- TNPSC CCSE-4 தேர்வுக்குரிய முக்கிய பொதுத்தமிழ் குறிப்புகள் !!-2019
பதிற்றுப்பத்து தொடர்பான செய்திகள்
🌟 எட்டுத் தொகையில் அமைந்த புறத்திணை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து.
🌟 இந்நு}ல் பாடாண் திணையில் அமைந்துள்ளது.
🌟 பதிற்றுப்பத்தில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
🌟 ஒவ்வொரு பாடலின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் என்பவை இடம் பெற்றிருக்கின்றன.
🌟 இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். இவனைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார், உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.
🌟 ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையாற் செல்வதுமாகும்.
🌟 தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வதாகும்.
🌟 இதன் பா வகை நேரிசை ஆசிரியப்பா.
🌟 செந்தூக்கு என்பது வஞ்சிப்பாவின் இறுதியடி போன்றோ, ஆசிரியவடியின் இறுதி போன்றோ அமையும்.
🌟 பாடாண் திணையானது கைக்கிளைக்குப் புறனாகும்.
🌟 செந்துறையாவது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்தறைப் பாடாண் பாட்டு எனப்படும்.
🌟 வண்ணம் என்பது சந்த வேறுபாடு ஆகும்.
🌟 இந்நூலினை முதலில் பதிப்பித்தவர் உ.வே.சா.
🌟 சேர அரசர்கள் பத்துப் பேரை பத்து புலவர்கள் தலா பத்துப்பாடல்கள் வீதம் பாடிய நூறு பாடல்களின் தொகுப்பே பதிற்றுப்பத்து.
🌟 கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நு}ல் கடைச்சங்க கால நூல் ஆகும்.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.
Www.Kavimalaravan.blogspot.com
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!..
No comments:
Post a Comment