Friday, July 12, 2019

CCSE IV EXAM - 2019 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய குறிப்புகள்

CCSE IV EXAM - 2019 | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய குறிப்புகள்!!

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றிய முக்கிய குறிப்புகள்!!


💐 பெற்றோர் பெயர் - அருணாச்சலனார் - விசாலாட்சி

💐 ஊர்- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்று}ர்

💐 காலம் - 1930 -1959

💐 இவர் சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.

💐 பாரதிதாசனிடம் கல்வி கற்றார். எனது வலதுகை என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர்

💐 உழைக்கும் மக்களின் துயரங்களை பாடல்கள் வழி பரவலாக்கினார். பொதுவுடமைக் கருத்துக்களைத் திரைப்படப்பாடலில் புகுத்தியவர்

💐 தஞ்சையை சேர்ந்த சிவராமன், இரணியன் ஆகியோர் உடன் சேர்ந்து விவசாய இயக்கத்தை உருவாக்கினார்

💐 எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது இவருடைய சிறப்பாகும்

💐 இவர் தனது பத்தொன்பதாவது வயதிலேயே கவிப்புனைவதில் அதிகம் ஆர்வம் காட்டினார்

💐 இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை 'ஜனசக்தி" என்ற பத்திரிக்கை வெளியிட்டு வந்தது.

💐 1954 ஆம் ஆண்டு 'படித்த பெண்" திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்த துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்

💐 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார்.

💐 தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது.

💐 'அவர் கோட்டை, நான் பேட்டை" என்று உடுமலை நாராயணக்கவி புகழ்ந்துள்ளார்.

💐' நீ மீண்டும் தோன்றிய பாரதியடா" என்று ஜனசக்தி ஆசிரியர் ஜீவானந்தம் புகழ்ந்துள்ளார்

💐 சிறந்த பாடல்கள்:

'தேனாறு பாயுது செங்கதிறும் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது"

'பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரை காக்கும் உணவாகும்"

'காடு வெளஞ்சென்ன மச்சான் - நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்"

💐 சிறப்பு பெயர்கள்:

மக்கள் கவிஞர், பொதுவுடைமைக் கவிஞர்

நாளை - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் மருதகாசி பற்றித் தெரிந்துகொள்வோம்..!!

No comments:

Post a Comment