Sunday, July 28, 2019

டீ பேக்குகள் ஆபத்து (Risk of tea bags)

டீ பேக்குகள் ஆபத்து   (Risk of tea bags)


தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.

இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று எதை பற்றியும் கவலைப்படாமல் நாம் அதனை உண்டு நம் உடலுக்கு நாமே சூனியம் வைத்து கொள்கிறோம்...

இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். 


டீ பேக்குகள் (Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH) தெரிவித்துள்ளது.

இந்த வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. 

இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

தற்போது இதுபோன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது. இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது. 

மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

சில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு உண்டாகிறது. ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis என்ற நிலை உருவாகிறது. 

இந்த நிலையால் பற்களின் நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. டீபேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும் சிறுநீரகபிரச்னைகள் உண்டாகிறது.

வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் இதை உபயோகிப்பார்கள். தற்போது இந்தியாவில் மக்கள் கிரீன் டீ என்கிற பெயரில் இந்த டீ பேகை  உபயோகிக்கின்றனர்.


  • இத்தனை உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகிற அளவுக்கு, தரமற்றதாகவே பெரும்பாலும் டீ பேக்குகள் தயார் செய்யப்படுவதால் அவற்றை இனம் கண்டறிந்து தவிர்ப்பதே நல்லது.

சமையலில் செய்யக்கூடாதவை

சமையலில் செய்யக்கூடாதவை


* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

#காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது. 

பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். 

அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்... 

கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.

வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.

தொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.

அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும்.

மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.

ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.

கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.

இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.ll

உலகில் மிகப்பழமையான நிலப்பகுதி எது? 7ஆம் வகுப்பு - முதல் பருவம் பொதுத்தமிழ்

உலகில் மிகப்பழமையான நிலப்பகுதி எது?


7ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்


1. பொய்மையும் வாய்மையாவது எப்போது? - பிறர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமாயின், பொய்யும் உண்மையாகக் கருதப்படும்.

2. உலகில் மிகப்பழமையான நிலப்பகுதி ................ - குமரிக்கண்டம்

3. தமிழில் ................. பெயர்கள் மிகவும் குறைவு. - இடுகுறிப் பெயர்கள்

4. எல்லா மொழிகளும், எழுத்துக்கும் ............. இலக்கணம் கூறும். - சொல்லுக்கும்

5. புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க உவமை, ............ பயன்படுத்தி அழகு சேர்த்தனர். - உருவகம்

6. உலக மொழிகளில் சிறந்து விளங்குவது - தமிழ்மொழி

7. அம்மை, அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு - நாஞ்சில்நாடு

8. வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி - தமிழ்மொழி

9. செம்மொழியாகக் கருதப்படும் மொழிகள் யாவை? - தமிழ், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு

10. தமிழின் இளமை மாறாத் தன்மைக்குக் காரணம் என்ன? - தமிழ் மெல்லோசை மொழியாயிருப்பதனாலேயே, அஃது உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது.

11. தமிழ், உயர்தனிச் செம்மொழி எனப் போற்றப்படுவதேன்? - வியத்தகு பண்பாடுகளையும், நு}ல்களையும் கொண்டது தமிழ்மொழி. அதனாலேயே அது உயர்தனிச் செம்மொழி எனப் போற்றப்படுகிறது.

12. தமிழர்தம் பண்பாட்டை விளக்கும் நு}ல்கள் யாவை? - தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள்

13. ஆய்தம் ............... எழுத்துவகையைச் சார்ந்தது. - சார்பெழுத்து

14. சார்பெழுத்துகள் ............ வகைப்படும். - 10

15. முதலெழுத்துகளின் எண்ணிக்கை ................ - 30 


Thursday, July 25, 2019

CCSE IV Exam - 2019 | வழுவுச் சொற்களை நீக்குதல்| பொதுத்தமிழ் - வழுவுச் சொற்களை நீக்குதல்

CCSE IV Exam - 2019  | வழுவுச் சொற்களை நீக்குதல்|

பொதுத்தமிழ் - வழுவுச் சொற்களை நீக்குதல்


வட்டார வழக்குச் சொற்களும் சமுதாய கிளைமொழிகளும் இலக்கண நு}ல் ஆசிரியர்களால் வழுவுச் சொற்களாக கருதப்படுகின்றன.

💢 அண்ணாக்கயிறு - அரைஞாண்கயிறு

💢 அடிச்சுட்டாள் - அடித்துவிட்டாள்

💢 அருவாமனை - அரிவாள்மனை

💢 என்ன ஆச்சு - என்ன ஆயிற்று?

💢 ஆவராம்  - ஆவிரம்பு

💢 ஈர்கலி - ஈர்கொல்லி

💢 உடமை - உடைமை

💢 உடம்படிக்கை - உடன்படிக்கை

💢 ஊரணி - ஊருணி

💢 எடஞ்சல் - இடைஞ்சல்

💢 எண்ணை - எண்ணெய்

💢 எழவு - இழவு

💢 எடறு - இடறு

💢 ஏழரை நாட்டுச்சனி - ஏழரையாட்டைச்சனி

💢 ஒட்டரை - ஒட்டடை

💢 உசிர் - உயிர்

💢 சிய்க்காய் - சீகைக்காய்

💢 சுவற்றில் - சுவரில்

💢 ஒத்தடம் - ஒற்றடம்

💢 சிகப்பு - சிவப்பு

💢 வலது பக்கம் - வலப்பக்கம்

💢 தலகாணி - தலையணை

💢 முயற்சித்தார் - முயன்றார்

💢 ஆம்பளை - ஆண்பிள்ளை

💢 புஞ்சை - புன்செய்

💢 அருகாமை - அருகில்

💢 பாவக்காய் - பாகற்காய்

💢 அடமழை - அடைமழை

💢 புண்ணாக்கு - பிண்ணாக்கு

💢 பண்டகசாலை - பண்டசாலை

💢 நோம்பு - நோன்பு

💢 நாகரீகம் - நாகரிகம்

💢 தோப்பனார் - தகப்பனார்

💢 நோவற்ற - நோயற்ற

💢 தாப்பாள் - தாழ்ப்பாள்

💢 ஒருக்கால் - ஒருகால்

💢 கத்திரிக்காய் - கத்தரிக்காய்

💢 சித்த நாழி - சிறிது நாழிகை

பிறமொழிச் சொற்களை நீக்குதல் பற்றி நாளை தெரிந்துகொள்வோம்..!!

Tuesday, July 23, 2019

CCSE IV EXAM - 2019 | | லோக் அதாலத் பற்றிய குறிப்புகள் TNPSC COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV - 2019

CCSE IV EXAM - 2019 | | லோக் அதாலத் பற்றிய குறிப்புகள்
TNPSC COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV - 2019


லோக் அதாலத் பற்றிய சிறு குறிப்புகள்

🌺 லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர;க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும்.

🌺 இது ஒரு மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர;வு காணும் ஒரு வழிமுறையாகும்.

🌺 'லோக்" என்பது மக்களையும் 'அதாலத்" என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும்.

🌺 மக்கள் நீதிமன்றம் முதன் முதலில் குஜராத் மாநிலத்தில் ஜூனகார; என்ற இடத்தில் மார;ச் 14, 1982 அன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடந்தது.

🌺 1987ஆம் ஆண்டு சட்டப் பணிகள் ஆணையச் சட்டத்தின்படி லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டன.

🌺 இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர;களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர;வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு (லோக் அதாலத்) அனுப்பலாம்.

🌺 லோக் அதாலத் உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89 - ன் கீழ் வருகின்றது.

🌺 சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19 ன் படி, மக்கள் நீதிமன்றம், 3 பேர; கொண்ட அமர;வாக இருக்கும்.

🌺 நீதி மன்றத்திலிருக்கும் நிலுவையிலுள்ள வழக்குகளில் வழக்கில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர;வு ஏற்படுத்துதலாகும்.

🌺 வழக்குத் தரப்பாளர;களுக்குக் குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்தல்.

🌺 குற்றவியல் வழக்குகளைத் தவிர, மற்ற அனைத்து வழக்குகளும் லோக் அதாலத் நீதிமன்றங்களின் மூலம் தீர;வு காணலாம்.

🌺 லோக் அதாலத் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்குகள் அனைத்தும் தீர;வு காண்பதில் ஏற்படும் நடைமுறை தாமதத்தினைக் குறைத்து மாற்று முறைகளைப் பின்பற்றி நிரந்தர தீர;வு காண்பதை நோக்கமாக கொண்டு மேற்படி சட்டம் இயற்றப்பட்டது.

🌺 லோக் அதாலத் நீதி மன்றங்களை விரைவு நீதிமன்றங்கள் என்றழைக்கிறோம்.

🌺 லோக் அதாலத் நீதிமன்றங்கள் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள நாளேடுகள் பெரிதும் உதவியாக உள்ளன.

🌺 அண்மைக் காலத்தில் விரைவாகவும், குறைந்த செலவிலும் நீதி கிடைப்பதற்காகக் குறிப்பாக ஏழை மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

🌺 நிதி நெருக்கடி (அரசியலமைப்பு சட்டம் 360வது பிரிவு) ன்படி நாடு முழுவதும் அல்லது ஏதாவது ஒரு பகுதியில் நெருக்கடி நிலைமை அறிவிக்கப்படுகிறது.

🌺 அரசியலமைப்புச் சட்டம் 352ஆவது பிரிவு மூலம் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவித்து நாட்டைப் பாதுகாக்க முடியும்.

நாளை TNPSC-IV - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் 'தகவல் அறியும் உரிமை" பற்றித் தெரிந்துகொள்வோம்..!!



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..


TNPSC_GROUP-IV - 2019 | புதிய பாடத்திட்டம் பொதுத்தமிழ் வினா விடைகள்!!

GROUP-IV - 2019 புதிய பாடத்திட்டம்
பொதுத்தமிழ் வினா விடைகள்!!


1.ஏழைப்பங்காளர் என அழைக்கப்படுபவர்?
அ) காமராஜர்
ஆ) அம்பேத்கார்
இ) எம்.ஜி.இராமச்சந்திரன்
ஈ) பேரறிஞர் அண்ணா

2.காமராஜர் தமிழ் எழுத்துக்களைக் கற்றது?
அ) திண்ணைப் பள்ளியில்
ஆ) குருகுலத்தில்
இ) அரசமரத்தடி பள்ளியில்
ஈ) ஆங்கிலப் பள்ளியில்

3.பல்லுயிர் - இலக்கணக்குறிப்பு?
அ) உருவகம்
ஆ) உவமைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ) 3ம் வேற்றுமைத் தொகை

4.வள்ளுவர்சொல் வாழ்க்கைக்கு இனிது - இச்சொல்லின் ஆகுபெயர்?
அ) இடவாகுபெயர்
ஆ) பொருளாகுபெயர்
இ) சொல்லாகுபெயர்
ஈ) தானியாகுபெயர்

5.'சேர்ந்த புறாவின் நிறைதன் திருமேனி" என்னும் பாடலில் புகழப்பட்டுள்ள மன்னன்?
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்

6.திரு.வி.க. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் என்னும் நு}லை யாருடைய உதவியுடன் வெளியிட்டார்?
அ) வாணிதாசன்
ஆ) மு. வரதராசன்
இ) வண்ணதாசன்
ஈ) கண்ணதாசன்

7.பொருத்துக
அ) கூர - 1. மிக
ஆ) உகு - 2. சொரிந்த
இ) முகில் - 3. மான்
ஈ) நவ்வி - 4. மேகம்
அ) 2 1 4 3
ஆ) 1 2 3 4
இ) 2 1 3 4
ஈ) 1 2 4 3

8.கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக எனக் கூறியவர்?
அ) மு. வரதராசன்
ஆ) அண்ணா
இ) ஒளவையார்
ஈ) பாரதிதாசன்

9.பரணிக்கோர் செயங்கொண்டான் எனப் பாராட்டியவர்?
அ) அண்ணா
ஆ) 1ம் குலோத்துங்கசோழன்
இ) பலபட்டடைச் சொக்கநாதபுலவர்
ஈ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை

10.ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி - நூல் எது?
அ) பன்னிரு பாட்டியல்
ஆ) முத்தொள்ளாயிரம்
இ) வங்கத்துப்பரணி
ஈ) பாசவதைப்பரணி

11.எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டெனில் அது கலிங்கத்துப்பரணியே என்று கூறியவர்?
அ) அண்ணா
ஆ) ஆனந்தபத்மன்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை

12.கலிங்கத்துப்பரணியிலுள்ள தாழிசைகளின் எண்ணிக்கை?
அ) 599
ஆ) 499
இ) 593
ஈ) 432

13.கலிங்கத்துப்பரணியை தென்தமிழ் தெய்வப்பரணி என்று புகழ்ந்தவர்?
அ) பேரறிஞர் அண்ணா
ஆ) பலப்பட்டடைச் சொக்கநாதப்புலவர்
இ) பாரதியார்
ஈ) ஒட்டக்கூத்தர்

14.பால்வீதி என்னும் கவிதை நு}லை எழுதியவர் யார்?
அ)மு.மேத்தா
ஆ)அப்துல் இரகுமான்
இ)ஈரோடு தமிழன்பன்
ஈ)கல்யாண்ஜி

15.ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிப்பெயர்த்தார்?
அ)பிரெஞ்சு
ஆ)கிரேக்கம்
இ)ஆங்கிலம்
ஈ)ஜெர்மன்
நாளை புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தமிழ் வினா விடைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்..!!



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். 


அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!..

Saturday, July 20, 2019

TNPSC CCSE-IV Exam - 2019 பொது அறிவு - ஒலியியல் - பகுதி-2

TNPSC CCSE-IV Exam - 2019
பொது அறிவு - ஒலியியல் - பகுதி-2 


வீச்சு(a) :
✧ சமநிலைப் புள்ளியிலிருந்து அதிர்வடையும் பொருளின் இடப் பெயர்ச்சியின் பெரும மதிப்பு வீச்சு எனப்படும். அதன் அலகு மீட்டர்(அ) ஆகும்.

✧ அலைவுக் காலம் (T) = 1/அதிர்வெண்(n)

✧ அலைவுக்காலம் அதிர்வெண்ணின் தலைகீழ் மதிப்புக்குச் சமம்.

✧ நாம் ஒரு பொருளைப் பார்க்காமலேயே, அது எழுப்பும் ஒலியைக் கொண்டு அப்பொருளை அறியலாம். அது எவ்வாறெனில் அவை எழுப்புகின்ற ஒலியின் தன்மையைப் பொருத்துப் பிரித்து அறியலாம்.

✧ வீச்சு, அதிர்வெண் ஆகிய இரண்டும் ஒலியின் முக்கியப் பண்புகள் ஆகும்.

✧ ஒலியின் மதிப்பு அதன் வீச்சைப் பொருத்தது.

செவியுணர், செவியுணரா ஒலிகள்
   மனிதனின் செவியால் 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண்களை உடைய ஒலி அலைகளைக் கேட்டுணர முடிகிறது. இவ்வகை அதிர்வெண்கள் செவியுணர் அதிர்வெண்கள் எனப்படும். அதிர்வெண் 20 ஹெர்ட்ஸூக்கு கீழுள்ள மற்றும் 20000 ஹெர்ட்ஸூக்கு அதிகம் உள்ள ஒலியைச் செவியால் கேட்டுணர முடியாது. இவை செவியுணரா அதிர்வெண்கள் எனப்படும்.

இரைச்சலைக் கட்டுப்படுத்த சிலவழிகள்
1. விழாக்களில் ஒலிப்பெருக்கியின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.

2. மகிழுந்து போன்ற வாகனங்கள் அதிக ஒலியை எழுப்பாமல் இருத்தல் வேண்டும்.

3. தொலைக்காட்சி, இசைக் கருவிகளில் இருந்து வரும் ஒலியின் அளவைக் குறைத்து கேட்க வேண்டும்.

மேலும் அறிந்து கொள்வோம்
ஆண்களின் குரல் நாண்களின் நீளம் 20மிமீ. பெண்களுக்கு அது சுமார் 15மிமீ.

ஆனால் குழந்தைகளின் குரல்நாண்கள் மிகச்சிறியனவாக உள்ளன.

இன்றைய அறிவியல்
✧ கண்ணாடி ஒளிஇழை முழுஅக எதிரொளிப்புத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

✧ மெலிந்த வளையும் தன்மை கொண்ட ஒளி ஊடுருவும் கண்ணாடித் தண்டு, கண்ணாடி ஒளிஇழை எனப்படும். இதில் எளிதாக ஒளி எடுத்துச் செல்லப்படுகிறது. 

✧ ஒளி இழைக்குழாயின் ஒரு முனையில் சிறிய கோணத்தில் படும் ஒளிக்கதிர் உட்புறமாகச் செல்லும்போது மீண்டும் மீண்டும் பற்பல முழுஅக எதிரொளிப்புகளுக்கு உட்பட்டு இறுதியில் மறுமுனை வழியாக வெளிவரும்.

✧ ஒளிஇழைக் குழாயை வளைத்தாலும், முறுக்கினாலும் ஒளியானது எளிதில் குழாயின் வழியே கடந்து செல்லும். ஒளியிழை மூலம் செய்திகளையும் பிம்பங்களையும் எடுத்துச் செல்லும் முறைக்கு ஒளியிழை இயல் எனப்படும்.

CCSE IV EXAM - 2019 | பொதுத்தமிழ் - சந்திப் பிழையை நீக்குதல் பகுதி 3 குறிப்புகள் TNPSC - 2019


CCSE IV EXAM - 2019 |  பொதுத்தமிழ் - சந்திப் பிழையை நீக்குதல் பகுதி 3 குறிப்புகள் TNPSC - 2019


பொதுத்தமிழ் 
சந்திப் பிழையை நீக்குதல் பகுதி - III


💐 'அ", 'இ" என்னும் சுட்டுப் பெயரின் பின்னும் 'எ" என்னும் வினாப்பெயரில் பின்னும் வல்லினம் மிகும்.

(எ.கா) - அக்குடம், இச்சோலை, எத்தொழில்

💐 நிலைமொழியில் உயீரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

எ.கா - பனிக்காலம், மழைத்துளி

💐 முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்

எ.கா - பொதுத் தேர்தல், திருக்குறள்

💐 பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

எ.கா - வட்டப்பலகை, பச்சைத் தமிழன், பச்சைப்பட்டுத் துணி

💐 தனிக் குறிலை அடுத்து வரும் 'ஆ" என்னும் நெடிலுக்குப் பின் வல்லினம் மிகும்

எ.கா - உலாப் பருவம், உலாப்பாடினான், பலாப்பழம், இராப்பகல்

💐 உவமைத் தொகையில் வல்லினம் மிகும்

எ.கா - மலர்க்கை (மலர் போன்ற கை)

தாமரைக் கண்

💐 'ப", 'ற" ஒற்றுக்கள் இரட்டிக்கும் நெடில்தொடர், உயிர்த் தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கு முன் வல்லினம் மிகும்.

எ.கா - நாடு + பற்று - நாட்டுப்பற்று

💐 உருவகத்தில் வல்லினம் மிகும்

எ.கா - பசிப்பிணி, கருணைக்கடல்

💐 மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் பெயர்ச்சொல் வந்தால் வல்லினம் மிகும்

கன்றுக்குட்டி(பெயர்ச்சொல்)

கூண்டுக்கிளி(பெயர்ச்சொல்)

வல்லினம் மிகா இடங்கள்

💐 எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.

எ.கா - குரங்கு கடித்தது(குரங்குக் குட்டி கடித்தது)

தாய் சென்றாள்.

💐 வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

எ.கா - ஆடு கொடி, விளை பயிர;

💐 இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

எ.கா - நீர் குடித்தான்;

கதை சொன்னான்;

பால் பருகினான்.

💐 உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

செடி கொடி, கல்வி கேள்வி

வுNPளுஊ ஊஊளுநு ஐஏ - 2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் புகழ்பெற்ற சந்திப்பிழையை நீக்குதல் பகுதி - iv பற்றி நாளை தெரிந்துகொள்வோம்..!!

CCSE IV EXAM - 2019 | இந்திய குடிமையியல்..! | அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII பற்றிய சிறு குறிப்புகள்.

CCSE IV EXAM - 2019 | இந்திய குடிமையியல்..! | அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII பற்றிய சிறு குறிப்புகள்..!
TNPSC -GROUP -4 - 2019


அலுவலக மொழி மற்றும் அட்டவணைCCSE IV EXAM - 2019 | இந்திய குடிமையியல்..! | அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII பற்றிய சிறு குறிப்புகள்..!

TNPSC -GROUP -4 - 2019 -8


🌺 இந்தியாவில்  (official languages of the Indian Union)  அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன.

🌺 இந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம்.

🌺 இந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை.

🌺 இந்திய அரசியலமைப்பு, 1950 இல், தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி ஒன்றியத்தின் அலுவல் மொழியாக அறிவித்திருந்தது.

🌺 இதற்கு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி. கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது.

🌺 இந்தியப் பாராளுமன்றம் 1963 அலுவல் மொழிகள் சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி 1965 ஆம் ஆண்டிற்கு பின்னரும் ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர்ந்தது.

🌺 இந்திய அரசியலமைப்பு நாடாளுமன்ற அவை நடைவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் மொழிக்கும் சட்டங்கள் உருவாக்கப்படும் மொழிக்கும் வேறுபாட்டை வரையறுத்துள்ளது.

🌺 நாடாளுமன்றம் தனது அவை நடைவடிக்கைகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தும்.

🌺 இந்தி அல்லது ஆங்கிலத்தில் உரையாட இயலாத உறுப்பினர், அவைத்தலைவர் அனுமதியுடன், தனது தாய்மொழியில் பேசலாம்.

🌺 இந்திய அரசியலமைப்பின்படி நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திலும் மாநில உயர் நீதிமன்றங்களிலும் ஆங்கிலமே நடைமுறை மொழியாக இருக்கும் என வரையறுத்துள்ளது.

🌺 இதனை மாற்றக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளபோதிலும் இந்த அதிகாரத்தை இதுவரை பயன்படுத்த வில்லை.

🌺 மண்டல இந்தி செயல்திட்ட அலுவலகங்களை பெங்களூரு, கொச்சி, மும்பை, கொல்கத்தா, குவஹhட்டி, போபால், தில்லி மற்றும் காசியாபாத்தில் அமைத்து நடுவண் அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தி மொழியின் செயல்பாட்டை கண்காணித்து வருகிறது.

🌺 திரிபுராவில் கொக்பொரோக், மிசோரமில் மிசோ, மேகாலயாவில் காசி, காரொ மற்றும் சைந்தியா, புதுச்சேரியில் பிரெஞ்சு அலுவல்மொழிகளாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன. இது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியாகக் கூட இருக்க வேண்டியதில்லை.

🌺 இந்தியாவில் எட்டாவது அட்டவணையில் உள்ள அலுவல் மொழிகள்:

🌺 அசாமியம், ஆங்கிலம், இந்தி, உருது, ஒரியம், கன்னடம், கசுமீரியம், குசராத்தியம், கொங்கணியம், சந்தாளியம், சமசுகிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, நேபாளியம், பஞ்சாபியம், போடோயம், மணிப்புரியம், மராத்தி, மலையாளம், வங்காளம்.

நாளை TNPSC-2019 பாடத்திட்டத்தின் அடிப்படையில் 'பொது வாழ்வில் ஊழல்" பற்றித் தெரிந்துகொள்வோம்..!!



JTNPSC CCSE IV EXAM 2019 : பொதுத்தமிழ் வினாக்கள் -2019 புதிய பாடத்திட்டம்

TNPSC CCSE IV EXAM 2019 : பொதுத்தமிழ் வினாக்கள் -2019

 புதிய பாடத்திட்டம்
பொதுத்தமிழ் வினா விடைகள்!!


1.மின்னாள் என்பதன் பொருள்?
அ)மின்னலைப் போன்றவள்
ஆ)தேவமாதர்
இ)ஒளிரமாட்டாள்
ஈ)மிகுந்த அறிவுடையவள்

2.பொருத்துக
அ)ஆக்கல் - 1. உவம உருபு
ஆ)பொன்னேபோல் - 2. தொழிற்பெயர்
இ)மலர்க்கை - 3. உவமைத்தொகை
ஈ)வில்வாள் - 4. உம்மைத்தொகை

அ)2 1 4 3
ஆ)2 1 3 4
இ)1 2 3 4
ஈ)1 2 4 3

3.பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
அ)பாண்டியன் பரிசு
ஆ)தமிழியக்கம்
இ)பிசிராந்தையார்
ஈ)தமிழச்சியின் கத்தி

4.பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் - என்ற பாடலைப் பாடியவர்?
அ)பாரதிதாசன்
ஆ)பாரதியார்
இ)கவிமணி
ஈ)வாணிதாசன்

5.மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற பாடலைப் பாடியவர்?
அ)பாரதிதாசன்
ஆ)பாரதியார்
இ)கவிமணி
ஈ)வாணிதாசன்

6.பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது - பாடலைப் பாடியவர்?
அ)பாவேந்தர்
ஆ)பாரதியார்
இ)கவிமணி
ஈ)வாணிதாசன்

7.பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறிவார்
மூவாது மூத்தவர் நு}ல் வல்லார் தாவா - பாடல் இடம் பெற்ற நு}ல்?
அ)ஏலாதி
ஆ)திரிகடுகம்
இ)நற்றிணை
ஈ)சிறுபஞ்சமூலம்

8.பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறிவார்
மூவாது மூத்தவர் நு}ல் வல்லார் தாவா - பாடலில் பயின்று வந்துள்ள அணி?
அ)உருவக அணி
ஆ)உவமை அணி
இ)எடுத்துக்காட்டு உவமையணி
ஈ)பொருள் பின்வருநிலையணி

9.விதையாமை நாறுவ வித்து உள, மேதைக்கு - இப்பாடலில் நாறுவ என்பதன் பொருள்?
அ)கெடுதல்
ஆ)துர்நாற்றம்
இ)முளைப்ப
ஈ)முதுமை அடையாமல்

10.சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர்?
அ)சமணமுனிவர்கள்
ஆ)காரியாசான்
இ)கணிமேதாவியார்
ஈ)நக்கீரனார்

11.சிறுபஞ்சமூலத்தில் பொருந்தாத வேர்?
அ)பெருவழுதுணை
ஆ)நெருஞ்சி
இ)சிறுமல்லி
ஈ)கண்டங்கத்திரி

12.நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டும் பாடல்களைக் கொண்ட நூல்?
அ)திரிகடுகம்
ஆ)நாலடியார்
இ)ஏலாதி
ஈ)சிறுபஞ்சமூலம்

13.பாரதியார் அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றபோது அவருடைய வயது?
அ)10
ஆ)11
இ)12
ஈ)16

14.நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றவர்?
அ)விக்டர் ஹியு+ கோ
ஆ)அலெக்ஸாண்டர்
இ)ஆபிரகாம் லிங்கன்
ஈ)நெல்சன் மண்டேலா

15.குடும்ப விளக்கு நு}ல் எத்தனை பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது?
அ)2
ஆ)3
இ)4
ஈ)5

நாளை புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தமிழ் வினா விடைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்..!!



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB

TNPSC | உயிரியல் - இனப்பெருக்க மண்டலம் பற்றிய குறிப்புகள்..!! TNPSC-GROUP-4-2019

TNPSC | உயிரியல் - இனப்பெருக்க மண்டலம் பற்றிய குறிப்புகள்..!!
TNPSC-GROUP-4-2019


பொது அறிவு - உயிரியல் - இனப்பெருக்க மண்டலம்
ஆண் இனப்பெருக்க மண்டலம்

➤ ஆண் இனப்பெருக்க மண்டலம் முதல்நிலை பால் உறுப்பான விந்தகத்தையும், துணை இனப்பெருக்க உறுப்பான செமினல் பை, புரோஸ்டேட் சுரப்பி, யு+ரித்ரா, ஆண் குறி ஆகிய உறுப்புக்களை உள்ளடக்கியது.

➤ முதன்முதலில் விந்து செல்லைக் கண்டறிந்து வரைந்தவர் ஆண்டன் வான் லு}வன்ஹhக் (1632 - 1723).

➤ ஓர் இணை விந்தகங்கள் விதைப்பையினுள் வயிற்றறைக்கு வெளியே காணப்படுகின்றன. ஏனெனில், விந்துச் செல் உருவாக்கத்திற்கு உடல் வெப்பநிலையைவிடக் குறைந்த வெப்பநிலை தேவைப்படுகிறது.

➤ ஒவ்வொரு விந்தகமும் பல வளைவுகளைக் கொண்ட விந்து நுண்குழல்களால் ஆனது. இதுவே விந்து செல்லை உருவாக்குகிறது. இவ்வாறு ஆண் இனச் செல்லாகிய விந்துச் செல் உருவாகுதல் விந்துச் செல்லாக்கம் எனப்படும்.

➤ விந்தகத்திலுள்ள இடையீட்டுச் செல்கள் ஆண் இனப்பெருக்க ஹhர்மோனான ஆண்ட்ரோஜனை உற்பத்தி செய்வதோடு விந்துச் செல்லாக்கத்தையும் கட்டுப்படுத்தி இரண்டாம் நிலை பால் பண்புகளான தாடி, மீசை வளர்தல், உடம்பில் முடி வளர்தல், கனத்த குரல் ஆகியவை தோன்றவும் காரணமாகின்றன.

➤ விந்தகத்திலுள்ள செர்டோலிச் செல்கள் (தாதிச் செல்கள்) உருவாகும் விந்துசெல்களுக்கு ஊட்டம் அளிக்கின்றன.

➤ உருவான விந்துச்செல்கள் விந்து நாளத்தை அடைந்து சிறுநீர்க் கால்வாயை அடைகிறது. இது சிறுநீர், விந்து செல்வதற்கு ஒரு பொதுப் பாதையாக அமைந்துள்ளது. விந்து நாளப் பாதையில் காணப்படும் செமினல் பையும், புரோஸ்டேட் சுரப்பியும் தங்கள் சுரப்புகளைச் சேர்ப்பதால் விந்துச்செல்கள் செமன் எனப்படும்.

➤ கோழைப்(திரவமாக) பொருளாக மாறுகிறது. இது விந்துச் செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு விந்துச்செல் நடத்திச் செல்லவும் உதவுகிறது.

முதிர்ந்த விந்துச் செல்லின் அமைப்பு

➤ விந்து தலை, கழுத்து, நடுப்பாகம், வால் என நான்கு பாகங்களைக் கொண்டது. தலையில் ஒற்றைமைய நிலைகொண்ட உட்கருவும், முன்பகுதியில் ஹையாலு}ரிணிடேசு, புரோட்டியோலிட்டிக் நொதிகளைக் கொண்ட அக்ரோசோமும் காணப்படுகிறது. கழுத்துப் பகுதியில் அண்மை, சேய்மை சென்ட்ரியோல்கள் காணப்படுகின்றன.

➤ நடுப்பகுதி சுருள் வடிவ மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டுள்ளது. வால்பகுதி குறைந்த அளவு சைட்டோபிளாசத்தைக் கொண்டுள்ளது. இது விந்துத் திரவ ஊடகத்தில் நீந்திச் செல்லப் பயன்படுகிறது.

மேலும் அறிந்து கொள்வோம்
➤ விந்து விந்துவங்கிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. மிகக் குறைந்த வெப்பநிலையில் திரவ நைட்ரஜன் மூலமாக உறைந்த நிலையில் பல ஆண்டுகள் சேமிக்கலாம். அவை உயிருடனே இருக்கும்.

➤ இந்த விந்துச்செல்களை சோதனைச்குழாய் குழந்தைகளுக்கும், செயற்கை விந்தூட்டத்திற்கும் பயன்படுத்தலாம்.



இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற  கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
தமிழ் வாகை

அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்!.

Wednesday, July 17, 2019

TNPSC CCSE IV EXAM 2019 || விடியல் பயிற்சி : வயது கணக்குகளின் எளிய வழிமுறைகள்!|| கணிதப்பாடத்திட்டம் திறனாய்வு பகுதி # #வயது கணக்குகள்

TNPSC CCSE IV EXAM 2019 || விடியல் பயிற்சி : வயது கணக்குகளின் எளிய வழிமுறைகள்!!

கணிதப்பாடத்திட்டம்
திறனாய்வு பகுதி - வயது கணக்குகள்!!!


1)ராஜா மற்றும் அரவிந்தின் தற்போதைய வயதுகளின் விகிதம் 7:4 எட்டு ஆண்டுகளுக்கு பின்பு விகிதமானது 3:2 ஆக இருக்கும். எனில் அரவிந்தின் தற்போதைய வயது என்ன?
1)16
2)18
3)24
4)12

சரியான முறை:

தற்போதைய வயதுகளின் விகிதம் 7 : 4
அதனை 7a : 4a என்க.
8 ஆண்டுகளுக்கு பின்பு விகிதம் = 3 : 2
(7a + 8 / 4a + 8) = (3 / 2)
குறுக்கு பெருக்கல்
14a + 16 = 12a + 24
(14a - 12a) = (24 - 16)
2a= 8
a= 4
அரவிந்தின் தற்போதைய வயது = 4a
= 4(4)
= 16

எளிமையான முறை:
ராஜா, அரவிந்தின் தற்போதைய வயது விகிதம் = 7:4
முதல் விடையினை எடுத்து கொள்ள வேண்டும்.
முதல் விடை - 16
அரவிந்தின் வயது 16 (4பங்கு) எனில் ராஜாவின் வயது 28 (7பங்கு)
எனவே 8 ஆண்டுகளுக்கு பின்பு ராஜாவின் வயதினைக் காண 28 + 8ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
= 28 + 8 = 36.
இராஜாவின் வயது = 36
எனவே 8 ஆண்டுகளுக்கு பின்பு அரவிந்தின் வயதினைக் காண 16 + 8ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
= (14 + 8) = 26.
அரவிந்தின் வயது 24
இராஜா மற்றும் அரவிந்தின் வயது விகிதம் = 36 : 24 அல்லது 3 : 2
எனவே முதல் விடை சரியானது.
ஒருவேளை முதல் விடையானது சரியாக பொருந்தவில்லை எனில் அடுத்த விடையினை எடுத்து இதே மாதிரி கணக்கிட்டு பார்க்க வேண்டும்.

2)ஆனந்த் மற்றும் ரவியின் தற்போதைய வயது விகிதமானது 5 : 2 ரவியின் வயது 3 ஆண்டுகளுக்கு பின்பு 15 ஆக இருக்கும் எனில் ஆனந்தின் தற்போதைய வயது என்ன?
1)27
2)30
3)35
4)33

சரியான முறை:
ஆனந்தின் தற்போதைய வயது 5a
ரவியின் தற்போதைய வயது = 2a
3 ஆண்டுகளுக்கு பின்பு ரவியின் வயது =நித்ரா 

இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக்  செய்யுங்கள்தமிழ் வாகை
அரசு அதிகாரியாக  வாழ்த்துக்கள்

தற்போதைய ரவியின் வயது = (15-3) = 12
2a = 12 எனில் a = (12 / 2) = 6
a = 6 எனில் 5a = (5 * 6) = 30
ஆனந்தின் தற்போதைய வயது = 30

எளிய முறை:
இரவியின் தற்போதைய வயது (15-3) = 12
2 பங்கு என்பது 12 எனில்
1பங்கு = 6;
5 பங்கு என்பது 30 


Tuesday, July 16, 2019

CCSE IV தேர்வில் வெற்றி பெற உதவும் பொது அறிவு குறிப்புகள்!! அறிவியல் பாடப்பகுதி |##இரத்தம் பற்றிய குறிப்புகள்

CCSE IV தேர்வில் வெற்றி பெற உதவும் பொது அறிவு குறிப்புகள்!!
அறிவியல் பாடப்பகுதி

இரத்தம் பற்றிய குறிப்புகள்!!!!

வில்லியம் ஹhர்வி (1628 ஆம் ஆண்டு) என்ற ஆங்கிலேய மருத்துவர் மனிதனில் இரத்தச் சுழற்சியைக் கண்டறிந்தார். மேலும் இரத்தத்தின் பண்புகளையும் இதயச் செயல்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.

இரத்தக்குழாய்கள்
➤தமனிகள், தந்துகிகள் மற்றும் சிரைகள் என மூவகை இரத்தக் குழாய்கள் உள்ளன.

தமனிகள்

➤தமனிகள் இதயத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்பவை. ஆனால் இதற்கு விதிவிலக்காக, நுரையீரல் தமனி மட்டும் சுத்திகரிக்கப்படாத இரத்தத்தை, சுத்திகரிக்கப்பதற்காக இதயத்திலிருந்து நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்லும்.

தந்துகிகள்

➤இவை சிறிய இரத்தக் குழாய்களாகும். தந்துகிகள் திசுக்களைச் சுற்றி வலை போன்று பின்னிப் படர்ந்து, திசுக்களுக்கு இரத்தத்தில் இருந்து பொருள்களை வழங்குகின்றன.

சிரைகள்

➤தந்துகிகள் மீண்டும் இணைந்து வென்யு+ல்களாகமாறி (நுண் சிரைகள்) அவை திசுக்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத இரத்தத்தை எடுத்து வருகின்றன.

➤வென்யு+ல்கள் (நுண்சிரைகள்) இணைந்து சிரைகளாக மாறுகின்றன. சிரைகள் மேலும் கீழ்பெருஞ்சிரையாகவும், மேற்பெருஞ்சிரையாகவும் மாறி, இரத்தத்தைச் சேகரித்து இதயத்தினுள் சேர்க்கிறது.

இரத்தம்

➤உடலின் பெரும்பான்மையான பணிகள் எல்லாவற்றிலும் இரத்தம் முக்கியப் பங்கேற்கின்றது.

➤இரத்தம் திரவ நிலையிலுள்ள இணைப்புத் திசுவாகும். இரத்தத்தில் பிளாஸ்மா எனும் திரவப் பகுதியும் செல்களும் உண்டு.

பிளாஸ்மா

➤இரத்தத்தில் உள்ள திரவப் பொருளான பிளாஸ்மா, நீர், கனிம மற்றும் கரிம ஆக்கக் கூறுகளைக் கொண்டுள்ளன.

➤பிளாஸ்மா புரோட்டீன் என்பது பிளாஸ்மாவின் முக்கியப் கனிம கூறாகும். அவற்றுள் குளோபுலின், நோய் எதிர்ப்பாற்றலுக்கு இன்றியமையாதது.

➤இரத்தம் உறைதலில் ஃபைபிரினோஜன் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஆல்புமின் நீர்ச் சமநிலையைச் சீராக்குகின்றது.

இரத்தச்செல்கள்

➤மூன்று வகையான இரத்தச்செல்கள் பிளாஸ்மாவில் உள்ளன.

➤அவை:

இரத்தச் சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் இரத்தத் தட்டைச் செல்கள்.

இரத்தச் சிவப்பணுக்கள் (எரித்ரோசைட்டுகள்)
➤இவை வட்டவடிவ, இருபக்கமும் உட்குழிந்த மற்றும் தட்டு வடிவச் செல்களாகும். முதலில் உருவாகும் போது உட்கருக்களோடு தோன்றும் இச்செல்கள் பின்னர் உட்கருக்களை இழக்கின்றன.

➤இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தையளிக்கும் ஹீமோகுளோபினைப் பெற்றிருக்கின்றன. ஹீமோகுளோபின் என்னும் சுவாச நிறமி ஆக்ஸிஜன்மீது அதிக நாட்டம் உடையது, சுவாசித்தலில் முக்கியப் பங்கு கொள்கின்றது.

➤ஆண்களின் இரத்தத்தில் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இரத்தத்திலும் ஏறக்குறைய 5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்) பெண்களின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் (அளவீடு 3.3-5.2 மில்லியன்) அமைந்திருக்கும்.

➤எலும்பு மச்சையில் இவை உற்பத்தியாகின்றன. இவை குருதியில் 100-120 நாட்கள் இருந்து, பின்னர் முதிர்வடைந்த சிவப்பணுக்கள் கல்லீரல், மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன.

நாளை இதன் தொடர்ச்சியினை காணலாம். 

TNPSC CCSE-IV தேர்வுக்கு பயிற்சி செய்ய முக்கிய பொது அறிவு குறிப்புகள்..! பொது அறிவு - ஒளியியல் - பகுதி-2 பன்முகப் பிம்பங்கள் :

TNPSC CCSE-IV தேர்வுக்கு பயிற்சி செய்ய முக்கிய பொது அறிவு குறிப்புகள்..!

பொது அறிவு - ஒளியியல் - பகுதி-2
பன்முகப் பிம்பங்கள் :


🌟 ஒரு சமதள ஆடியானது ஒரு பொருளுக்கு ஒரேயொரு பிம்பத்தைத் தான் தோற்றுவிக்கும்.

🌟 ஆனால் ஒன்றிற்கு மேற்பட்ட சமதளஆடிகளைத் தகுந்த கோணத்தில் அமைத்தால், அவை ஒரு பொருளுக்குப் பல பிம்பங்களைத் தோற்றுவிக்கும். இவையே பன்முகப் பிம்பங்கள் எனப்படும்.

🌟 பிம்பங்களின் எண்ணிக்கைக்கும் கோணத்திற்கும் இடையே உள்ள தொடர்பு

பிம்பங்களின் எண்ணிக்கை = 360° / கோணம்

🌟 கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்படி அமைத்தால் மிக அதிக எண்ணிக்கையில் பிம்பங்கள் தோன்றுவதை அறியலாம்.

🌟 பெரிஸ்கோப், கலைடாஸ்கோப் போன்றவற்றில் பன்முக எதிரொளிப்பு என்ற தத்துவமே பயன்படுத்தப்படுகிறது. பெரிஸ்கோப் இரு சமதள ஆடிகளால் தொடர்ந்து எதிரொளிப்பு அடைவதே இதன் தத்துவமாகும்.

ஒளி விலகல் :

🌟 ஒளிவிலகல் திசை ஊடகங்களின் அடர்த்தியைப் பொறுத்தது. அடர்மிகு ஊடகமானது (எ.கா.கண்ணாடி) அதிக அடர்த்தியையும் அடர்குறை ஊடகம் (எ.கா.காற்று) குறைந்த அடர்த்தியையும் கொண்டுள்ளது.

🌟 ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது தன் நேர்கோட்டுப்பாதையை விட்டு விலகிச் செல்லும் நிகழ்வு 'ஒளிவிலகல்" எனப்படும்.

1. ஒளிக்கதிர் அடர்குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தினுள் செல்லும் போது செங்குத்துக் கோட்டை நோக்கி விலகிச் செல்லும்.

எ.கா. காற்றிலிருந்து கண்ணாடிக்குச் செல்லும்போது

2. ஒளிக்கதிர் அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்தினுள் செல்லும் போது செங்குத்துக் கோட்டை விட்டு விலகிச் செல்லும்.

எ.கா. கண்ணாடியிலிருந்து காற்றுக்குச் செல்லும்போது

முழு அக எதிரொளிப்பு

🌟 படுகோணம் அதிகரிக்கப்பட்டால் விலகு கோணமும் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட படுகோணத்தில் விலகுகோணத்தின் மதிப்பு 900 ஆக இருக்கும். தற்போது விலகுகதிர் பிரிதளத்தின் வழியாகச் செல்லும் இந்தப் படுகோணம் மாறுநிலைக்கோணம் (C) எனப்படும்.

🌟 படுகோணம் மேலும் அதிகரிக்கப்பட்டால், ஒளிக்கதிர் விலகல் அடையாமல் முழுவதுமாக எதிரொளிக்கப்பட்டு அதே அடர்மிகு ஊடகத்திலேயே திருப்பப்படும். இவ்வாறு படுகோணத்தின் மதிப்பு மாறுநிலைக் கோணத்தைவிட அதிகமானால் ஒளியானது அதே அடர்மிகு ஊடகத்தினுள் முழுவதுமாக எதிரொளிக்கும் நிகழ்ச்சி முழுஅக எதிரொளிப்பு எனப்படும்.

வெவ்வேறு ஊடகங்களில் ஒளியின் திசைவேகம்

ஒளியின் திசைவேகம் வெற்றிடத்தில் பெருமமாகவும் வெவ்வேறு ஊடகங்களில் வெவ்வேறாகவும் உள்ளது.

^ என்றால் அடுக்கு என்று பொருள்


தண்ணீர் 2.25 * 10^8  ஒளிவிலகள் எண் 1.33

கண்ணாடி 2*10^8 ஒளிவிலகள் எண்  1.5

வைரம்  1.25*10^8 ஒளிவிலகள் எண்  2.41
காற்று  3*10^8 ஒளிவிலகள் எண்   1.00


TNPSC-CCSE IV EXAM - 2019 | சி.சு.செல்லப்பா பற்றிய குறிப்புகள் - 2019 - பொதுத்தமிழ் சி.சு.செல்லப்பா பற்றிய முக்கிய குறிப்புகள்!

CCSE IV EXAM - 2019 | சி.சு.செல்லப்பா பற்றிய குறிப்புகள் - 2019
 - பொதுத்தமிழ்
சி.சு.செல்லப்பா பற்றிய முக்கிய குறிப்புகள்!!


💐 காலம் - செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998

💐 ஊர் - தேனி மாவட்டம் சின்னமனூர்

💐 சி.சு.செல்லப்பா ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர்.

💐 'எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

💐 தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் 'வாடிவாசல், சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா.

💐 மதுரைக் கல்லு}ரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

💐 'சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு 'மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது.

💐 'சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.

💐 1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

💐 சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார்.

💐 விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார்.

💐 பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த 'எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார்.

💐 இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

படைப்புகள்:

💐 நாவல்கள் - சுதந்திரதாகம், வாடிவாசல், ஜீவனாம்சம்

💐 சிறுகதை - சரஸாவின் பொம்மை, மணல் வீடு, மாற்று இதயம், சத்தியாகிரகி

சிறப்பு பெயர்கள்:

💐 புதுக்கவிதை புரவலர்

நாளை  தருமு சிவராமு பற்றித் தெரிந்துகொள்வோம்..!!



Sunday, July 14, 2019

TNPSC|அணைத்திட்டம்|

TNPSC|அணைத்திட்டம்|


1. பக்ரா நங்கல் திட்டம் = பஞ்சாப் ஹரியானா, ராஜஸ்தான்
  • பஞ்சாப் ஹரியானா, ராஜஸ்தான் இவைகளின் ஒரு கூட்டு முயற்சி.
  • இந்தியாவின் மிகப் பெரிய பல்நோக்கு நதி பள்ளத்தாக்கு திட்டம் இதுவரை ரூ.236 கோடி செலவில் நிறைவு செய்யப் பட்டிருக்கிறது.
  • இது 518 மீட்டர் நீளம் மற்றும் 226 மீட்டர் உயரம் சட்லெஜ் - க்குக் குறுக்காக பக்ராவில் ஒரு நேரான ஈர்ப்பு அணையைக் கொண்டுள்ளது.
  • பக்ரா அணையின் கொள்ளளவு தண்ணீர் 986,8 கோடி கன மீட்டர்.
  • திட்டத்தின் கால்வாய் அமைப்பு, இப்போது 14.8 லட்சம் ஹெக்டேருக்குப் பாசனம் செய்கிறது.
  • இது 1204 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்குகிறது.
2. சம்பல் திட்டம் = மத்திய பிரதேசம், ராஜஸ்தான்
  • சம்பல் திட்டம் மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கூட்டாக செயல்படுத்தப்படுகிறது.
  • முதல் கட்டத்தில், காந்தி சாகர் அணை மற்றும் அதன் 115 மெகாவாட் மின் நிலையம் மற்றும் கோட்டா தடுப்பணைகள் முடிக்கப்பட்டுள்ளன.
  • 172 மெகாவாட் திறன்கொண்ட ஒரு பவர் ஹவுஸ் ராணா பிரதாப் சாகர் அணையுடன், 2-வது கட்டத்தில் கட்டப்பட்டது.
  • 3 வது நிலையில் ஜவஹர் சாகர் அணை மற்றும் 99 மெகாவாட் மின் நிலையம் கட்டப்பட்டது.
  • அனைத்து நிலைகளும் முடிந்த உடன், திட்டம் 386 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்கும்.
3.தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் = ஜார்க்கண்ட், மேற்கு வங்கம்
  • மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் பாசன, வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் மின்சார உருவாக்கத்தின் ஒன்றுபட்ட வளர்ச்சிக்கு இந்த திட்டம் கருதப்படுகிறது.
  • இந்தத் திட்டம் 1948 இல் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் மூலம் நிறுவப்பட்டது.
  • பாசன வசதித் திட்டம் 5.51 லட்சம் ஹெக்டரில் நிறுவப்பட்டுள்ளது மற்றும் அதன் நிறுவப்பட்ட மின் உற்பத்தி 1181மெகாவாட் ஆகும்.
  • இது ஐக்கிய அமெரிக்காவின் டென்னிஸ் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4. பராக்கா தடுப்பணை = மேற்கு வங்கம்
  • இது பராக்காவில் கங்கைக்குக் குறுக்காக தடுப்பணையைக் கொண்டிருக்கிறது, மற்றொரு தடுப்பணை ஜாங்கிபூரில் பாகீரதிக்குக் குறுக்காக தடுப்பணையைக் கொண்டிருக்கிறது, பராக்காவில் உள்ள கங்கை வலது கரையில் இருந்து 39 கிமீ நீள கால்வாய் மற்றும் ஜாங்கிபூர் தடுப்பணைக்குக் கீழ் பாகீரதியில் இணைந்து விடுகின்றது.
  • தடுப்பணையின் மேல் சாலை - உடன் - ரயில் பாலம் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது.

    பராக்காவின் அடிப்படை நோக்கம் பாதுகாத்தல் மற்றும் மலை கல்கத்தா துறைமுகம் மற்றும் ஹூக்ளி நதியின் நீர்ப்போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்.
பராக்கா 40,000 கன அடி நீரை வண்டல் படியும் கல்கத்தா துறைமுகத்தின் மணல் படிமானத்தை நீக்கப் பயன்படுத்த வேண்டும்.
5. இந்திரா காந்தி கால்வாய்
  • இது உலகின் மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டத்தில் ஒன்றாகும்.
  • இராஜஸ்தான் கால்வாயாக 1958 ல் தொடங்கப்பட்டது.
  • தார் பாலைவனத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் வடமேற்கு பகுதிக்கு பாசன வசதியை வழங்கும்.
  • இந்த திட்டமானது ராஜஸ்தான் பயன்படுத்தி பாங் அணை 215 கி.மீ. நீண்ட ராஜஸ்தான் கால்வாய் மற்றும் 445 கி.மீ நீண்ட ராஜஸ்தான் பிரதான கால்வாய் மற்றும் இவ்வணையிலிருந்து இத்திட்டத்திற்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
  • திட்டம் 14.5 லட்சம் ஹெக்டேர் முழுவதற்கும் பாசனத்திற்கு உதவுகிறது.
6. ஹிராகுட் திட்டம் = ஒரிசா
  •  மகாநதி ஆற்றின் மீது 4801,2 மீட்டர் நீண்ட முக்கிய ஹிராகுட் அணை, ஒரிசாவில் கட்டப்பட்டுள்ளது.
  •  இது உலகின் மிக நீளமான அணை.
  • பாசனம் 11,98 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் திட்டம் செயல்படுத்த படுகிறது.
  • இதன் தற்போதைய நிறுவப்பட்ட மின் உற்பத்தி 27.2 மெகாவாட் ஆகிறது.
7.காக்ரபாரா திட்டம் = குஜராத்
  • இது தப்தி நதியின் மேல் உள்ளது சூரத்திலிருந்து 80 கிமீ, மேல்நோக்கி உள்ளது.,
  • இது குஜராத் அரசால் கட்டப்பட்டது.
  • சூரத் மாவட்டத்தில் காக்ரபாராவிற்கு அருகே 621 மீட்டர் நீளம் & 14 மீட்டர் உயரத்தில் 1963 ல் கட்டி முடிக்கப்பட்டது.
8. கொய்னா திட்டம் = மகாராஷ்டிரா
  • இது கொய்னா நதியின் மேல் உள்ளது மற்றும் மகாராஷ்டிரா அரசால் கட்டப்பட்டது.
  • இது ஒரு 208 அடியில் கட்டப்பட்ட உயர் அணை
9. நாகார்ஜூன சாகர் திட்டம் = ஆந்திரப் பிரதேசம்
  • இது கிருஷ்ணா நதியின் தண்ணீர் ஆந்திர அரசாங்கத்தால் பயன்படுத்தப் படுகிறது.
  •  இது 1967 ஆகஸ்ட் 4 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
  • இது நலகோண்டா மாவட்டத்தில் மிரியால்குடா தாலுகாவில் நந்திகொண்டா கிராமத்திற்கு அருகில் மிகவும் பொருத்தமாக உள்ளது.
  • இது 1450 மீட்டர் நீளம் மற்றும் 92 மீட்டர் உயரம் கொண்ட அணை ஆகும்.
திட்டம் 8.95 லட்சம் ஹெக்டேர் முழுவதற்கும் பாசன வசதி அளிக்கிறது.
10.ரிகாண்ட் திட்டம் = உத்திரப்பிரதேசம்
  • இந்த திட்டம் உத்திரப்பிரதேசத்தில் மிர்சாபூர் மாவட்டத்தில் ரிகாண்ட் ஆற்றின் குறுக்கே ஒரு கான்கிரீட் ஈர்ப்பு அணை கட்டுமானத்தைக் கொண்டுள்ளது மற்றும் பிப்ரியில் மின் வீடு மற்றும் தேவையான மாற்றுப் பாதைகளைக் கொண்டுள்ளது.
11.தீன் அணை = பஞ்சாப்
  • 147 மீட்ட உயர அணை பஞ்சாப் அரசு சார்பில் தீயின் கிராமத்தில் ராவி நதிக்குக் குறுக்காக மாதோபூரிலிருந்து மேல் நோக்கி 25 கி.மீ.- ல் கட்டப்பட்டது.
  • அது 8 லட்சம் ஹெக்டேர் நிலத்திற்கு பாசன வசதி மற்றும் 600 மெகாவாட் சக்தி, ரஞ்சித் சாகர் என பெயர் மாற்றப்பட்டது இது பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் 2001, மார்ச் 4 ம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. 
12. துங்கபத்ரா திட்டம் = கர்நாடக மற்றும் ஆந்திர பிரதேசம்
  • இது ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடக அரசாங்கத்தின் கூட்டுத்திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
  • அது மாலிபுரத்திற்கு அருகே துங்கபத்ரா ஆற்றில் ஒரு 2441 மீட்டர் நீளமும் மற்றும் 49.38 மீட்டர் உயரம் கொண்ட அணை ஆகும்.
  • இது 10.22 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசன வசதி அளிக்கிறது.

நன்றி : தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகம்