Thursday, August 16, 2018

பிக்மி எண் PICME: Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation


பிக்மி எண் PICMEPregnancy and Infant Cohort Monitoring and Evaluation.


பிரசவ காலத்தில் இருக்கும் பெண்களும் அவர்களது குடும்பத்தினரும், அடிப்படை சுகாதார மையம் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களால் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாவதையும் இதற்கான தீர்வு வேண்டி அழைப்புகள் அதிகரித்து வருகிறது.

பிக்மி எண் சமீபத்தில் தமிழகம் அதிகாரப்பூர்வமாக அறிமுக்ப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மட்டுமே. வேறு எங்கும் இந்தியாவில் இல்லை.
PICME. Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகளை தொடர் கண்காணிப்புக்கு இது உதவும் என்று சொல்லி அவர்களை ஒருவித கட்டாயத்திற்குள் தள்ளுவது போலவே நடைமுறையில் ஊழியர்கள் செயல்படுகின்றனர்.
இது கொடுக்க வேண்டும் என்றால் அந்த கர்ப்பவதி தடுப்பூசி போட்டால் தான் தீரும், எங்களிடம்  தான் வரவேண்டும், என தொடர் இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

இதுமட்டுமல்ல பிறப்பு சான்றிதழ் பெறுவதிலும் பல சட்டவிரோதமான சர்வாதிகார போக்கு, அடிப்படை அரசு ஊழிர்களிடம் காணமுடிகிறது.

தடுப்பூசி மற்றும் ஒற்றை மருத்துவ கலாச்சாரத்தை மறுக்க வேண்டும் என தெரிந்தவர்களுக்கு , இதில் இருக்கும் உரிமை சார்ந்த, அறிவியல் சார்ந்த சரியான காரணங்கள் பெரும்பாலும் தெரியாமலேயே இருக்கிறது.
பயமும் இருக்கிறது.

இந்த பதிவு தடுப்பூசிக்கு மட்டுமல்ல , பிரசவம் மற்றும் எந்த சிகிச்சை பெறுவதற்கும் பொருந்தும்.

உங்கள் உரிமையில் தெளிவாக இருங்கள்.

இந்த பதிவு அவர்களுக்கும் இன்னும் இது போல மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களுக்கும் ஒரு ஊக்க பதிலாக மீண்டும் ...

தடுப்பூசியை மறுப்பவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எப்படி கையாள்வது?


மரு. கோ. பிரேமா BHMS,
13/3/2018

தடுப்பூசியின் பாதகங்களை பற்றிய விழிப்புணர்வு பெருகிவரும் இத்தருணத்தில் தடுப்பூசி மறுப்பாளர்கள் அதிகரித்து வருகிறார்கள்.
முக்கியமாக தமிழகத்தில் கேரளத்திலும் கர்நாடகாவிலும் இதை பார்க்க முடிகிறது.
ஆனாலும் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் மூலம் பள்ளிகளில் இருந்தும் இந்த மறுப்பிற்கு நிறைய இடையூருகளும் மறைமுக மிரட்டல்களும் வருகின்றன. என்ன செய்வது என்பது பல பெற்றோருடைய கவலையாக இருக்கிறது.
என்ன செய்யலாம் என பொதுவான சில வழிகளை சொல்கிறேன்.

இப்படி சொல்லுங்கள்.

1. தடுப்பூசியை ஏற்பதும் மறுப்பதும் இந்திய குடிமகனாக ஒவ்வொரு தனிநபருக்கும் உள்ள உரிமை ஆகும்.

முதலில் இதில் உறுதியாக இருங்கள். உங்களுக்கு இது வேண்டும் வேண்டாம் என்று சொல்ல, உங்களுடைய தேர்வு செய்யும் உரிமையை எந்த அரசும் சட்டமும் பறிக்க முடியாது. கூடாது.

2. இந்திய குடிமகனாக ஒரு நபர் எந்த மருத்துவம் தனக்கோ தன் குடும்பத்தினருக்கோ எப்போது எது வேண்டும் என்ற தேர்வை முடிவு செய்யும் உரிமையும் அவருடையதே.

தடுப்பூசி ஆங்கில மருத்துவத்தின்  வழி வருவது. முற்றிலும் இயற்கைக்கு எதிரான கேடு விளைவிக்கும் அதிபயங்கர வேதி நச்சுகள் நிறைந்தது. ஆக அலோபதி மறுப்பது போல, தடுப்பூசி மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. 
இந்தியாவில் அலோபதிக்கு முன்னரே பல நூறு ஆயிரம் ஆணடுகளாக பல்வேறு மருத்துவமுறைகள் இருந்து வருகிறது. இவைகளில் முக்கியமாக AYUSH - Ayurveda ஆயுர்வேத, yoga and naturopathy இயற்கை மருத்துவம் மற்றும யோகா, Unani யனானி, Sidha சித்தா மற்றும் Homoeopathy ஓமியோபதி எனும் மருத்துவ முறைகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டவை. இதில் இயற்கை மருத்துவம் மற்றும் முக்கியமாக ஓமியோபதி முறைகள் தடுப்பூசி காலத்தினை தொட்டு இருந்து வருவதால் தடுப்பூசிகளை பற்றிய பாதகங்களை சொல்லியே வருகின்றன. மற்ற மருத்துவ முறைகள் பல ஆயிரம் ஆண்டுகள் முந்தைய முறை ஆதலால் இதில் தடுப்பூசிகளின் பாதகங்களை பற்றிய குறிப்புகள் இல்லை. ஆயினும் இதன் தத்துவார்த்தம் புரிந்த நல்மருத்துவர்கள் தடுப்பூசியை எதிர்க்கவே செய்வர்.

இப்படி இருக்க தடுப்பூசி திணிப்பு என்பது ஒரு இந்திய குடிமகனின் தனக்கான விருப்ப மருத்துவ  தேர்வை மறுப்பதற்கு சமம்.
இது அலோபதியினை சர்வாதிகார மற்றும் ஒற்றை மருத்துவ முறையாக திணிப்பதற்கு ஒப்பாகும்.

3. நுகர்வோர் உரிமை.

ஒவ்வொரு நுகர்வு பொருளுக்கும் முக்கியமாக சாதக பாதகங்களை நுகர்வோரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
அதன்படி ஒவ்வொரு தடுப்பூசியும் அதன் சாதக பாதகங்களை பற்றிய தகவல்களோடுதான் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தடுப்பூசிகளை விற்கின்றன.
ஆனால் இதை மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் அரசும் வியாபாரமாக விற்கும் தனியார் மருத்துவர்களும் இந்த நுகர்வு உரிமையை மறுக்கின்றனர்.  தடுப்பூசிகளோடு வரும் இணைப்பு துண்டுச்சீட்டில் அதைப்பற்றிய சில தகவல்களை நிறுவனம் அச்சிட்டு ஒத்துக்கொள்கிறது. அதில் தடுப்பூசி எவருக்கு ஒத்துக்கொள்ளாது அல்லது போடக்கூடாது, போட்டுக்கொள்பவருக்கு என்ன மாதிரியான பாதகங்கள் வரக்கூடும் , அதீத பாதகங்களான உயிர் இழப்பு முதற்கொண்டு அதில் அச்சிடப்பட்டு இருக்கும். இந்த தகவலை நுகர்வோருக்கு சொல்லாமல் மறைப்பது நுகர்வோர் உரிமையை பறிக்கும் செயலே.
இப்படி தடுப்பூசி எனும் மருத்துவ நுகர்வு பொருளினை வெளிப்படைத்தன்மையோடு விற்பதை informed consent என்பர்.
இந்த வெளிப்படைத்தன்மையை, உங்களிடம் தடுப்பூசி திணிப்பவரிடம் கேளுங்கள்.
எனக்கு தடுப்பூசி இணைப்பு சீட்டில் உள்ளதை வாசித்து காண்பியுங்கள் என கேளுங்கள். அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் உங்களுக்கு வாசிக்கும்போதாவது. அவர்களிடம் இல்லை எனில் நீங்களே அதை காண்பியுங்கள்.
இந்த இணைப்பு சீட்டை இந்தியாவில் அதிகம் விற்கப்படும் தடுப்பூசி நிறுவனத்தின் இணைப்பு துண்டுச்சீட்டு வேண்டுபவர் உங்கள் மின்னஞ்சல் கொடுக்கவும். அதன் PDF தருகிறேன்.

4. எந்த குழந்தைக்கு எந்த மாதிரியான பாதகம் வரலாம், எந்த குழந்தை மறிக்கும் போன்றவற்றை முன்கூட்டியே அறியமுடியாது. எனில் தடுப்பூசி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் ஆபத்து நிறைந்ததே. 1000 குழந்தைகளில் ஒரு குழந்தை மறித்தாலும் இதை ஏற்கமுடியாது. அந்த குழந்தை எந்த குழந்தையாகவும் இருக்கலாம்.
இதோடு தடுப்பூசி வேலை செய்யும் அதாவது அந்நோயை தடுக்கும் என்பதற்கும் எந்தவிதமான உத்திரவாதமும் கிடையாது.
இதையும் எழுத்துபூர்வமாக உத்திரவாதமாக கேளுங்கள்.

5. அப்படி ஒரு குழந்தைக்கு தடுப்பூசியினால் பாதகம் நேர்ந்தால் அதை திணிக்கும் பள்ளியோ, அரசு ஊழியரோ, அரசோ அதற்கான இழப்பீடை தருவதாக ஒப்புதல் வாக்குமூலம் கேளுங்கள்.
போலியோ சொட்டுமருந்து பாதகத்திற்கு மட்டுமே இந்தியாவின் முதல் தடுப்பூசி இழப்பீடு 30 லட்சம். சரியான நேரத்தில் ஆதாரத்துடன் கேட்பவருக்குதான் கிடைக்கும். இதற்கு முதலில் உங்களுக்கு உண்மை தெரிந்திருக்க வேண்டுமே. இதுவும் தடுப்பூசியின் வெளிப்படைத்தன்மையை மறைத்து விற்பதற்கும் திணிப்பதற்கும் முக்கிய காரணம்.

உங்கள் உரிமைகளை, இக்காரணங்களை எடுத்து சொல்லுங்கள்.
இந்தியாவில் பெரும்பாலும் மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களுமே தடுப்பூசி உண்மையை பற்றிய அறியாமையில் தான் இருக்கிறார்கள். அவர்களும் விழிப்படையட்டும்.

உங்கள் உரிமையில் தெளிவாக அமைதியாக தைரியமாக உறுதியாக இருங்கள்.
இதற்கும் தடுப்பூசி திணிக்கும் நபர் உங்களது உரிமையை மதிக்கவில்லை எனில், அவரிடம்-பள்ளியோ, அரசு ஊழியரோ, மருத்துவரோ எவராயினும் இந்த திணிப்பு மற்றும் இதை மறுப்பதினால் அவரக்ளின் அடுத்த கட்ட நடைவடிக்கையை அவர்களிடமே எழுத்து பூர்வமாக கேளுங்கள்.
உம். பள்ளி என்றால். உங்கள் பெயருக்கு பள்ளியில் இருந்து நீங்கள் தடுப்பூசி மறுப்பதால் அவர்கள் என்ன மாதிரியான நடைவடிக்கை எடுக்க உள்ளனர் என்பதை எழுத்துபூர்வமாக கேளுங்கள்.  பள்ளியிலிருந்து விலகச்சொல்கிறார்கள் எனில் அதை இந்த தடுப்பூசி மறுக்கும் காரணத்திற்காக என்று எழுத்து பூர்வமாக கேளுங்கள். இது சட்டபூர்வமாக நமக்கு உதவும். 

நாம் வாழ்வது ஜனநாயக குடிமக்கள் ஆட்சி நாடு. சர்வாதிகார நாடு அல்ல.
இதை அரசுகள் மறக்கலாம்.
நாம் மறக்கக்கூடாது.

No comments:

Post a Comment