Tuesday, July 2, 2019

TNPSC CCSE-4 தேர்வுக்குரிய முக்கிய பொதுத்தமிழ் குறிப்புகள் !!-2019

  • TNPSC CCSE-4 தேர்வுக்குரிய முக்கிய பொதுத்தமிழ் குறிப்புகள் !!-2019


பதிற்றுப்பத்து தொடர்பான செய்திகள்

🌟 எட்டுத் தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து.

🌟 இந்நு}ல் பாடாண் திணையில் அமைந்துள்ளது.

🌟 பதிற்றுப்பத்தில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.

🌟 ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம் பெற்றிருக்கின்றன.

🌟 இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவனைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார், உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.

🌟 ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்.

🌟 தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வதாகும்.

🌟 இதன் பா வகை நேரிசை ஆசிரியப்பா.

🌟 செந்தூக்கு என்பது வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ, ஆசிரியவடியின் இறுதி போன்றோ அமையும்.

🌟 பாடாண் திணையானது கைக்கிளைக்குப் புறனாகும்.

🌟 செந்துறையாவது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்தறைப் பாடாண் பாட்டு எனப்படும்.

🌟 வண்ணம் என்பது சந்த வேறுபாடு ஆகும்.

🌟 இந்நூலினை முதலில் பதிப்பித்தவர் உ.வே.சா.

🌟 சேர அரசர்கள் பத்துப் பேரை பத்து புலவர்கள் தலா பத்துப்பாடல்கள் வீதம் பாடிய நூறு பாடல்களின் தொகுப்பே பதிற்றுப்பத்து.

🌟 கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நு}ல் கடைச்சங்க கால நூல் ஆகும்.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.
Www.Kavimalaravan.blogspot.com

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..


No comments:

Post a Comment