சுடர்மிகு பாரதி - பகுதி - 2
ஐய பேரிகை
ஐய
பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய
பேரிகை கொட்டடா!
பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
(ஐயபேரிகை)
இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.
(ஐயபேரிகை)
காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.
-
பாரதியாரின் ஞானப் பாடல்கள்
மின்னும் சொல் படைத்த பாரதியியை பார் போன்ற செய்வோம்.
த. சிங்காரவேல்
என்கிற கவிமலரவன்
No comments:
Post a Comment