இனி அவளை யாரும் ஏமாற்ற முடியாது.
என் சகோதரியின் மகள் என்னிடம் கதை சொல்லுன்னு கொஞ்சுனா. எனக்கு ஒன்னுமே நியாபகம் வரல. சரின்னு வாரணம் அறுபதாயிரம் கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதற்கு பிறகு நடந்தது.
நான்: ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்
குட்டி: வேற யாருமே இல்லியா?
நான்: இருந்தாங்க அம்மு.. ஆனா இப்போ ராஜா பத்தி தான் சொல்ல போறேன்.
குட்டி: சரி சொல்லு..
நான்: அந்த ராஜாகிட்ட sixty thousand elephant இருந்துச்சாம்.
குட்டி: வால்பாறைல காட்டுனியே அது மாதிரியா?
நான்: ஆமா டா.
குட்டி: அவ்ளோ பெருசா இருக்குமே அதுவா? அதுக்கு கூட சோறு செஞ்சு வச்சு இருந்தாங்களே? (Top slips la wild car ட்ரெக்கிங் போனபோது அங்க கும்கி யானைக்கு பயிற்சி குடுக்குறது சாப்பாடு குடுக்குறது எல்லாம் பார்த்தா)
நான்: அதே தான். சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேட்காத கதை கேளு
குட்டி: சரி சொல்லு
நான்: அவரு 60000 யானையும் ஒரே ship ல ஏதிக்கிட்டு
குட்டி: ship ல யா. ஓடஞ்சு கடல்ல விழுந்து செத்து போய்ராதா
நான்: இல்லை பாப்பு போனாராம்
கூட்டு: லூசு லூசு one elephant eh அவ்ளோ பெருசு இருக்கும். இதுல அவ்ளோ elephants கண்டிப்பா ship ஓடஞ்சு விழுந்து செத்து போயிரும்.
நான்: அம்மு கதை சொல்லவா வேனாவா?
குட்டி: சீ போ.. பொய் புழுகுனி.
அடுத்தது நான் எதிர் பார்க்காதது பாட்டி இந்த லூச எங்க ஸ்கூல்ல சேர்த்துவிடு. இதுக்கு கதை சொல்லவே தெரில. பொய்யா சொல்லுதுன்னு சொல்லுறா.
- எனக்கு சிரிப்பு ஒரு பக்கம் பெருமிதம் ஒரு பக்கம். என் அடுத்த தலைமுறையை கேள்வி கேட்க பழக்கிவிட்டேன். இனி அவளை யாரும் ஏமாற்ற முடியாது.
No comments:
Post a Comment