Tuesday, July 23, 2019

CCSE IV EXAM - 2019 | | லோக் அதாலத் பற்றிய குறிப்புகள் TNPSC COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV - 2019

CCSE IV EXAM - 2019 | | லோக் அதாலத் பற்றிய குறிப்புகள்
TNPSC COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV - 2019


லோக் அதாலத் பற்றிய சிறு குறிப்புகள்

🌺 லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர;க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும்.

🌺 இது ஒரு மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர;வு காணும் ஒரு வழிமுறையாகும்.

🌺 'லோக்" என்பது மக்களையும் 'அதாலத்" என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும்.

🌺 மக்கள் நீதிமன்றம் முதன் முதலில் குஜராத் மாநிலத்தில் ஜூனகார; என்ற இடத்தில் மார;ச் 14, 1982 அன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடந்தது.

🌺 1987ஆம் ஆண்டு சட்டப் பணிகள் ஆணையச் சட்டத்தின்படி லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டன.

🌺 இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர;களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர;வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு (லோக் அதாலத்) அனுப்பலாம்.

🌺 லோக் அதாலத் உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89 - ன் கீழ் வருகின்றது.

🌺 சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19 ன் படி, மக்கள் நீதிமன்றம், 3 பேர; கொண்ட அமர;வாக இருக்கும்.

🌺 நீதி மன்றத்திலிருக்கும் நிலுவையிலுள்ள வழக்குகளில் வழக்கில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர;வு ஏற்படுத்துதலாகும்.

🌺 வழக்குத் தரப்பாளர;களுக்குக் குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்தல்.

🌺 குற்றவியல் வழக்குகளைத் தவிர, மற்ற அனைத்து வழக்குகளும் லோக் அதாலத் நீதிமன்றங்களின் மூலம் தீர;வு காணலாம்.

🌺 லோக் அதாலத் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்குகள் அனைத்தும் தீர;வு காண்பதில் ஏற்படும் நடைமுறை தாமதத்தினைக் குறைத்து மாற்று முறைகளைப் பின்பற்றி நிரந்தர தீர;வு காண்பதை நோக்கமாக கொண்டு மேற்படி சட்டம் இயற்றப்பட்டது.

🌺 லோக் அதாலத் நீதி மன்றங்களை விரைவு நீதிமன்றங்கள் என்றழைக்கிறோம்.

🌺 லோக் அதாலத் நீதிமன்றங்கள் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள நாளேடுகள் பெரிதும் உதவியாக உள்ளன.

🌺 அண்மைக் காலத்தில் விரைவாகவும், குறைந்த செலவிலும் நீதி கிடைப்பதற்காகக் குறிப்பாக ஏழை மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

🌺 நிதி நெருக்கடி (அரசியலமைப்பு சட்டம் 360வது பிரிவு) ன்படி நாடு முழுவதும் அல்லது ஏதாவது ஒரு பகுதியில் நெருக்கடி நிலைமை அறிவிக்கப்படுகிறது.

🌺 அரசியலமைப்புச் சட்டம் 352ஆவது பிரிவு மூலம் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவித்து நாட்டைப் பாதுகாக்க முடியும்.

நாளை TNPSC-IV - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் 'தகவல் அறியும் உரிமை" பற்றித் தெரிந்துகொள்வோம்..!!



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..


No comments:

Post a Comment