மூட்டு வலியை காணாமல் போகச் செய்யும் எலுமிச்சை தோல்!!
எலுமிச்சை மிக சக்தி வாய்ந்த பழம், அதிக ஆன்டி ஆக்சிடென்ட் கொண்டது. விட்டமின் சி நிறைந்தது.
ரத்த அழுத்தம் , இன்ஃபெக்ஷன், ஜலதோஷம் என பல வகை பாதிப்புகளுக்கு எலுமிச்சை நிவாரணமாக பயன்படுத்தப்படுகிறது.
இதில் மிக அதிகமாக விட்டமின் சி, மற்றும் ஏ, பி6, பி1, பயோஃப்ளேவினாய்டு, பெக்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம், பொட்டாசியம், போன்றவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. முதுமையையும் தள்ளிப் போகச் செய்யும் ஆற்றல் உண்டு.
எலுமிச்சை சாறு போலவே எலுமிச்சை தோலிலும் மிக அதிக சத்துக்கள் உண்டு, காய்ச்சலை குணப்படுத்தும், ஆன்டிசெப்டிக் குணங்கள் கொண்டவை, காயங்களிய விரைவில் அற்றும். 40 வயதிற்குப் பின் வரும் மூட்டு வலியை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்த ஆற்றல் கொண்டது,
மூட்டுகளில் இருக்கும் சுருங்கியிருக்கும் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. வலியை குறைத்து, பாதிப்பை குணப்படுத்துகிறது.
அதனை மூட்டு வலிக்கு எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
ஆயின்மென்ட் :
தேவையானவை :
ஆலிவ் எண்ணெய்
எலுமிச்சை -2
யூகலிப்டஸ் இலை
எலுமிச்சை தோலை பொடியா துறுவிக் கொள்ள வேண்டும். ஒரு மூடியுள்ள ஜாரில் எலுமிச்சை தோலை போட்டு அது மூழ்கும் அளவிற்கு ஆலிவ் எண்ணெயை ஊற்றி அதில் யூகலிப்டஸ் இலையையும் நறுக்கிப் போட்டு ஜாடியை இறுக மூடிவிடுங்கள்
அப்படியே 2 வாரங்கள் வைத்திருக்க வேண்டும், பின்னர் அது ஆயின்மென்ட் போல கெட்டியாகியிருக்கும். இதனை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் வலியுள்ள பகுதிகளில் தடவ வேண்டும். இப்படி தினமு செய்தால் வலி மறைந்துவிடும்.
எலுமிச்சை தே நீர் :
எலுமிச்சை தேனீர் மூட்டு வலியை போக்கும், வாயுவை போக்கும், நச்ச்சுக்களையும் வெளியேற்றி விடும். உடல் குறைப்பிற்கும் நல்லது.
தேவையானவை :
நீர்- 2 கப்
எலுமிச்சை- 2
தேன்
தயாரிக்கும் முறை :
நீரில் இரண்டு எலுமிச்சையின் தோலை துருவிக் கொண்டு அதில் சேர்த்து கொதிக்க வையுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து வடிகட்டவும். இந்த தே நீரில் தேவையான அளவு தேனை கலந்து பருகலாம்.
நன்மைகள் :
இது நம் ஜீரண மண்டலத்தை பலம் பெறச் செய்வதோடு, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரைப்பைக்கு புத்துணர்ச்சி அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
எலுமிச்சை தோல் மூட்டு வலிக்கு மட்டுமல்லாமல் இதர நன்மைகளுக்கும் பயன்படுத்தலாம். அவற்றைப் பற்றி காண்போம்.
அழகிற்கு :
எலுமிச்சை தோல் சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சையின் தோலில், நம் சருமத்திற்கு ஏற்ற அனைத்து நன்மைகளும் உண்டு. அதில் உள்ள அமிலமானது நம் சருமத்திலுள்ள கருமையைப் போக்கி நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.
நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளரத் தூண்டுகிறது. எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அத்துடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் பிளச் செய்தாற்போல் மாறிவிடும். சூரியக் கதிர்களால் ஏற்பட்ட கருமையும் மறையும்.
பற்களின் வெண்மைக்கு :
எலுமிச்சைத் தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து, வெண்மையான புன்னகையை பெறலாம்.
மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக|வள்ளலார் காட்டும் வழி..
...
என்னும் பதிவைக்காண கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.
இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழுவின் ஆய்வில் பெறப்பட்டது
இவ்விடம் பதிவிடுவது
த. சிங்காரவேல் என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment