CCSE IV EXAM - 2019 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய குறிப்புகள்!!
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றிய முக்கிய குறிப்புகள்!!
💐 பெற்றோர் பெயர் - அருணாச்சலனார் - விசாலாட்சி
💐 ஊர்- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்று}ர்
💐 காலம் - 1930 -1959
💐 இவர் சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.
💐 பாரதிதாசனிடம் கல்வி கற்றார். எனது வலதுகை என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர்
💐 உழைக்கும் மக்களின் துயரங்களை பாடல்கள் வழி பரவலாக்கினார். பொதுவுடமைக் கருத்துக்களைத் திரைப்படப்பாடலில் புகுத்தியவர்
💐 தஞ்சையை சேர்ந்த சிவராமன், இரணியன் ஆகியோர் உடன் சேர்ந்து விவசாய இயக்கத்தை உருவாக்கினார்
💐 எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது இவருடைய சிறப்பாகும்
💐 இவர் தனது பத்தொன்பதாவது வயதிலேயே கவிப்புனைவதில் அதிகம் ஆர்வம் காட்டினார்
💐 இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை 'ஜனசக்தி" என்ற பத்திரிக்கை வெளியிட்டு வந்தது.
💐 1954 ஆம் ஆண்டு 'படித்த பெண்" திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்த துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்
💐 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார்.
💐 தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது.
💐 'அவர் கோட்டை, நான் பேட்டை" என்று உடுமலை நாராயணக்கவி புகழ்ந்துள்ளார்.
💐' நீ மீண்டும் தோன்றிய பாரதியடா" என்று ஜனசக்தி ஆசிரியர் ஜீவானந்தம் புகழ்ந்துள்ளார்
💐 சிறந்த பாடல்கள்:
'தேனாறு பாயுது செங்கதிறும் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது"
'பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரை காக்கும் உணவாகும்"
'காடு வெளஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்"
💐 சிறப்பு பெயர்கள்:
மக்கள் கவிஞர், பொதுவுடைமைக் கவிஞர்
நாளை - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் மருதகாசி பற்றித் தெரிந்துகொள்வோம்..!!
No comments:
Post a Comment