உட்கார்ந்து கொண்டு கால் ஆட்டக்கூடாது : இதற்கு பின்னால் ஒளிந்துள்ள ரகசியம் !
உட்கார்ந்து கொண்டு கால் ஆட்டினால் வீட்டிற்கு ஆகாதா?
குழந்தையோ அல்லது பெரியவர்களோ வீட்டில் உள்ள கட்டிலிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொண்டு காலாட்டிக் கொண்டிருந்தால் நம் முன்னோர்கள் காலாட்டுவதால் வீட்டில் தரித்திரம் வரும் என்று கூறி தடுப்பார்கள்.
இப்படியே இந்த வழக்கம் காலம் காலமாகவே சொல்லப்பட்டு வந்தது. இன்றைய கால சிறுவர்கள் இது ஒரு மூட நம்பிக்கை என்று நினைத்து இதை அலட்சியப்படுத்தி தங்களுக்குள் திருப்திபடுத்திக் கொள்கின்றனர்.
இதை நாம் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் வெகு நேரம் நாம் கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பதனால் நம் உடலில் உள்ள சக்தி வீணாகிறது.
இது மட்டும் இல்லாமல் பண்டைய காலங்களில் கட்டிலுக்கு அடியில் வயோதிகர்களின் மருந்துகள், உடலில் தேய்க்கும் மருந்து, எண்ணெய், துணிமணிகள், பணப்பை போன்றவற்றை வைத்திருப்பார்கள்.
குறிப்பாக வெற்றிலை போடும் பெரியவர்கள் வெற்றிலை எச்சில் துப்பும் பாத்திரத்தையும் கட்டிலுக்கு அடியிலேயே வைத்திருப்பார்கள்.
இப்படி கட்டிலில் உட்கார்ந்து காலாட்டும் போது மேற்கண்ட பொருள்கள் சரிந்து விழுந்து பொருள் நஷ்டமாகும் என்பதற்காகவே கட்டிலில் உட்கார்ந்து காலாட்டினால் வீட்டில் தரித்திரம் வரும் என்று கூறி வந்தனர்.
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment