Thursday, July 4, 2019

TNPSC CCSE IV 2019 - எட்டுத்தொகை நூல்களை எளிதாக நினைவில் வைத்து கொள்வது எப்படி?

TNPSC CCSE IV 2019 -  எட்டுத்தொகை நூல்களை எளிதாக நினைவில் வைத்து கொள்வது எப்படி?


பொதுத்தமிழ் பாடத்திட்டம்
எட்டுத்தொகை நூல்கள் பற்றிய தகவல்கள் !!! 


💠எட்டுத்தொகையில் உள்ள எட்டு நூல்களும் தொகை நூல்கள் ஆகும். அதாவது தொகுக்கப்பட்ட நூல்கள் என அழைக்கப்படுகிறது.


💠அகப்பொருள் நு}ல்கள் என்று அழைக்கப்படுபவை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநு}று, கலித்தொகை, அகநானு}று.

💠புறப்பொருள் நூல்கள் என்று அழைக்கப்படுபவை : புறநானூறு, பதிற்றுப்பத்து.

💠அகமும் புறமும் கலந்த நூல்கள் என்று அழைக்கப்படுபவை : பரிபாடல்.

💠இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர்.

💠எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் - கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு

எட்டுத்தொகை நூல்கள் :
💐நற்றிணை
💐குறுந்தொகை
💐ஐங்குறுநூறு
💐பதிற்றுப்பத்து
💐பரிபாடல்
💐கலித்தொகை
💐அகநானூறு
💐புறநானூறு


நினைவில் கொள்ள

நல்லா கும்பிட்டால் ஐயம் பாதியில் பறக்க கடவுள் அருள் புரிவார்

தொகுத்தவர்:


தெரியாத பூரியை கூட்ட தெரியாமல் தெரிந்த நல்லா உருவமும் தெரியவில்லை

தொகுப்பித்தவர்: 
மாறனும் தெரியாமல் இரும்பும் தெரியாமல், புரியாமல் தெளியாமல்
பெருவழியும் தெரியவில்லை.



எட்டுத்தொகை நூலினைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் தகவல்கள்:

நற்றிணை:
தொகுப்பித்தவர் - பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
தொகுத்தவர் - தெரியவில்லை

குறுந்தொகை
தொகுப்பித்தவர் - பெயர் தெரியவவில்லை.
தொகுத்தவர் - பூரிக்கோ

ஐங்குறுநூறு
தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையார்
தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

பதிற்றுப்பத்து
தொகுப்பித்தவர் - தெரியவில்லை
தொகுத்தவர் - தெரியவில்லை

பரிபாடல்
தொகுப்பித்தவர் - தெரியவில்லை
தொகுத்தவர் - தெரியவில்லை

கலித்தொகை
தொகுப்பித்தவர் - தெரியவில்லை
தொகுத்தவர் - நல்லந்துவனார்

அகநானூறு
தொகுப்பித்தவர் - பாண்டியன் உக்கிரபெருவழுதி
தொகுத்தவர் - உருத்திர சன்மனார்

புறநானூறு
தொகுப்பித்தவர் - தெரியவில்லை
தொகுத்தவர் - தெரியவில்லை

எட்டுத்தொகை நு}ல்களை எளிதாக நினைவில் கொள்ள:

💠எட்டுத்தொகை நூலில் முதல் நூலான நற்றிணையில் தொகுப்பித்தவர் பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதனை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

💠இதேப்போல் குறுந்தொகை மற்றும் கலித்தொகையில் தொகுத்தவர் பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, தொகுப்பித்தவர் பெயர் கொடுக்கப்படவில்லை.

💠மீதமுள்ள ஐங்குறுநூறு, அகநானூறு பாடல்களில் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
💠நற்றிணை - பாண்டியன் மாறன் பெருவழுதி (தொகுப்பித்தவர்)
💠குறுந்தொகை - பூரிக்கோ (தொகுத்தவர்)
💠கலித்தொகை - நல்லந்துவனார் (தொகுத்தவர்)
💠ஐங்குறுநூறு - கூடலு}ர் கிழார் (தொகுத்தவர்) - மாந்தரஞ்சேரல் இரும்பொறை (தொகுப்பித்தவர்)
💠அகநானூறு - உருத்திரசன்மனார் (தொகுத்தவர்) - உக்கிரபெருவழுதி (தொகுபித்தவர்)

நாளை எட்டுத்தொகை நூல்களில் உள்ள ஒவ்வொரு பாடல்களைப் பற்றிய தகவல்களை காணலாம்!!!



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக  தெரிந்து கொள்ளுங்கள்.

 அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

No comments:

Post a Comment