CCSE IV EXAM - 2019 | பொதுத்தமிழ் - சந்திப் பிழையை நீக்குதல் பகுதி 3 குறிப்புகள் TNPSC - 2019
பொதுத்தமிழ்
சந்திப் பிழையை நீக்குதல் பகுதி - III
(எ.கா) - அக்குடம், இச்சோலை, எத்தொழில்
💐 நிலைமொழியில் உயீரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
எ.கா - பனிக்காலம், மழைத்துளி
💐 முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்
எ.கா - பொதுத் தேர்தல், திருக்குறள்
💐 பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
எ.கா - வட்டப்பலகை, பச்சைத் தமிழன், பச்சைப்பட்டுத் துணி
💐 தனிக் குறிலை அடுத்து வரும் 'ஆ" என்னும் நெடிலுக்குப் பின் வல்லினம் மிகும்
எ.கா - உலாப் பருவம், உலாப்பாடினான், பலாப்பழம், இராப்பகல்
💐 உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
எ.கா - மலர்க்கை (மலர் போன்ற கை)
தாமரைக் கண்
💐 'ப", 'ற" ஒற்றுக்கள் இரட்டிக்கும் நெடில்தொடர், உயிர்த் தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கு முன் வல்லினம் மிகும்.
எ.கா - நாடு + பற்று - நாட்டுப்பற்று
💐 உருவகத்தில் வல்லினம் மிகும்
எ.கா - பசிப்பிணி, கருணைக்கடல்
💐 மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் பெயர்ச்சொல் வந்தால் வல்லினம் மிகும்
கன்றுக்குட்டி(பெயர்ச்சொல்)
கூண்டுக்கிளி(பெயர்ச்சொல்)
வல்லினம் மிகா இடங்கள்
💐 எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
எ.கா - குரங்கு கடித்தது(குரங்குக் குட்டி கடித்தது)
தாய் சென்றாள்.
💐 வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
எ.கா - ஆடு கொடி, விளை பயிர;
💐 இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது
எ.கா - நீர் குடித்தான்;
கதை சொன்னான்;
பால் பருகினான்.
💐 உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது
செடி கொடி, கல்வி கேள்வி
வுNPளுஊ ஊஊளுநு ஐஏ - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் புகழ்பெற்ற சந்திப்பிழையை நீக்குதல் பகுதி - iv பற்றி நாளை தெரிந்துகொள்வோம்..!!
No comments:
Post a Comment