TNPSC CCSE-IV Exam - 2019
பொது அறிவு - ஒலியியல் - பகுதி-2
வீச்சு(a) :
✧ சமநிலைப் புள்ளியிலிருந்து அதிர்வடையும் பொருளின் இடப் பெயர்ச்சியின் பெரும மதிப்பு வீச்சு எனப்படும். அதன் அலகு மீட்டர்(அ) ஆகும்.
✧ அலைவுக் காலம் (T) = 1/அதிர்வெண்(n)
✧ அலைவுக்காலம் அதிர்வெண்ணின் தலைகீழ் மதிப்புக்குச் சமம்.
✧ நாம் ஒரு பொருளைப் பார்க்காமலேயே, அது எழுப்பும் ஒலியைக் கொண்டு அப்பொருளை அறியலாம். அது எவ்வாறெனில் அவை எழுப்புகின்ற ஒலியின் தன்மையைப் பொருத்துப் பிரித்து அறியலாம்.
✧ வீச்சு, அதிர்வெண் ஆகிய இரண்டும் ஒலியின் முக்கியப் பண்புகள் ஆகும்.
✧ ஒலியின் மதிப்பு அதன் வீச்சைப் பொருத்தது.
செவியுணர், செவியுணரா ஒலிகள்
மனிதனின் செவியால் 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண்களை உடைய ஒலி அலைகளைக் கேட்டுணர முடிகிறது. இவ்வகை அதிர்வெண்கள் செவியுணர் அதிர்வெண்கள் எனப்படும். அதிர்வெண் 20 ஹெர்ட்ஸூக்கு கீழுள்ள மற்றும் 20000 ஹெர்ட்ஸூக்கு அதிகம் உள்ள ஒலியைச் செவியால் கேட்டுணர முடியாது. இவை செவியுணரா அதிர்வெண்கள் எனப்படும்.
இரைச்சலைக் கட்டுப்படுத்த சிலவழிகள்
1. விழாக்களில் ஒலிப்பெருக்கியின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
2. மகிழுந்து போன்ற வாகனங்கள் அதிக ஒலியை எழுப்பாமல் இருத்தல் வேண்டும்.
3. தொலைக்காட்சி, இசைக் கருவிகளில் இருந்து வரும் ஒலியின் அளவைக் குறைத்து கேட்க வேண்டும்.
மேலும் அறிந்து கொள்வோம்
ஆண்களின் குரல் நாண்களின் நீளம் 20மிமீ. பெண்களுக்கு அது சுமார் 15மிமீ.
ஆனால் குழந்தைகளின் குரல்நாண்கள் மிகச்சிறியனவாக உள்ளன.
இன்றைய அறிவியல்
✧ கண்ணாடி ஒளிஇழை முழுஅக எதிரொளிப்புத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
✧ மெலிந்த வளையும் தன்மை கொண்ட ஒளி ஊடுருவும் கண்ணாடித் தண்டு, கண்ணாடி ஒளிஇழை எனப்படும். இதில் எளிதாக ஒளி எடுத்துச் செல்லப்படுகிறது.
✧ ஒளி இழைக்குழாயின் ஒரு முனையில் சிறிய கோணத்தில் படும் ஒளிக்கதிர் உட்புறமாகச் செல்லும்போது மீண்டும் மீண்டும் பற்பல முழுஅக எதிரொளிப்புகளுக்கு உட்பட்டு இறுதியில் மறுமுனை வழியாக வெளிவரும்.
✧ ஒளிஇழைக் குழாயை வளைத்தாலும், முறுக்கினாலும் ஒளியானது எளிதில் குழாயின் வழியே கடந்து செல்லும். ஒளியிழை மூலம் செய்திகளையும் பிம்பங்களையும் எடுத்துச் செல்லும் முறைக்கு ஒளியிழை இயல் எனப்படும்.
No comments:
Post a Comment