Friday, July 12, 2019

TNPSC | முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 2019 !! முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 2019 - பொருளாதாரம்

TNPSC | முக்கிய நடப்பு நிகழ்வுகள் - 2019 !!

முக்கிய நடப்பு நிகழ்வுகள்

ஜனவரி 2019 - பொருளாதாரம்


🍁 ரிசர்வ் வங்கிச் சட்டம் (1934) இன் 2ஆவது அட்டவணையின்படி, ESAF சிறுகடன் வங்கி நிறுவனம், ஓர் அட்டவணை வங்கியாக செயல்பட இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இதன் மூலம் பெடரல் வங்கி, தென்னிந்திய வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி மற்றும் தன்லக்ஷ்மி வங்கி வங்கி ஆகியவற்றுக்குப் பின், கேரளாவின் 5 ஆவது அட்டவணை வங்கியாக ESAF மாறியுள்ளது.

🍁 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் பொருளாதார மற்றும் நிதி நிலைத்தன்மையை விரிவாக மீளாய்வு செய்து, நீண்டகால தீர்வுகளை முன்மொழிவதற்காக, முன்னாள் SEBI தலைவர் U.K. சின்ஹா தலைமையிலான 8 உறுப்பினர்கள் கொண்ட வல்லுநர் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.

🍁 பஞ்சாப் கிராமின் வங்கி, மால்வா கிராமின் வங்கி மற்றும் சட்லஜ் கிராமின் வங்கி ஆகிய மூன்று வட்டார ஊரக வங்கிகளையும், ஜனவரி 1 முதல் ஒரே ஒற்றை வட்டார ஊரக வங்கியாக (Regional Rural Bank) இந்திய அரசு இணைத்துள்ளது.

🍁 மின்னணு பணப்பரிமாற்றத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை காண, நந்தன் நிலகேனி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. நாட்டில் தற்போது செயல்படுத்தப்படும் மின்னணு பணப்பரிமாற்ற முறைகள், அதிலுள்ள இடைவெளி, மின்னணு பணப்பரிமாற்ற வழங்குவதில் உள்ள இடர்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அவற்றைப் போக்குவதற்கான வழிவகைகளை இந்தக் குழு பரிந்துரைக்கும்.

🍁 நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதமாக இருக்கும் எனவும், எதிர்வரும் 2019 - 2020 ஆம் ஆண்டுகளில் 7.5% அளவுக்கு அது உயரும் எனவும், உலக வங்கியின் ′Darkening Skies′ என்று தலைப்பிடப்பட்ட, 2019 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍁 நாடு முழுவதும், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) அமல்படுத்திய பின், சில மாநிலங்களில், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை ஆராயவும், வருவாயை அதிகரிப்பதற்கான வழி வகைகளை பரிந்துரைக்கவும், 7 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, பீகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் லோடி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🍁 சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ், நிலைச்சொத்துத் (REAL ESTATES) துறையை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு ஏழு உறுப்பினர்கள் கொண்ட அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது. குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல், இந்தக் குழுவின் தலைவராக இருப்பார். இக்குழு, GST இன் வரி வீதத்தைப் பகுப்பாய்வு செய்யும் மற்றும் குடியிருப்பு கட்டுமான அலகுகளுக்கான ஒரு கலப்புத் திட்டத்தையும் பரிந்துரைக்கும்.

🍁 மத்திய அமைச்சரவையானது தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை  (GSTAT- Goods and Service Tax Appellate Tribunal)  உருவாக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த, தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல் முறையீட்டு தீர்ப்பாயமானது புதுடெல்லியில் அமையவுள்ளது.

🍁 சர்வதேச செலவாணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும், 2020ல் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment