிசின் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத்துவளச் செய்யும். துவர்ப்புச் சுவையோடு வயிற்றில் இருக்கின்ற வாயுவினை அகற்றி, உடலுக்குக் கிளிர்ச்சியைத் தந்து, புண்களை ஆற்றக் கூடிய செய்கை உடையது. நாவறட்சி, விக்கல், வாதம், பித்தம், மற்றும் குட்டம் போக்க வல்லது. ஒவ்வாமை நோய், இரத்த போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். மார்பகம், கர்ப்பப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

விளாந்தளிர், நாரத்தையின் தளிர், கருவேப்பிலை, எலுமிச்சையின் இலை, சம அளவு உலர்த்திய பொடி 100 கிராம், மிளகு 10 கிராம், வெந்தயம் 10 கிராம் கடலைப் பருப்பு வறுத்து பொடி 100 கிராம்  உப்பு 20 கிராம், சேர்த்துக் கலந்து பொடி உணவில், சேர்த்துப் சாப்பிட பித்தம் குணமாகும், பசி எடுக்கும், வாந்தி குணமாகும். உடலுக்கும் ஊட்டமுடையதாகும்.

குட்டி விளாம் என்பது நிலத்தில் படர்ந்துள்ள குத்துச் செடியாகும். விளாமரத்தின் இலை இருக்கும். இது பூக்காது. காய்க்காது. ஆனாலும் இதன் இலை மருத்துவக்  . சிறு குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், வாந்திக்கு அரைத்து வெந்நீரில் கொடுக்கலாம். சளிக்கு துளசியுடன் சேர்த்துச் சாறு பிழிந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வரும் வெப்பக் கொப்புளங்களுக்கும், அரிப்பு, தடிப்புகளுக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். குணமாகும்தோல் மென்மையாக இருக்கும். மிளகு ரசத்தில் இதன் இலையை கறிவேப்பிலையைப் போல் போட்டால் மணமாக இருக்கும்.

  1. விளாங்காய் சதையை சிறிது வேக விட்டுக் கொடுக்கப் பேதி, சீதப் பேதி தீரும்.
  2. பழத்தை ஓட்டுடன் அரைத்து விழுங்க மருந்து வீறு தணியும்.
  3. விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள்உறுப்பு ரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும். உப்பில்லாப் பத்தியம் தேவை.
  4. இலை, பூ, பழம், பட்டை, வேர் ஆகியவற்றைச் சமனளவு உலர்த்திப் பொடித்து வேளைக்கு 5 கிராமாக சிறிது சர்கரையுடன் உண்டு வரப் பித்த மிகுதி, பசியின்மை, பேதி, சீதபேதி, உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல் ஆகியவை தீரும்.
  5. விளாமரத்தின் காயைக் கொண்டு வந்து அதை முழு அளவில் ஒரு சட்டியில் போட்டு, காய் நனையும் அளவிற்குத் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெந்த பின் இறக்கி உடைத்து உள்ளேயுள்ள சதையை மட்டும் எடுத்து, அத்துடன் அரை டம்ளர் அளவு தயிர் சேர்த்துக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் சீதபேதி, வயிற்றுப் போக்கு பூரணமாக குணமாகும்.
  6. விளாங்காயை மேலே சொன்னபடி வேக வைத்து அதன் சதையுடன் உப்பு, புளி, கறிவேப்பிலை, கொத்துமல்லிக் கீரை சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான சகல கோளாறுகளும் நீங்கி விடும்.
  7. விளாம் பழத்தின் ஓட்டை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து காலையில் மட்டும் வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்ணாசை வெறுத்து விடும்.
  8. ஒரு கைப்பிடி அளவு விளா இலை எடுத்து முறைப்படி குடிநீரிட்டு அருந்தி வர காச்சல், இருமல், தேக வறட்சி நீங்கும்.
  9. வேர்க்குரு, கோடைக் கொப்புளங்கள் முதலிய வற்றிக்கு விளா இலைக் கொழுந்தை சாறு பிழிந்து பூசிவர குணமாகும்.
  10. விளாங்காய் மற்றும் வில்வக்காய் இவைகளின் சதைப் பகுதியை எடுத்து அதை கஞ்சியாக க் காச்சிக் குடித்து வந்தால் மூல நோய் தொல்லை குறையும்.
  11. விளாம்பழத்தின் ஓட்டைப் பிளந்து பழத்தை மட்டும் உட்கொண்டு வர வாய் நீர் ஊறல் வாய்ப்புண், ஈறு சம்பந்தமான நோய்களும் நீங்கி, நன்கு பசி உண்டாகும்.
  12. விளாம்பழச் சதையுடன் தேன், திப்பிலி சூரணம் தேவையான அளவு கலந்து உண்ண விக்கல், மேல் மூச்சு வாங்கல் நிற்கும்
  13. விளாமரப்பட்டை 488 கிராம் எடுத்துக் கொண்டு நன்கு இடித்து, 500 மிலி நீர் விட்டு நன்கு காச்சி, தினம் இரு வேளை அருந்தி வர பித்த வாந்தி, குமட்டல், புகையிலை நஞெசு நீங்கும்.
  14. நீரழிவு நோய்க்கு ஆவாரை வேர், விளா வேர், பூலாவேர், இலவங்கம், காட்டு மல்லி வேர் இவற்றை சம அளவு எடுத்து, எருமை மோரில் இட்டு நன்கு வேக வைத்து, குறிப்பிட்ட அளவு தயிருடன் கலந்து அருந்தி வர குணம் தெரியும்
  15. விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அடக்கி அதன் ரசத்தை மட்டும் விழ்ங்கி வந்தால் வறட்டிருமல் நீங்கும்.
நமது அமைப்பில் மூலம் இப்படி மருத்துவ பயன்மிக்க மரத்தையும் நடுவோம்


த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன் எம்.எஸ்சி எம் பிஃல் பி.எட் 
கணினி அறிவியல்