TNPSC|TAMIL.. | முடியரசன் பற்றிய குறிப்புகள் ..!!!TNPSC-GRIUP-IV - 2019 பொதுத்தமிழ்
கவியரசு முடியரசன் குறிப்புகள்!!
💐 பெற்றோர் பெயர் - சுப்பராயலு - சீதாலட்சுமி
💐 ஊர் - பெரிய குளம் , தேனி மாவட்டம்
💐 காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார்
💐 1966 - ல் தமிழக அரசு இவருடைய பூங்கொடி, என்னும் காவியத்திற்காக பாரதிதாசன் விருது வழங்கியது.
💐 'ஜாதி என்பது நமக்கு ஏனோ" - என்பது இவருடைய முதல் கவிதை
💐 சாகித்ய அகாடமியால் இவர் பாடல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
💐 சங்கப்புலவன் பட்டம், தமிழக சான்றோர் மற்றும் தமிழக கலைமாமணி விருது பெற்றுள்ளார்
💐 பறம்பு மலையில் நடந்த பாரி விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளால் வழங்கப்பட்டது.
💐 தமது மறைவின் பொழுது எச்சடங்குகளும் கூடாது என்று உரைத்து அவ்வாறே நிறைவேறச் செய்தார்.
💐 சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்.
💐 பெரியாரிடத்திலும் அண்ணாவிடத்திலும் நெருங்கி பழகியவர்.
💐 சிறப்புப் பெயர்கள் :
திராவிட இயக்க கவிஞர்.
தற்கால தமிழக கவிஞர்களின் முன்னோடி.
பாரதியதாசன் பரம்பரை தலைமுறைக் கவிஞர்களுள் மூத்தவர்.
💐 சிறந்த நூல்கள் :
முடியரசன் கவிதைகள், எக்கோவின் காதல், காவியப்பாவை, பூங்கொடி, வீரகாவியம், மனிதனைத் தேடுகிறேன், நெஞ்சு பொறுக்குதில்லையே, பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் - சுயசரிதம், ஊன்றுகோல், பாடும் குயில், தாய்மொழிக் காப்போம், தமிழ் முழக்கம், வள்ளுவர் கோட்டம், புதியதொரு விதி செய்வோம்.
நாளை TNPSC GROUP-4 - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் வாணிதாசன் பற்றித் தெரிந்துகொள்வோம்..!!
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
No comments:
Post a Comment