தமிழகத்தில் கல்விக்கான அதிகாரம் யாரிடம் உள்ளது???
1965 ஆம் ஆண்டு மாநிலக் கல்வி நிறுவனம் (SIE) நிறுவப்பட்டது. ,நிறுவனம் பள்ளிக் கல்வி இயக்கத்தின் கீழ் பள்ளிக்கல்வியில் ஏற்படும் பிரச்சனைகளை முறையாக ஆய்வு செய்கிறது.
- 1970மாநிலக் கல்வி நிறுவனம் (SIE) யானது 1970 இல் தமிழ்நாடு மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனகாக தமிழக அரசால் (SCERT)தரம் உயர்த்தப்பட்டது.
- 19901990 ஆம் ஆண்டு மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தமிழக அரசால் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககமாக நாள் 04.06.1990, அரசாணை எண் 748, கல்வி F2 இன் படி மாற்றப்பட்டது.
- 1997தமிழக அரசால் நாள் 11.03.1997, அரசாணை எண் 106 பள்ளிக் கல்வித்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககமானது பள்ளி கல்வித்துறை இயக்ககத்திலிருந்து முற்றிலுமாக பிரிக்கப்பட்டு தனி இயக்ககமாக செயல்பட்டது
- 19991999 ஆம் ஆண்டு சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ,அரசு உதவி பெரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (DTERT) கட்டுபாட்டின்கீழ் இயக்கப்பட்டது
- 19991999 ஆம் ஆண்டு சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ,அரசு உதவி பெரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (DTERT) கட்டுபாட்டின்கீழ் இயக்கப்பட்டது
- 20122012 ஆம் ஆண்டு அரசாணை எண் 83, நாள் 26.03.2012 இன் படி தமிழக அரசால் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (DTERT) என்பதை தமிழ்நாடு மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (TNSCERT) எனப் பெயர்மாற்றி தரம் உயர்த்தப்பட்டது.
- மாவட்டஆசிரியர்கல்விமற்றும்பயிற்சிநிறுவனம் (DIET), ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் (BITE) செயல்பாடுகளையும் பாடப்பொருளையும் கருத்தாளர்களையும் குறித்த கால இடைவெளியில் மதிப்பீடு செய்தல்.
- தமிழ்நாடு மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (TNSCERT, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET), ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (BITE) போன்றவற்றிற்கான கற்பித்தல் முறைகளை கணினி மயமாக்குவதற்கான அடிப்படை வசதிகளைச் செய்துதருதல்.
- ஆசிரியப்பயிற்றுநர்களிடையேயான கல்வி தொடர்பான கருத்துப்பரிமாற்றங்கள், மீளாய்வுகள் ஆகியவற்றுக்கு கல்விச் செயற்கைக் கோள் வசதியினைப் பயன்படுத்துதல்.
- ஆசிரியர்களுக்கும் பிற கல்விப் பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கும்போது தேவையான கணினி மயமாக்கப்பட்ட பாடப்பொருளையும் உருவாக்கித் தருதல்.
- மாநிலங்களிலிருந்து ஒன்றியம் வரையிலுள்ள தொடக்க நிலை முதல் மேல்நிலை வரையிலான அனைத்து வகை பள்ளிகளுக்கும் தேவையான மற்றும் பொருத்தமான பயிற்சி நிகழ்ச்சிகளை திட்டமிடவும், வடிவமைக்கவும் , மேம்படுத்துவதற்குமான செயல்களை வழங்குதல்.
- முன்மொழியப்பட்ட திட்டங்களை நிறைவேற்றத் தகுதி வாய்ந்த திறனுள்ள கருத்தாளர்களின் தரவு விவரங்களை தயார்ப்படுத்தி புதுப்பித்துகொள்ளுதல்.
- மாற்றியமைக்கப்பட்ட ,மின்னணு வடிவப் பாடப்பொருளையும் , பயிற்றுமுறையும் உபயோகித்து ஆர்வம் மிகுந்த கருத்தாளர்களுக்கு இணைய வழிக் கல்வியைப் பயன்படுத்தி (SMART BOARD) திறன்களை மேம்படுத்துவற்கான பயிற்சியளித்தல்.
- 2023 ஆண்டுக்குள் படிப்படியாக கணினி அடிப்படையான கற்பித்தல் முறைகளுக்கான மாற்றங்களைக் கொண்டு வருவது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கனவு . மேலும் , இதற்காக தமிழக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது (TNSCERT) கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல் ஆகியவற்றை மறுவடிவமைப்பு செய்து வளப்படுத்துதல்.
- தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் அனைவருக்கு கல்வித் திட்டமும் இணைந்து தேசிய அடைவுத் தேர்வு (NAS) மேற்கொண்டு அவற்றின் முடிவுகளை ஆ ய் வு செய்து தொடக்கநிலை மற்றும் உயர் தொடக்கநிலை மாணவர்களிடையேயுள்ள திறன் குறைபாடுகளைத் கண்டறிந்து அவற்றைக் களைந்து மேம்படுத்துதல்.
- ஆசிரியர்களுக்கும் , அங்கன்வாடி பணியளர்களுக்கும் அவர்தம் திறன்களை மேம்படுத்துவதற்கு பணியிடைப் பயிற்சிகள் வழங்குதல்.
- ஆசிரியர்கள் மேற்கொள்ளக்கூடிய புதுமைகள், படைப்புகள், வெற்றிகரமான கற்றல் கற்பித்தல் முறைகளை கண்டறிந்து அவற்றை YOU TUBE – இல் பதிவேற்றம் செய்து (TNSCERT – Channel ) மூலமாக ஒளிபரப்புவதன் மூலம் ஊக்கப்படுத்துதல்.
- பயிற்சிக்குப் பின்னர் வகுப்பறையில் அப்பயிற்சி மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
- குழந்தைகளின் நலன்சார்ந்த கல்வி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அரசின் கொள்கை முடிவுகளுக்கு உறுதுணையாகச் செயல்படுதல்.
- UNICEF, தேசியக் கல்வியல் ஆராய்ச்சி பயிற்சி குழுமம் (NCERT), தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிருவாக பல்கலைக் கழகம் (NUEPA),CCERT, மண்டலக் கல்வி நிறுவனம் (RIE) போன்ற கல்வி நிறுவனங்கள் அரசுக்கான பிற நிறுவனங்களுடன்இணைந்து கல்வி செயல்பாட்டை மேம்படுத்துவற்கு பாலமாக உள்ளது.
நன்றி :- SCERT.org
No comments:
Post a Comment