பூனைக்காலி விதை
பூனைக்காலி விதையை ஆண், பெண் இருவருமே சாப்பிடலாம்.
பூனைக்காலி விதையை பாலில் போட்டு வேகவைத்து அதன் தோலை நீக்கி நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளவும்.
இந்தப் பொடியை தினசரி இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர மூளையை பலப்படுத்துவது, முதுகெலும்பு வலியை குணப்படுத்துவது,உடலைத் தேற்றுவது, பக்கவாதத்தை குணப்படுத்துவது, மட்டுமின்றி ஆண்களுக்கு உண்டாகும் நரம்புத் தளர்ச்சியையும் சரி செய்யும்.
சித்திர மூல வேர்ப்பட்டை – 50 கிராம்
பூனைக்காலி விதை – 50 கிராம்
முருங்கை விதை – 50 கிராம்
அக்ரகாரம் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
இவற்றை தூள் செய்து வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் சாப்பிட நடுக்கு வாதம் மற்றும் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
No comments:
Post a Comment