ஓட்டிப்போன கன்னங்கள் குண்டாக
கன்னங்களை புஸ்ஸென்று மாற்றுகிறது தக்காளி கூழ். தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள்.
ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுத்து முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழை பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வர, புஸ் புஸ் கன்னங்கள் கிடைக்கும்.
நாற்பது வயதை நெருங்கும்போதே முகத்தில் சில வரிகளும் நம் முகவரி தேடி வந்து விடும். அந்த முதுமை வரிகளை ஓட ஓட விரட்டும் சக்தி தக்காளியில் உண்டு.
தக்காளி விழுது, பாதாம் விழுது… ஒவ்வொன்றிலும் அரை டீஸ்பூன் எடுத்து, இரண்டையும் நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வர, தோல் சுருக்கம் இருந்த
சுவடே தெரியாமல் மறைந்துவிடும். நன்றி!
Dr. Gouse. MD (Tcm, Acu)., Singapore.
மேலும் பல ஆரோக்கியம் பற்றிய தகவல்களை அறிய www.kavimalaravan.blogspot.in ல் இணையுங்கள்.
No comments:
Post a Comment