தமிழின் தசமக் கணக்கீடு முறை
- 68 - ஆண்டுகளாய் தான் நீ இந்தியன்,,,.
- 800 - ஆண்டுகளாய் தான் நீ இந்து.
- 400 - ஆண்டுகளாய் தான் நீ கிறித்தவன்.
- 200 - ஆண்டுகளாய் தான் நீ இஸ்லாமியர்.
- உலக மொழிகள் தோன்றியே வெறும் 2000 ஆண்டுகள் தான் ஆகின்றது.
- சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ்.....
- சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் தமிழ் இனம்...
- 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றியிருக்கலாம்...
சாட்சி:
குமரிகண்டம் மற்றும் லேமனியகண்டம் ....
மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்ட வீர தமிழினம் என்பது வரலாற்று உண்மை.
தமிழன் என்று ஓர் இணமுண்டுஅவர்கென்று தனிகுணமுண்டு
எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!
கண்டிப்பாக படித்து பகிரவும் ....
தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்களாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விஷயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!
அப்படி நாம் தேடும் போது நமக்கு கிடைத்த ஒரு அரிய விஷயத்தை உங்களுடன் பகிர்கிறோம்.
- 1 - ஒன்று
- 3/4 - முக்கால்
- 1/2 - அரை
- 1/4 - கால்
- 1/5 - நாலுமா
- 3/16 - மூன்று வீசம்
- 3/20 - மூன்றுமா
- 1/8 - அரைக்கால்
- 1/10 - இருமா
- 1/16 - மாகாணி(வீசம்)
- 1/20 - ஒருமா
- 3/64 - முக்கால்வீசம்
- 3/80 - முக்காணி
- 1/32 - அரைவீசம்
- 1/40 - அரைமா
- 1/64 - கால் வீசம்
- 1/80 - காணி
- 3/320 - அரைக்காணி முந்திரி
- 1/160 - அரைக்காணி
- 1/320 - முந்திரி
- 1/102400 - கீழ்முந்திரி
- 1/2150400 - இம்மி
- 1/23654400 - மும்மி
- 1/165580800 - அணு
- 1/1490227200 - குணம்
- 1/7451136000 - பந்தம்
- 1/44706816000 - பாகம்
- 1/312947712000 - விந்தம்
- 1/5320111104000 - நாகவிந்தம்
- 1/74481555456000 - சிந்தை
- 1/489631109120000 - கதிர்முனை
- 1/9585244364800000 - குரல்வளைப்படி
- 1/575114661888000000 - வெள்ளம்
- 1/57511466188800000000 - நுண்மணல்
- 1/2323824530227200000000 - தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது.
இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!
'''வாழ்க தமிழ் வளர்க தமிழ்.'''
No comments:
Post a Comment