CCSE IV EXAM - 2019 | சி.சு.செல்லப்பா பற்றிய குறிப்புகள் - 2019
- பொதுத்தமிழ்
சி.சு.செல்லப்பா பற்றிய முக்கிய குறிப்புகள்!!
💐 காலம் - செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998
💐 ஊர் - தேனி மாவட்டம் சின்னமனூர்
💐 சி.சு.செல்லப்பா ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர்.
💐 'எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
💐 தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் 'வாடிவாசல், சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா.
💐 மதுரைக் கல்லு}ரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
💐 'சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு 'மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது.
💐 'சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.
💐 1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
💐 சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார்.
💐 விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார்.
💐 பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த 'எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார்.
💐 இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
படைப்புகள்:
💐 நாவல்கள் - சுதந்திரதாகம், வாடிவாசல், ஜீவனாம்சம்
💐 சிறுகதை - சரஸாவின் பொம்மை, மணல் வீடு, மாற்று இதயம், சத்தியாகிரகி
சிறப்பு பெயர்கள்:
💐 புதுக்கவிதை புரவலர்
நாளை தருமு சிவராமு பற்றித் தெரிந்துகொள்வோம்..!!
No comments:
Post a Comment