✍ இயற்கை வாழ்வியல் முறை
🍉🍉🍉🍉🍉🍉
தர்பூசணியின் மருத்துவ குணங்கள்
🍉🍉🍉🍉🍉🍉
*தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் அதிகம் நிறைந்துள்ள பழமாக இப்பழம் திகழ்கிறது.*
*நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.*
🍉🍉🍉🍉🍉🍉
தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெம்மை குறையும். உடல் சூடு தணியும்.
தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு பனிகட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும்.
பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப்பொடி, சர்க்கரை சேர்த்து அருந்த நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.
🍉🍉🍉🍉🍉🍉
தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும்.தர்பூசணிப் பழசாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும்.
தர்பூசணிப் பழம் ஜீரணத்தை சீர்படுத்தும். பழத்தை நீங்கலாக இருக்கும் வெள்ளை ப் பகுதியை கூட்டு, குழம்பாக தயாரித்து சாப்பிடலாம் இது குடல் நோய்களை குணப்படுத்தும்.
🍉🍉🍉🍉🍉🍉
இதய நோய்களிலிருந்தும் புற்று நோய்களிலிருந்தும் நம்மை காக்கிறது.
எத்தனையோ பயன்கள் தர்பூசணியில் இருந்தாலும் முக்கியமாக ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
தர்பூசணி அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
🍉🍉🍉🍉🍉🍉
இதனால் உடல் முழுவதும் ரத்தத்தை சீராக இயங்க செய்து இதயத்தின் வேலை சுலபமாகிறது.வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே இதயம் நீண்ட காலம் சிறப்பாக இயங்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
🍉🍉🍉🍉🍉🍉
பெண்களுக்கு நீளமான தலைமுடியும் ஆண்களுக்கு கருகருவென ஆரோக்கியமான, அழகான மற்றும் வலிமையான தலைமுடி இருந்தால் யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால் நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையே இந்த தலைமுடி உதிர்வது தானே. வேண்டுமெனில், அதற்கு தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு பொடுகு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.
🍉🍉🍉🍉🍉🍉
இதய ஆரோக்கியம் பொதுவாக இதயத்தில் ஏதேனும் பிரச்சினை என்றாலே இவ்வளவு மருத்துவ வசதி வந்துவிட்ட பின்னும் கூட பயம் நன்மைவிட்டு போவதில்லை. ஏனென்றால் எந்த நேரத்தில் என்ன ஆனுமென்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் இதயம் ஆரோக்கியமாக இருக்க, தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாகக் குடித்து வர வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது. இதனால் எந்தவித பக்க விளைவுகள் ஏதும் இல்லையென்பால் முயற்சித்துப் பார்ப்பதில் தவறு ஏதும் இல்லையே.
🍉🍉🍉🍉🍉
வெயில் சூடு தணிக்க மட்டுமல்லாது இதன் மருத்துவ குணங்களை கருத்திற்கொண்டு இப்பழத்தை தொடர்ந்து உண்டால் ஆரோக்கிய வாழ்வை நாமும் பெறலாம்
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.
💞💞💞💞💞💞 # உணவும் ஆரோக்கியம் .
No comments:
Post a Comment