TNPSC_CCSE IV EXAM - 2019.. | புகழ்பெற்ற நூல்களும் நூலாசிரியர் பகுதி - IV..!
பொதுத்தமிழ்
புகழ்பெற்ற ல்களும் நூலாசிரியர்களும்
💐 மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு முதலிய நூல்களின் ஆசிரியர் - திரு.வி. கல்யாண சுந்தரனார்
💐 இரவு வரவில்லை, இன்ப இலக்கியம், இனிக்கும் பாட்டு, எழில் விருத்தம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் முதலிய நூல்களின் ஆசிரியர் - வாணிதாசன்
💐 தேன்மழை, துறைமுகம், சிரிப்பின் நிழல், புகழ்மாலை, பட்டத்தரசி முதலிய நூல்களின் ஆசிரியர் - சுரதா
💐 இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்து மதம், மாங்கனி முதலிய நூல்களின் ஆசிரியர் - கண்ணதாசன்
💐 மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் முதலிய உரைநடைகளின் ஆசிரியர் - இராமலிங்க அடிகள்
💐 தமிழில் முடியுமா, திண்ணை ரசாயனம், சக்கரவர்த்தித் திருமகன் முதலிய நூல்களின் ஆசிரியர் - இராஜாஜி
💐 பெருங்கதையின் ஆசிரியர் - கொங்குவேள்
💐 நறுந்தொகையின் ஆசிரியர் - அதிவீரராம பாண்டியர்
💐 நன்னெறி என்ற நூலின் ஆசிரியர் - சிவப்பிரகாசர்
💐 உலகநீதி என்ற நூலின் ஆசிரியர் - உலகநாதர்
💐 சூடாமணி என்ற நூலின் ஆசிரியர் - மண்டலபுருடர்
💐 நன்னூலின் ஆசிரியர் - பவணந்தியார்
💐 சின்ன சீறாவின் ஆசிரியர் - பனுஅகமது மரைக்காயர்
💐 பெத்தலகேம் குறவஞ்சி என்ற நூலின் ஆசிரியர் - வேதநாயக சாஸ்திரி
💐 பூக்காரி, வழித்துணை, கிளிக்கூண்டு, காட்டுவாத்து முதலிய நு}ல்களின் ஆசிரியர் - ந. பிச்சமூர்த்தி
💐 நிலவுப்பூ, சர்ப்பயாகம் இளையமகன் முதலிய நூல்களின் ஆசிரியர் - சிற்பி
💐 பால்வீதி, நேயர் விருப்பம் போன்ற நூல்களின் ஆசிரியர் - அப்துல் ரகுமான்
No comments:
Post a Comment