Sunday, November 11, 2018

TNPSC - சொல்லிலக்கணம் – ஆகுபெயர் -வகைகள்

சொல்லிலக்கணம் – ஆகுபெயர் -வகைகள்
11. சொல்லாகு பெயர்:
சொல் பொருளுக்கு ஆகி வருவது
(எ.கா)    தம்பி என் சொல்லைகேட்பான்.
இதில் சொல் என்பது எழுத்தாகிய சொல்லை குறிக்காமல் அறிவுரைக்கு ஆகி வந்ததால் சொல்லாகு பெயராயிற்று.
————————————————————————————————————————————
12. தானியாகு பெயர் :
ஓர் இடத்திலுள்ள பொருளின் பெயர் (தானி) அதை சார்ந்திருக்கும் இடத்திற்கு (தானம்) ஆகி வருவது
(எ.கா)    பாலை  ஏற்று  (பால் -தானி ;   பாத்திரம் – தானம்)
               தயிரை இறக்கு
————————————————————————————————————————————
13. கருவியாகு பெயர்:
(எ.கா)  
* குழல் கேட்டு மகிழ்ந்தான்
 ‘குழல்’ என்பது புல்லாங்குழல் என்னும் இசைக்கருவி ஆகும்.இது அக்கருவியை     குறிக்காமல் அதன் காரியமாகிய (செயல்) இனிய இசைக்கு ஆகி வந்ததால்   கருவியாகு பெயர்.
* யாழ் கேட்டு மகிழ்ந்தேன்
* வீணை கேட்டு மெய் மறந்தேன்
————————————————————————————————————————————
14. காரியவாகு பெயர்:
ஒரு காரியத்தின் பெயர் அதனோடு தொடர்புடைய காரணத்திற்கு ஆகி வருவது
(எ.கா)
* நன்னூல் கற்றேன்
* சமையல் கற்றேன்
* திருக்குறள் படித்தேன்
————————————————————————————————————————————
15. கருத்தாவாகு பெயர்:
ஒரு கருத்தா (செயல் செய்பவர்) அவரை குறிக்காது அவரால் செய்யப்பட்ட பொருளுக்கு ஆகி வருவது
(எ.கா)
* திருவள்ளுவரைப் படித்துப் பார்
   (திருவள்ளுவரை குறிக்காமல் அவரால் எழுதப்பட்ட நூலை குறிக்கிறது)
* கம்பனைப் புரட்டிப்பார்
* கம்பனை கற்றேன்
————————————————————————————————————————————
16. உவமையாகு பெயர்:
ஓர் உவமைப்பெயர் அவரை குறிக்காமல் அவரோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது
(எ.கா)
* மயில் வந்தாள்
   (மயில் போன்றவள் வந்தாள்)
* காளை வந்தான்
   (காளை  போன்ற ஆண்மகன் வந்தான்)
* நாரதர் வந்தார்

No comments:

Post a Comment