Monday, April 30, 2018

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பகுதி - 2

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பகுதி - 2


பகுதி - 1 ன் தொடர்ச்சி.

எப்படி இரத்தத்தில் சுகர் அதிகமாகிறது?


இரத்தத்திலும், சிறுநீரிலும் இவ்வாறு சுகர் கண்டுபிடிக்கப் படுகிறது?

நீங்கள் உண்ணும் திட உணவுகளும் மற்றும் திரவ வகைகளும் சரியாகவும்,  முறையாகவும் ஜீரணிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஜீரணிக்கப்பட்டால் தான் அந்த உணவில் உள்ள வைட்டமின்கள், மினரல்ஸ், புரோட்டீன் போன்ற சத்துக்கள் உடலில் சேர்ந்து உங்களுக்குத் தேவையான சக்தியை (Energy) கொடுக்கும்.

இந்த ஜீரணம் நாக்கில் உமிழ்நீ்ரில் ஆரம்பித்து வயிறு, மண்ணீரல், சிறுகுடல், பித்தப்பை வழியாக முறையாக ஜீரணிக்கப்பட்டு  கல்லீரலில் முடிவடைகிறது. நீங்கள் உண்ட உணவு ஒவ்வொரு உறுப்பிலும் நன்கு ஜீரணிக்கப்பட்டு அதிலிருந்து முறையாக  பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும்   சத்துதான் குளுகோஸ் என்னும் சர்க்கரை  ஆகும். (Glucose is the end product of digestion).

இந்த குளுகோஸ் சத்தை நமது உடல் பயன்படுத்த இன்சுலின் என்னும் ஹார்மோன் திரவம் தேவைக்கேற்ப  கணையம் என்னும் உறுப்பில் (Pancreas) சுரக்கப்பட வேண்டும்.

அந்த இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களிலும் (Cells)  பயன்படுத்த வைக்கிறது.

நமது உடல் பலகோடி செல்களால் ஆனது. இந்த செல்களின் மொத்த உருவம்தான் மனிதன்.

தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அதனால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. அதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் தான் ஒரேவழி என்பது விஞ்ஞான மருத்துவத்தின் கண்ணோட்டம் ஆகும்.

நான் பிறந்தது முதல் இத்தனை வருடங்களாக சுரக்கப்பட்ட  இன்சுலின் திடீரென்று இப்போது மட்டும் ஏன் சுரக்கவில்லை? காரணம் இதுவரை கண்டுபிடிக்கபட வில்லை என்று சொல்லப்படுகிறது.

காரணம் தெறியாமல் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது விஞ்ஞான மருத்துவமாகுமா?


தேவையான அளவு இன்சுலின்  சுரக்கவில்லை என்பது மட்டும் தெறிந்துவிட்டது.  பி்ன்னர் அதை சுரக்க வைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுவது தானே அறிவியல் மருத்துவமாகும்?

நீங்கள் உண்ட  உணவுகள் முறையாக ஜீரணிக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் இந்த தரமான குளுகோஸ் என்னும் எரிபொருள்தான் நாம் அன்றாடம் வேலை செய்வதற்கும், நடப்பதற்கும், ஓடுவதற்கும், விளையாடுவதற்கும்  தேவையான இயக்கச்  சக்தியாக பயன்படுகிறது.

அதனால் தான் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடுபவர்களும், உடல் சோர்வில் உள்ளவர்களும் குளுக்கோஸை சாப்பிடுவார்கள். இதுவும் தவறானதாகும். இதை சாப்பிட்டவுடன் உடனடியாக சற்று சுறுசுறுப்பு கிடைப்பது போன்று தோன்றும். ஆனால் அது நீடிக்காது. மேலும் அது பாதிப்பைத் தான் ஏற்படுத்தும். (இதன் விளக்கத்தை வேறு கட்டுரையில் பார்ப்போம்).

முறையாக ஜீரணிக்கபட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் இந்த தரமான குளுகோஸ்  இரத்த ஓட்டத்தின் மூலமாக நமது அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, செல்களின் இயக்கத்திற்கு தேவையான சக்தியை வழங்குகின்றன. இந்த தரம்மிக்க குளுகோஸ்  தேவைக்கேற்ப செல்களால் உபயோகப்படுத்தப்பட்ட  பின்னர், மீதம் எஞ்சியுள்ள குளுகோஸ், கிளைகோஜனாக மாற்றப்பட்டு பின்னர் நமக்கு ஏற்படும் அவசர கால உடல் தேவைகளுக்காக கல்லீரலிலும், தசைநார்களிலும் சேமித்து வைக்கப்படுகிறது. (Stored Energy).


தரமான குளுகோஸ், தரமற்ற குளுகோஸ் என்றால் என்ன?


நாம் உண்ணும் உணவுகள் மற்றும் திரவங்கள் முறையாக ஜீரணிக்கப்பட்டு அதன் மூலம் கடைசியாக வெளிப்படும் சத்து தான் தரமான குளுகோஸ் ஆகும்.

நம் ஜீரண உறுப்புக்களில் ஏதாவது கோளாறு ஏற்படும்போது நாம் உண்ணும் உணவுகள் மற்றும் திரவங்கள் முறையாக ஜீரணிக்கப்படுவதில்லை.

அவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாமல் அரைகுறையாக ஜீரணிக்கப்பட்டு கடைசியாக வெளிப்படும் குளுகோஸ் சத்துக்கள்  தரமற்ற குளுகோஸ் ஆகும்.

ஆனால் அறிவியல் மூலக்கூறு படி (Scientific Chemical Formula) தரமான மற்றும் தரமற்ற
குளுகோசும் ஒரே மாதிரியாக தான் தோன்றும். அது வேறுபடுத்திக் காட்டாது.

உதாரணமாக ஒரு முழு கரும்பை எடுத்துக் கொண்டீர்களானால் அதன் அடியில் உள்ள இனிப்பும், மேல் பகுதியில் உள்ள இனிப்பும் ஒரே மாதிரி இருக்காது. ஒரே கரும்பு, ஒரே மாதிரியான விவசாயம். பிறகு ஏன் இனிப்பு சுவையில் வித்தியாசம் உள்ளது? அந்த கரும்பு நிலத்தில் உள்ள சத்துக்களை கிரகிக்கும் தன்மையில் உள்ள வேறுபாடு தான் காரணம்.

அதுபோல் முறையற்ற ஜீரணத்தால் கிடைக்கும் சத்துக்களை நமது செல்கள் ஏற்றுக் கொள்ளாது. அல்லது  குறைவாக ஏற்றுக் கொள்ளும்.

அவ்வாறு நமது செல்களால் ஏற்றுக் கொள்ளப்படாமல்  நிராகரிக்கப்படும் இந்த குளுகோஸ் நமது இரத்தத்தில் கலந்து இரத்த ஓட்டத்துடன் சுற்றிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் இரத்தப் பரிசோதனை செய்தால்  உங்களுக்கு சுகர் அதிகமிருப்பதாக காட்டும்.  இந்த நிலையைத்தான் டயாபிடீஸ் அல்லது சர்க்கரை நோய் வந்துவிட்டதாக  சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் ஏதோ ஒரு பிரச்சனைக்காக  மருத்துவமணைக்கு செல்லும்போது தான் உங்களுக்கு சுகர் டெஸ்ட் செய்யப்படுகிறது. அப்போது இரத்தப் பரிசோதனையில் சுகர் இருப்பதாக கண்டுபிடிக்கப் படுகிறது. சர்க்கரை இருப்பது டெஸ்டில் கண்டுபிடிக்கப்படும் போதுதான் நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக ஆக்கப் படுகின்றீர்கள்.

உங்களுக்கு இருக்கும் இந்த நீரிழிவு நோயை டெஸ்ட் மூலம் கண்டுப்பிடிப்பதற்கு பல நாட்களுக்கு முன்னர் அல்லது பல மாதங்களுக்கு முன் இதே  சர்க்கரை நோய் உங்களுக்கு இருந்தது. ஆனால் அது உங்களுக்குத் தெரியாது.

அது தெரியும்வரை உங்களுக்கு எந்தவித  கவலையும், பயமும் இல்லை. சாதாரணமாக இருந்தீர்கள்.  எப்போது இரத்தத்தில் சர்க்கரை இருப்பது உங்களுக்கு தெரிய வருகிறதோ அப்போது தான் பலவிதமான பயங்கள் உங்களை தொற்றிக் கொள்கிறது.

மக்களிடத்தில் நிலவும் பொதுவான பரப்புரைகளாலும், கருத்துக்களாலும்,  தினசரி சரியாக மாத்திரை மருந்துகள் சாப்பிடாவிட்டால் பல விதமான நோய்கள் வந்து விடுமென்று பயப்படுகின்றீர்கள்.

சுகர் டெஸ்ட் செய்வதற்கு முன்பு பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் கூட உங்களுக்கு சுகர் இருந்திருக்கலாம். அப்போது சுகருக்கான எந்த மருந்தும் எடுக்காமல் நார்மலாக தான் இருந்தீர்கள். ஆனால் சுகர் டெஸ்ட் ரிபோர்ட்டை பார்த்ததும்  இப்போது பயம் உங்களை தொற்றிக் கொண்டது.

எத்தனையோ பாமர ஏழைமக்கள், குரவர்கள், கூலித் தொழிலாளிகள், தொடர் குடிகாரர்கள்  ஆகியோர் பெரிய மருத்துவமணைக்கு செல்வதில்லை. அவர்களுக்கு சுகர் இருந்தாலும் அதை பொருட் படுத்துவதில்லை. மருந்துகள் எடுத்துக் கொள்ளுவதுமில்லை, மாதாமாதம் டெஸ்டுகள் செய்வதுமில்லை.
இது சரி அல்லது சரியல்ல என்று சொல்தை விட, அவர்கள் நோய் பயமின்றி வாழ்கின்றனர் என்பது தானே  உண்மை.

முழுமையற்ற ஜீரணத்தால் உருவான தரம் குறைவான குளுகோஸ் சத்துக்கள், நமது  செல்களால்  ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு,  இரத்தத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும்.  இந்த அதிகப்படியான குளுகோஸை நமது சிறுநீரகம் இனம்கண்டு சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

இந்நிலையில் சிறுநீர் பரிசோதனை செய்தால் அதில் சுகர் இருப்பதாக கண்டுபிடித்து கூறுவார்கள். மேலும் உங்கள் சத்துக்கள் சிறுநீர் மூலமாக  வெளியேறுவதாக கூறி மாத்திரை மருந்துகள் கொடுத்து சுகர் சத்து சிறுநீர் மூலம் வெளியேறாமல் தடுத்து வைக்கப்படும்.

இப்போது நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். நமது சிறுநீரகத்தின் வேலை என்ன?

இரத்ததை சுத்திகரித்து அதில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது தானே சிறுநீரகத்தின் வேலை.

அப்படி என்றால் சிறுநீரில் வெளியேறும் சுகர் எப்படி நல்ல சத்துக்கள் ஆகும்?


நம் உடலுக்குத் தேவையில்லாத நமது செல்களால் நிராகரிக்கப்பட்டு அவசியம் வெளியேற்றப்பட வேண்டிய கழிவுதான் இந்த குளுகோஸ்.  அதை வெளியேற்றும் வேலையை நமது சிறுநீரகம் சரியாகத்தான்  செய்கிறது. அவ்வாறு கழிவுகள் வெளியேற்றப் படவில்லையெனில் சிறுநீரகம் செயலிலழந்து விட்டது என்று அர்த்தமாகிவிடும்.

சர்க்கரை நோயின் ஆரம்பத்திலேயே சிறுநீரகம் செயலிழந்து விடுமா? அல்லது உங்கள் சிறுநீரகம் நன்றாக இயங்குகின்றதா? இதில் எது உண்மை?

அடுத்தது மாத்திரை மற்றும் இன்சுலின் எடுத்தவுடன் எவ்வாறு இரத்தத்தில்  சுகர் குறைகிறது?

குறைந்த அந்த சுகர் எங்கே செல்கிறது?


போன்ற விஷயங்களை அடுத்தப் பகுதி Part - 3ல் படிக்கவும். நன்றி. தொடரும்.

சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பகுதி - 1 என்ற பதிவை கீழ்கண்ட இணைவில் காணலாம்..


மேலும் அரோக்கியம் பற்றிய தகவல்களுக்கு www.kavimalaravan.blogspot.com என்ற வலைப்பூவுடன் இணையுங்கள்.



இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்டது

நன்றி: Dr. Gouse MD (Tcm, Acu)., Singapore.


இவ்விடம் பதிவிடுவது

சிங்காரவேல் என்கிற கவிமலரவன்

Sunday, April 29, 2018

கிராம சபை: பிரதமரையே கையாளும் அளவு அதிகாரம் படைத்த அமைப்பு

கிராம சபை: பிரதமரையே  கையாளும் அளவு அதிகாரம் படைத்த அமைப்பு



https://drive.google.com/file/d/12f1raLZ61u2711guGUyKTPtxIUCIkXhf/view?usp=drivesdk

பௌர்ணமி வழிபாடு

பௌர்ணமி வழிபாடு


பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும்.

பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரதிபலிக்கிறது. பூமி சூரியனை சுற்றி வருவதுபோல் சந்திரனும் பூமியைச் சுற்றி வருகிறது.

பூமி மற்றும் சந்திரன் சுழற்சியில் சந்திரனின் ஒளிபெறும் பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாளே பௌர்ணமி ஆகும்.

சந்திரனின் ஒளிபெறாத பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாள் அமாவாசை ஆகும்.

ஆன்மீகரீதியாக பார்க்கும் போது தட்சனின் 27 மகள்களை சந்திரன் திருமணம் செய்திருந்தார். ஆனால் ரோகிணியிடம் மட்டும் பாசத்துடன் நடந்து கொண்டு, ஏனைய மனைவியரைப் புறக்கணித்தார்.

இதனால் வருந்தமடைந்த தட்சனின் மகள்கள் தந்தையிடம் தங்களது கணவரின் செயல்பாடு குறித்து முறையிட்டனர். 

தட்சன் சந்திரனிடம் எல்லா மனைவியரிடமும் அன்பு செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சந்திரன் தட்சன் சொன்னதை ஏற்காமல் ரோகிணியிடம் மட்டும் அன்பு செலுத்தினார்.

இதனால் கோபம் அடைந்த தட்சன் சந்திரனின் ஒளி மங்கும்படி ஆணையிட்டார். ஒளியிழந்த சந்திரன் இறைவனான சிவபெருமானை சரணடைந்தார். சிவபெருமானும் சந்திரனுக்கு ஒளியினைக் கொடுத்து தேய்ந்து வளரும்படி வரம் அருளினார்.

சிவபெருமானின் வரத்தின்படி சந்திரன் பதினைந்த நாட்கள் வளர்ந்து பௌர்ணமியாகவும், பதினைந்து நாட்கள் தேய்ந்து அமாவாசையாகவும் காட்சியளிக்கிறார்.

காலநிலை மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்:


பௌர்ணமி அன்று சந்திரனில் இருந்து வெளிவரும் காந்த ஈர்ப்பு விசையானது பூமியின் மேல்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அன்றைய தினத்தில் கடல் அலைகள் அதிகமாக மேலெழும்புகின்றன.

அதேபோல் உயிரினங்களின் மனஎழுச்சியும் அதிகமாக இருக்கும். அதாவது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பௌர்ணமி அன்று கரடுமுரடாக நடந்து கொள்வர். மனதினை கட்டுக்குள் வைத்திருப்பவர் ஆனந்தத்தின் உச்சியினை பௌர்ணமி அன்று உணரலாம்.

காலநிலை மற்றும் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பௌர்ணமி தினத்தில் இறைவழிபாடு மேற்கொள்வது வழக்கத்திற்கு வந்திருக்கலாம்.

 பௌர்ணமி விரதம்:


பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.

பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்கின்றனர். 

மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடுமேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது.

மாத பௌர்ணமி சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்:


ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது.

1) சித்திரை பௌர்ணமி:


சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

2) வைகாசி பௌர்ணமி:


வைகாசி மாதத்தில் பௌர்ணமி பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினம் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும், புத்தர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.

வைகாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.

3) ஆனி பௌர்ணமி:


ஆனியில் பௌர்ணமி பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும். சுமங்கலித்தன்மை நிலைத்திருக்கும். ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும்.

4) ஆடி பௌர்ணமி:


ஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும்.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.

5) ஆவணி பௌர்ணமி:


ஆவணி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது. ஆவணி பௌர்ணமி அன்று ஓணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகின்றன.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.

6) புரட்டாசி பௌர்ணமி:


புரட்டாசியில் பௌர்ணமி பொதுவாக உத்திரட்டாதியில் வருகிறது. புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இன்றைய தினத்தில் அம்மை,அப்பர் வழிபாடு  கடன் தொல்லையை நீக்கும். காரியத் தடங்கல் விலகும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். நல்ல திருமணப்பேற்றினை நல்கும்.

7) ஐப்பசி பௌர்ணமி:


ஐப்பசி பௌர்ணமி பொதுவாக அசுவனியில் வரும். ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிசேகம் நடத்தப் பெறுகிறது.

இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வரங்கள் அதிகம் கிடைக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

8) கார்த்திகை பௌர்ணமி:


கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி கார்த்திகை நட்சத்திரத்தில் வரும். அன்றைய தினத்தில் தான் இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார்.

ஆலயங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

9) மார்கழி பௌர்ணமி:


மார்கழியில் பௌர்ணமி பொதுவாக திருவாதிரையில் வரும். இன்றைய தினத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியருளிய நாள். அதனால் மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நம் குறைகள் நீங்கும். நோய்கள் குணமாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

10) தை பௌர்ணமி:


தை மாதத்தில் பௌர்ணமி பொதுவாக பூசத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இன்றைய தினத்தில் வழிபாடு மேற்கொள்ள பிறவிப் பயன் நீந்து முக்தி கிடைக்கும். தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும்.

11) மாசி பௌர்ணமி:


மாசி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக மகத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. கும்பமேளா, மாசி மகம் போன்ற விழாக்கள் மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும்.

12) பங்குனி பௌர்ணமி:


பங்குனியில் பௌர்ணமியானது உத்திரத்தில் வருகிறது. அன்றைய தினத்தில்தான் பார்வதி-பரமேஸ்வரர், முருகன்-தெய்வயானை, ராமன்-சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன.

எனவே பங்குனி பௌர்ணமி வழிபாடு நற்திருமணப்பேற்றினை அருளும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் துயரங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.

கிரிவலம்:


பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும் போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும்.

கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

நாமும் வாழ்வினை வளமாக்கும் பௌர்ணமியில் வழிபாடு மேற்கொண்டு நன்னிலை பெறுவோ..

எழுதியது யாருனு தெரியலை... படித்ததில் பிடித்தது

எழுதியது யாருனு தெரியலை... படித்ததில் பிடித்தது


 தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் (my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

 *தாயிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள்  எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

 தோற்றுப்போனால்
வெற்றி கிடைக்குமா?
✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்*
✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்*
✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்*
✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்*
✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்*
✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்*
✌ *ஆகவே தோற்று போ,*
தோற்றுப்போனால் வெற்றி கிடைக்கும்.

_அன்புடன் வாழுங்கள். மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்!_

உடலின் அணைத்து கட்டிகளையும் குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி

உடலின் அணைத்து கட்டிகளையும் குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி 




உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?

புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. 

இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது.... இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து, உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்....

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும்  உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும். 

வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். 

நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது.

P புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.

நாகதாளியின் பயன்பாடுகள்.


1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக  பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து  இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து  கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்

5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது....

தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும் ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.

நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை. வெட்டி போடபட்ட மடல்களின் மீது  எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.

ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும் அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும். 

தென்அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம்.எங்கோ படித்தது.

இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம் ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும் Flavonoid,Polyphenol போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்பு உள்ளது என மேலை நாட்டு ஆய்வுகள் கூறுகிறது இந்த பழம் Antioxidant ஆக செயல்பட்டு உடல் செல்களுக்கு அதிகபடியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது ....

நமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே போதும். அதனால் தான் இவைகள் பல்கி பெருகி வருகிறது இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் செல்களுக்கு ஆக்சிஜனை  அதிகரித்து புற்றுசெல்களை அழிக்க உதவி புரிகிறது....

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.




இத்ததகல்கள் இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமி-ருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது



சிங்காரவேல் என்கிற கவிமலரவன்



பூக்களை சூடுவதால் ஏற்படும் நன்மை பகுதி-2
 என்ற பதிவை கீழ்கண்ட இணைவில் காணலாம்..

Saturday, April 28, 2018

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் கரும்பு சாறு

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் கரும்பு சாறு





ஒரு டம்ளர் கரும்புச் சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலக்கவும். உணவுக்கு பின்னர் இதை எடுத்துக் கொண்டால் ரத்தம் சுத்தமாகும். செரிமானத்தை தூண்டும். 

உடலை இளைக்க செய்வதில் கரும்பு முக்கியப்பங்கு வகிக்கிறது. கரும்பு சாறில் உள்ள இரசாயனங்கள் உடலில் சேர்ந்த தேவையற்ற கொழுப்பை கரையச்  செய்கிறது. உடல் எடை குறைவதால் ஏற்படும் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. பயன்படுத்திய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியும். உடல் எடையை குறைக்க உதவும் கரும்பு எந்தவிதமான பாதக பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

உடலில் சிறுநீரகக்குழாய், பிறப்பு உறுப்பு செரிமான மண்டலக்குழாய் போன்ற பல இடங்களில் தொற்று நோய்களால் எரிச்சல், அரிப்பு போன்றவை உண்டாகும்.  இதனை சரிசெய்ய ஒரு தம்ளர் கரும்பு சாறு போதும். சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி  செய்வதற்கு உதவுகிறது.

வாய் துர்நாற்றம் இருப்பது சமூகத்தில் நம்மை தாழ்த்தி விடுகிறது. உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பச்சத்தில், நீங்கள் கரும்பு சாற்றை ஒரு தீர்வு  தரும் பானமாக கருதி கொள்ள வேண்டும். 

சிறுநீரக கற்களை கரைப்பது கரும்பின் பணி. பொதுவாக உடலில் ஏற்படும் வறட்சியால் இந்த கற்கள் உருவாகும். அதை தடுப்பதற்காகத்தான் அடிக்கடி தண்ணீர்  குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனெனில் கற்கள் ஏற்படாமல் கழிவுகளை வெளியேற்றி விடும். போதிய தண்ணீர் மட்டுமின்றி  கரும்பு சாறும் குடித்தால் இரட்டை பலன் கிடைக்கும்.

கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. மேலும் இது  பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.

கரும்பில் உயிர்ச்சத்து (வைட்டமின்) மற்றும் கனிமச்சத்துக்களுடன் பாஸ்பரஸ், இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. இதனை உண்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். இருமல், சளி, தொண்டை வலி இருப்பவர்கள் கரும்பு சாப்பிட மாட்டார்கள். அது தவறானது. இந்த பிரச்சனைகளுக்கு கரும்பே சிறந்தது.

கரும்பு இனிப்பாக இருப்பதால் நீரழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இனிப்பானது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக  வைக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி அளவோடு சாப்பிடலாம்.

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

நன்றி

ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை,
அனுப்பர்பாளையம்,
திருப்பூர்,


இத்ததகல்கள் இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமி-ருந்து பெறப்பட்டது
           
இவ்விடம் பதிவிடுவது



சிங்காரவேல் என்கிற கவிமலரவன்



உணவின் நிறம் உயிருக்கு விஷம் என்ற பதிவை கீழ்கண்ட இணைவில் காணலாம்..

(https://kavimalaravan.blogspot.in/2018/04/blog-post_75.html?m=0)



வைர முத்து VS கண்ணதாசன் குறித்த பதிவு



(https://kavimalaravan.blogspot.in/2018/04/vs.html?m=1)

Friday, April 27, 2018

சுடர்மிகு பாரதி பகுதி - 1

சுடர்மிகு பாரதி - பகுதி - 1



சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!


மேற்கண்ட பாடல் பகைவனுக்கருள்வாய் என்ற பாரதி எழுதிய ஞானப்பாடலில் உள்ள வரிகள்.

சிற்பியில் முத்து விளைவது போல் குப்பையிலே நல்ல மணம் தருகின்ற மனதை கவருகின்ற வகையில் நல்ல மலர்கள் மலராதோ என்ற கேள்வியை எழுப்புகின்ற வீரியம் மிக்க கவிதைகளை நினைவில் கொள்வோம் தோழர்களே!!!


வைரமுத்து VS கண்ணதாசன்

வைரமுத்து VS கண்ணதாசன் 



பார்வதி சுப்பிரமணியன் பதிவு

கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம்.

முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம்

அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்

ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது.

 அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள்

நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த படுகின்ற நிகழ்ச்சி

அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240.
500 புத்தகங்களின் விலை 1,20,000 (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ). ஆகவே நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.

இரண்டு நாட்களுக்கு பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது , அவருடைய உதவியாளர் பேசினார்
மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார்

அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும்
இப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டோம் .

ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது

பிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது 

தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம்

#ஃப்ளாஷ்பேக்

1979 என்று நினைக்கிறேன்எங்கள் கல்சுரல் விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் சிறப்புரையாற்ற வந்திருந்தார்.   

சிரித்த முகத்துடன் நெற்றியில் விபூதியுடன் பேசிக்கொண்டு இருந்தார்

சொல்லி வைத்தாற்போல நாங்கள் அனைவரும் அவரின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றியே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தோம்சளைக்காமல் பதில் சொன்னார் கண்ணதாசன்

விழா முடியும்போது ஒரு ஆட்டோ வந்தது.   அதிலிருந்து பண்டல் பண்டலாக அவரது அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தின் பிரதிகள் இறக்கப்பட்டன.

இப்போது நினைத்தாலும் அவரை நினைத்து கண்ணீர் வருகிறது.  

அத்தனை புத்தகங்களையும் ஆர்வத்தோடு கேள்வி கேட்ட கேட்காத அத்தனை பேருக்கும் ஒரு பைசா வாங்காமல் இலவசமாக கொடுத்து படிக்கச் சொன்னார்.

அவர்தான் மனிதர்.. எழுத்தாளர்.. கவிஞர்.. எங்கள் வாழ்வியல் பேராசிரியர்..

அந்த ஞானி வெறும் அரசாம் இது பேரரசாம்