தோல் புற்றுநோய்க்கு காரணம் சூரியன் அல்ல!!!!
சொன்னால் நம்பமுடியாமல் தான் இருக்கும். தொடர்ந்து படிக்கவும்.
20ம் நூற்றாண்டில் மக்களை சூரியனிடம் இருந்து காப்பாற்ற லேகிய கம்பனிகள் தோன்றின. இவர்களின் சன்ஸ்க்ரீன் லோஷனை தடவிக்கொண்டு வெயிலில் நடந்தால் ஸ்கின் கான்சர் வராது எனவும் நேரடி வெயில் தோலில் பட்டால் ஸ்கின் கான்சர் வரும் எனவும் சொன்னார்கள். சுமார் 400 கோடி ஆண்டுகளாக உலகத்து உயிர்களை எல்லாம் தோற்றுவித்து, உணவளித்து, காத்துவரும் அன்னதாதாவான சூரியனை கண்டு 20ம் நூற்றான்டில் மக்கள் மிரண்டு போய், அதனால் ஸ்கின் கான்சர் வரும் என பயந்து இந்த லேகியங்களை வாங்கிப்பூசிக்கொண்டும், வெளியே போகாமல் வீட்டுக்குள் உட்காரவும் ஆரம்பித்தார்கள்.
இதில் வேடிக்கை என்னவெனில் இதுநாள்வரை சூரியவெளிச்சம் உடலில் படுவதுதான் ஸ்கின்காச்னருக்கு காரணம் என ஒரே ஒரு ஆய்வுமே நிருபித்தது கிடையாது என்பதே. அல்ட்ராவயலட் கதிர்களை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். அல்ட்ராவயலட் கதிர்கள் உடலில் பட்டாம் ஸ்கின் கான்சர் வரும், சூரியவெளிச்சத்தில் அல்ட்ராவயலட் கதிர்க்ள் இருக்கு. முடிந்ததா கதை?
ஆனால் நேரடியாக சூரியவெளிச்சத்தையும், ஸ்கின் கான்சரையும் தொடர்புபடுத்தும் ஒற்றை ஆய்வு உள்ளதா என கேட்டால் இல்லை. வேடிக்கையிலும், வேடிக்கையாக பலருக்கும் ஸ்கின் கான்சர் வரும் பகுதிகள் எல்லாமே சூரிய வெளிச்சம் படாத பகுதிகள். சூரியனுக்கு பயந்து வெளியே போகாமல் இருப்பவர்களுக்கு தான் ஸ்கின் கான்சர் பெருமளவில் வருகிறது. சூரியன் அதிக அளவில் எட்டிபார்க்காத பனிநாடுகளில் தான் ஸ்கின்காச்னரும் அதிகம். வருடம் முழுக்க வெயிலாக இருக்கும் நாடுகளில் ஸ்கின் கான்சர் விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம்
ஸ்கின் கான்சர் அதிகரித்த புள்ளிவிவரங்களை பார்த்தால் அவை எல்லாமே இந்த லோஷன், லேகியங்கள் விற்பனையுடன் தொடர்புடையதாகவே உள்ளன. சன்ஸ்க்ரீன் போடுபவர்கள், உடலில் கண்ட க்ரீம்களை தேய்ப்பவர்கள், சூரிய வெளிச்சம் படாமல் இருப்பவர்கள் இவர்களுக்கே ஸ்கின்கான்சர் அதிக அளவில் தாக்குகிறது.
நாள்முழுக்க சூரியவெளிச்சத்தில் உலாவும் எந்த மிருகத்துக்கும் ஸ்கின் கான்சர் கிடையாது. சூரியன் உலகின் அன்னதாதா. வடதுருவம் முதல், தென் துருவம் வரை பயிர்கள், மரஙக்ள், மனிதர்கள், விலங்குகள் அனைத்துக்கும் உயிரளித்து காக்கும் தெய்வம். குழந்தைக்கு தாயின் அணைப்பால் மாரடைப்பு வரும் என்பதும் சூரிய கதிர்கள் நம்மை தழுவுவதால் கான்சர் வரும் என்பதும் இரண்டும் ஒன்றே
பெரிய மருத்துவமனைகளின் கான்சர் விடுதிகளுக்குள் நுழையுங்கள்...அங்கே இருக்கும் கான்சர் நோயாளிகளில் 90% பேருக்கு வைட்டமின் டி அளவுகள் குறைவாக இருக்கும். டயபடிஸ் பிரிவில் நுழையுங்கள். அங்கேயும் 90% பேருக்கு வைட்டமின் டி அளவுகள் குறைவாக இருக்கும். வைட்டமின் டி அளவுகளை மட்டும் சரிசெய்தால் 30% கான்சர் நோயாளிகளுக்கு கான்சரே வராது.
சூரியவெளிச்சத்தின் மகத்துவம் வைட்டமின் டியில் மட்டும் இல்லை. சூரியவெளிச்சமே தனிப்பட்டு வைரஸ், கிருமிகளை விரட்டி அடிக்கும் ஆற்றல் கொண்டது. டிப்ரஷனை போக்கும் சக்தி கொண்டது. சூரியவெளிச்சமே உடலில் சிர்கேடியன் கடிகாரத்தை சரிப்படுத்தி நம் பயாலஜிக்கல் கடிகாரத்தை நெறிப்படுத்தி பகல், இரவு, பசி, தூக்கம் முதலான உணர்வுகளை நமக்கு தூண்டும் சக்தி கொண்டது. நம் மூடை நெறிப்படுத்தி மகிழ்ச்சியை உருவாக்கி, டிப்ரஷன், ஸ்ட்ரெஸ், மன அழுத்தத்தை துரத்தும் ஆற்றல் கொண்ட தந்தை சூரியன்.
வெறும் லேகியத்தை விற்க சூரியன் மேல் கான்சர் பழி சுமத்தியவர்கள் இன்னும் என்னென்ன செய்வார்கள் என்பதை யோசித்தால் ஆயாசமாக வருகிறது
வெளியே செல்லுங்கள்.
"ஆயிரம் கைகள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" என அந்த அருட்தந்தையின் அணைப்பில் மகிழுங்கள்..தினமும் அதிகநேரத்தை வீட்டுக்குள் கழிக்காமல் நம் தந்தையின் அணைப்பில் கழியுங்கள். அவன் அணைப்பு நமக்கு கான்சரை கொடுக்காது. அவன் உலகத்து உயிர்க்கெல்லாம் உணவளிக்கும், நலமளிக்கும் அன்னதாதா. பிராக்டர் அன்ட் காம்பிளை நம்பும் அளவு பலரும் சூரியனை நம்பாமல் இருப்பதுதான் விந்தையிலும் விந்தை.
இத்ததகல்கள் இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவிடமி-ருந்து பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment