Saturday, July 20, 2019

CCSE IV EXAM - 2019 | பொதுத்தமிழ் - சந்திப் பிழையை நீக்குதல் பகுதி 3 குறிப்புகள் TNPSC - 2019


CCSE IV EXAM - 2019 |  பொதுத்தமிழ் - சந்திப் பிழையை நீக்குதல் பகுதி 3 குறிப்புகள் TNPSC - 2019


பொதுத்தமிழ் 
சந்திப் பிழையை நீக்குதல் பகுதி - III


💐 'அ", 'இ" என்னும் சுட்டுப் பெயரின் பின்னும் 'எ" என்னும் வினாப்பெயரில் பின்னும் வல்லினம் மிகும்.

(எ.கா) - அக்குடம், இச்சோலை, எத்தொழில்

💐 நிலைமொழியில் உயீரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

எ.கா - பனிக்காலம், மழைத்துளி

💐 முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்

எ.கா - பொதுத் தேர்தல், திருக்குறள்

💐 பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

எ.கா - வட்டப்பலகை, பச்சைத் தமிழன், பச்சைப்பட்டுத் துணி

💐 தனிக் குறிலை அடுத்து வரும் 'ஆ" என்னும் நெடிலுக்குப் பின் வல்லினம் மிகும்

எ.கா - உலாப் பருவம், உலாப்பாடினான், பலாப்பழம், இராப்பகல்

💐 உவமைத் தொகையில் வல்லினம் மிகும்

எ.கா - மலர்க்கை (மலர் போன்ற கை)

தாமரைக் கண்

💐 'ப", 'ற" ஒற்றுக்கள் இரட்டிக்கும் நெடில்தொடர், உயிர்த் தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கு முன் வல்லினம் மிகும்.

எ.கா - நாடு + பற்று - நாட்டுப்பற்று

💐 உருவகத்தில் வல்லினம் மிகும்

எ.கா - பசிப்பிணி, கருணைக்கடல்

💐 மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் பெயர்ச்சொல் வந்தால் வல்லினம் மிகும்

கன்றுக்குட்டி(பெயர்ச்சொல்)

கூண்டுக்கிளி(பெயர்ச்சொல்)

வல்லினம் மிகா இடங்கள்

💐 எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.

எ.கா - குரங்கு கடித்தது(குரங்குக் குட்டி கடித்தது)

தாய் சென்றாள்.

💐 வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

எ.கா - ஆடு கொடி, விளை பயிர;

💐 இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

எ.கா - நீர் குடித்தான்;

கதை சொன்னான்;

பால் பருகினான்.

💐 உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

செடி கொடி, கல்வி கேள்வி

வுNPளுஊ ஊஊளுநு ஐஏ - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் புகழ்பெற்ற சந்திப்பிழையை நீக்குதல் பகுதி - iv பற்றி நாளை தெரிந்துகொள்வோம்..!!

No comments:

Post a Comment