Tuesday, June 5, 2018

சுற்றுச் சூழல் தினம். இன்று:- ஜூன் 5,


உலக சுற்றுச் சூழல் தினம்.
இன்று:- ஜூன் 5,



ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினமானது ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

 நோக்கம்:-


🌿 இந்த பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினம் கொண்டாடப்படுவதின் அடிப்படை நோக்கமாகும்.

🌿இந்த கொண்டாட்டமானது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

🌿இச் சபையின் சார்பில் இந்த சிறப்பு தின கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) என்னும் அமைப்பு பொறுப்பெடுத்து செயற்படுகின்றது.

🌿உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.


🌿உலக சுற்றுச்சூழல் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?



🌴பெருகிவரும் மக்கள் தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும் அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.

🌴உலக வெப்பமயமாதல் எனும் பிரச்சனையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது. 

🌴நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவின் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. 

🌴சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

☘சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.


🍀சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை
:-


🌱முக்கியமாக குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம்நடுவது. 

🌱தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. 

🌱இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; 

🌱வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல்.

🎋தவிர்க்க வேண்டியவை:-


🎋அத்தியாவசிய தேவைக்குத் தவிர மற்ற நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் ,அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தப் பழகினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு உடல்நலமும் மேம்படும் வாய்ப்புள்ளது.

🎋ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானதாகிறது. 

🎋வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்களை அணைக்காமல் செல்லுதல் போன்ற சின்னச் சின்ன செயல்களையும் நாம் கவனித்து தவிர்க்கத் தேவையுள்ளது!

இயற்கை பாதுகாப்பு:-

இந்த வளர்ந்து வரும் இயற்கைச்சூழலில் இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பல்வேறு நிழ்வுகழும், வளர்ச்சித்திட்டம் என்ற பெயரில் பல்வேறு திட்டங்ஙளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பலதிட்டங்கள் இயற்கை அரண்களாக விளங்கும் காடுகளை அழித்து நிறைவேற்றப்படுகின்றது.

மரங்கள் இல்லாததே இன்றைய பல்வேறு இயற்கை சிக்களுக்கு காரணம்.

  1. மழையின்மை
  2. நீர்வறட்சி
  3. கடல்நீர் ஊடுருவுதல்
  4. வெப்பதாக்கம்,
  5. புறஊதாக்கதிர்வீச்சு
  6. உலக வெப்பமயமாதல்
  7. பனிமலை உருகுதல்
  8. ..
  9. ...

என என்னிலடங்கா சிக்கல்களுக்கு ஒரே காரணம் இயர்கை அழிப்பு என்பதே உண்மை..

  1. பிளாஸ்டிக் பொருட்களை உபயோகம் செய்வதை நிறுத்துவோம்
  2. கடைக்கு செல்லும்போது துணிப்பைகளை கொண்டு செல்வோம்.
  3. வீடுகளில் மரப்பொருட்களை பயன்படுத்துவோம்.

எந்தவொரு நிகழ்வுக்கும் காலம் என்பது அடிப்படை. 

பொருள் பயன்படாமல் போவதில் தொடங்கி ஒரு செயல் செய்து முடிப்பது வரை....


தனிமனித மாற்றம் என்பதே பெரும் புரட்சி என்பதை உணர்ந்து செயல்படுவீர்.



இங்கனம்

த சிங்காரவேல் என்கிற கவிமலரவன் 

No comments:

Post a Comment